< ଲୁକ୍‌ 5 >

1 ଦିନେକ୍‌ ଜିସୁ ଗିନେସରତ୍‌ ଗାଡ୍‌କଣ୍ଡି ଟିଆଅଇରଇଲା ବେଲେ ଲକ୍‌ମନ୍‌ ମାଣ୍ଡାଚୁଣ୍ଡା ଅଇ ପର୍‌ମେସରର୍‌ ବାକିଅ ସୁନ୍‌ତେରଇଲାଇ ।
பின்பு அவர் கெனேசரேத்துக் கடலின் அருகே நின்றபோது, மக்கள்கூட்டம் தேவவசனத்தைக் கேட்பதற்காக அவரிடம் நெருங்கிவந்தார்கள்.
2 ସେଡ୍‌କିବେଲେ ସେ ଗାଡ୍‌କଣ୍ଡି ଦୁଇଟା ଡଙ୍ଗା ରଇଲାଟା ଦେକ୍‌ଲା, କେଉଟ୍‌ମନ୍‌ ଡଙ୍ଗାଇଅନି ଉତ୍‌ରି ଜାଲ୍‌ ଦଇତେରଇଲାଇ ।
அப்பொழுது கடற்கரையிலே நின்றுகொண்டிருந்த இரண்டு படகுகளைக் கண்டார். மீன்பிடிக்கிறவர்கள் படகுகளைவிட்டு இறங்கி வலைகளை அலசிக்கொண்டிருந்தார்கள்.
3 ସେ ଡଙ୍ଗାମନର୍‌ ବିତ୍‌ରେଅନି ଜନ୍‌ଟା କେଉଟ୍‌ ସିମନର୍‌ଟା ରଇଲା, ଜିସୁ ତେଇ ଚଗିକରି “କଣ୍ଡିତେଇଅନି କଣ୍ଡେକ୍‌ ଦୁର୍‌ ପାନିତେଇ ଚାଲାଇନେ ।” ବଲି ସିମନ୍‌କେ କଇଲା, ଆରି ଡଙ୍ଗାଇ ବସିକରି ସିକିଆ ଦେବାର୍‌ ଦାର୍‌ଲା ।
அப்பொழுது அவர் ஒரு படகில் ஏறினார், அது சீமோனுடைய படகாக இருந்தது; அதைக் கரையிலிருந்து கொஞ்சம் தள்ளும்படி அவனைக் கேட்டுக்கொண்டு, அந்தப் படகில் உட்கார்ந்து, மக்களுக்குப் போதகம்பண்ணினார்.
4 ଜିସୁ କାତା ସାରାଇକରି ସିମନ୍‌କେ କଇଲା, “ଡେଙ୍ଗ୍‌ ପାନିଟାନେ ଜାଇକରି ମାଚ୍‌ ଦାର୍‌ବାକେ ତମର୍‌ ଜାଲ୍‌ ପାକାଆ ।”
அவர் போதகம்பண்ணி முடித்தபின்பு சீமோனை நோக்கி: ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டுபோய், மீன்பிடிக்க உங்களுடைய வலைகளைப் போடுங்கள் என்றார்.
5 ତେଇ ସିମନ୍‌ କଇଲା, “ଏ ଗୁରୁ ଆମେ ସବୁଲକ୍‌ ଗୁଲାଇରାତି କସ୍‌ଟ କରି ଗଟେକ୍‌ ମିସା ଦାରୁନାଇ, ମାତର୍‌ ତମର୍‌ କାତା ଦାରି ମୁଇ ଜାଲ୍‌ ପାକାଇବି ।”
அதற்குச் சீமோன்: ஐயா, இரவு முழுவதும் நாங்கள் முயற்சிசெய்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; இருப்பினும் உம்முடைய வார்த்தையின்படி நான் வலைகளைப் போடுகிறேன் என்றான்.
6 ଆରି ଜାଲ୍‌ ପାକାଇଲାଇକେ, ଏଦେ ଦେକା! ଏନ୍ତି ମାଚ୍‌ ଲାଗ୍‌ଲାଇଜେ ତାକର୍‌ ଜାଲ୍‌ ଚିରିଅଇବାର୍‌ ଦାର୍‌ଲା ।
அப்படியே அவர்கள் வலைகளைப் போட்டு, அவர்கள் வலைகள் கிழிந்துபோகும் அளவிற்கு அதிகமான மீன்களைப் பிடித்தார்கள்.
