< ଲୁକ୍‌ 5 >

1 ମେସୁଆ ଜିସୁ ଗିନେସରତ୍‍ ଲଣ୍ଡିଆ ଆଃଡ଼ା ତୁଆଁ ଲେଃଗେ । ଆରି ରେମୁଆଁଇଂ ଇସ୍‌ପର୍‌ନେ ସାମୁଆଁ ଅଁନ୍‌ସା ଟେଚାଟେଣ୍ଡୁର୍‍ ଡିଙ୍ଗ୍ଆର୍‌ଡିଙ୍ଗେ ।
பின்பு அவர் கெனேசரேத்துக் கடலின் அருகே நின்றபோது, மக்கள்கூட்டம் தேவவசனத்தைக் கேட்பதற்காக அவரிடம் நெருங்கிவந்தார்கள்.
2 ଆରି ମେଁ କେଣ୍ଡିଆ ଆଃଡ଼ା ମ୍ୱାକ୍ଲିଗ୍ ତରା ଲେଃକ୍ନେ କେକେ । ସାଃହାଃରେଇଂ ଆତେନ୍‌ ତରାବାନ୍ ଜାର୍‌ଚେ ମେଁଇଙ୍ଗ୍‌ନେ ଜାଲ୍ ଗଡ଼ିଆ ଡିଙ୍ଗ୍‌ଗେ ।
அப்பொழுது கடற்கரையிலே நின்றுகொண்டிருந்த இரண்டு படகுகளைக் கண்டார். மீன்பிடிக்கிறவர்கள் படகுகளைவிட்டு இறங்கி வலைகளை அலசிக்கொண்டிருந்தார்கள்.
3 ଆତେନ୍‌ ତରାଇଂ ବାନ୍ ଆଣ୍ଡିନେ ଶିମୋନନେ ତରା ଲେଃଗେ । ଆତ୍‍ ଅରିଆ ମେଁ ଡେଃଚେ କେଣ୍ଡିଆ ଆଡ଼ାବାନ୍ ସ୍ଲ ୱେନ୍‌ସା ଆମେକେ ବାସଙ୍ଗ୍‌କେ; ଆରି ମେଁ ତରାଅରିଆ କଚେ ରେମୁଆଁଇଂନ୍ନିଆ ବୁଦି ବିଃନେ ଲାଗେକେ ।
அப்பொழுது அவர் ஒரு படகில் ஏறினார், அது சீமோனுடைய படகாக இருந்தது; அதைக் கரையிலிருந்து கொஞ்சம் தள்ளும்படி அவனைக் கேட்டுக்கொண்டு, அந்தப் படகில் உட்கார்ந்து, மக்களுக்குப் போதகம்பண்ணினார்.
4 ମେଁ ସାମୁଆଁ ବାସଙ୍ଗ୍‌ ଆଃଡାଚେ ଶିମୋନ୍‍କେ ବାସଙ୍ଗ୍‌କେ, “ସ୍ରିଣ୍ଡିଆ ବିତ୍ରେ ୱେଚେ ଆଃଡ଼ ସାନ୍ତି ପେନେ ଜାଲ୍ ତ୍ଲାଗ୍‌ପା ।
அவர் போதகம்பண்ணி முடித்தபின்பு சீமோனை நோக்கி: ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டுபோய், மீன்பிடிக்க உங்களுடைய வலைகளைப் போடுங்கள் என்றார்.
5 ଆତ୍‌ବା ଶିମୋନ ଉତର୍ ବିକେ, ଏ ଗୁରୁ, ଆଃଡ଼ ସାନ୍ତି ନେ ମିଡିଗ୍‍ ଜାକ କଷ୍ଟ ଡିଙ୍ଗ୍‌ଚେ ମେଁ ଡିଗ୍ ନେବାକେ ଣ୍ଡୁ; ମାତର୍‌ ନାନେ ସାମୁଆଁରେ ନେଙ୍ଗ୍ ଜାଲ୍ ତ୍ଲାଗ୍‍ଏ ।
அதற்குச் சீமோன்: ஐயா, இரவு முழுவதும் நாங்கள் முயற்சிசெய்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; இருப்பினும் உம்முடைய வார்த்தையின்படி நான் வலைகளைப் போடுகிறேன் என்றான்.
