< Lucas 15 >

1 E kꞌi kꞌu aꞌjmakibꞌ xuqujeꞌ e tal taq alkabal xeqet rukꞌ ri Jesús chutatabꞌexik.
எல்லா வரி வசூலிப்பவர்களும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்துசேர்ந்தார்கள்.
2 Rumal riꞌ ri e fariseos xuqujeꞌ ri aꞌjtijabꞌ rech ri taqanik xkichapleꞌj wixwatem xkibꞌij: Waꞌ we achi riꞌ kuꞌkꞌamawaꞌj xuqujeꞌ kawaꞌ kukꞌ ri aꞌjmakibꞌ.
அப்பொழுது பரிசேயர்களும் வேதபண்டிதர்களும் முறுமுறுத்து: இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடு சாப்பிடுகிறார் என்றார்கள்.
3 Ri Jesús kꞌut xutzijoj we jun kꞌambꞌejabꞌal noꞌj riꞌ chike:
அவர்களுக்கு அவர் சொன்ன உவமையாவது:
4 Qaꞌnampe che jun chiꞌwe e kꞌo jun ciento uchij, kasach kꞌu kan jun chike. ¿La man kꞌu kuꞌya kan ri junmuchꞌ bꞌelej lajuj cho ri saq, kꞌa te riꞌ katzalij chutzukuxik ri xsach kanoq, kꞌa kuꞌriqa na loq?
உங்களில் ஒரு மனிதன் நூறு ஆடுகளை உடையவனாக இருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்திரத்திலேவிட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்கும்வரை தேடித்திரியானோ?
5 Are kuriq ri uchij sibꞌalaj kakiꞌkotik, kukꞌyaq loq chwi utelebꞌ.
கண்டுபிடித்தபின்பு, அவன் மகிழ்ச்சியோடு அதைத் தன் தோள்களின்மேல் போட்டுக்கொண்டு,
6 Katzalij loq cho ri rachoch, kuꞌmulij ri e rech taq chꞌabꞌeꞌn xuqujeꞌ ri uꞌkꞌulja ja kubꞌij chike: “Chixkiꞌkot wukꞌ, rumal xinriq ri nuchij ri xsach kanoq.”
வீட்டிற்கு வந்து, நண்பர்களையும் அண்டைகுடும்பத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட மகிழுங்கள் என்பான் அல்லவா?
7 Je xuqujeꞌ kakꞌulmataj pa ri kaj kabꞌan nimaqꞌij rumal jun ajmak ri kukꞌex ukꞌuꞌx man are ta kabꞌan nimaqꞌij chike ri junmuchꞌ bꞌelej lajuj e sukꞌ taq winaq ri man kajawataj kakikꞌex kikꞌuꞌx.
அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்து மகிழ்ச்சி உண்டாகிறதைவிட மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த மகிழ்ச்சி உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
8 Xuqujeꞌ qaꞌnampe che we kꞌo jun ixoq ri kꞌo lajuj saqa pwaq rukꞌ, kutzaq kꞌu jun chike, ¿la man kꞌu kutzij jun qꞌaqꞌ riꞌ pa ri ja, xuqujeꞌ kumes ri upaja, kuchapleꞌj utzukuxik kꞌa kuriq na?
அன்றியும், ஒரு பெண் பத்து வெள்ளிக்காசுகளை உடையவளாக இருந்து, அதில் ஒரு வெள்ளிக்காசு காணாமற்போனால், விளக்கைக் கொளுத்தி, வீட்டைப் பெருக்கி, அதைக் கண்டுபிடிக்கிறவரைக்கும் அக்கறையோடு தேடாமலிருப்பாளோ?
9 Are kꞌu kuriqo, kuꞌmulij kꞌu ronojel ri e rech taq chꞌabꞌeꞌn xuqujeꞌ ri uꞌkꞌulja are, kubꞌij riꞌ chike: “Chixkiꞌkot wukꞌ xinriq le nurajil le xtzaqik.”
கண்டுபிடித்தபின்பு, தன் தோழிகளையும் அண்டை வீட்டுக்காரிகளையும் கூட வரவழைத்து: காணாமற்போன வெள்ளிக்காசைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட மகிழ்ச்சியாக இருங்கள் என்பாள் அல்லவா?