7 ଡଙ୍ଗାଇ ମାଚ୍‌ ବର୍‌ତି କଲାଇଜେ ସେ ଦୁଇଟା ଡଙ୍ଗା ବୁଡ୍‌ଲା ପାରା ଅଇଗାଲା ।
அப்பொழுது மற்றப் படகில் இருந்த கூட்டாளிகள் வந்து தங்களுக்கு உதவிசெய்யவேண்டும் என்று அவர்களுக்கு சைகை காட்டினார்கள்; அவர்கள் வந்து, இரண்டு படகுகளும் அமிழ்ந்துபோகும் அளவிற்கு நிரப்பினார்கள்.
8 ଏଟା ଦେକି ସିମନ୍‌ ପିତର୍‌ ଜିସୁର୍‌ ପାଦେ ମାଣ୍ଡିକୁଟା ଦେଇ ଜୁଆର୍‌ କରି କଇଲା, “ମର୍‌ଟାନେଅନି ଜାଆ ମାପ୍‌ରୁ, କାଇକେବଇଲେ ମୁଇ ଗଟେକ୍‌ ପାପି ମୁନୁସ୍‌ ।”
சீமோன்பேதுரு அதைக் கண்டு, இயேசுவின் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நான் பாவியான மனிதன், நீர் என்னைவிட்டுப் போகவேண்டும் என்றான்.
9 କାଇକେବଇଲେ ତେଇ ସେମନ୍‌ ଏତେକ୍‌ ମାଚ୍‌ ଦାରିରଇଲାଇଜେ, ସେଟା ଦେକି ସିମନର୍‌ ସଙ୍ଗାରିମନ୍‌ କାବାଅଇଗାଲାଇ ।
அவர்கள் அதிகமான மீன்களைப் பிடித்ததினால், அவனுக்கும் அவனோடுகூட இருந்த எல்லோருக்கும் பிரமிப்பாக இருந்ததால் அப்படிச் சொன்னான்.
10 ୧୦ ଆରି ଜେବଦିର୍‌ ଦୁଇଟା ପ ଜାକୁବ୍‌ ଆରି ଜଅନ୍‌ ଜନ୍‌ଲକ୍‌ମନ୍‌ ସିମନର୍‌ ସଙ୍ଗାରି ରଇଲାଇ, ସେମନ୍‌ ମିସା ସେନ୍ତାରିସେ କାବା ଅଇଗାଲାଇ । ଆରି ଜିସୁ ସିମନ୍‌କେ କଇଲା, “ଡରାନାଇ, ଆଜିଅନି ତମେ ମାଚ୍‌ ନ ଦାରି, ଲକ୍‌ମନ୍‌କେ ମର୍‌ଟାନେ ଆନ୍‌ସା ।”
௧0சீமோனுக்குக் கூட்டாளிகளான செபெதேயுவின் குமாரர்களாகிய யாக்கோபும் யோவானும் அப்படியே பிரமித்தார்கள். அப்பொழுது இயேசு சீமோனை நோக்கி: பயப்படாதே, இனி நீ மனிதர்களைப் பிடிக்கிறவனாக இருப்பாய் என்றார்.
11 ୧୧ ତେଇ ସେମନ୍‌ ସବୁ ତାକର୍‍ ଡଙ୍ଗା କଣ୍ଡି ଆନି ଚାଡିଦେଇକରି ଜିସୁର୍‌ ପଚେ ପଚେ ଗାଲାଇ ।
௧௧அவர்கள் படகுகளைக் கரையிலே கொண்டுபோய் நிறுத்தி, எல்லாவற்றையும்விட்டு, அவருக்குப் பின்னே சென்றார்கள்.
12 ୧୨ ତରେକ୍‌ ଜିସୁ ଗଟେକ୍‌ ନଅରେ ରଇଲାବେଲେ ଗଟେକ୍‌ ଗୁଲାଇ ଗାଗଡେ ବଡ୍‌ରଗ୍‌ ଅଇରଇବା ଲକ୍‌ ତେଇ ରଇଲା । ସେ ଡାଣ୍ଡାସନ୍‌ ପଡି ମୁ ବୁଏଁ ଚିଆଇ ଜିସୁକେ ବାବୁଜିଆ କରି କଇଲା, “ଏ ମାପ୍‌ରୁ, ତମେ ଜଦି ମନ୍‌କଲୁସ୍‌ନି ବଇଲେ, ମକେ ନିକ କରିପାରୁସ୍‌ ।”
௧௨பின்பு அவர் ஒரு பட்டணத்தில் இருக்கும்போது, குஷ்டரோகம் நிறைந்த ஒரு மனிதன் இயேசுவைக் கண்டு, முகங்குப்புறவிழுந்து: ஆண்டவரே, உமக்கு விருப்பமானால், என்னைச் சுத்தப்படுத்த உம்மால் முடியும் என்று அவரை வேண்டிக்கொண்டான்.