6 ଆରି ମେଇଂ ଜାଲ୍ ତ୍ଲାଗ୍‌ଚେ ଜବର୍ ଆଃଡ଼ ସାଃଆର୍‌କେ ଆରି ମେଁଇଙ୍ଗ୍‌ନେ ଜାଲ୍ ଟିକ୍‍ଚିନେ ଲାଗେକେ ।
அப்படியே அவர்கள் வலைகளைப் போட்டு, அவர்கள் வலைகள் கிழிந்துபோகும் அளவிற்கு அதிகமான மீன்களைப் பிடித்தார்கள்.
7 ଆତ୍‌ଅରିଆ ମେଁଇଙ୍ଗ୍‌ନେ ଜାଣ୍ଡିଗ୍ କୁଡ଼େଚେ ସାଣ୍ଡ୍ରେଇଙ୍ଗ୍ ଆରି ବିନ୍ ତରାନିଆ ଲେଃଆର୍‌ଗେ ମେଇଂ ଡିରକମ୍ ପାଙ୍ଗ୍‌ଚେ ସାଇଜ୍ୟ ଡିଙ୍ଗ୍ ଆର୍‌ଏ ଆତେନ୍‌‌ସା ମେଇଂ ଆମେଇଂକେ ୱାକେ । ଆତ୍‌ବା ମେଇଙ୍ଗ୍ ପାଙ୍ଗ୍‌ଚେ ମ୍ୱାକ୍ଲିଗ୍ ତରାକେ ଆଃଡ଼ରେ ଡେକ୍‌ରକମ୍ ତାଃନ‍ଆର୍‌କେ ଜେ ତରାଇଂ ଲଗ୍‌ଡିଆ ୱେନେ ସୁଗୁଆ ଡିଙ୍ଗ୍‌ୱେକେ ।
அப்பொழுது மற்றப் படகில் இருந்த கூட்டாளிகள் வந்து தங்களுக்கு உதவிசெய்யவேண்டும் என்று அவர்களுக்கு சைகை காட்டினார்கள்; அவர்கள் வந்து, இரண்டு படகுகளும் அமிழ்ந்துபோகும் அளவிற்கு நிரப்பினார்கள்.
8 ଡାଗ୍ଲା ଶିମୋନ୍ ପିତର୍ ଆକେନ୍ କେଚେ ଜିସୁନେ ଞ୍ଚ ବୁନ୍ଦେ ଲଃଚେ ବାସଙ୍ଗ୍‌କେ ଏ ମାପ୍ରୁ ନାନେ ନେଙ୍ଗ୍ ଡାଗ୍ରାବାନ୍‍ ଲାଗ୍‍ଡଲା ଡାଗ୍ଲା ନେଙ୍ଗ୍ ମୁଇଙ୍ଗ୍ ପାପି ରେମୁଆଁ ।”
சீமோன்பேதுரு அதைக் கண்டு, இயேசுவின் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நான் பாவியான மனிதன், நீர் என்னைவிட்டுப் போகவேண்டும் என்றான்.
9 ଡାଗ୍ଲା ମେଇଙ୍ଗ୍ ଆତେନ୍‌ ବାନ୍‍ ଆଃ ଅଃକେନ୍ ଆଡ଼ ସାଃବଆର୍‌ଗେ ଜେ ଆତେନ୍‌ କେଚେ ମେଁ ଆରି ମେଁନେ ସାଙ୍ଗଇଂ ସାପାରେ ଇରିଆତୁଗ୍ ଡିଙ୍ଗ୍ ଆର୍‌କେ;
அவர்கள் அதிகமான மீன்களைப் பிடித்ததினால், அவனுக்கும் அவனோடுகூட இருந்த எல்லோருக்கும் பிரமிப்பாக இருந்ததால் அப்படிச் சொன்னான்.
10 ଆରି ଜେବଦୀନେ ମ୍ୱାକ୍ଲିଗ୍‍ ଉଙ୍ଗ୍‌ଡେ ଜାକୁବ୍‌ ଆରି ଜହନ୍‌, ଜାଣ୍ଡେଇଂ ଶିମୋନ ଏଃତେ ଲେଃଗେ, ମେଇଂ ଡିଗ୍ ଦେତୁଆ ଇରିଆଃତୁଗ୍ ୱେଆର୍‌କେ । ଆରି ଜିସୁ ଶିମନ୍‍କେ ବାସଙ୍ଗ୍‌କେ, ଆବ୍‌ଟଗେ ନାମଃ, ଏଃବାନ୍ ନା ଆଃଡ଼ ସାଃନେ ବାଦୁଲ୍ ରେମୁଆଁଇଂକେ ମାପ୍ରୁନେ ଗାଲିନ୍ନିଆ ଡୁଂନାପାଙ୍ଗ୍‍ଏ ।
௧0சீமோனுக்குக் கூட்டாளிகளான செபெதேயுவின் குமாரர்களாகிய யாக்கோபும் யோவானும் அப்படியே பிரமித்தார்கள். அப்பொழுது இயேசு சீமோனை நோக்கி: பயப்படாதே, இனி நீ மனிதர்களைப் பிடிக்கிறவனாக இருப்பாய் என்றார்.
