< ଜଅନ୍‌ 11 >

1 ବେତ୍‌ନିଆ ଗଡେ ଲାଜାର୍‌ ନାଉଁର୍‌ ଗଟେକ୍‌ ଲକ୍‌କେ ଜର୍‌ ଅଇରଇଲା । ମରିୟମ୍‌ ଆରି ତାର୍‌ ବଇନି ମାର୍‌ତା ସେ ଗାଏଁ ରଇଲାଇ ।
மரியாளும் அவள் சகோதரியாகிய மார்த்தாளும் இருந்த பெத்தானியா கிராமத்தைச் சேர்ந்த லாசரு என்பவன் வியாதிப்பட்டிருந்தான்.
2 ଏ ମରିୟମ୍‌ ଅଇଲାନି, ଜନ୍‌ ମାଇଜି କି ବେସି ଦାମ୍‌ଦେବା ବାସ୍‌ନା ଚିକନ୍‌ ଜିସୁର୍‌ ପାଦେ ରକଇକରି ତାର୍‌ ଚେଣ୍ଡିସଙ୍ଗ୍‌ ପୁଚିଦେଇରଇଲା । ତାର୍‌ ବାଇ ଲାଜାର୍‌କେ ଆକା ଜର୍‌ ଅଇରଇଲା ।
கர்த்தருக்குப் பரிமளதைலம் பூசி, தன் தலைமுடியால் அவருடைய பாதங்களைத் துடைத்தவள் அந்த மரியாளே; அவளுடைய சகோதரனாகிய லாசரு வியாதியாக இருந்தான்.
3 ସେଟାର୍‌ପାଇ ତାର୍‌ ବଇନିମନ୍‌ ଜିସୁର୍‌ ଲଗେ କବର୍‌ ପାଟାଇଲାଇ, “ମାପ୍‌ରୁ ତମେ ଜାକେ ଆଲାଦ୍‌ କଲାସ୍‌ନି, ସେ ବେସି ଜର୍‌ ଅଇଲାଆଚେ ।”
அப்பொழுது அவனுடைய சகோதரிகள்: ஆண்டவரே, நீர் சிநேகிக்கிறவன் வியாதியாக இருக்கிறான் என்று சொல்ல, அவரிடத்திற்கு ஆள் அனுப்பினார்கள்.
4 ମାତର୍‌ ଜିସୁ ଏ କାତା ସୁନିକରି କଇଲା, “ଏ ଜର୍‌ ମର୍‌ବାପାଇ ଅଏ ନାଇ, ମାତର୍‌ ପର୍‌ମେସରର୍‌ ମଇମାର୍‌ ପାଇ । ସେଟାର୍‌ ଲାଗି, ତାର୍‌ ପଅ, ମୁଇ ମିସା ମଇମା ପାଇବି ।”
இயேசு அதைக் கேள்விப்பட்டபொழுது: இந்த வியாதி மரணம் ஏற்படுவதற்காக இல்லாமல் தேவனுடைய மகிமை விளங்குவதற்காக இருக்கிறது; தேவனுடைய குமாரனும் அதினால் மகிமைப்படுவார் என்றார்.
5 ଜିସୁ, ମାର୍‌ତା, ତାର୍‌ ବଇନି ଆରି ଲାଜାର୍‌କେ ବେସି ଆଲାଦ୍‌ କର୍‌ତେରଇଲା ।
இயேசு மார்த்தாளிடத்திலும் அவளுடைய சகோதரியினிடத்திலும் லாசருவினிடத்திலும் அன்பாக இருந்தார்.
6 ସେଟାର୍‌ପାଇ ଲାଜାର୍‌ ନିକ ନ ରଇବା କବର୍‌ ପାଇ ଜିସୁ ଜନ୍‌ ଜାଗାଇ ରଇଲା, ସେ ଜାଗାଇ ଆରି ଦୁଇଦିନ୍‌ ରଇଲା ।
அவன் வியாதியாக இருக்கிறதாக அவர் கேள்விப்பட்டபொழுது, தாம் இருந்த இடத்திலே மீண்டும் இரண்டு நாட்கள் தங்கினார்.