13 ୧୩ ତେଇ ଜିସୁ ଆତ୍‌ ଲାମାଇ ତାକେ ଚିଇ କରି କଇଲା, “ମୁଇ ମନ୍‌ କଲିନି, ତୁଇ ସୁକଲ୍‌ ଅ ।” ଦାପ୍‌ରେସେ ତାର୍‌ ବଡ୍‌ ରଗ୍‌ ଚାଡିଗାଲା ।
௧௩அவர் தமது கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்கு விருப்பமுண்டு, சுத்தமாகு என்றார்; உடனே குஷ்டரோகம் அவனைவிட்டு நீங்கியது.
14 ୧୪ ଆରି ଜିସୁ ତାକେ ଆଦେସ୍‌ ଦେଇ କଇଲା, “ଏ କାତା କାକେ କ ନାଇ । ମାତର୍‌ ପୁଜାରିର୍‌ ଲଗେ ଜା ଆରି ସେ ତକେ ପରିକା କରି ଦେକ । ତୁଇ, ‘ନିକ ଅଇଲିଆଚି’ ବଲି ବିନ୍‌ ଲକର୍‌ ଟାନେ ସାକିଦେବାକେ ମସାର୍‌ ଆଦେସ୍‌ ଇସାବେ ବିରୁ ଦେସ୍‌ ।”
௧௪அவர் அவனை நோக்கி: நீ இதை யாருக்கும் உடனே சொல்லாமல், நீ எருசலேமுக்குப்போய், உன்னை ஆசாரியனுக்குக் காண்பித்து, நீ சுத்தமானதினால், மோசே கட்டளையிட்டபடி, அவர்களுக்குச் சாட்சியாகப் பலிசெலுத்து என்று கட்டளையிட்டார்.
15 ୧୫ ମାତର୍‌ ଜିସୁର୍‌ କବର୍‌ ଗୁଲାଇ ଚାରିବେଡ୍‌ତିର୍‌ଲକ୍‌ ଜାନ୍‌ଲାଇ । ତାର୍‍ କାତା ସୁନ୍‌ବାପାଇ ଆରି ନିଜର୍‌ ନିଜର୍‌ ରଗେଅନି ନିକ ଅଉଁବଲି ଗାଦି ଲକ୍‌ମନ୍‌ ଟୁଲ୍‌ଅଇବାର୍‌ ଦାର୍‌ଲାଇ ।
௧௫அப்படியிருந்தும் அவரைப்பற்றிய செய்தி அதிகமாகப் பரவியது. அநேக மக்கள் அவருடைய உபதேசத்தைக் கேட்பதற்கும் அவராலே தங்களுடைய நோய்கள் நீங்கி சுகமடைவதற்கும் கூடிவந்தார்கள்.
16 ୧୬ ମାତର୍‌ ଜିସୁ କିନରା ଜାଗାମନ୍‌କେ ଜାଇ ପାର୍‌ତନା କର୍‌ତେରଇଲା ।
௧௬அவரோ வனாந்திரத்தில் தனிமையாகச்சென்று, ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.
17 ୧୭ ଦିନେକ୍‌ ଜିସୁ ସିକିଆ ଦେଇତେରଇଲା । ତେଇ ଗାଲିଲିର୍‌ ସବୁ ଗାଏଁଅନି, ଜିଉଦା ଆରି ଜିରୁସାଲମେଅନି ଆସିରଇବା ପାରୁସିମନ୍‌ ଆରି ନିଅମ୍‌ ସିକାଉମନ୍‍ ତେଇ ବସିରଇଲାଇ । ଆରି ରଗିମନ୍‌କେ ନିକ କର୍‌ବାକେ ମାପ୍‌ରୁର୍‌ ବପୁ, ଜିସୁକେ ରଇଲା ।
௧௭பின்பு ஒருநாள் அவர் உபதேசித்துக்கொண்டிருக்கிறபோது, கலிலேயா யூதேயா நாடுகளிலுள்ள எல்லா கிராமங்களிலும், எருசலேம் நகரத்திலுமிருந்து வந்த பரிசேயர்களும் வேதபண்டிதர்களும் உட்கார்ந்திருந்தார்கள்; நோயாளிகளைக் குணமாக்கத்தக்க கர்த்தருடைய வல்லமை அவரிடம் இருந்தது.