11 ଆତ୍‌ବା ମେଇଂ ତରାଇଂ କେଣ୍ଡିଆଃ ଆଃଡ଼ାଃ ଡୁଙ୍ଗ୍‍ପାଙ୍ଗ୍‍ଚେ ସାପା ଆନ୍ତାର୍‌ଚେ ମେଁନେ ପ୍ଲା ୱେଆର୍‌କେ ।
௧௧அவர்கள் படகுகளைக் கரையிலே கொண்டுபோய் நிறுத்தி, எல்லாவற்றையும்விட்டு, அவருக்குப் பின்னே சென்றார்கள்.
12 ମେଁ ମୁଇଙ୍ଗ୍ ଇନିନିଆ ଲେଃନେ ବେଲା କେଲା ଆତ୍‌ଅରିଆ ମୁଇଙ୍ଗ୍ ଗାଗ୍‌ଡ଼େ ଜାକ କୁଷ୍ଟରଗ୍‍ ସାଲେଃକ୍ନେ ରେମୁଆଁ ଲେଃଡିଙ୍ଗେ; ମେଁ ଜିସୁକେ କେଚେ ମୁଗ୍‌ଗାଃ ଲଃଚେ ଆମେକେ କୁସାମୁତି ଡିଙ୍ଗ୍‌ଚେ ବାସଙ୍ଗ୍‌କେ ଏ ମାପ୍ରୁ “ନାନେ ଜଦି ରାଜି ନାଡିଙ୍ଗ୍‌ଏ ଦେତ୍‍ଲା ନାନେ ଆନେଙ୍ଗ୍ ନିମାଣ୍ଡା ଆଡିଙ୍ଗ୍ ନାୟାଏ ।”
௧௨பின்பு அவர் ஒரு பட்டணத்தில் இருக்கும்போது, குஷ்டரோகம் நிறைந்த ஒரு மனிதன் இயேசுவைக் கண்டு, முகங்குப்புறவிழுந்து: ஆண்டவரே, உமக்கு விருப்பமானால், என்னைச் சுத்தப்படுத்த உம்மால் முடியும் என்று அவரை வேண்டிக்கொண்டான்.
13 ଆତ୍‌ବା ମେଁ ନ୍ତି ଆଚ୍‍ଲେଚେ ଆମେକେ ଲିଗ୍‍ଚେ ବାସଙ୍ଗ୍‌କେ ନେଙ୍ଗ୍ ରାଜି ଡିଙ୍ଗ୍‍ଣ୍ଡିଙ୍ଗ୍‍କେ ନିମାଣ୍ଡା ଡିଙ୍ଗ୍ । ଆତ୍‌ବା ଆତେନ୍‌ ରେମୁଆଁ କୁଷ୍ଟରଗ୍‌ବାନ୍‌ ନିମାଣ୍ଡା ଡିଂକେ ।
௧௩அவர் தமது கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்கு விருப்பமுண்டு, சுத்தமாகு என்றார்; உடனே குஷ்டரோகம் அவனைவிட்டு நீங்கியது.
14 ଜିସୁ ଆମେକେ ଆଦେସ୍‍ ବିଚେ ବାସଙ୍ଗ୍‌କେ ଆଜାକେ ଆବାସଙ୍ଗ୍‍ ନାମଃ ମାତର୍‌ ସିଦା ପୁଜାରିନ୍ନିଆ ୱେଲା ଆରି ମେଁ ଆନାକେ ପରିକ୍ୟା ଡିଙ୍ଗ୍‌ଚେ କେଲେ ଏନ୍‌ ଇଡ଼ିଙ୍ଗ୍ ନାନେ ନିମାଣ୍ଡା ଡିଙ୍ଗ୍ ନାଲେଃକେ ଡାଗ୍‌ଚେ ବିନ୍‍ନ୍ନିଆ ପାର୍‍ମାନ୍‍ ବିଃନ୍‍ସା ମୋଶାନେ ଆଦେସ୍‍ ଅନୁସାରେ ବେଦିନ୍ନିଆ ଦାନ୍ ବିଃ ।
௧௪அவர் அவனை நோக்கி: நீ இதை யாருக்கும் உடனே சொல்லாமல், நீ எருசலேமுக்குப்போய், உன்னை ஆசாரியனுக்குக் காண்பித்து, நீ சுத்தமானதினால், மோசே கட்டளையிட்டபடி, அவர்களுக்குச் சாட்சியாகப் பலிசெலுத்து என்று கட்டளையிட்டார்.
