< ଲୁକ 24 >
1 ୧ ହାପ୍ତାରେୟାଃ ପାହିଲା ହୁଲାଙ୍ଗ୍ ସେତାଃ ଇଦାନ୍ ନୁବାଃ ତାଇକେନ୍ ଇମ୍ତା, ଏନ୍ କୁଡ଼ିକ ଆକଆଃ ବାଇୟାକାଦ୍ ବୁଗିନ୍ ସହାନ୍ତେୟାଃ ଆଉକେଦ୍ତେ ତପାଗାଡ଼ା ଠାୟାଦ୍ତାଃକ ସେନଃୟାନା ।
வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலேயே, அந்தப் பெண்கள் தாங்கள் ஆயத்தம் செய்திருந்த நறுமணப் பொருட்களை எடுத்துக்கொண்டு, கல்லறையை நோக்கிச் சென்றார்கள்.
2 ୨ ଆଡଃ ଇନ୍କୁ ତପାଠାୟାଦ୍ରାଃ ଦୁଆର୍ଏତେ ପୁରାଃ ମାରାଙ୍ଗ୍ ଦିରିକେ ବାଟି ଆତମାକାନ୍କ ନେଲ୍କେଦାଃ ।
அங்கே கல்லறை வாசலில் வைக்கப்பட்டிருந்த கல் புரட்டித் தள்ளப்பட்டிருப்பதைக் கண்டார்கள்.
3 ୩ ମେନ୍ଦ ଇନ୍କୁ ବଲୟାନ୍ତେ ପ୍ରାଭୁ ୟୀଶୁଆଃ ହଡ଼୍ମ କାକ ନାମ୍କେଦାଃ ।
அவர்கள் உள்ளே நுழைந்தபோது, கர்த்தராகிய இயேசுவினுடைய உடலைக் காணாமல்,
4 ୪ ଆଡଃ ଇନ୍କୁ ନେଆଁଁତେ ଆକ୍ଦାନ୍ଦାଅୟାନାକ, ନେଲେପେ ଝାକ୍ମାକ୍ ଲିଜାଃ ତୁସିଙ୍ଗ୍ଆଁକାନ୍ ବାର୍ହଡ଼୍ ଇନ୍କୁଆଃ ଜାପାଃରେକିନ୍ ତିଙ୍ଗୁୟାନା ।
அவர்கள் அதைக்குறித்து யோசிக்கையில், திடீரென்று மின்னலைப் போல மின்னுகின்ற உடைகளை அணிந்திருந்த இரண்டுபேர் அவர்களின் அருகே நின்றார்கள்.
5 ୫ ଇନ୍କୁ ବରତେ ଅତେସାଃ ତିରୁବାକାଦ୍ ତାଇକେନ୍ ଇମ୍ତା ଇନ୍କିନ୍ କାଜିୟାଦ୍କଆକିନ୍, “‘ଆପେ ଜୀଉଦ୍ତାନ୍କକେ ଗଜାକାନ୍କଆଃ ଥାଲାରେ ଚିନାଃମେନ୍ତେପେ ଦାଣାଁଁଇତାନା?
அந்தப் பெண்களோ பயந்துபோய், தலைகுனிந்து தரையைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்த இரண்டு பேரும் அவர்களிடம், “உயிருடன் இருக்கிறவரை, நீங்கள் ஏன் இறந்தவர்களிடையே தேடுகிறீர்கள்?
6 ୬ ଇନିଃ ନେତାଃରେ ବାଙ୍ଗାଇୟା, ଇନିଃଦ ଜୀଉବିରିଦାକାନାଏ! ଗାଲିଲ୍ରେ ତାଇକାନ୍ ଇମ୍ତା ଇନିଃ ଚିକ୍ନାଃ ମେତାକାପେ ତାଇନାଏ, ଏନା ପାହାମେପେ ।
அவர் இங்கே இல்லை; அவர் உயிருடன் எழுந்துவிட்டார்! அவர் உங்களுடன் கலிலேயாவில் இருக்கையிலே, உங்களுக்குச் சொன்னது ஞாபகமில்லையா:
7 ୭ ମାନୱାହନ୍ ପାପିକଆଃ ତିଃଇରେ ସାବ୍ଇଚିୟଃଆଏ, ଆଡଃ କ୍ରୁଶ୍ରେ ଗଜଃଆଏ ଆଡଃ ଆପି ମାହାଁରେ ଜୀଉବିରିଦ୍ ଲାଗାତିଙ୍ଗ୍ୟାଁଃ ।’”
‘மானிடமகனாகிய நான் பாவிகளின் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, சிலுவையில் அறையப்படவேண்டும்; மூன்றாம் நாளிலே, திரும்பவும் உயிருடன் எழுந்திருக்க வேண்டும்’ என்று அவர் உங்களுக்குச் சொல்லியிருந்தாரே” என்றார்கள்.