7 ତାର୍‌ ପଚେ ସେ ସିସ୍‌ମନ୍‌କେ କଇଲା, “ଆସା, ଆମେ ଆରିତରେକ୍‌ ଜିଉଦା ଦେସେ ବାଉଡି ଜୁ ।”
அதன்பின்பு அவர் தம்முடைய சீடர்களைப் பார்த்து: நாம் மீண்டும் யூதேயாவிற்குப் போவோம் வாருங்கள் என்றார்.
8 ସିସ୍‌ମନ୍‌ ତାକେ କଇଲାଇ, “ଏ ଗୁରୁ, ତମ୍‌କେତା କେତେ ଦିନ୍‌ ଆଗେ, ଲକ୍‌ମନ୍‌ ପାକ୍‌ନା ସଙ୍ଗ୍‌ ମାର୍‌ବାକେ ଚେସ୍‌ଟା କର୍‌ତେରଇଲାଇ, ତମେ ଆରିତରେକ୍‌ ତେଇ ଜିବାକେ ମନ୍‌ କଲାସ୍‌ନି କି?”
அதற்குச் சீடர்கள்: ரபீ, இப்பொழுது தான் யூதர்கள் உம்மைக் கல்லெறியத் தேடினார்களே, மீண்டும் நீர் அந்த இடத்திற்குப் போகலாமா என்றார்கள்.
9 ଜିସୁ କ‍ଇଲା “ଗଟେକ୍‌ ଦିନେ କାଇ ବାର ଗଁଟା ଉଜଲ୍‌ ନ ରଏ କି? ଜନ୍‌ ଲକ୍‌ମନ୍‌ ଦିନ୍‌ବେଲାର୍‌ ଉଜ୍‌ଲେ ରଇବାଇ, ସେମନ୍‌ ଜଟିଆଇ ନ ଅଅତ୍‌, କାଇକେବଇଲେ ସେମନ୍‌କେ ଏ ଜଗତର୍‌ ଉଜଲ୍‌ ଡିସ୍‌ସି ।
இயேசு மறுமொழியாக: பகலுக்குப் பன்னிரண்டு மணிநேரம் இல்லையா? ஒருவன் பகலிலே நடந்தால் அவன் இந்த உலகத்தின் வெளிச்சத்தைக் காண்கிறபடியினால் இடறல் அடையமாட்டான்.
10 ୧୦ ମାତର୍‌ ରାତିଆ ଇଣ୍ଡ୍‌ଲେ ଜଟିଆଇ ଅଇବାଇ । କାଇକେବଇଲେ ସେମନର୍‌ଟାନେ ଉଜଲ୍‌ ନ ରଏ ।”
௧0ஒருவன் இரவிலே நடந்தால் தன்னிடத்தில் வெளிச்சம் இல்லாததினால் இடறுவான் என்றார்.
11 ୧୧ ଜିସୁ ଏ ସବୁ କାତା କଇଲା ପଚେ, ସିସ୍‌ମନ୍‌କେ କଇଲା, “ଆମର୍‌ ସବୁଲକର୍‌ ମଇତର୍‌ ଲାଜାର୍‌ ଏବେ ସଇଆଚେ, ତାକେ ମୁଇ ଉଟାଇବାର୍‌ ଗାଲିନି ।”
௧௧இவைகளை அவர் சொல்லியபின்பு அவர்களைப் பார்த்து: நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரை அடைந்திருக்கிறான், நான் அவனை உயிரோடு எழுப்பப்போகிறேன் என்றார்.
12 ୧୨ ତେଇ ସିସ୍‌ମନ୍‌ ଜିସୁକେ କଇଲାଇ, “ମାପ୍‌ରୁ, ଜଦି ସେ ସଇଲାଆଚେ ବଇଲେ ନିକ ଅଇସି ।”
௧௨அதற்கு அவருடைய சீடர்கள்: ஆண்டவரே, நித்திரை அடைந்திருந்தால் சுகமடைவான் என்றார்கள்.