15 ଡାଗ୍ଲା ଜିସୁନେ ବିସୟ୍‌ରେ ସାମୁଆଁ ଆରି ଅଦିକ୍‍ ଉଡ୍ରା ଡିଙ୍ଗ୍‌କେ ଆରି ଜବର୍ ରେମୁଆଁ ଅଁନ୍‌ସା ଆରି ନିଜେ ନିଜେ ରଗ୍ ବାନ୍ ନିମାଣ୍ଡା ଡିଙ୍ଗ୍‍ନେସା ମୁଇଂନ୍ନିଆ ରିସିଙ୍ଗ୍‍ନେ ଲାଗେକେ;
௧௫அப்படியிருந்தும் அவரைப்பற்றிய செய்தி அதிகமாகப் பரவியது. அநேக மக்கள் அவருடைய உபதேசத்தைக் கேட்பதற்கும் அவராலே தங்களுடைய நோய்கள் நீங்கி சுகமடைவதற்கும் கூடிவந்தார்கள்.
16 ମାତର୍ ମେଁ ରେମୁଆଁ ଣ୍ଡୁନେ ଟାନ୍‌ନିଆ ଲେଃଚେ ପାର୍‌ତନା ଡିଙ୍ଗ୍‍ଡିଙ୍ଗ୍‍ଗେ ।
௧௬அவரோ வனாந்திரத்தில் தனிமையாகச்சென்று, ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.
17 ମେସୁଆ ଜିସୁ ବୁଦି ବିଡିଙ୍ଗ୍‌ଗେ ଆରି ଗାଲିଲୀନେ ସାପା ଇନି ଆରି ଜିଉଦା ପ୍ରଦେସ୍‌ନେ ଆରି ଯିରୁସାଲାମ୍‍ ବାନ୍ ପାଙ୍ଗ୍‌ଲେକ୍ନେ ଫାରୁଶୀ ଆରି ନିଅମ୍‌କାରି‍ଇଂ ଡାଗ୍ରା କଲେ ଆର୍‌ଗେ । ଆରି ମେଁ ଜେନ୍ତିକି ନିମାଣ୍ଡା ଆଡିଙ୍ଗ୍‌ଏ ଆତେନ୍‌‌ସା ମାପ୍ରୁନେ ବପୁ ମେଁନ୍ନିଆ ପାଙ୍ଗ୍‍ଗେ ।
௧௭பின்பு ஒருநாள் அவர் உபதேசித்துக்கொண்டிருக்கிறபோது, கலிலேயா யூதேயா நாடுகளிலுள்ள எல்லா கிராமங்களிலும், எருசலேம் நகரத்திலுமிருந்து வந்த பரிசேயர்களும் வேதபண்டிதர்களும் உட்கார்ந்திருந்தார்கள்; நோயாளிகளைக் குணமாக்கத்தக்க கர்த்தருடைய வல்லமை அவரிடம் இருந்தது.
18 ଆରି କେଲା ଉଡ଼ିରୁଆ ମୁଇଙ୍ଗ୍ ନ୍ତି ଞ୍ଚ ନ୍‍ସୁଆର୍‍ଲେଃକ୍ନେ ରେମୁଆଁକେ କଟ୍‌ନିଆ ଡୁଙ୍ଗ୍‍ ଡୁଂପାଙ୍ଗ୍‌ଚେ ଆମେକେ ବିତ୍ରେ ଡୁଂୱେଚେ ଆରି ମେଁ ଡାଗ୍ରା ବନ୍‍ସା ଚେସ୍‌ଟା ଡିଙ୍ଗ୍‌ଆର୍‌ଡିଂଗେ ।
௧௮அப்பொழுது சில மனிதர்கள் பக்கவாதக்காரன் ஒருவனைப் படுக்கையோடு எடுத்துக்கொண்டுவந்து, அவனை உள்ளே கொண்டுபோகவும் அவருக்கு முன்பாக வைக்கவும் முயற்சித்தார்கள்.