10 Ri Dios xuqujeꞌ e rachiꞌl ri angelibꞌ kekiꞌkotik are kukꞌex ukꞌuꞌx ri jun ajmak.
௧0அதுபோல மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதர்களுக்கு முன்பாக மகிழ்ச்சி உண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
11 Ri Jesús xubꞌij: Kꞌo jun achi, ri e kꞌo kebꞌ ralkꞌwaꞌl.
௧௧பின்னும் அவர் சொன்னது: ஒரு மனிதனுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள்.
12 Ri koꞌl chike xubꞌij che ri utat: “Tat, ya la ri wechabꞌal.” Xaq jeriꞌ ri tat xujach ri umebꞌail chike ri uꞌkꞌojol.
௧௨அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, சொத்தில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் சொத்தை பங்கிட்டுக்கொடுத்தான்.
13 Are xikꞌow kebꞌ oxibꞌ qꞌij, ri kꞌojolaxel xumulij ronojel ri kꞌo rukꞌ, xukꞌayij kanoq. Kꞌa te riꞌ xeꞌ pa jun naj alaj tinimit, chilaꞌ xkꞌojiꞌ wi, xusachachej ronojel ri pwaq rajil ri rechabꞌal, maj pa sukꞌ ri xubꞌano.
௧௩சில நாட்களுக்குப்பின்பு, இளையமகன் தன் சொத்தைவிற்று பணத்தை திரட்டிக்கொண்டு, தூரதேசத்திற்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாக வாழ்ந்து, தன் சொத்தை அழித்துப்போட்டான்.
14 Xa kꞌu are xsachtaj ronojel ri urajil, xpe jun nimalaj wiꞌjal pa ri tinimit riꞌ, xuchapleꞌj kꞌu numik.
௧௪எல்லாவற்றையும் அவன் செலவழித்தபின்பு, அந்த தேசத்திலே கொடிய பஞ்சமுண்டானது. அப்பொழுது அவன் வறுமைக்குள்ளானான்,
15 Xuriq kꞌu jun achi, xuta uchak che. Ri achi xuya uchak ri ala, xutaq bꞌik chikiyuqꞌuxik aq cho jun saq.
௧௫அந்த தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில்போய் வேலையில் சேர்ந்தான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான்.
16 Sibꞌalaj are kꞌu karaj kutij ri kechaꞌ ri aq, xa kꞌu maj jachin ri kayoꞌw che.
௧௬அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் பசியைதீர்க்க ஆசையாக இருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.
17 Kꞌisbꞌal kꞌu rech xuchomaj: “Sibꞌalaj kꞌo kiwa ri rajchak ri nutat, ri in kꞌut tajin kinkam che numik waral.
௧௭அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய வேலைக்காரர்கள் எத்தனையோ பேருக்கு நிறைவான உணவு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன்.
18 Kintzalij waꞌ cho rachoch ri nutat, kinbꞌij waꞌ che: ‘Xinmakun cho ri Dios xuqujeꞌ cho la nutat.
௧௮நான் எழுந்து என் தகப்பனிடத்திற்குப்போய்: தகப்பனே, பரலோகத்திற்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவம் செய்தேன்.
19 Man taqal ta chi chwe kabꞌij kꞌojol la chwe, bꞌana la chi kinux jun ajchak la.’”
௧௯இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் தகுதியற்றவன், உம்முடைய வேலைக்காரர்களில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி;
20 Xwaꞌjilik, xutaqej ri ubꞌe, xtzalij kꞌu cho rachoch ri utat. Kꞌanaj kꞌu na kꞌo wi loq, xtoqꞌobꞌax uwach are xilitaj apanoq rumal ri utat, kaxikꞌanik xuꞌkꞌulaj apanoq, xumatzej ri ukꞌojol xuqujeꞌ xutzꞌumaj.
௨0எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தம்செய்தான்.
21 “Tat, ri in xinmakunik cho ri kaj xuqujeꞌ cho la, taqal ta chi chwe kabꞌij kꞌojol la chwe,” xcha ri ala.
௨௧குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே பரலோகத்திற்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவம் செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் தகுதியற்றவன் என்று சொன்னான்.
22 Are kꞌu ri tataxel aninaq xtaqan chike ri e patanil taq rech, xubꞌij: “Aninaq chikꞌama loq ri jeꞌl laj atzꞌyaq rech kukojo, xuqujeꞌ chikojo jun mulqꞌabꞌ che ri uqꞌabꞌ, xuqujeꞌ chikojo uxajabꞌ che ri raqan.