8 ୮ ଏନ୍ତେ ଇନ୍କୁ ଇନିୟାଃ କାଜିକ ପାହାମ୍କେଦାଃ ।
அப்பொழுது இயேசுவினுடைய வார்த்தைகள் அந்த பெண்களின் நினைவிற்கு வந்தன.
9 ୯ ତପାଗାଡ଼ାଏତେ ରୁହାଡ଼୍କେଦ୍ତେ, ଇନ୍କୁ ନେ ସବେନ୍କାଜି ଏଗାରାଝାନ୍ ଚେଲାକକେ ଆଡଃ ସବେନ୍ ଏଟାଃ ହଡ଼କକେ ଉଦୁବାଦ୍କଆକ ।
அவர்கள் கல்லறையில் இருந்து திரும்பிவந்தபோது, இவை எல்லாவற்றையும் பதினொரு அப்போஸ்தலரிடமும், மற்றெல்லோரிடமும் சொன்னார்கள்.
10 ୧୦ ମାଗ୍ଦାଲିନି ମାରିୟାମ୍, ଯୋହାନ୍ନା, ଯାକୁବ୍ ଏଙ୍ଗାତେ ମାରିୟାମ୍, ଆଡଃ ଏଟାଃକ ନେ କାଜି ପ୍ରେରିତ୍କକେ ଉଦୁବାଦ୍କଆକ ।
மகதலேனா மரியாள், யோவன்னாள், யாக்கோபின் தாயாகிய மரியாள் ஆகியோரும், அவர்களுடன் இருந்த மற்ற பெண்களும், அப்போஸ்தலருக்கு இதைச் சொன்னார்கள்.
11 ୧୧ ମେନ୍ଦ ଇନ୍କୁ ଇନ୍କୁଆଃ କାଜିକେ କାକ ବିଶ୍ୱାସ୍କେଦାଃ, ଚିୟାଃଚି ଇନ୍କୁଆଃ କାଜି ଆକକେ ସାମାକାଜିଲେକା ଆଟ୍କାର୍କେଦ୍କଆ ।
அவர்களோ, இந்தப் பெண்கள் சொன்னதை நம்பவில்லை. இவர்கள் சொன்னது அவர்களுக்கு வீண்பேச்சாகத் தோன்றியது.
12 ୧୨ ପାତ୍ରାସ୍, ବିରିଦ୍ୟାନ୍ତେ ତପାଗାଡ଼ାତେ ନିର୍କେଦାଏ, ଆଡଃ ଇନିଃ ଉଙ୍ଗୁଦ୍କେଦ୍ତେ ପାତ୍ଲା ଲିଜାଃ ଏସ୍କାର୍ ଦହାକାନ୍ତେୟାଃ ନେଲ୍କେଦାଏ, ଆଡଃ ହବାକାନ୍ତେୟାଃ ନେଲ୍କେଦ୍ତେ ଆୟାଃ ମନ୍ରେ ଆକ୍ଦାନ୍ଦାଅ ତାନ୍ଲଃ ଅଡ଼ାଃତେ ସେନଃୟାନାଏ ।
ஆனால், பேதுரு எழுந்து கல்லறையை நோக்கி ஓடினான். அவன் அங்கு எட்டிப் பார்த்தபோது, அவரைச் சுற்றியிருந்த மெல்லிய துணிகள் மட்டும் கிடப்பதைக் கண்டான். அப்பொழுது அவன், என்ன நடந்ததோ என்று தனக்குள்ளே யோசித்துக் கொண்டு திரும்பிப்போனான்.
13 ୧୩ ନେଲେପେ ଏନ୍ହୁଲାଙ୍ଗ୍ଗି ଇନ୍କୁଏତେ ବାର୍ହଡ଼୍ ଇମ୍ମାୟୁସ୍ ନୁତୁମ୍ ହାତୁତେ ସେନଃତାନ୍କିନ୍ ତାଇକେନା, ଏନ୍ ହାତୁ ଯୀରୁଶାଲେମ୍ଏତେ ସାତ୍ମାଇଲ୍ ଲେକା ସାଙ୍ଗିନ୍ ତାଇକେନା ।
இதே நாளிலே, சீடர்களில் இரண்டுபேர் எம்மாவூ எனப்பட்ட கிராமத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்கள். இது எருசலேமில் இருந்து 11 கிலோமீட்டர் தூரம் இருந்தது.