19 ଡାଗ୍ଲା ଜାବର୍‌ ରେମୁଆଁ ରିସିଙ୍ଗ୍ ଲେଃଗେ ଆତେନ୍‌‌ସା ଆମେକେ ବିତ୍ରେ ଡୁଂୱେନ୍‍ସା ଗାଲି ଆବାଲା ମେଇଂ ଡୁଆ ଆଡ଼ାତ୍ରା ଡୁଙ୍ଗ୍‍ୱେଚେ ବ୍ଲେସାଂ ଆପ୍ଲଗ୍‍ଚେ କଟ୍ ଡାଣ୍ଡି ଏତେ ଆମେକେ ମଜେ ଜାଗାନ୍ନିଆ ଜିସୁଡାଗ୍ରା ଆଜାର୍ ବିଆର୍‌କେ ।
௧௯மக்கள்கூட்டம் அதிகமாக இருந்தபடியால் அவனை உள்ளே கொண்டுபோக முடியாமல், வீட்டின்மேல் ஏறி, தட்டோடுகள்வழியாக மக்களின் மத்தியில் இயேசுவிற்கு முன்பாக அவனைப் படுக்கையோடு இறக்கினார்கள்.
20 ମେଁ ମେଁଇଙ୍ଗ୍‌ନେ ବିସ୍‌ବାସ୍‍ କେଚେ ବାସଙ୍ଗ୍‌କେ, “ଅ ଗଡ଼େଅ ନାନେ ପାପ୍ ସାପା କେମା ଡିଙ୍ଗ୍‌ଗେ ।”
௨0அவர்களுடைய விசுவாசத்தை அவர் கண்டு, பக்கவாதக்காரனை நோக்கி: மனிதனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
21 ଆତ୍‌ଅରିଆ ଦର୍ମ ଗୁରୁ ଆରି ଫାରୁଶୀ‍ଇଂ ନିଜେ ନିଜେ ବାଲିର୍‌ବାତାଚେ ବାସଙ୍ଗ୍‍ନେ ଲାଗେଆର୍‌କେ, “ଇସ୍‌ପର୍‌କେ ନିନ୍ଦା ଆଡିଙ୍ଗ୍‌ଡିଙ୍ଗ୍‌କେ, ଏନ୍‌ ଜାଣ୍ଡେ? କେବଲ୍‍ ଇସ୍‌ପର୍‌ବାନ୍ ଆରି ଜାଣ୍ଡେ ପାପ୍ କେମା ଡିଙ୍ଗ୍ଇଁୟାଏ?”
௨௧அப்பொழுது வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் யோசனைபண்ணி, தேவநிந்தனை சொல்லுகிற இவன் யார்? தேவன் ஒருவரேயன்றி பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார்? என்றார்கள்.
22 ଡାଗ୍ଲା ଜିସୁ ମେଁଇଙ୍ଗ୍‌ନେ ବାଲିର୍‌ବାତାନେ ମ୍ୟା ୟାଚେ ଆମେଇଂକେ ଉତର୍ ବିକେ ପେଇଂ ନିଜେ ନିଜେ ମନ୍‍ନ୍ନିଆ ମେଁନ୍‌ସା ବାଲିର୍‌ବାତା ଡିଂପେଡିଂକେ?
௨௨இயேசு அவர்கள் சிந்தனைகளை அறிந்து, அவர்களை நோக்கி: உங்களுடைய இருதயங்களில் நீங்கள் சிந்திக்கிறது என்ன?
23 ମେଃନେ ବାସଙ୍ଗ୍‌ନେ ସଅଜ୍‌? ନାନେ ପାପ୍ କେମା ଡିଙ୍ଗ୍‌ଗେ ଡାଗ୍‌ଚେ ବାସଙ୍ଗ୍‌ନେ ବା ତଡ଼ିଆ ୱେଲା ଡାଗ୍‌ଚେ ବାସଙ୍ଗ୍‌ନେ?
௨௩உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ அல்லது எழுந்து நட என்று சொல்வதோ, எது எளிது?