௨௨அப்பொழுது தகப்பன் தன் வேலைக்காரர்களை நோக்கி: நீங்கள் உயர்ந்த ஆடைகளை கொண்டுவந்து இவனுக்கு உடுத்தி இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள்.
23 Jiꞌkꞌama loq xuqujeꞌ chikamisaj ri chomalaj wakax rech kaqabꞌan nimaqꞌij.
௨௩கொழுத்தக் கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் விருந்து கொண்டாடுவோம்.
24 Rumal cher ri nukꞌojol ri xkamik, xkꞌastaj chi kꞌu na loq, waꞌ sachik, xa kꞌu xqariq na.” Xaq jeriꞌ xkichapleꞌj ubꞌanik nimaqꞌij.
௨௪என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் கொண்டாடத் தொடங்கினார்கள்.
25 Are kꞌu ri nabꞌyal kꞌojolaxel bꞌenaq cho ri saq, are kꞌu xtzalij loq xuta ri qꞌojom rech ri xojow.
௨௫அவனுடைய மூத்தகுமாரன் வயலில் இருந்தான். அவன் திரும்பி வீட்டிற்கு அருகில் வருகிறபோது, கீதவாத்தியத்தையும் நடனக்களிப்பையும் கேட்டு;
26 Xusikꞌij kꞌu jun chike ri patanijelabꞌ, xuta che jas tajin kakꞌulmatajik.
௨௬வேலைக்காரர்களில் ஒருவனை அழைத்து: இதென்ன என்று விசாரித்தான்.
27 Xubꞌij kꞌu ri patanijel che: “Xtzalij loq ri achaqꞌ, utz uwach, rumal kꞌu rech xtaqan ri atat chukamisaxik ri chomalaj wakax.”
௨௭அதற்கு அவன்: உம்முடைய சகோதரன் வந்தார், அவர் மறுபடியும் சுகத்துடனே உம்முடைய தகப்பனிடத்தில் வந்து சேர்ந்தபடியினாலே அவருக்காகக் கொழுத்தக் கன்றை அடித்திருக்கிறார் என்றான்.
28 Sibꞌalaj xyakataj kꞌu royawal ri nabꞌyal kꞌojolaxel man xraj ta kꞌut xok bꞌik, xel kꞌu na loq ri tataxel chutayik toqꞌobꞌ che chi kok bꞌik pa ja.
௨௮அப்பொழுது அவன் கோபமடைந்து உள்ளே போக விருப்பமில்லாதிருந்தான். தகப்பனோ வெளியே வந்து அவனை வருந்தி அழைத்தான்.
29 Ri nabꞌyal kꞌojolaxel xubꞌij che ri utat: “Xwimpe chilaꞌ la sibꞌalaj kꞌi junabꞌ nupatanim la, xa ta ne nitzꞌ inkꞌululaꞌninaq che la, xa ta kꞌu ne jun laj nukꞌisikꞌ yaꞌom la chwe rech kinbꞌan nimaqꞌij kukꞌ ri e wech taq chꞌabꞌeꞌn.
௨௯அவன் தகப்பனுக்கு மறுமொழியாக: இதோ, இத்தனை வருடகாலமாக நான் உமக்கு வேலைச்செய்து, எப்பொழுதுமே எல்லாவற்றிலும் உம்முடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்திருந்தும், என் நண்பர்களோடு நான் மகிழ்ச்சியாக இருக்கும்படி நீர் ஒருபோதும் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்கவில்லை.
30 Are kꞌu xul we kꞌojol la riꞌ, ri xusach kan ronojel ri qꞌinomal la kukꞌ taq ixoqibꞌ, lal kataqan la che ukamisaxik ri chom laj wakax.”
௩0வேசிகளிடத்தில் உம்முடைய சொத்துக்களை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே கொழுத்தக் கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே என்றான்.
31 Ri tataxel xubꞌij che: “Nukꞌojol, at kꞌolinaq wi at wukꞌ, ronojel ri nujastaq awe at.
௩௧அதற்குத் தகப்பன்: மகனே, நீ எப்போதும் என்னோடு இருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாக இருக்கிறது.
32 Xa kꞌu rajawaxik xqabꞌan nimaqꞌij, xuqujeꞌ xujkiꞌkotik rumal cher we awachalal we xkamik, xkꞌastaj loq, pune xsach na, xqariq chi kꞌu na.”
௩௨உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் கொண்டாடி மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமே என்று சொன்னான் என்றார்.

< Lucas 15 >