< Joshua 22 >

1 Na Joshua el pangoneni mwet in sruf lal Reuben, ac sruf lal Gad, ac sruf lal Manasseh Kutulap
அப்பொழுது யோசுவா ரூபனியர்களையும் காத்தியர்களையும் மனாசேயின் பாதிக்கோத்திரத்தார்களையும் அழைத்து,
2 ac fahk nu selos, “Kowos aksafyela tari ma Moses, mwet kulansap lun LEUM GOD, el sapkin, ac kowos akos ma nukewa nga fahk nu suwos.
அவர்களை நோக்கி: யெகோவாவுடைய ஊழியக்காரனாகிய மோசே உங்களுக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் நீங்கள் செய்தீர்கள்; நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றிலும் என் வார்த்தையின்படி செய்தீர்கள்.
3 Ke lusen pacl sac nwe misenge kowos tiana ngetla liki mwet Israel wiowos, ac kowos akos na ma LEUM GOD lowos El sapkin nu suwos.
நீங்கள் இதுவரைக்கும் அநேக நாட்களாக உங்களுடைய சகோதரர்களைக் கைவிடாமல், உங்களுடைய தேவனாகிய யெகோவாவுடைய கட்டளையைக் காத்துக்கொண்டு நடந்தீர்கள்.
4 Inge, ke LEUM GOD lowos El sang tari misla nu sin mwet wiowos inge oana ma El wulela kac, kowos folokla nu in acn suwos su oan kutulap in Infacl Jordan, ma Moses, mwet kulansap lun LEUM GOD, el tuh sot lowos.
இப்பொழுதும் உங்களுடைய தேவனாகிய யெகோவா உங்களுடைய சகோதரர்களுக்குச் சொல்லியிருந்தபடியே, அவர்களை ஓய்ந்திருக்கச் செய்தார்; ஆகவே யெகோவாவுடைய ஊழியக்காரனாகிய மோசே யோர்தானுக்கு மறுபுறத்திலே உங்களுக்குக் கொடுத்த உங்களுக்குச் சொந்தமான தேசத்தில் இருக்கிற உங்களுடைய கூடாரங்களுக்குத் திரும்பிப்போங்கள்.
5 Tusruktu, kowos liyaung ac akos ma sap ma Moses, mwet kulansap lun LEUM GOD, el tuh sot nu suwos, in lungse LEUM GOD lowos, in oru ma lungse lal, in akos ma sap nukewa lal, in oaru nu sel, ac in kulansupwal ke insiowos ac ngunuwos kewa.”
ஆனாலும் நீங்கள் உங்களுடைய தேவனாகிய யெகோவாவிடம் அன்புவைத்து, அவருடைய வழிகளிலெல்லாம் நடந்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொண்டு, அவரைப் பற்றிக்கொண்டிருந்து, அவரை உங்களுடைய முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் தொழுதுகொள்கிறதற்காக, யெகோவாவுடைய ஊழியக்காரனாகிய மோசே உங்களுக்குக் கற்பித்த கட்டளைகளின்படியும் நியாயப்பிரமாணத்தின்படியும் செய்வதற்கு மிகவும் கவனமாக இருங்கள் என்றான்.
6 Ouinge Joshua el akinsewowoyalos ac supwalosla, na elos folokla nu yen selos.
இவ்விதமாக யோசுவா அவர்களை ஆசீர்வதித்து, அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் தங்களுடைய கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள்.
7 Nu sin tafun sruf lal Manasseh, Moses el sang ipin acn se lalos in acn Bashan, ac nu sin tafu sruf sac Joshua el sang ipin acn se layen roto in Infacl Jordan, inmasrlon mwet Israel wialos. Ke Joshua el supwalosla nu yen selos ah, el akinsewowoyalosla meet
மனாசேயின் பாதிக்கோத்திரத்திற்கு மோசே பாசானிலே பங்கு கொடுத்தான்; அதினுடைய மற்றப் பாதிக்கு, யோசுவா யோர்தான் நதிக்கு இந்தப் புறத்திலே மேற்கே அவர்களுடைய சகோதரர்களோடு பங்கு கொடுத்தான்; யோசுவா அவர்களை அவர்களுடைய கூடாரங்களுக்கு அனுப்பிவிடுகிறபோது, அவர்களை ஆசீர்வதித்து:
8 ac fahk, “Folokla nu yen suwos wi mwe kasrup su kowos eisla sin mwet lokoalok lowos — kosro nutuwos, silver, gold, bronze, osra, oayapa nuknuk pukanten — ac kitalik ma inge inmasrlon mwet wiowos.”