18 ୧୮ ଆରି ଏଦେ ଦେକା! ଗଟେକ୍‌ ଚେରେଙ୍ଗ୍‌ବାତ୍‌ ଦାର୍‌ଲା ମୁନୁସ୍‌କେ, କେତେଲକ୍‌ କଟ୍‌ ମିସ୍‌ତେ ବଇଆନିକରି, ଗର୍‍ ବିତ୍‌ରେ ନେଇ ଜିସୁର୍‌ ମୁଆଟେ ସଙ୍ଗଉବଲି, ଚେସ୍‌ଟା କରତେରଇଲାଇ ।
௧௮அப்பொழுது சில மனிதர்கள் பக்கவாதக்காரன் ஒருவனைப் படுக்கையோடு எடுத்துக்கொண்டுவந்து, அவனை உள்ளே கொண்டுபோகவும் அவருக்கு முன்பாக வைக்கவும் முயற்சித்தார்கள்.
19 ୧୯ ମାତର୍‌ ଚିପାଟେଲାର୍‌ଲାଗି, ତାକେ ବିତ୍‌ରେ ନେବାକେ ବାଟ୍‌ ମିଲେନାଇ । ଏଦେ ଦେକା! ସେମନ୍‌ ରଗିକେ ଗର୍‌ ଉପ୍‌ରେ ଚଗାଇ ଚାଉନି ଉଜାଡି, କଟ୍‌ ମିସ୍‌ତେ ଲକ୍‌ମନର୍‌ ମଜାଇ ଜିସୁର୍‌ ମୁଆଟେ ଉତ୍‌ରାଇଦେଲାଇ ।
௧௯மக்கள்கூட்டம் அதிகமாக இருந்தபடியால் அவனை உள்ளே கொண்டுபோக முடியாமல், வீட்டின்மேல் ஏறி, தட்டோடுகள்வழியாக மக்களின் மத்தியில் இயேசுவிற்கு முன்பாக அவனைப் படுக்கையோடு இறக்கினார்கள்.
20 ୨୦ ଜିସୁ ସେମନର୍‌ ବିସ୍‌ବାସ୍‌ ଦେକି କଇଲା, “ଏ ବାବୁ, ତମର୍‌ ସବୁ ପାପ୍‌ କେମା ଅଇଗାଲାବେ ।”
௨0அவர்களுடைய விசுவாசத்தை அவர் கண்டு, பக்கவாதக்காரனை நோக்கி: மனிதனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
21 ୨୧ ସାସ୍‌ତର୍‌ ସିକାଇବା ଲକ୍‌ମନ୍‌ ଆରି ପାରୁସି ଲକ୍‌ମନ୍‌ ମନେ ମନେ କୁଆବଲା ଅଇ, ଏନ୍ତି କଇବାର୍‌ ଦାର୍‌ଲାଇ, “ଏ କେ ଜେ ପର୍‌ମେସରର୍‌ ନିନ୍ଦାକଲାନି? ପର୍‌ମେସର୍‌କେ ଚାଡି ଆରି କେ ପାପ୍‌ କେମା କରିପାର୍‌ସି?”
௨௧அப்பொழுது வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் யோசனைபண்ணி, தேவநிந்தனை சொல்லுகிற இவன் யார்? தேவன் ஒருவரேயன்றி பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார்? என்றார்கள்.
22 ୨୨ ତେଇ ସେମନ୍‌ ମନେ ମନେ କୁଆବଲା ଅଇବାଟା ଜାନିକରି ସେମନ୍‌କେ ଜିସୁ କଇଲା, “ତମେ କାଇକେ ସବୁଲକ୍‌ ନିଜର୍‌ ମନେ ମନେ ଏନ୍ତାରି କୁଆବଲା ଅଇଲାସ୍‌ନି?