14 ୧୪ ଇନ୍କିନ୍ ନେ ହବାକାନ୍ ସବେନ୍ କାଜିକ ବାଖାଁଣେତାନ୍କିନ୍ ତାଇକେନା ।
அவர்கள் இருவரும், நடந்த எல்லாவற்றையும் குறித்து பேசிக்கொண்டே சென்றார்கள்.
15 ୧୫ ଚିମ୍ତାଙ୍ଗ୍ ଇନ୍କିନ୍ ବାଖାଁଣ୍ତାନ୍ ଆଡଃ କୁପୁଲିତାନ୍ଲଃ ସେନଃତାଇକେନାକିନ୍ ୟୀଶୁ ଆଇଃକ୍ହଗି ନାଡ଼େଃୟାନ୍ତେ ଇନ୍କିନ୍ଲଃ ଗାତିୟାନାଏ ।
அவர்கள், இப்படி இந்தக் காரியங்களைக்குறித்து கலந்துரையாடிக்கொண்டு போகையில், இயேசு தாமே அவர்களுக்கு அருகே வந்து, அவர்களோடு கூடப்போனார்;
16 ୧୬ ମେନ୍ଦ ଇନ୍କିନାଃ ମେଦ୍ ଦାନାଙ୍ଗ୍କାନ୍ତାଇକେନା, ଏନାନାଗେନ୍ତେ ଇନ୍କିନ୍ ଇନିଃକେ କାକିନ୍ ନେଲ୍ଉରୁମ୍କିୟାଃ ।
ஆனால், அவர் யார் என்று அறியாமலிருக்க அவர்களின் கண்கள் மூடப்பட்டிருந்தது.
17 ୧୭ ଇନିଃ ଇନ୍କିନ୍କେ କୁଲିକେଦ୍କିନାଏ, “ଆବେନ୍ ସେନଃତାନ୍ଲଃ ଚିକାନ୍ କାଜିବେନ୍ କୁପୁଲିତାନା ଆଡଃ ହୁଡିଙ୍ଗ୍ଜୀଉକାନା?
இயேசு அவர்களிடம், “நீங்கள் வழிநெடுகிலும் ஒருவரோடொருவர் எதைக் குறித்து பேசிக்கொண்டீர்கள்?” என்று கேட்டார். அவர்கள் துக்கம் தோய்ந்த முகத்துடன் அந்த இடத்திலே நின்றார்கள்.
18 ୧୮ ଏନ୍ତେ ଇନ୍କିନ୍ଏତେ କ୍ଲେୟପା ନୁତୁମ୍ନିଃ, କାଜିରୁହାଡ଼୍କିୟାଏ, ଆମ୍ ଚିନାଃ ଯୀରୁଶାଲେମ୍ରେ ଡେରାଏତାନ୍ରେହ ତିସିଙ୍ଗ୍ ନେ ହବାକାନ୍ କାଜିକ ଆମ୍ ଏସ୍କାର୍ଗି କାମ୍ ସାରିୟାଃ?”
அவர்களில் ஒருவனான கிலெயோப்பா என்பவன் அவரிடம், “அப்படியானால் இந்நாட்களில் எருசலேமில் நடந்த காரியங்களை அறியாதபடிக்கு நீர் அந்நியரோ?” என்று கேட்டான்.
19 ୧୯ ୟୀଶୁ କୁଲିକେଦ୍କିନାଏ, “ଚିଲ୍କାନ୍ କାଜି?” “ନାଜ୍ରେତ୍ରେନ୍ ୟୀଶୁଆଃ ବିଷାଏ,” ମେନ୍ତେକିନ୍କାଜିକିୟାଃ । “ଇନିଃ ନାବୀ ତାଇକେନାଏ, ପାର୍ମେଶ୍ୱାର୍ ଆଡଃ ହଡ଼କଆଃ ଆୟାର୍ରେ କାମି ଆଡଃ କାଜିରେ ପେଡ଼େୟାନ୍ ହଡ଼ ତାଇକେନାଏ ।
அதற்கு அவர், “என்ன காரியங்கள்?” என்று கேட்டார். அவர்கள் இயேசுவுக்குப் பதிலாக: “நசரேயனாகிய இயேசுவைக்குறித்தவைகளே! அவர் இறைவனுக்கு முன்பாகவும், எல்லா மக்களுக்கு முன்பாகவும் வார்த்தையிலும், செயலிலும் வல்லமையுள்ள இறைவாக்கினராக இருந்தார்.