13 ୧୩ ଜିସୁ ଲାଜାରର୍‌ ମରନ୍‌ ବିସଇ ନେଇକରି କଇରଇଲା, ମାତର୍‌ ସିସ୍‌ମନ୍‌ ଲାଜାର୍‌କେ ଗୁନର୍‌ଲାଗି ସଇଲା ବିସଇ କଇଲାନି ବଲି ବାବ୍‌ଲାଇ ।
௧௩இயேசுவானவர் அவனுடைய மரணத்தைக்குறித்து அப்படிச் சொன்னார்; அவர்களோ நித்திரைசெய்து இளைப்பாறுகிறதைக்குறித்துச் சொன்னார் என்று நினைத்தார்கள்.
14 ୧୪ ସେଟାର୍‌ପାଇ ଜିସୁ ସେମନ୍‌କେ ନିକ ସଙ୍ଗ୍‌ ବୁଜ୍‌ଲା ପାରା କଇଲା, “ଲାଜାର୍‌ ମରିଗାଲାଆଚେ ।
௧௪அப்பொழுது இயேசு அவர்களைப் பார்த்து: லாசரு மரித்துப்போனான் என்று வெளிப்படையாகச் சொல்லி;
15 ୧୫ ଆରି ମୁଇ ତେଇ ନ ରଇଲି, ସେଟାର୍‌ପାଇ ତମର୍‌ ସଙ୍ଗ୍‌ ସାର୍‌ଦା କଲିନି, ଜେନ୍ତାରିକି ତମେ ବିସ୍‌ବାସ୍‌ କର୍‌ସା । ମାତର୍‌ ଆସା, ଏବେ ଆମେ ତାକେ ଜାଇ ଦେକୁ ।”
௧௫நான் அங்கே இல்லாததினால் நீங்கள் விசுவாசம் உள்ளவர்களாகிறதற்கு ஏதுவுண்டென்று உங்களுக்காக சந்தோஷப்படுகிறேன்; இப்பொழுது அவனிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்றார்.
16 ୧୬ ତେଇ ତମା ନାଉଁର୍‌ ଜାକେ କି ବିଦୁମ୍‌ ବଲି କଇବାଇ, ସେ ତାର୍‌ ସଙ୍ଗର୍‌ ସିସ୍‌ମନ୍‌କେ କଇଲା, “ଜୁ ଆମେ ମିସା ଗୁରୁର୍‌ ସଙ୍ଗ୍‌ ଜାଇ ତାର୍‌ସଙ୍ଗ୍‌ ମରୁ ।”
௧௬அப்பொழுது திதிமு என்னப்பட்ட தோமா மற்றச் சீடர்களைப் பார்த்து: அவருடன் மரிப்பதற்கு நாமும் போவோம் வாருங்கள் என்றான்.
17 ୧୭ ଜିସୁ ବେତ୍‌ନିଆଇ କେଟିକରି ସୁନ୍‌ଲା ଜେ ଲାଜାର୍‌କେ ସମାଦି ଦେଇ ଚାର୍‌ଦିନ୍‌ ଅଇରଇଲା ।
௧௭இயேசு வந்தபோது அவன் கல்லறையில் வைக்கப்பட்டு நான்கு நாட்கள் ஆனது என்றுஅறிந்தார்.
18 ୧୮ ଜିରୁସାଲାମ୍‌ ଅନି ବେତ୍‌ନିଆ ତିନ୍‌ କିଲମିଟର୍‌ ତେଇଅନି ଉନାର୍‌ ବାଟ୍‌ ।
௧௮பெத்தானியா ஊர் எருசலேமுக்கு அருகில் ஏறக்குறைய இரண்டு மைல் தூரத்திலிருந்தது.
19 ୧୯ ଆରି ଜିଉଦିମନର୍‌ ତେଇଅନି କେତେକ୍‌ କେତେକ୍‌ ଲକ୍‌ମନ୍‌ ମାର୍‌ତା ଆରି ମରିୟମ୍‌ ଲଗେ ତାର୍‌ ମରିଜାଇରଇବା ବାଇର୍‌ ବିସଇ ସାଁତାଇବାକେ ଆସିରଇଲାଇ ।
௧௯யூதர்களில் அநேகர் மார்த்தாள் மரியாள் என்பவர்களுடைய சகோதரனைக்குறித்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லும்படி அவர்களிடத்தில் வந்திருந்தார்கள்.