நீங்கள் மிகுந்த ஐசுவரியத்தோடும், ஏராளமான ஆடுமாடுகளோடும், பொன், வெள்ளி, வெண்கலம், இரும்போடும், அநேக ஆடைகளோடும் உங்கள் கூடாரங்களுக்குத் திரும்பி, உங்களுடைய எதிரிகளிடம் கொள்ளையிட்டதை உங்களுடைய சகோதரர்களோடு பங்கிட்டுக்கொள்ளுங்கள் என்றான்.
9 Na mwet in sruf lal Reuben, sruf lal Gad, ac sruf lal Manasseh Kutulap elos fahsr liki mwet Israel in acn Shiloh in Canaan, ac folokla nu Gilead, acn selos su elos eis oana ma LEUM GOD El fahk nu sel Moses.
அப்பொழுது ரூபனுடைய சந்ததியினர்களும் காத்தின் சந்ததியினர்களும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தார்களும், யெகோவா மோசேயைக் கொண்டு கட்டளையிட்டபடியே, அவர்கள் கைவசப்படுத்திக்கொண்ட அவர்களுடைய சொந்த தேசமான கீலேயாத் தேசத்திற்குப் போக, கானான் தேசத்தில் உள்ள சீலோவில் இருந்த இஸ்ரவேல் மக்களைவிட்டுத் திரும்பிப்போனார்கள்.
10 Ke sruf lal Reuben, sruf lal Gad, ac sruf lal Manasseh Kutulap elos tuku sun acn Geliloth, su oan apkuran nu Infacl Jordan, elos tulokunak sie loang na lulap sisken infacl ah.
௧0கானான் தேசத்தில் இருக்கிற யோர்தானின் எல்லைகளுக்கு வந்தபோது, ரூபனுடைய சந்ததியினர்களும், காத்தின் சந்ததியினர்களும், மனாசேயின் பாதிக் கோத்திரத்தார்களும், அங்கே யோர்தான் நதியின் மேற்கு பகுதியில் பார்வைக்குப் பெரிதான ஒரு பலிபீடத்தைக் கட்டினார்கள்.
11 Na sulkakinyuk nu sin mwet Israel saya nukewa, “Kowos in lohng, tuh sruf lal Reuben, Gad, ac Manasseh Kutulap elos tulokunak sie loang in acn Geliloth, ke layen lasr sisken Infacl Jordan!”
௧௧ரூபனுடைய சந்ததியினர்களும் காத்தின் சந்ததியினர்களும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தார்களும் கானான் தேசத்திற்கு எதிரே இஸ்ரவேல் மக்களுக்குச் சொந்தமான யோர்தானின் எல்லைகளில் ஒரு பலிபீடத்தைக் கட்டினார்கள் என்று இஸ்ரவேல் மக்கள் கேள்விப்பட்டார்கள்.
12 Ke mwet Israel elos lohng ma inge, elos nukewa toeni nu Shiloh, su oan roto in Infacl Jordan, tuh elos in mweuni sruf su muta layen nu kutulap.
௧௨அவர்கள் அதைக் கேள்விப்பட்டபோது, இஸ்ரவேல் மக்களின் சபையாரெல்லோரும் அவர்களுக்கு எதிராக யுத்தம்செய்வதற்காக சீலோவிலே கூடி,
13 Na mwet Israel elos supwalla Phinehas, wen natul Eleazar mwet tol, nu sin sruf lal Reuben, Gad, ac Manasseh Kutulap in acn Gilead, lefahl kutulap in Infacl Jordan.