20 ୨୦ ଆଲେୟାଃ ମାରାଙ୍ଗ୍ ଯାଜାକ୍କ ଆଡଃ ହାକିମ୍କ ଇନିଃକେ ଗନଏଃ ସାଜାଇ ଏମ୍ ନାଗେନ୍ତେକ ଏମ୍ଏଣ୍ଡାଃକିୟାଃ ଆଡଃ କ୍ରୁଶ୍ରେକ କିଲାଗଏଃକିୟାଃ ।
தலைமை ஆசாரியர்களும், எங்கள் ஆட்சியர்களும் அவரை மரண தண்டனைத் தீர்ப்புக்கு உட்படுத்தி, அவரை சிலுவையில் அறைந்தார்கள்;
21 ୨୧ ମେନ୍ଦ ଆଲେ ଇନିଃ ଇସ୍ରାଏଲ୍ରେନ୍କକେ ମୁକ୍ତି ଏମାକଆ ମେନ୍ତେ ଆସ୍ରାଏତାନ୍ଲେ ତାଇକେନା । ନେ ସବେନାଃ ହବାକାନ୍ତେୟାଃ ତିସିଙ୍ଗ୍ଲଃ ଆପି ମାହାଁ ହବାଅଃତାନା ।
நாங்களோ, இஸ்ரயேலை மீட்கப் போகிறவர் அவரே என்று நம்பிக்கைக் கொண்டிருந்தோம். இவையெல்லாம் நடந்தேறி மூன்று நாட்கள் ஆகின்றன.
22 ୨୨ ଆଡଃଗି ଆଲେୟାଃ ଗାତିରେନ୍ ଚିମିନାଙ୍ଗ୍ କୁଡ଼ିକ, ଆକ୍ଚାକାଅ କାଦ୍ଲେୟାକ, ଇନ୍କୁ ଇଦାନ୍ରେ ତପାଗାଡ଼ାତାଃକ ସେନ୍କେନା,
அதுவுமல்லாமல், எங்களைச் சேர்ந்த சில பெண்கள் இன்று அதிகாலையில் கல்லறைக்குச் சென்றார்கள். அவர்கள் எங்களுக்குத் திகைப்பூட்டும் செய்தியைக் கொண்டுவந்திருக்கிறார்கள்.
23 ୨୩ ମେନ୍ଦ ଇନ୍କୁ ଇନିୟାଃ ଗଏଃହଡ଼୍ମ କାକ ନାମ୍କେଦାଃ । ଇନ୍କୁ ରୁହାଡ଼୍କେଦ୍ତେ କାଜିୟାଦ୍ଲେୟାକ, ଆଲେ ଦୁଁତ୍କେ ନେଲାଦ୍କିନାଲେ, ଇନ୍କିନ୍ ୟୀଶୁ ଜୀହୁଦ୍ଗିୟାଏ ମେତାଦ୍ଲେୟାକିନ୍ ।
அவர்கள், அவருடைய உடலைக் காணவில்லை. அத்துடன் அந்தப் பெண்கள், இறைத்தூதர்களை கண்டதாகவும், இயேசு உயிரோடு இருப்பதாக இறைத்தூதர்கள் தங்களுக்குச் சொன்னதாகவும் எங்களிடம் வந்து சொன்னார்கள்.
24 ୨୪ ଏନ୍ତେ ଆଲେୟାଃ ଗାତିକଏତେ ଚିମ୍ନାଙ୍ଗ୍କ ତପାଗାଡ଼ାତାଃକ ସେନଃୟାନା ଆଡଃ କୁଡ଼ିକଆଃ କାଜିଲେକାକ ନାମ୍କେଦାଃ, ମେନ୍ଦ ୟୀଶୁକେ କାକ ନେଲ୍କିୟାଃ ।”
அப்பொழுது, எங்களுடைய கூட்டாளிகளில் சிலர் கல்லறைக்குப் போய், பெண்கள் சொன்னபடியே அதைக் கண்டார்கள். இயேசுவையோ அவர்கள் காணவில்லை” என்றார்கள்.
25 ୨୫ ୟୀଶୁ ମେତାଦ୍କିନାଏ, “ଏ ଡଣ୍ଡକିନ୍ ଆଡଃ ନାବୀକଆଃ ସବେନ୍ କାଜି ବିଶ୍ୱାସ୍ନାଙ୍ଗ୍ ମନ୍କେଟେୟାକାନ୍ ହଡ଼କିନ୍!
அப்பொழுது இயேசு அவர்களிடம், “இறைவாக்கினர் சொன்னதை எல்லாம் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே!
26 ୨୬ ଚିୟାଃ ଖ୍ରୀଷ୍ଟ୍ ନେ ଦୁକୁ ସାହାତିଙ୍ଗ୍ ଆଡଃ ଆୟାଃ ମାନାରାଙ୍ଗ୍ରେ ବଲ କା ଲାଗାତିଙ୍ଗ୍ତାନ୍ ତାଇକେନା?”
