< Luke 24 >

1 Toang na ke len se emeet in wik, mutan inge som nu ke kulyuk uh ac us mwe keng ma elos akoela ah.
வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே தாங்கள் ஆயத்தம்செய்த கந்தவர்க்கங்களை அந்த பெண்கள் எடுத்துக்கொண்டு வேறு சில பெண்களோடுகூடக் கல்லறைக்கு வந்தார்கள்.
2 Elos liyauk lah eot sac ipisyukla liki mutun kulyuk sac,
கல்லறையை அடைத்திருந்த கல் புரட்டித் தள்ளப்பட்டிருக்கிறதைப் பார்த்து,
3 na elos utyak nu loac; tusruktu elos tiana konauk monin Leum Jesus.
உள்ளே நுழைந்து, கர்த்தராகிய இயேசுவின் சரீரத்தைக் காணாமல்,
4 Elos arulana fohsak ke ma inge, na in kitin pacl ah na mwet luo tu me siskalos su nukum nuknuk na saromrom.
அதைக்குறித்து மிகுந்த கலக்கமடைந்திருக்கும்போது, பிரகாசமுள்ள ஆடை அணிந்திருந்த இரண்டுபேர் அவர்கள் அருகே நின்றார்கள்.
5 Mutan uh arulana sangeng ac faksufi ke mwet luo ah fahk nu selos, “Efu kowos ku suk el su moul inmasrlon mwet misa?
அந்த பெண்கள் பயப்பட்டு தலைகுனிந்து தரையைப் பார்த்து நிற்கும்போது, அந்த இரண்டுபேரும் அவர்களைப் பார்த்து: உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன?
6 El tia oasr inge; el akmoulyeyukyak tari. Esam ma el tuh fahk nu suwos ke el muta Galilee ah:
அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார்.
7 ‘Wen nutin Mwet el ac fah itukyang nu inpoun mwet koluk, ac el ac fah anwuki fin sakseng soko, na tukun len tolu el ac fah sifil moulyak.’”
மனிதகுமாரன் பாவிகளான மனிதர்கள் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படவும், சிலுவையில் அறையப்படவும், மூன்றாம்நாளில் உயிரோடு எழுந்திருக்கவும் வேண்டுமென்பதாக அவர் கலிலேயாவிலிருந்த காலத்தில் உங்களுக்குச் சொன்னதை நினைத்துப்பாருங்கள் என்றார்கள்.
8 Na mutan uh elos esamak kas lal inge,
அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை ஞாபகப்படுத்தி,
9 ac folokla liki kulyuk uh, ac fahkak ma inge nukewa nu sin mwet singoul sie, weang pac mwet wialos saya.
கல்லறையைவிட்டுத் திரும்பிப்போய், இந்தச் செய்திகளெல்லாவற்றையும் பதினொரு பேருக்கும் மற்றெல்லோருக்கும் தெரிவித்தார்கள்.
10 Mutan inge pa Mary Magdalene, Joanna, ac Mary nina kial James. Eltal, ac kutu pac mutan saya ma welultal, pa tukeni fahkak ma inge nu sin mwet sap uh.
௧0இவைகளை அப்போஸ்தலர்களுக்குச் சொன்னவர்கள் மகதலேனா மரியாளும், யோவன்னாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், இவர்களுடனேகூட இருந்த மற்ற பெண்களுமே.
11 A mwet sap elos nunku mu mutan inge sramsram wel, oru elos tiana lulalfongelos. [
௧௧இவர்களுடைய வார்த்தைகள் அவர்களுக்கு வீண்பேச்சாகத் தோன்றினதினால், அவர்கள் இவர்களை நம்பவில்லை.
12 Tusruktu Peter el tuyak ac kasrusr nu ke kulyuk uh. El kui nu ten ac liyauk nuknuk linen mukena. Na el folokla nu lohm sel ac arulana fwefela ke ma sikyak uh.]
௧௨பேதுருவோ எழுந்திருந்து, கல்லறையினிடத்திற்கு ஓடி, அதற்குள்ளே குனிந்துபார்க்கும்போது, துணிகளைத் தனியே வைத்திருக்கக்கண்டு, சம்பவித்ததைக்குறித்துத் தனக்குள்ளே ஆச்சரியப்பட்டுக்கொண்டுபோனான்.