௧௩கீலேயாத் தேசத்தில் இருக்கிற ரூபன் கோத்திரத்தார்களிடமும், காத் கோத்திரத்தார்களிடமும், மனாசேயின் பாதிக் கோத்திரத்தார்களிடமும், ஆசாரியனாகிய எலெயாசாருடைய மகனாகிய பினெகாசையும்,
14 Ac elos supwala pac singoul sin mwet kol lalos welul Phinehas, kais sie ke sruf singoul ah, ac mwet inge pa sifen sou in kais sie sou lulap.
௧௪அவனோடு இஸ்ரவேலுடைய எல்லாக் கோத்திரங்களிலும் ஒவ்வொரு பிதாவின் குடும்பத்திற்கு ஒவ்வொரு பிரபுவாகப் பத்துப் பிரபுக்களையும் அனுப்பினார்கள்; இஸ்ரவேலின் சேனைகளிலே ஆயிரம்பேர்களுக்குள்ளே ஒவ்வொருவனும் தன் தன் பிதாவின் குடும்பத்திற்குத் தலைவனாக இருந்தான்.
15 Elos tuku sun acn Gilead nu yurin mwet lun Reuben, Gad, ac Manasseh Kutulap,
௧௫அவர்கள் கீலேயாத் தேசத்திலே ரூபன் கோத்திரத்தார், காத் கோத்திரத்தார், மனாசேயின் பாதிக் கோத்திரத்தார்களாகிய இவர்களிடம் வந்து:
16 na ke inen mwet lun LEUM GOD nukewa, elos fahk nu selos, “Efu kowos ku orek pwapa koluk ac forla liki God lun Israel? Ke kowos orala loang se inge nu suwos sifacna, kowos lain LEUM GOD!
௧௬நீங்கள் இந்த நாளிலே யெகோவாவைப் பின்பற்றாதபடித் திரும்பி, இந்த நாளிலே யெகோவாவுக்கு எதிராகக் கலகம் செய்யும்படியாக உங்களுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, இஸ்ரவேலின் தேவனுக்கு எதிராகச் செய்த இந்தத் துரோகம் என்ன?
17 Ya kowos tia esam ma koluk lasr in acn Peor, ke LEUM GOD El akkeokye mwet lal ke mas upa? Kut srakna keok ke ma inge. Ya soenna fal orekma koluk lasr nu sin LEUM GOD?
௧௭பேயோரின் அக்கிரமம் நமக்குப் போதாதா? யெகோவாவுடைய சபையிலே வாதை உண்டாயிருந்ததே; இந்த நாள்வரைக்கும் நாம் அதிலிருந்து நீங்கிச் சுத்தமாகவில்லையே.
18 Na mea, kowos ac forla liki LEUM GOD? Kowos fin forla liki LEUM GOD misenge, El ac fah arulana kasrkusrak sin mwet Israel nukewa lutu.
௧௮நீங்கள் இந்த நாளில் யெகோவாவைப் பின்பற்றாதபடித் திரும்புவீர்களோ? இன்று யெகோவாவுக்கு எதிராகக் கலகம் செய்வீர்களோ? அவர் நாளைக்கு இஸ்ரவேலின் சபையின்மேல் கடுங்கோபங்கொள்வாரே.
19 Ke ma inge, acn lowos an fin tia fal in orek alu we, fahsru nu in acn sin LEUM GOD, yen Lohm Nuknuk sin LEUM GOD oan we, ac eis kutu acn lasr uh lowos. Nimet kowos lain LEUM GOD ac oru tuh kut in wi pac lain God, ke kowos sifil musai sie pac loang sayen loang lun LEUM GOD lasr.