கிறிஸ்து இந்த வேதனைகளை எல்லாம் அனுபவித்தபின் மகிமைக்குள் பிரவேசிக்க வேண்டுமல்லவா?”
27 ୨୭ ମୁଶା ଆଡଃ ସବେନ୍ ନାବୀକଏତେ ଏଟେଦ୍କେଦ୍ତେ ଗଟା ଧାରାମ୍ପୁଥିରେ ଆୟାଃ ବିଷାଏରେ ଅଲାକାନ୍ କାଜିକରେୟାଃ ମୁଣ୍ଡି ଉଦୁବାଦ୍କିନାଏ ।
என்று சொல்லி, மோசே தொடங்கி எல்லா இறைவாக்கினரும், தம்மைக் குறித்துச் சொல்லியிருந்த வேதவசனங்களை எல்லாம் எடுத்து, இயேசு அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்.
28 ୨୮ ଏନ୍ତେ ଇନ୍କୁ ଆକସେନଃତାନ୍ ତାଇକେନ୍ ହାତୁତେ ସେଟେର୍ୟାନ୍ଚି ୟୀଶୁ ଆୟାର୍ତେ ସେନଃତାନ୍ ଲେକାଏ ଉଦୁବେନ୍ୟାନା ।
அவர்கள் போய்க்கொண்டிருந்த கிராமத்துக்கு அருகில் வந்ததும், இயேசு தாம் தொடர்ந்து அதற்கு அப்பால் போகிறவர்போல காட்டிக்கொண்டார்.
29 ୨୯ ମେନ୍ଦ ଇନ୍କିନ୍ “ଦେଲା ଆଲିଙ୍ଗ୍ଲଃ ତାଇନଃମେଁ, ଆୟୁବଃତାନା ଆଡଃ ସିଙ୍ଗିହାସୁରଃତାନା” ମେନ୍ତେ କାଜିକିୟାଃକିନ୍, ଆଡଃ ଇନିଃ ଇନ୍କିନ୍ଲଃ ତାଇନଃ ନାଗେନ୍ତେ ବଲୟାନାଏ ।
அவர்கள் அவரிடம், “நீர் எங்களுடன் தங்கும், மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று” என்று அவரை வற்புறுத்திக் கேட்டார்கள். எனவே, இயேசு அவர்களுடன் தங்கும்படி சென்றார்.
30 ୩୦ ଇନିଃ ଇନ୍କିନ୍ଲଃ ଜମ୍ଦୁବ୍ୟାନ୍ଚି ହଲଙ୍ଗ୍କେ ସାବ୍କେଦ୍ତେ, ଆଶିଷ୍ ଏମ୍କେଦାଏ, ଆଡଃ ଏନା କେଚାଃକେଦ୍ତେ ଏମାଦ୍କିନାଏ ।
இயேசு அவர்களோடு சாப்பாட்டுப் பந்தியில் இருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து நன்றி செலுத்தியபின், அதைப் பிட்டு அவர்களுக்குக் கொடுக்கத் தொடங்கினார்.
31 ୩୧ ଏନ୍ତେ ଇନ୍କିନାଃ ମେଦ୍ ରାଡ଼ାୟାନା ଆଡଃ ଇନ୍କିନ୍ ୟୀଶୁକେ ନେଲ୍ଉରୁମ୍କିୟାକିନ୍, ଆଡଃ ଇନିଃ ଇନ୍କିନ୍ତାଃଏତେ ଦାନାଙ୍ଗ୍ୟାନାଏ ।
அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டன. அவர்கள் அவரை இன்னார் என்று அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே, இயேசு அவர்களுடைய பார்வையில் இருந்து மறைந்து போய்விட்டார்.
32 ୩୨ ଆଡଃ ଇନ୍କିନ୍ ଆକିନ୍ଆକିନ୍ରେ କୁଲିୟାନାକିନ୍, “ଚିୟାଃ ଇନିଃ ହରାରେ ଆଲାଙ୍ଗ୍ଲଃ ବାଖାଁଣ୍ତାନ୍ ଆଡଃ ଧାରାମ୍ପୁଥିରେୟାଃ ମୁଣ୍ଡି ଉଦୁବାଲାଙ୍ଗ୍ ତାଇକେନ୍ ଇମ୍ତା, ଆଲାଙ୍ଗ୍ଆଃ ମନ୍ ରାସ୍କାତେ କା'ଚି ଜୁଲଃତାନ୍ ତାଇକେନା?”