13 In len sac pacna, luo pac selos fahsr in som nu in sie siti srisrik pangpang Emmaus, sahp ac mael itkosr liki acn Jerusalem,
௧௩அன்றைய தினமே அவர்களில் இரண்டுபேர் எருசலேமுக்கு ஏழு அல்லது எட்டுமைல் தொலைவிலுள்ள எம்மாவு என்னும் கிராமத்திற்குப் போனார்கள்.
14 ac eltal tukeni sramsramkin ma nukewa ma sikyak uh.
௧௪போகும்போது இந்தச் சம்பவங்கள் எல்லாவற்றையுங்குறித்து அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டார்கள்.
15 Ke eltal kaskas ac asiyuki ke ma inge, Jesus sifacna el kalukyang nu yoroltal ac welultal fahsr.
௧௫இப்படி அவர்கள் பேசி, உரையாடிக்கொண்டிருக்கும்போது, இயேசு தாமே சேர்ந்து அவர்களோடு நடந்துபோனார்.
16 Eltal liyal, tusruktu eltal tiana akilenul.
௧௬ஆனாலும் அவரை அறியாதபடிக்கு அவர்களுடைய கண்கள் மறைக்கப்பட்டிருந்தது.
17 Jesus el fahk nu seltal, “Mea komtal fahsr srumun an?” Eltal tukeni tui, ac ngetnget in asor.
௧௭அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் துக்கமுகமுள்ளவர்களாக நடந்துகொண்டே, ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளுகிற காரியங்கள் என்னவென்று கேட்டார்.
18 Sie seltal su pangpang Cleopas el siyuk sel, “Mea, kom mukena pa mwet mutwata se nu Jerusalem ma tia etu ke ma orek we ke len ekasr somla me?”
௧௮அவர்களில் ஒருவனாகிய கிலெயோப்பா என்பவன் மறுமொழியாக: இந்நாட்களில் எருசலேமிலே நடந்தவைகளை அறியாதபடிக்கு நீர் அந்நியராக இருக்கிறீரோ என்றான்.
19 Ac Jesus el siyuk, “Mea ingan?” Na eltal fahk, “Ma uh ma sikyak nu sel Jesus lun Nazareth. Mwet se inge el sie mwet palu, su kas in luti ac orekma lal arulana ku ye mutun God ac mwet uh.
௧௯அவர்: எவைகள் என்றார். அதற்கு அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைக்குறித்தவைகளே; அவர் தேவனுக்கு முன்பாகவும் மக்களெல்லோருக்கு முன்பாகவும் செயலிலும் சொல்லிலும் வல்லமையுள்ள தீர்க்கதரிசியாக இருந்தார்.
20 Mwet tol fulat lasr ac mwet kol saya elos eisalang in nununkeyuk, na elos wotela elan anwuki fin sakseng.
௨0நம்முடைய பிரதான ஆசாரியர்களும் அதிகாரிகளும் அவரை மரணதண்டனைக்குட்படுத்தி, சிலுவையில் அறைந்தார்கள்.
21 Ac kut tuh finsrak mu el pa ac aksukosokyela Israel uh! Sayen ma inge, misenge len se aktolu tukun ma inge sikyak.
௨௧அவரே இஸ்ரவேலை மீட்டு இரட்சிப்பவர் என்று நாங்கள் நம்பியிருந்தோம். இவைகள் சம்பவித்து இன்று மூன்று நாட்களாகிறது.
22 Kutu sin mutan ke u lasr uh aklutye kut. Elos toang na som nu ke kulyuk sac,
௨௨ஆனாலும் எங்களுடைய கூட்டத்தைச் சேர்ந்த சில பெண்கள் அதிகாலமே கல்லறையினிடத்திற்குப்போய்,
23 tuh tia ku in konauk manol. Elos foloko ac fahk lah elos liye sie aruruma ke lipufan, su fahk nu seltal mu el sifil moul.
௨௩அவருடைய சரீரத்தைக் காணாமல், திரும்பிவந்து, அவர் உயிரோடிருக்கிறார் என்று சொன்ன தேவதூதர்களைத் தரிசித்தோம் என்று சொல்லி, எங்களைப் பிரமிக்கச்செய்தார்கள்.