௨௨இயேசு அவர்கள் சிந்தனைகளை அறிந்து, அவர்களை நோக்கி: உங்களுடைய இருதயங்களில் நீங்கள் சிந்திக்கிறது என்ன?
23 ୨୩ କାଇଟା ଉପାସ୍‌ କାତା? ତର୍‌ ସବୁ ପାପ୍‌ କେମା ଅଇଗାଲା ବଲି କଇବାଟା, କି ଉଟିକରି ଇଣ୍ଡି ଜା ବଲି କଇବାଟା?
௨௩உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ அல்லது எழுந்து நட என்று சொல்வதோ, எது எளிது?
24 ୨୪ ମାତର୍‌ ପୁର୍‌ତିବିର୍‌ ସବୁ ପାପ୍‌ କେମା କର୍‌ବାକେ ପର୍‌ମେସରର୍‌ ଟାନେଅନି ଆଇଲା ନର୍‌ପିଲା ମର୍‌ ଅଦିକାର୍‌ଆଚେ ।” ଏଟା ତମେ ଜେନ୍ତି ଜାନିପାରାସ୍‌ । ଏଟାର୍‌ପାଇ ଜିସୁ ଚେରେଙ୍ଗ୍‌ବାତ୍‌ ଦାର୍‌ଲା ରଗିକେ କଇଲା, “ମୁଇ ତକେ କଇଲିନି, ଉଟ୍‌ ନିଜର୍‌ ବିଚ୍‌ନା ଦାରି ଗରେ ଜା ।”
௨௪பூமியிலே பாவங்களை மன்னிக்க மனிதகுமாரனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, பக்கவாதக்காரனை நோக்கி: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டிற்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
25 ୨୫ ସେଦାପ୍‌ରେ ଚେରେଙ୍ଗ୍‌ ଦାର୍‌ଲା ଲକ୍‌ ସବୁଲକର୍‌ ଦେକ୍‌ତେ ଉଟିକରି ଜନ୍‌ କଟେ ସଇରଇଲା, ସେଟା ବଇ ପର୍‌ମେସରର୍‌ ମଇମା କରି କରି ତାର୍‌ ଗରେ ଉଟିଗାଲା ।
௨௫உடனே அவன் அவர்களுக்கு முன்பாக எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, தேவனை மகிமைப்படுத்தி, தன் வீட்டிற்குப்போனான்.
26 ୨୬ ତେଇ ରଇଲା ସବୁଲକ୍‌ କାବା ଅଇଜାଇକରି ପର୍‌ମେସରର୍‌ ମଇମା କର୍‌ବାର୍‌ ଦାର୍‌ଲାଇ ଆରି ମାପ୍‌ରୁର୍‌ ଚକିତ୍‌ କାମ୍‌ ଦେକି, “ଆଜି ଆମେ କେବେ ନ ଅଇଲାଟା ଦେକ୍‌ଲୁ!” ବଲି କଇଲାଇ ।
௨௬அதினாலே எல்லோரும் ஆச்சரியப்பட்டு, தேவனை மகிமைப்படுத்தினார்கள்; அல்லாமலும், அவர்கள் பயம் நிறைந்தவர்களாகி, அதிசயமான காரியங்களை இன்று கண்டோம் என்றார்கள்.
27 ୨୭ ତାର୍‌ପଚେ ଜିସୁ ବାରଇଜାଇ ଲେବି ନାଉଁର୍‌ ଗଟେକ୍‌ ସିସ୍‌ତୁମାଙ୍ଗୁ, ସିସ୍‌ତୁମାଙ୍ଗୁମନ୍‌ ମାଙ୍ଗ୍‌ବାଟାନେ ବସିରଇବାଟା ଦେକି, ତାକେ କଇଲା, “ମର୍‌ସଙ୍ଗ୍‌ ଆଉ ।”
௨௭இவைகளுக்குப் பின்பு அவர் புறப்பட்டு, வரி வசூலிக்கும் மையத்தில் உட்கார்ந்திருந்த லேவி என்னும் பெயருடைய வரிவசூலிக்கும் ஒருவனைக் கண்டு: என்னைப் பின்பற்றிவா என்றார்.
28 ୨୮ ତେଇ ଲେବି ସବୁଜାକ ଚାଡିଦେଇ ଉଟିକରି ଜିସୁର୍‌ ସଙ୍ଗ୍‌ ଜିବାର୍‌ଦାର୍‌ଲା ।
௨௮அவன் எல்லாவற்றையும்விட்டு, எழுந்து, அவருக்குப் பின்னேசென்றான்.