அப்பொழுது அவர்கள், “வழியிலே அவர் நம்மோடு பேசியபோதும், வேதவசனங்களை நமக்கு விளக்கும்போதும், நம்முடைய இருதயங்கள் நமக்குள்ளே பற்றி எரிந்ததல்லவா?” என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
33 ୩୩ ଆଡଃ ଇମ୍ତାଗି ଇନ୍କିନ୍ ବିରିଦ୍ୟାନ୍ତେ ଯୀରୁଶାଲେମ୍ତେକିନ୍ ରୁହାଡ଼୍ୟାନା ଆଡଃ ଏଗାରାଝାନ୍ ଚେଲାକ ଆଡଃ ଇନ୍କୁଆଃ ଗାତିକ ହୁଣ୍ଡିୟାକାନ୍କିନ୍ ନାମ୍କେଦ୍କଆ ।
அவர்கள் எழுந்து, உடனே எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். அங்கே பதினொருவரும், அவர்களுடன் இருந்தவர்களும் ஒன்றுகூடியிருப்பதைக் கண்டார்கள்.
34 ୩୪ “ସାର୍ତିଗି ପ୍ରାଭୁ ଜୀଉବିରିଦାକାନାଏ ଆଡଃ ଶିମୋନ୍ତାଃ ନେଲ୍ଇଚିୟାନାଏ” ମେନ୍ତେ ଇନ୍କୁକେ କାଜିୟାଦ୍କଆକିନ୍ ।
அவர்கள் எல்லோரும், “கர்த்தர் உயிரோடு எழுந்திருக்கிறார். அவர் சீமோனுக்குக் காட்சியளித்தது உண்மைதான்!” என்று சொல்லிக்கொண்டார்கள்.
35 ୩୫ ଏନ୍ତେ ଇନ୍କିନ୍ ହରାରେ ହବାଲେନ୍ତେୟାଃ ଆଡଃ ଚିଲ୍କାତେ ହଲଙ୍ଗ୍ କେଚାଃତାନ୍ରେ ଆଲିଙ୍ଗ୍ ଇନିଃକେ ନେଲ୍ଉରୁମ୍କିୟାଃ ଏନା ଇନ୍କୁକେ ଉଦୁବାଦ୍କଆକିନ୍ ।
அப்பொழுது, இந்த இருவரும் தங்களுக்கு வழியிலே நடந்ததையும், இயேசு அப்பத்தைப் பிட்டுக் கொடுத்தபோது, தாங்கள் அவரை எப்படி அறிந்துகொண்டார்கள் என்பதையும் அவர்களுக்குச் சொன்னார்கள்.
36 ୩୬ ଇନ୍କିନ୍ ନେ କାଜି କାଜିତାନ୍ ତାଇକେନ୍ ଇମ୍ତା, ପ୍ରାଭୁ ୟୀଶୁ ଆଇଃକ୍ଗି ଇନ୍କୁଆଃ ଥାଲାରେ ତିଙ୍ଗୁୟାନାଏ, ଆଡଃ ମେତାଦ୍କଆଏ, “ଆପେରେ ଜୀଉସୁକୁ ହବାଅଃକା ।”
சீடர்கள் இதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போதே, இயேசு தாமே அவர்கள் நடுவே நின்று, “உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக” என்று சொன்னார்.
37 ୩୭ ମେନ୍ଦ ଇନ୍କୁ ଆକ୍ଦାନ୍ଦାଅୟାନ୍ଲଃ, ବରକେଦ୍ତେ ଆବୁ ବଙ୍ଗାବୁ ନେଲ୍କିୟାଃ ମେନ୍ତେକ ଆଟ୍କାର୍କେଦାଃ ।
அவர்கள் திடுக்கிட்டு பயமடைந்து, தாங்கள் இறந்துபோனவரின் ஆவியைக் காண்கிறதாக நினைத்துக் கொண்டார்கள்.
38 ୩୮ ଇନିଃ କାଜିୟାଦ୍କଆଏ, “ଚିନାଃମେନ୍ତେପେ ବରତାନା, ଆଡଃ ଆପେୟାଃ ମନ୍ରେ ଆଡ଼ାଃଉଡ଼ୁଃ ଚିନାଃମେନ୍ତେ ଅମନଃତାନା?
இயேசு அவர்களிடம், “நீங்கள் ஏன் குழப்பம் அடைந்திருக்கிறீர்கள்? உங்கள் உள்ளங்களில் ஏன் சந்தேகம் எழும்புகிறது?