24 Kutu sin mwet wiasr uh som nu ke kulyuk sac ac konauk oana ma mutan elos srumun ah, tusruk elos tiana liyalak.”
௨௪அப்பொழுது எங்களிலே சிலர் கல்லறையினிடத்திற்குப்போய், பெண்கள் சொன்னபடியே கண்டார்கள்; அவரையோ காணவில்லை என்றார்கள்.
25 Na Jesus el fahk nu seltal, “Pwaye lah komtal arulana afon! Efu ku pahtlac fuk komtal in lulalfongi ma nukewa ma mwet palu ah fahk?
௨௫அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் நம்புகிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே,
26 Ya tia eneneyuk tuh Christ elan keok ke ma inge, na el fah utyak nu in wolana lal?”
௨௬கிறிஸ்து இவ்விதமாகப் பாடுபடவும், தமது மகிமையில் பிரவேசிக்கவும் வேண்டியதில்லையா என்று சொல்லி,
27 Ac Jesus el aketeya nu seltal ma fwack kacl in Ma Simusla nukewa, mutawauk ke book lal Moses, fahsru nu ke ma simla sin mwet palu nukewa.
௨௭மோசே முதல் எல்லாத் தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்கள் எல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்.
28 Ke eltal apkuran in sun siti srisrik se eltal fahsr nu we ah, Jesus el oru acnu mu el ac fahla na.
௨௮அந்த சமயத்தில் தாங்கள் போகிற கிராமத்திற்கு அருகில் வந்தார்கள். அப்பொழுது அவர் தொடர்ந்து போகிறவர்போலக் காண்பித்தார்.
29 Tuh eltal ikolilya ac fahk, “Tari muta yorosr, mweyen fongeni pa inge.” Ouinge el utyak ac mongla yoroltal.
௨௯அவர்கள் அவரைப் பார்த்து: நீர் எங்களுடனே தங்கியிரும், மாலைநேரமானது, பொழுதும்போனது, என்று அவரை வருந்திக் கேட்டுக்கொண்டார்கள். அப்பொழுது அவர் அவர்களோடு தங்கும்படி உள்ளே போனார்.
30 El muta in welultal mongo, na el eis bread ac pre lac kac, na el kunsalik ac sang nu seltal.
௩0அவர்களோடு அவர் உணவருந்தும்போது, அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்தார்.
31 Na ikakla mutaltal ac eltal akilenulak, ac in pacl sacna el wanginla liki ye mutaltal.
௩௧அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவரை அறிந்தார்கள். உடனே அவர் அவர்களுக்கு மறைந்துபோனார்.
32 Na eltal fahk nu sin sie sin sie, “Ya insiasr tia fusrfusryak ke engan, oana sie e tayak in kut, ke el sramsram nu sesr inkanek uh ac aketeya nu sesr ke Ma Simusla?”
௩௨அப்பொழுது அவர்கள் ஒருவரையொருவர் பார்த்து: வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளக்கிக்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா என்று சொல்லிக்கொண்டு,
33 Eltal sulaklak na tuyak ac folokla nu Jerusalem ac konauk mwet tuma lutlut singoul sie, wi kutu pac mwet saya uh,
௩௩அந்த நேரமே எழுந்திருந்து, எருசலேமுக்குத் திரும்பிப்போய், பதினொருபேரும் அவர்களோடிருந்தவர்களும் கூடியிருக்கக்கண்டு:
34 su fahk nu seltal, “Pwayena lah Leum el moulyak! El sikyang nu sel Simon!”
௩௪கர்த்தர் மெய்யாகவே உயிர்த்தெழுந்து சீமோனுக்குக் காட்சியளித்தார் என்று அவர்கள் சொல்லக்கேட்டு,
35 Na mwet luo ah akkalemye nu selos ma sikyak inkanek ah, ac ke eltal akilenak Leum ke el kunsalik bread uh.
௩௫வழியில் நடந்தவைகளையும், அவர் அப்பத்தைப் பிட்கும்போது தாங்கள் அவரை அறிந்துகொண்டதையும் விவரித்துச் சொன்னார்கள்.