௧௯உங்களுடைய சொந்த தேசம் தீட்டாக இருந்ததானால், யெகோவாவுடைய ஆசரிப்புக்கூடாரம் இருக்கிற யெகோவாவுடைய சொந்தமான அக்கரையில் உள்ள தேசத்திற்கு வந்து, எங்கள் நடுவே பங்குகளைப் பெற்றுக்கொள்ளலாமே; நீங்கள் நம்முடைய தேவனாகிய யெகோவாவுடைய பலிபீடத்தை அல்லாமல் உங்களுக்கு வேறொரு பலிபீடத்தைக் கட்டுகிறதினாலே, யெகோவாவுக்கும் எங்களுக்கும் எதிராக பிடிவாதம் செய்யாமல் இருங்கள்.
20 Kowos in esamul Achan, wen natul Zerah, ke el tuh seakos ac tia kunausla ma sapkinyuk in kunausyukla, na tia el mukena pa misa ke sripen ma koluk lal ah, a mwet Israel nukewa wi pulakin keok.”
௨0சேராவின் மகனாகிய ஆகான் சாபத்தீடானப் பொருளைக்குறித்துத் துரோகம்செய்ததினாலே, இஸ்ரவேல் மக்களின்மேல் கடுங்கோபம் வரவில்லையா? அவன் ஒருவன்மட்டும் தன்னுடைய அக்கிரமத்தினாலே மடிந்துபோகவில்லையென்று யெகோவாவுடைய சபையார்கள் எல்லோரும் சொல்லச்சொன்னார்கள் என்றார்கள்.
21 Na mwet ke sruf lal Reuben, Gad, ac Manasseh Kutulap elos topuk sifen sou lun mwet Israel su muta lefahl roto in Infacl Jordan, ac fahk,
௨௧அப்பொழுது ரூபன் கோத்திரத்தார்களும், காத் கோத்திரத்தார்களும், மனாசேயின் பாதிக் கோத்திரத்தார்களும், இஸ்ரவேலின் ஆயிரம்பேர்களின் தலைவர்களுக்கு மறுமொழியாக:
22 “El Su Fulatlana, LEUM GOD, El God! El Su Fulatlana, LEUM GOD, El God! El etu lah efu ku kut oru ma inge, ac kut ke kowos in etu pac! Fin ma kut oru inge lainul ac kunausla wulela lasr nu sel, lela in anwuki kut!
௨௨தேவாதி தேவனாகிய யெகோவா, தேவாதி தேவனாகிய யெகோவாவே, அதை அறிந்திருக்கிறார்; இஸ்ரவேலர்களும் அறிந்துகொள்ளுவார்கள்; அது பிடிவாதத்தினாலாவது, யெகோவாவுடைய கட்டளைக்கு எதிரான துரோகத்தினாலாவது செய்யப்பட்டதானால், இந்த நாளில் அவர் எங்களைக் காப்பாற்றாமல் இருப்பாராக.
23 Ac kut fin tia akos LEUM GOD ac musai loang lasr in orek mwe kisa firir, ku mwe kisa wheat, ku mwe kisa in akinsewowo, na lela LEUM GOD Elan nununkekut kac.
௨௩ஒரு காரியத்தைக்குறித்து நாங்கள் எங்களுக்கு அந்த பலிபீடத்தைக் கட்டினதே அல்லாமல், யெகோவாவைப் பின்பற்றாதபடிக்கு விலகுவதற்காவது, அதின்மேல் சர்வாங்கதகனபலியையாவது போஜனபலியையாவது சமாதானபலிகளையாவது செலுத்துகிறதற்காவது அதைச் செய்ததுண்டானால், யெகோவா அதை விசாரிப்பாராக.
24 Mo! Kut oru ma inge mweyen kut sensen mu ac mau sie len tulik nutuwos uh ac ku in fahk nu sin tulik natusr uh, ‘Mea lomtal nu ke LEUM GOD lun Israel?
௨௪நாளைக்கு உங்களுடைய பிள்ளைகள் எங்களுடைய பிள்ளைகளை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கும் உங்களுக்கும் என்ன?
25 God El orala tuh Infacl Jordan in srikutla liki kowos, mwet Reuben ac Gad! Wangin ip lomtal nu sin LEUM GOD!’ Na fin ouinge, tulik nutuwos an ac mau oru tulik natusr uh in tila alu nu sin LEUM GOD.