39 ୩୯ ଆଇଁୟାଃ ତିଃଇ ଆଡଃ କାଟା ନେଲେପେ, ଆଇଙ୍ଗି ତାନିଙ୍ଗ୍! ଜୁଟିଦିଙ୍ଗ୍ପେ ଆଡଃ ନେଲ୍ବାଇଙ୍ଗ୍ପେ, ଆଇଙ୍ଗ୍ରେପେ ନେଲେତାନ୍ଲେକାନ୍ ଜାଙ୍ଗ୍ ଜିଲୁ ବଙ୍ଗାରେଦ ବାନଆଃ ।”
என்னுடைய கைகளையும், கால்களையும் பாருங்கள். இது நான், நானேதான்! என்னைத் தொட்டுப் பாருங்கள்; நீங்கள் என்னில் காண்கிறதுபோல, சதையும் எலும்புகளும் ஒரு ஆவிக்கு இருப்பதில்லையே?” என்றார்.
40 ୪୦ ଇନିଃ ନେଆଁଁ କାଜିକେଦ୍ଚି ଇନ୍କୁକେ ଆୟାଃ ତିଃଇ ଆଡଃ କାଟା ଉଦୁବାଦ୍କଆଏ ।
இயேசு இதைச் சொல்லி முடித்தபோது, தமது கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.
41 ୪୧ ଆଡଃ ଇନ୍କୁ ରାସ୍କାତେ କାକ ପାତିୟାର୍ତାନ୍ ଆଡଃ ଆକ୍ଦାନ୍ଦାଅକାନ୍ ତାଇକେନ୍ରେ, “ଚିୟାଃ ଆପେତାଃ ହୁଡିଙ୍ଗ୍ଲେକା ଜମେୟାଃଁ ମେନାଃଚି?” ମେନ୍ତେ ଇନିଃ କୁଲିକେଦ୍କଆଏ ।
அவர்களோ சந்தோஷத்தாலும், வியப்பாலும் நிறைந்தார்கள். அதை அவர்களால் இன்னும் நம்பமுடியவில்லை. அப்பொழுது இயேசு அவர்களிடம், “சாப்பிடுகிறதற்கு ஏதாவது இங்கே உங்களிடம் இருக்கிறதா?” என்று கேட்டார்.
42 ୪୨ ଏନ୍ତେ ଇନ୍କୁ ଇନିଃକେ ଆନ୍ଦାଗାକାନ୍ ହାକୁ ହୁଡିଙ୍ଗ୍ଲେକାକ ଏମ୍କିୟାଃ ।
அவர்கள் நெருப்பில் சுட்ட ஒரு மீன் துண்டை அவருக்குக் கொடுத்தார்கள்.
43 ୪୩ ଆଡଃ ଇନିଃ ଏନା ତେଲାକେଦ୍ତେ ଇନ୍କୁଆଃ ସାମ୍ନାଙ୍ଗ୍ରେ ଜମ୍କେଦାଏ ।
அவர் அதை எடுத்து, அவர்கள் முன்பாகவே சாப்பிட்டார்.
44 ୪୪ ଏନ୍ତେ ଇନିଃ ମେତାଦ୍କଆଏ, ମୁଶାରାଃ ଆନ୍ଚୁ ପୁଥିରେ ଆଡଃ ନାବୀକଆଃ ଆଡଃ ଦୁରାଙ୍ଗ୍ ପୁଥିରେ ଆଇଁୟାଃ ବିଷାଏରେ ସବେନ୍ ଅଲାକାନ୍ତେୟାଃ ପୁରାଅଃ ଲାଗାତିଙ୍ଗ୍ୟାଁଃ, ଏନ୍କାଜି ଆପେଲଃ ତାଇକେନ୍ ଇମ୍ତାଙ୍ଗ୍ କାଜିକାଦ୍ପେୟାଇଙ୍ଗ୍ ।
“நான் உங்களோடு இருக்கையில், உங்களுக்கு இதைச் சொல்லியிருந்தேனே: மோசேயினுடைய சட்டத்திலும், இறைவாக்குகளிலும், சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியிருக்கிறவை யாவும் நிறைவேற வேண்டியதாயிருந்தது” என்றார்.
45 ୪୫ ଏନ୍ତେ ଇନିଃ ଧାରାମ୍ପୁଥି ଆଟ୍କାର୍ଉରୁମେଁ ନାଗେନ୍ତେ ଇନ୍କୁଆଃ ମନ୍କେ ସେଣାଁଁକେଦାଏ ।
பின்பு அவர்கள், வேதவசனங்களை விளங்கிக்கொள்ளத்தக்கதாக, இயேசு அவர்களுடைய மனதைத் திறந்தார்.