20 ୨୦ ଜିସୁ ଆଇଲାନି ବଲି ସୁନ୍‌ଲା ଦାପ୍‌ରେ ମାର୍‌ତା ତାକେ ବେଟ୍‌ଅଇବାର୍‌ ଗାଲା । ମାତର୍‌ ମରିୟମ୍‌ ଗରେସେ ବସିରଇଲା ।
௨0இயேசு வருகிறார் என்று மார்த்தாள் கேள்விப்பட்டபோது, அவருக்கு எதிர்கொண்டு போனாள்; மரியாளோ வீட்டிலே இருந்தாள்.
21 ୨୧ ମାର୍‌ତା ଜିସୁକେ କଇଲା, “ମାପ୍‌ରୁ ତମେ ଜଦି ଇତି ରଇତାସ୍‌ ବଇଲେ, ମର୍‌ ବାଇ ନ ମର୍‌ତା ।
௨௧மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து: ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரித்திருக்கமாட்டான்.
22 ୨୨ ମାତର୍‌, ମୁଇ ଜାନି ଆଚି । ଏବେ ମିସା ତମେ ପର୍‌ମେସର୍‌କେ ଜାଇଟା ମାଙ୍ଗ୍‌ଲେ, ସେଟା ଦେଇସି ।”
௨௨இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்ளுவது எதுவோ அதை தேவன் உமக்குத் தந்தருளுவார் என்று அறிந்திருக்கிறேன் என்றாள்.
23 ୨୩ ଜିସୁ ତାକେ କଇଲା, “ତର୍‌ ବାଇ ଆରି ଜିବନ୍‌ ଅଇ ଉଟ୍‌ସି ।”
௨௩இயேசு அவளைப் பார்த்து: உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான் என்றார்.
24 ୨୪ ମାର୍‌ତା ଜିସୁକେ କଇଲା, “ସେ ସାରାସାରି ଦିନେ ଆରିତରେକ୍‌ ଉଟ୍‌ବା ବେଲାଇ ଉଟ୍‌ସି, ଏଟା ମୁଇ ଜାନି ।”
௨௪அதற்கு மார்த்தாள்: உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசி நாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றாள்.
25 ୨୫ ଜିସୁ ତାକେ କଇଲା, “ମୁଇ ଜିବନ୍‌ ଆରି ମରିକରି ଆରିତରେକ୍‌ ଉଟ୍‌ବା ଲକ୍‌ । ଜେ ମକେ ବିସ୍‌ବାସ୍‌ କର୍‌ସି, ସେ ମଲେ ମିସା, ବଁଚ୍‌ସି ।
௨௫இயேசு அவளைப் பார்த்து: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாக இருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;
26 ୨୬ ଆରି ଜେ ଜଦି ବଁଚି ରଇକରି ବିସ୍‌ବାସ୍‌ କର୍‌ସି, ସେ କେବେ ମିସା ନ ମରେ । ଏ କାତା ବିସ୍‌ବାସ୍‌ କଲାସ୍‌ନି କି?” (aiōn g165)
௨௬உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறன் எவனும் என்றென்றைக்கும் மரிக்காமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார். (aiōn g165)
27 ୨୭ ମାର୍‌ତା ଜିସୁକେ କଇଲା, “ଉଁ ମାପ୍‌ରୁ, ମୁଇ ବିସ୍‌ବାସ୍‌ କଲିନି । ତମେ ସେ ପର୍‌ମେସରର୍‌ ପ । ଜନ୍‌ ମସିଅ ଏ ଜଗତେ ଆଇବାର୍‌ ରଇଲା, ତମେ ସେ ଆକା ।”
௨௭அதற்கு அவள்: ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன் என்றாள்.