24 ଡାଗ୍ଲା ମଞ୍ଚ୍‌ପୁର୍‌ନେ ପାପ୍ କେମା ଡିଙ୍ଗ୍‍ନେସା ରେମୁଆଁ ଉଙ୍ଗ୍‌ଡେକେ ଜେ ଅଦିକାର୍ ଲେଃକେ ଆକେନ୍ ଜେନ୍ତିକି ପେଇଂ ମ୍ୟା ପେୟାଏ ଆତେନ୍‌‌ସା ନ୍ତି ଞ୍ଚ ନ୍‍ସୁଆର୍‍ଲେଃକ୍ନେ ରେମୁଆଁ ବାସଙ୍ଗ୍‌କେ, “ନେଙ୍ଗ୍ ଆନାକେ ବାସଙ୍ଗ୍‌ଣ୍ଡିଂ ତଡ଼ିଆ ନିଜେନେ ସିଙ୍ଗ୍‌ଲା ସାଚେ ନାନେ ଡୁଆ ୱିଗ୍‌ଲା ।”
௨௪பூமியிலே பாவங்களை மன்னிக்க மனிதகுமாரனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, பக்கவாதக்காரனை நோக்கி: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டிற்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
25 ଆତ୍‌ବା ମେଁ ଦାପ୍ରେ ମେଁଇଙ୍ଗ୍‌ନେ ବାନ୍ ତଡ଼ିଆଚେ ଆଣ୍ଡିନେ ସିଙ୍ଗ୍‌ଲା ଆଡ଼ାତ୍ରା ମେଁ ଡୁଲେଗ୍‍ ଲେଃଗେ ଆତେନ୍‌ ସାଚେ ଇସ୍‌ପର୍‌ନେ ମ‍ଇମା ଅସ୍‌ମାର୍ ସାର୍‍ଚେ ନିଜେନେ ଡୁଆ ୱିଗ୍‌କେ ।
௨௫உடனே அவன் அவர்களுக்கு முன்பாக எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, தேவனை மகிமைப்படுத்தி, தன் வீட்டிற்குப்போனான்.
26 ଆତ୍‌ଅରିଆ ସାପାରେ ବୁଟଚେ ଇସ୍‌ପର୍‌ନେ ମ‍ଇମା ଅସ୍‌ମାର୍ ସାର୍‍ନେ ଲାଗେକେ ଆରି ଜାବର୍‌ ତାନ୍ଦ୍ରା ଡିଙ୍ଗ୍‍ଚେ ବାସଙ୍ଗ୍‌କେ ଏଃକେ ନେ ବଡ଼େ ବୟ୍‍ଙ୍କାର୍‍ ଗଟ୍‌ନା ନେକେକେ!
௨௬அதினாலே எல்லோரும் ஆச்சரியப்பட்டு, தேவனை மகிமைப்படுத்தினார்கள்; அல்லாமலும், அவர்கள் பயம் நிறைந்தவர்களாகி, அதிசயமான காரியங்களை இன்று கண்டோம் என்றார்கள்.
27 ଆତ୍‌ବା ଜିସୁ ପାଦା ୱେଚେ ଲେବୀ ମ୍ନିନେ ମୁଇଂଜା ସିସ୍ତୁ ସାଲ୍ୟାନେ ଜାଗାନ୍ନିଆ କଲେଃକ୍ନେ କେଚେ ଆମେକେ ବାସଙ୍ଗ୍‌କେ, “ନେଙ୍ଗ୍ ପ୍ଲା ପାଙ୍ଗ୍‌ଲା ।”
௨௭இவைகளுக்குப் பின்பு அவர் புறப்பட்டு, வரி வசூலிக்கும் மையத்தில் உட்கார்ந்திருந்த லேவி என்னும் பெயருடைய வரிவசூலிக்கும் ஒருவனைக் கண்டு: என்னைப் பின்பற்றிவா என்றார்.
28 ଆତ୍‌ବା ଲେବୀ ସାପା ଆନ୍ତାର୍‌ଚେ ମେଁନେ ପ୍ଲା ୱେନେ ଲାଗେକେ ।
௨௮அவன் எல்லாவற்றையும்விட்டு, எழுந்து, அவருக்குப் பின்னேசென்றான்.
29 ଆରି ଲେବୀ ନିଜେ ଡୁଆ ମେଁ ଆତ୍ଲା ମୁଇଙ୍ଗ୍ ମ୍ନା ବଜି ଡିଙ୍ଗ୍‌କେ ଆରି ଗୁଲୁଏ ରେମୁଆଁ ସିସ୍ତୁ ସାଲ୍ୟାଣ୍ତ୍ରେ ଆରି ବିନ୍‌ବିନ୍ ରେମୁଆଁ ମେଇଂ ଏତେ ଚଙ୍ଗ୍‍ନ୍‍ସା କଆର୍‌କେ ।
௨௯அந்த லேவி என்பவன் தன் வீட்டிலே அவருக்குப் பெரிய விருந்துபண்ணினான். அநேக வரி வசூலிப்பவர்களும் மற்றவர்களும் அவர்களோடு பந்தியில் இருந்தார்கள்.