29 ୨୯ ଆରି ଲେବି ଜିସୁର୍‌ପାଇ ନିଜର୍‌ ଗରେ, ଗଟେକ୍‌ ବଡ୍‌ ବଜିକଲା । ତେଇ ସିସ୍‌ତୁମାଙ୍ଗୁମନ୍‌, ଅଦିକ୍‌ ଲକ୍‌ ଆରି ବିନ୍‌ ବିନ୍‌ ଲକ୍‌ମନର୍‌ ସଙ୍ଗ୍‌ ସେ କାଇବାକେ ବସ୍‌ଲା ।
௨௯அந்த லேவி என்பவன் தன் வீட்டிலே அவருக்குப் பெரிய விருந்துபண்ணினான். அநேக வரி வசூலிப்பவர்களும் மற்றவர்களும் அவர்களோடு பந்தியில் இருந்தார்கள்.
30 ୩୦ ତେଇ ପାରୁସିମନ୍‌ ଆରି ତାକର୍‌ ଦଲର୍‌ ସାସ୍‌ତର୍‌ ସିକାଉମନ୍‌ ଜିସୁର୍‌ ମୁଆଟେ ତାର୍‌ ସିସ୍‌ମନ୍‌କେ ଦସ୍‌ ଦେକାଇ କଇଲାଇ, “ତମେ କାଇକେ ସିସ୍‌ତୁମାଙ୍ଗୁମନର୍‌ ସଙ୍ଗ୍‌ ଆରି ପାପିମନର୍‌ ସଙ୍ଗ୍‌ ମିସି କିଆ ପିଆ କଲାସ୍‌ନି?”
௩0வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் அவருடைய சீடர்களுக்கு எதிராக முறுமுறுத்து: நீங்கள் வரி வசூலிப்பவர்களோடும் பாவிகளோடும் உட்கார்ந்து சாப்பிடுகிறதும் குடிக்கிறதும் ஏன்? என்று கேட்டார்கள்.
31 ୩୧ ଜିସୁ ସେମନ୍‌କେ କ‍ଇଲା, “ଜାକେ ଦୁକାଦାରି ରଇସି, ସେସେ ଅସ କାଇସି, ଜାକେ ଦୁକା ଦାରେ ନାଇ ତାକେ ଅସ ଲଡାନାଇ ।
௩௧இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நோயாளிகளுக்குத்தான் வைத்தியன் தேவையேதவிர சுகமாக உள்ளவர்களுக்குத் தேவையில்லை.
32 ୩୨ ମୁଇ ଦରମ୍‌ ଲକ୍‌ବଲି ନିଜ୍‌କେ ବାବ୍‌ବା ଲକ୍‌ମନର୍‌ ପାଇ ଆସିନାଇ, ମାତର୍‌ ପାପି ଲକ୍‌ମନ୍‌କେ ପାପେଅନି ମନ୍‌ ବାଦ୍‌ଲାଇବାକେ ଆଇଲିଆଚି ।”
௩௨நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.
33 ୩୩ କେତେକ୍‌ ଲକ୍‌ ଜିସୁକେ ପାଚାର୍‌ଲାଇ, “ଡୁବନ୍‌ ଦେଉ ଜଅନର୍‌ ସିସ୍‌ମନ୍‌ ତର୍‌କେତର୍‌ ଉପାସ୍‌ କରି ପାର୍‌ତନା କର୍‌ବାଇ । ପାରୁସିମନର୍‌ ସିସ୍‌ମନ୍‌ ମିସା ସେନ୍ତାରି ସେ କର୍‌ବାଇ । ମାତର୍‌ ତମର୍‌ ସିସ୍‌ମନ୍‌ କିଆ ପିଆ କର୍‌ବାଇ ।”
௩௩பின்பு அவர்கள் அவரை நோக்கி: யோவானுடைய சீடர்கள் அநேகந்தரம் உபவாசித்து ஜெபம் செய்துவருகிறார்கள், பரிசேயர்களுடைய சீடர்களும் அப்படியே செய்கிறார்கள், உம்முடைய சீடர்கள் சாப்பிடவும் குடிக்கவும் செய்கிறார்களே, அது எப்படி என்று கேட்டார்கள்.