46 ୪୬ ଇନିଃ ଇନ୍କୁକେ କାଜିୟାଦ୍କଆଏ, “ନେଆଁଁ ଅଲାକାନା, ଖ୍ରୀଷ୍ଟ୍ ଦୁକୁସାହାତିଙ୍ଗ୍ ଆଡଃ ଆପି ମାହାଁରେ ଗଜାକାନ୍କଏତେ ଜୀଉବିରିଦ୍ ଲାଗାତିଙ୍ଗ୍ୟାଁଃ,
இயேசு அவர்களிடம், “எழுதப்பட்டிருப்பது இதுவே: கிறிஸ்து வேதனை அனுபவிப்பார், மூன்றாம் நாளிலோ உயிருடன் எழுந்திருப்பார்.
47 ୪୭ ଆଡଃ ଯୀରୁଶାଲେମ୍ଏତେ ଏଟେଦ୍କେଦ୍ତେ ସବେନ୍ ଦିଶୁମ୍ରେନ୍ ସବେନ୍ ହଡ଼କକେ ଇନିୟାଃ ନୁତୁମ୍ତେ ହେୟାତିଙ୍ଗ୍ରେୟାଃ ଆଡଃ ପାପ୍ ଛାମାରେୟାଃ କାଜି ଉଦୁବ୍ ଲାଗାତିଙ୍ଗ୍ୟାଁଃ ।
மனந்திரும்புதலைக் குறித்ததும், பாவமன்னிப்பைக் குறித்ததுமான நற்செய்தியை, எருசலேம் தொடங்கி எல்லா ஜனங்களுக்கும், அவருடைய பெயரில் அறிவிக்கவேண்டும்.
48 ୪୮ ଆଡଃ ଆପେ ନେ କାଜିରେୟାଃ ଗାୱାଇକ ତାନ୍ପେ ।
இவைகளுக்கெல்லாம் நீங்கள் சாட்சிகளாய் இருக்கிறீர்கள்.
49 ୪୯ ନେଲେପେ ଆଇଙ୍ଗ୍ ଆପୁଇଁୟାଃ ବାନାର୍ସା କାଜି ଆପେତାଃତେ କୁଲେୟା; ମେନ୍ଦ ଚେତାନ୍ ପେଡ଼େଃ ଆଉରିପେ ନାମେଜାକେଦ୍ ଯୀରୁଶାଲେମ୍ ସାହାର୍ରେ ତାଇନ୍ପେ ।”
என் பிதா உங்களுக்குத் தருவதாக வாக்களித்த பரிசுத்த ஆவியானவரை, நான் உங்களுக்கு அனுப்புகிறேன்; உன்னதத்தில் இருக்கும் அந்த வல்லமையினால் நீங்கள் உடுத்துவிக்கப்படும்வரை, இந்தப் பட்டணத்திலே தங்கியிருங்கள்” என்றார்.
50 ୫୦ ୟୀଶୁ ଇନ୍କୁକେ ବେଥ୍ନିଆ ସାମ୍ନାଙ୍ଗ୍ତେ ଅଡଙ୍ଗ୍ ଇଦିକେଦ୍କଆଏ ଆଡଃ ଆୟାଃ ତିଃଇ ରିମ୍କେଦ୍ତେ ଇନ୍କୁକେ ଆଶିଷ୍କେଦ୍କଆଏ ।
இயேசு பெத்தானியாவரை அவர்களைக் கூட்டிக்கொண்டுபோய், அவர் தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தார்.
51 ୫୧ ଆଡଃ ଇନିଃ ଇନ୍କୁକେ ଆଶିଷ୍କତାନ୍ଲଃ ଇନ୍କୁଏତେ ବିନ୍ଗାଅୟାନାଏ ଆଡଃ ସିର୍ମା ଦିଶୁମ୍ତେ ଇଦିୟାନା ।
இயேசு அவர்களை ஆசீர்வதித்துக் கொண்டிருந்தபோதே, அவர்களைவிட்டுப் பரலோகத்திற்குள் எடுத்துக்கொள்ளப்பட்டார்.
52 ୫୨ ଏନ୍ତେ ଇନ୍କୁ ଇନିଃକେ ଜହାର୍କିଃତେ ପୁରାଃ ରାସ୍କାତାନ୍ଲଃ ଯୀରୁଶାଲେମ୍ତେକ ରୁହାଡ଼୍ୟାନା ।
அப்பொழுது அவர்கள் இயேசுவை வழிபட்டு, மிகுந்த மகிழ்ச்சியுடனே எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள்.
53 ୫୩ ଆଡଃ ପାର୍ମେଶ୍ୱାର୍କେ ଧାନ୍ୟାବାଦ୍ ଏମ୍ତାନ୍ଲଃ ଜାନାଅ ମାନ୍ଦିର୍ଅଡ଼ାଃରେକ ତାଇକେନା ।
அவர்கள் இறைவனைத் துதித்துக்கொண்டு, ஆலயத்திலேயே தொடர்ந்து தங்கியிருந்தார்கள்.