36 Ke pacl se eltal srakna srumun ma inge, Jesus sifacna el sikyak inmasrlolos [ac fahk nu selos, “Misla nu suwos.”]
௩௬இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.
37 Elos arulana tuninfongla, ac nunku mu elos liyauk inut se.
௩௭அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள்.
38 Na el fahk nu selos, “Efu kowos ku sangeng? Efu kowos ku alolo in nunak lowos uh?
௩௮அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்களுடைய இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன?
39 Ngetma liye pouk ac niuk, ac liye lah nga pa inge. Kahlyuwi na kowos ac fah etu na pwaye, tuh inut uh wangin ikwa ac sri kac oana ke kowos liye keik uh.” [
௩௯நான்தான் என்று அறியும்படி, என் கரங்களையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும், எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி,
40 El fahk ma inge, ac kolang paol ac nial nu selos.]
௪0தம்முடைய கரங்களையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.
41 Elos srakna tia ku in lulalfongi, ke sripen arulana yohk fwefela ac engan lalos. Na el siyuk selos, “Ya oasr mongo yuruwos inge?”
௪௧ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் நம்பாமல் ஆச்சரியப்படும்போது: சாப்பிடுவதற்கு ஏதாவது இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார்.
42 Elos sang nu sel ipin ik manman se,
௪௨அப்பொழுது பொரித்த மீன் துண்டையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள்.
43 ac el eis ac kang ye mutalos.
௪௩அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாக சாப்பிட்டார்,
44 Na el fahk nu selos, “Pa inge ma nga tuh fahk nu suwos ke nga srakna muta yuruwos ah: Ma nukewa ma simla keik in Masap lal Moses, in ma simusla lun mwet palu, ac in book in [Psalm] uh enenu na in akpwayeiyukla.”
௪௪அவர்களைப் பார்த்து: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த செய்திகள் இவைகளே என்றார்.
45 Na el ikasla nunak lalos in kalem ke Ma Simusla uh,
௪௫அப்பொழுது வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய மனதை அவர் திறந்து அவர்களைப் பார்த்து:
46 ac fahk nu selos, “Pa inge ma simla uh: Christ el ac fah keok, ac el ac fah moulyak liki misa ke len se aktolu,
௪௬எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து பாடுபடவும், மூன்றாம்நாளில் மரித்த நிலையிலிருந்து உயிரோடு எழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது;
47 ac ke inel, pweng ke auliyak ac nunak munas ke ma koluk enenu in lutiyuk in facl nukewa, mutawauk Jerusalem.
௪௭அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கி எல்லாதேசத்தினர்களுக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது.
48 Kowos mwet loh ke ma inge.
௪௮நீங்கள் இவைகளுக்குச் சாட்சிகளாக இருக்கிறீர்கள்.
49 Ac nga ac fah supwama nu fowos ma su Papa tumuk El wulela kac. Tusruktu kowos enenu in mutana in siti uh nwe ke na ku lucng me fah tuku nu fowos.”
௪௯என் பிதா வாக்குத்தத்தம் செய்ததை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் நிரப்பப்படும்வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள் என்றார்.
50 Na el kololosla nu likin siti uh ac som apkuran nu Bethany, ac el srukak paol nu faclos ac akinsewowoyalos.
௫0பின்பு அவர் பெத்தானியாவரைக்கும் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய கரங்களை உயர்த்தி. அவர்களை ஆசீர்வதித்தார்.
51 Ke pacl se el akinsewowoyalos inge, el som lukelos, [ac utukyak el nu inkusrao.]
௫௧அவர்களை ஆசீர்வதிக்கும்போது, அவர்களைவிட்டுப் பிரிந்து, பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.
52 Elos alu nu sel, tari elos folokla nu Jerusalem, sesseslana ke engan,
௫௨அவர்கள் அவரைப் பணிந்துகொண்டு, மிகுந்த சந்தோஷத்தோடு எருசலேமுக்குத் திரும்பிவந்து,
53 ac len nukewa elos muta in Tempul ac sang kulo nu sin God.
௫௩நாள்தோறும் தேவாலயத்திலே தேவனைப் புகழ்ந்து ஆராதித்துக்கொண்டிருந்தார்கள். ஆமென்.

< Luke 24 >