30 ଆତ୍‌ବା ପାରୁସିଇଂ ଆରି ମେଁଇଙ୍ଗ୍‌ନେ କୁଦାନେ ସାସ୍ତ୍ରିଇଂ ମେଁଇଙ୍ଗ୍‌ନେ ସିସ୍ଇଂନେ ବିରଦ୍‌ରେ ବିତ୍ରେ ବିତ୍ରେ ବାସଙ୍ଗ୍‌ନେ ଲାଗେକେ । ପେଇଂ ମେସା ସିସ୍ତୁ ସାଲ୍ୟାଣ୍ଡ୍ରେକେ ଆରି ପାପିଇଂ ଏତେ ଚଙ୍ଗ୍ ଉଗ୍ ଡିଙ୍ଗ୍‌କେ?
௩0வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் அவருடைய சீடர்களுக்கு எதிராக முறுமுறுத்து: நீங்கள் வரி வசூலிப்பவர்களோடும் பாவிகளோடும் உட்கார்ந்து சாப்பிடுகிறதும் குடிக்கிறதும் ஏன்? என்று கேட்டார்கள்.
31 ଜିସୁ ଆମେଇଂକେ ଉତର୍ ବିକେ ନିମାଣ୍ଡା ରେମୁଆଁଇଂନେ ଗଦାର୍‌ନିଆ ଦର୍‌କାର୍ ଣ୍ଡୁ ମାତର୍‌ ନିମାଣ୍ଡା ଣ୍ଡୁନେ ରେମୁଆଁଇଂନ୍ନିଆ ଦର୍‌କାର୍ ଲେଃକେ ।
௩௧இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நோயாளிகளுக்குத்தான் வைத்தியன் தேவையேதவிர சுகமாக உள்ளவர்களுக்குத் தேவையில்லை.
32 ନେଙ୍ଗ୍ ଦାର୍‍ମିକ୍‍ ରେମୁଆଁଇଂକେ ୱା ନ୍‌ସା ନେପାଙ୍ଗ୍‌କେ ଣ୍ଡୁ ମାତର୍‌ ମନ୍‍ ଆଃବଦ୍‌ଲେ ନ୍‍ସା ପାପିଇଂକେ ୱା ନ୍‌ସା ପାଙ୍ଗ୍‍ଲେକେ ।
௩௨நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.
33 ମେଇଂ ଜିସୁକେ ବାସଙ୍ଗ୍‌କେ ଜହନ୍‌ନେ ସିସ୍ଇଂ ପ୍ରେକ୍ ପ୍ରେକ୍‍ ଉପାସ୍ ଆରି ପାର୍‍ତନା ଡିଙ୍ଗ୍ ମ୍ୟାକେ ପାରୁସିଇଂନେ ସିସ୍ଇଂ ଡିଗ୍ ଦେତ୍ ସୁଗୁଆ ଡିଙ୍ଗ୍ ମ୍ୟାକେ ମାତର୍‌ ନାନେ ସିସ୍ଇଂ ଉଗ୍ ଚଙ୍ଗ୍ ଡିଙ୍ଗ୍ ମ୍ୟାକେ ।
௩௩பின்பு அவர்கள் அவரை நோக்கி: யோவானுடைய சீடர்கள் அநேகந்தரம் உபவாசித்து ஜெபம் செய்துவருகிறார்கள், பரிசேயர்களுடைய சீடர்களும் அப்படியே செய்கிறார்கள், உம்முடைய சீடர்கள் சாப்பிடவும் குடிக்கவும் செய்கிறார்களே, அது எப்படி என்று கேட்டார்கள்.
34 ଆତ୍‌ବା ଜିସୁ ଆମେଇଂକେ ବାସଙ୍ଗ୍‌କେ, “ତ୍ମି ଙ୍ଗିରେନେ ରେମୁଆଁଇଂ ଏତେ ଙ୍ଗିରେ ଲେଃକେଲା ପେଇଂ ମେଁନେ ଆମେଇଂକେ ଉପାସ୍‍ରେ ପେବଏ?
௩௪அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடு இருக்கும்போது மணவாளனுடைய தோழர்களை நீங்கள் உபவாசிக்கச் சொல்லமுடியுமா?