34 ୩୪ ଜିସୁ ସେମନ୍‌କେ କଇଲା, “ବର୍‌ବାଟର୍‌ ଲକ୍‌ମନର୍‌ସଙ୍ଗ୍‌ ବର୍‌ ରଇଲାବେଲେ, ତମେ କାଇ ସେମନ୍‌କେ ଉପାସ୍‌ କରାଇପାରାସ୍‌? ନାଇ, ନାପାରାସ୍‌ ।
௩௪அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடு இருக்கும்போது மணவாளனுடைய தோழர்களை நீங்கள் உபவாசிக்கச் சொல்லமுடியுமா?
35 ୩୫ ମାତର୍‌ ବେଲା ଆଇସି, ଜେଡେବେଲେ ତାକର୍‌ଟାନେଅନି ବର୍‌କେ ଡାକିଦାରିଜିବାଇ, ସେଡ୍‌କିବେଲେ ସେମନ୍‌ ଉପାସ୍‌ କଇବାଇ ।”
௩௫மணவாளன் அவர்களைவிட்டுப் போகும் நாட்கள் வரும், அந்த நாட்களிலே உபவாசிப்பார்கள் என்றார்.
36 ୩୬ ଜିସୁ ସେମନ୍‌କେ ଆରି ଗଟେକ୍‌ ଉଦାଅରନ୍‌ ଦେଇ କଇଲା, “କେ ମିସା ପୁର୍‌ନା ଲୁଗା ପାଟିରଇଲାଟାନେ ନୁଆଲୁଗା ଚିରି ଚାପ୍‌ ନ ଦେଅତ୍‌, ଚାପ୍‌ ଦେଲେ ନୁଆଟା ମିସା ନସିଜାଇସି, ନୁଆ ଲୁଗାର୍‌ ଚାପ୍‌ ପୁର୍‌ନାଟାନେ ନ ମିସେ ।
௩௬அவர்களுக்கு ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவனும் புதிய ஆடையின் துண்டைப் பழைய ஆடையோடு வைத்து இணைக்கமாட்டான், இணைத்தால் புதியது பழையதைக் கிழிக்கும்; புதிய ஆடை பழைய ஆடைக்குப் பொருத்தமாக இருக்காது.
37 ୩୭ ବେସି ଦିନର୍‌ ପୁର୍‌ନା ଗାଗ୍‌ରିଟାନେ କେ ମିସା ଏବେ ଉତ୍‌ରାଇଲା ମଦ୍‌ ନ ରକଅତ୍‌, ତେଇ ଜଦି ସେ ମଦ୍‌ ରକଇ ଡାବିଦେଲେ, ଗାଗ୍‌ରି ପୁଟିକରି ପଡାଅଇଜାଇସି ।
௩௭ஒருவனும் புதிய திராட்சைரசத்தைப் பழைய தோல் பைகளில் ஊற்றி வைக்கமாட்டான்; ஊற்றிவைத்தால் புதிய திராட்சைரசம் தோல் பைகளைக் கிழித்துப்போடும், திராட்சைரசமும் சிந்திப்போகும், தோல் பைகளும் கெட்டுப்போகும்.
38 ୩୮ ତେବେ ମଦ୍‌ ଉତ୍‌ରାଇଲା ଦାପ୍‌ରେ ନୁଆ ଗାଗ୍‌ରିଟାନେ ରକଇ ସଙ୍ଗଇବାର୍‌ଆଚେ ।
௩௮புதிய திராட்சைரசத்தைப் புதிய தோல் பைகளில் ஊற்றி வைக்கவேண்டும், அப்பொழுது இரண்டும் பத்திரமாக இருக்கும்.
39 ୩୯ ଆରି କେ ମିସା ପୁର୍‌ନା ମଦ୍‌ କାଇକରି ଏବେ ଉତ୍‌ରାଇଲା ମଦ୍‌ କାଇବାକେ ମନ୍‌ ନ କରତ୍‌, କାଇକେବଇଲେ, ସେ ବାସିଟା ଆକା ନିକ ବଲି କଇସି ।”
௩௯அன்றியும் ஒருவனும் பழைய திராட்சைரசத்தைக் குடித்தவுடனே புதிய திராட்சைரசத்தை விரும்பமாட்டான், பழைய திராட்சைரசமே நல்லதென்று சொல்லுவான் என்றார்.

< ଲୁକ୍‌ 5 >