௨௫ரூபனுடைய மக்கள் காத்தின் மக்களாகிய உங்களுக்கும் எங்களுக்கும் நடுவே யெகோவா யோர்தான் நதியை எல்லையாக வைத்தார்; யெகோவாவிடம் உங்களுக்குப் பங்கு இல்லை என்று சொல்லி, எங்கள் பிள்ளைகளைக் யெகோவா வுக்குப் பயப்படாமலிருக்கச் செய்வார்கள் என்கிற பயத்தினாலே நாங்கள் சொல்லிக்கொண்டது என்னவென்றால்:
26 Na pa kut orala loang se, tuh tia ma nu ke mwe kisa firir ku kutena kain kisa.
௨௬சர்வாங்கதகனத்திற்கு அல்ல, பலிக்கும் அல்ல, எங்கள் சர்வாங்கதகனங்களாலும், பலிகளாலும், சமாதானபலிகளாலும், நாங்கள் யெகோவாவுடைய சந்நிதியில் அவருடைய ஆராதனையைச் செய்யத்தக்கவர்கள் என்று எங்களுக்கும் உங்களுக்கும், நமக்குப் பின்வரும் நம்முடைய சந்ததியார்களுக்கும் நடுவே சாட்சி உண்டாயிருக்கும்படிக்கும்,
27 Tia pa ingan sripa lasr uh. Kut oru tuh in mwe akul inmasrlosr ac kowos ac oayapa fwil tokosr uh, kut in mau ku in alu nu sin LEUM GOD ye mutun Lohm Nuknuk Mutal sel, wi kisa lasr inge ke mwe kisa firir ac mwe kisa in akinsewowo. Fin ouinge, na tulik nutuwos uh ac fah tia ku in fahk mu, ‘Wangin ip lowos sin LEUM GOD.’
௨௭யெகோவாவிடம் உங்களுக்குப் பங்கு இல்லை என்று உங்களுடைய பிள்ளைகள் நாளைக்கு எங்களுடைய பிள்ளைகளிடம் சொல்லாமலிருப்பதற்காகவே, ஒரு பலிபீடத்தை நமக்காக உண்டுபண்ணுவோம் என்றோம்.
28 Nunak lasr uh pa fin fahsr nwe tok tulik nutuwos elos fahk kas ouinge, na tulik natusr uh ac ku in fahk mu, ‘Liye, mwet matu lasr ah orala loang se oana loang lun LEUM GOD. Tia loang in mwe kisa firir ku kutena kain in kisa, a tuh in sie mwe akul inmasrlosr ac kowos.’
௨௮நாளைக்கு எங்களோடாவது, எங்களுடைய சந்ததியார்களோடாவது அப்படிச் சொல்வார்களானால், அப்பொழுது சர்வாங்க தகனத்திற்கும் அல்ல, பலிக்கும் அல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே சாட்சிக்காக எங்கள் பிதாக்கள் உண்டுபண்ணின யெகோவாவுடைய பலிபீடத்தின் சாயலான பலிபீடத்தைப் பாருங்கள் என்று சொல்லலாம் என்றோம்.
29 Wangin in nunak lasr kut in lain LEUM GOD, ku forla lukel misenge ke kut musaeak loang se nu ke mwe kisa firir, ku mwe kisa wheat, ku kutena kain in kisa. Kut tia lungse musaela kutena loang sayen loang lun LEUM GOD lasr su oan ye mutun Lohm Nuknuk Mutal sel.”
௨௯நம்முடைய தேவனாகிய யெகோவாவுடைய ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாக இருக்கிற அவருடைய பலிபீடத்தைத்தவிர, நாங்கள் சர்வாங்க தகனத்திற்கும், போஜனபலிக்கும், மற்றப் பலிக்கும் வேறொரு பலிபீடத்தைக் கட்டுகிறதினாலே, யெகோவாவுக்கு எதிராகக் கலகம்செய்வதும், இன்று யெகோவாவைப் பின்பற்றாதபடிக்கு விலகுவதும், எங்களுக்குத் தூரமாக இருப்பதாக என்றார்கள்.