35 ମାତର୍‌ ବେଲା ପାଙ୍ଗ୍‌ଏ; ଆରି ଉଡ଼ିବେଲା ମେଁଇଙ୍ଗ୍‌ନେ ବାନ୍ ତ୍ମି ଙ୍ଗିରେକେ ଡୁଂଡ ଆର୍‌ଏ ଆତେନ୍‌ ବେଲା ମେଇଂ ଉପାସ୍ ଡିଙ୍ଗ୍ ଆର୍‌ଏ ଅଃନା ଡିଗ୍ ଣ୍ଡୁ ।”
௩௫மணவாளன் அவர்களைவிட்டுப் போகும் நாட்கள் வரும், அந்த நாட்களிலே உபவாசிப்பார்கள் என்றார்.
36 ଆରି ଜିସୁ ଆମେଇଂକେ ମୁଇଙ୍ଗ୍ ଉଦା‍ଅରନ୍ ବିଚେ ବାସଙ୍ଗ୍‌କେ ଜା ଡିଗ୍ ତ୍ମି ପାଟାଇନେ ଜାଲି ଗୁଆତଗ୍‌ଚେ ବାୱିର୍‍ ପାଟାଇନ୍ନିଆ ଆତଗ୍‍ ଣ୍ଡୁ; ତଗ୍‍ଲା ଆତେନ୍‌ ତ୍ମିକ୍ନେ ପାଟାଇକେ ଗୁଆଃଏ ଆରି ତ୍ମି ପାଟାଇନେ ଜାଲି ଡିଗ୍ ବାୱିର୍‍ ଏତେ ଆମିସେ ଣ୍ଡୁ ।
௩௬அவர்களுக்கு ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவனும் புதிய ஆடையின் துண்டைப் பழைய ஆடையோடு வைத்து இணைக்கமாட்டான், இணைத்தால் புதியது பழையதைக் கிழிக்கும்; புதிய ஆடை பழைய ஆடைக்குப் பொருத்தமாக இருக்காது.
37 ଆରି ଜାଣ୍ଡେ ତ୍ମି ଅଙ୍ଗୁର୍ ରସ୍ ବାୱିର୍ ଙ୍କୁଇନିଆ ଆବ ଣ୍ଡୁ; ବଲା ତ୍ମି ଅଙ୍ଗୁର୍ ରସ୍‌ନେ ଙ୍କୁଇକେ ଆପ୍‍ଡାର୍‍ଚେ ଲଃଏ ଆରି ଙ୍କୁଇ ନାସେ ୱେଏ ।
௩௭ஒருவனும் புதிய திராட்சைரசத்தைப் பழைய தோல் பைகளில் ஊற்றி வைக்கமாட்டான்; ஊற்றிவைத்தால் புதிய திராட்சைரசம் தோல் பைகளைக் கிழித்துப்போடும், திராட்சைரசமும் சிந்திப்போகும், தோல் பைகளும் கெட்டுப்போகும்.
38 ମାତର୍‌ ତ୍ମି ଅଙ୍ଗୁର୍ ରସ୍ ତ୍ମି ଙ୍କୁଇନିଆ ବନେ ଦର୍‌କାର୍ ।
௩௮புதிய திராட்சைரசத்தைப் புதிய தோல் பைகளில் ஊற்றி வைக்கவேண்டும், அப்பொழுது இரண்டும் பத்திரமாக இருக்கும்.
39 ଆରି ଜାଣ୍ଡେ ଡିଗ୍ ବାୱିର୍‍ ଅଙ୍ଗୁର୍ ରସ୍ ଉଗ୍‌ଚେ ତ୍ମି ଅଙ୍ଗୁର୍ ରସ୍ ଉଗ୍‌ନ୍‌ସା ଇକ୍‌ଚା ଆଡିଙ୍ଗ୍‌ଆର୍ ଣ୍ଡୁ ଡାଗ୍ଲା ମେଁ ବାସଙ୍ଗ୍‌ ଡିଙ୍ଗ୍‌କେ ବାୱିର୍‍ ତ ନିମାଣ୍ଡା ।
௩௯அன்றியும் ஒருவனும் பழைய திராட்சைரசத்தைக் குடித்தவுடனே புதிய திராட்சைரசத்தை விரும்பமாட்டான், பழைய திராட்சைரசமே நல்லதென்று சொல்லுவான் என்றார்.

< ଲୁକ୍‌ 5 >