30 Ke Phinehas mwet tol, ac mwet kol singoul ke sruf lun Israel su muta layen nu roto, elos lohng ma mwet ke sruf lun Reuben, Gad ac Manasseh Kutulap elos fahk inge, na elos insewowo kac.
௩0ரூபனுடைய கோத்திரத்தார்களும், காத்தின் கோத்திரத்தார்களும், மனாசே கோத்திரத்தார்களும் சொல்லுகிற வார்த்தைகளை ஆசாரியனாகிய பினெகாசும், அவனோடு இருந்த சபையின் பிரபுக்களும், இஸ்ரவேலுடைய ஆயிரம்பேர்களின் தலைவர்களும் கேட்டபோது, அது பார்வைக்கு நன்றாக இருந்தது.
31 Na Phinehas, wen natul Eleazar mwet tol, el fahk nu selos, “Inge kut etu lah LEUM GOD El wi kut mweyen kowos tia oru kutena ma in lainul ke ma kowos oru inge. Ouinge kowos molela Israel liki kaiyuk lun LEUM GOD.”
௩௧அப்பொழுது ஆசாரியனான எலெயாசாரின் மகனாகிய பினெகாஸ், ரூபனுடைய கோத்திரத்தார்களையும், காத்தின் கோத்திரத்தார்களையும், மனாசே கோத்திரத்தார்களையும் நோக்கி: நீங்கள் யெகோவாவுக்கு எதிராக அப்படிப்பட்ட துரோகத்தைச் செய்யாதிருக்கிறதினாலே, யெகோவா நம்முடைய நடுவில் இருக்கிறார் என்பதை இன்று அறிந்திருக்கிறோம்; இப்பொழுது இஸ்ரவேல் மக்களைக் யெகோவாவுடைய கைக்குத் தப்புவித்தீர்கள் என்றான்.
32 Na Phinehas wen natul Eleazar, ac mwet kol lun mwet Israel, elos som liki mwet lal Reuben ac Gad in acn Gilead, ac folokla nu Canaan nu yurin mwet Israel, ac fahkak ma inge nukewa nu selos.
௩௨ஆசாரியனான எலெயாசாரின் மகனாகிய பினெகாசும், பிரபுக்களும், கீலேயாத் தேசத்தில் இருக்கிற ரூபனுடைய கோத்திரத்தார்களையும், காத்தின் கோத்திரத்தார்களையும் விட்டு, கானான் தேசத்திற்கு இஸ்ரவேல் மக்களிடம் திரும்பிவந்து, அவர்களுக்கு மறுசெய்தி சொன்னார்கள்.
33 Mwet Israel elos insewowo ke ma elos lohng ac kaksakin God. Elos tila sramsramkin in som mweun ac kunausla acn sin mwet Reuben ac mwet Gad.
௩௩அந்தச் செய்தி இஸ்ரவேல் மக்களின் பார்வைக்கு நன்றாக இருந்தது; ஆகவே ரூபனுடைய வம்சத்தார்களும் காத்தின் வம்சத்தார்களும் குடியிருக்கிற தேசத்தை அழித்துவிட, அவர்கள் மேல் யுத்தத்திற்குப் புறப்படுவோம் என்கிற பேச்சை விட்டு, இஸ்ரவேல் மக்கள் தேவனை ஸ்தோத்தரித்தார்கள்.
34 Ac mwet Reuben ac mwet Gad elos fahk, “Loang se inge sie mwe loh nu sesr nukewa lah LEUM GOD El God.” Ouinge elos sang inen loang sac “Mwe Loh.”
௩௪யெகோவா தேவன் என்பதற்கு அந்த பலிபீடம் நமக்குள்ளே சாட்சியாக இருக்கும் என்று சொல்லி, ரூபனுடைய வம்சத்தார்களும், காத்தின் வம்சத்தார்களும் அதற்கு ஏத் என்று பெயரிட்டார்கள்.

< Joshua 22 >