28 ୨୮ ଏ ସବୁ କାତା କଇସାର୍‌ଲାପଚେ ମାର୍‌ତା ଜାଇକରି ନିଜର୍‌ ବଇନିକେ କେ ନ ସୁନ୍‌ଲାପାରା ଡାକି କଇଲା, “ଆଉ ଗୁରୁ ଆସିଆଚେ ଆରି ତକେ ଡାକ୍‌ଲାନି ।”
௨௮இவைகளைச் சொன்னபின்பு, அவள் போய், தன் சகோதரியாகிய மரியாளை இரகசியமாக அழைத்து: போதகர் வந்திருக்கிறார், உன்னை அழைக்கிறார் என்றாள்.
29 ୨୯ ମରିୟମ୍‌ ଏ କାତା ସୁନିକରି ଦାନ୍ଦା ପାନ୍ଦା ଅଇ ଜିସୁକେ ବେଟ୍‌ ଅଇବାର୍‌ ଗାଲା ।
௨௯அவள் அதைக் கேட்டவுடனே, சீக்கிரமாக எழுந்து, அவரிடத்தில் வந்தாள்.
30 ୩୦ ଜିସୁ ସେଡ୍‌କିବେଲା ଗାଉଁ ବିତ୍‌ରେ ଆସି ନ ରଇଲା, ମାତର୍‌ ମାର୍‌ତା ତାକେ ଜନ୍‌ ଜାଗାଇ ବେଟ୍‌ ଅଇରଇଲା, ତେଇସେ ରଇଲା ।
௩0இயேசு இன்னும் கிராமத்திற்குள் வராமல், மார்த்தாள் தம்மைச் சந்தித்த இடத்திலே இருந்தார்.
31 ୩୧ ମରିୟମ୍‌ ଉଟିକରି ଦାନ୍ଦା ପାନ୍ଦା ଅଇ ବାଇରେ ସାଁତାଇବାକେ ଆସିରଇଲା ଲକ୍‌ମନ୍‌ ଦେକ୍‌ଲାଇ, ସେମନ୍‌ ମିସା ତାର୍‌ ପଚେ ପଚେ ଗାଲାଇ । ସେମନ୍‌ ବାବ୍‌ଲାଇ, ସେ କବର୍‌ ଲଗେ କାନ୍ଦ୍‌ବାର୍‌ ଗାଲାନି ।
௩௧அப்பொழுது, வீட்டிலே அவளுடனே இருந்து அவளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த யூதர்கள், மரியாள் சீக்கிரமாக எழுந்துபோகிறதைப் பார்த்து: அவள் கல்லறையினிடத்தில் அழுகிறதற்குப் போகிறாள் என்று சொல்லி, அவளுக்குப் பின்பாகப் போனார்கள்.
32 ୩୨ ତେଇ ଜିସୁ ଜନ୍‌ ଜାଗାଇରଇଲା, ମରିୟମ୍‌ ସେ ଜାଗାଇ କେଟ୍‌ଲା ଆରି ଜିସୁକେ ଦେକିକରି ତାର୍‌ ପାଦେ ଡାଣ୍ଡାସନ୍‌ ପଡି କଇଲା, “ମାପ୍‌ରୁ ତମେ ଜଦି ଇତି ରଇତାସ୍‌ଆଲେ ମର୍‌ ବାଇ ନ ମର୍‌ତା ।”
௩௨இயேசு இருந்த இடத்தில் மரியாள் வந்து, அவரைப் பார்த்தவுடனே, அவர் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரித்திருக்கமாட்டான் என்றாள்.
33 ୩୩ ମରିୟମ୍‌ ତାକେ ଆରି ତାର୍‌ ସଙ୍ଗ୍‌ ରଇବା ଲକ୍‌ମନ୍‌ କାନ୍ଦ୍‌ତେରଇବାଟା ଦେକି ଜିସୁ ଆତ୍‌ମାଇ ବେସି ମନ୍‌ଦୁକ୍‌ ଅଇଗାଲା ।
௩௩அவள் அழுகிறதையும் அவளோடு வந்த யூதர்கள் அழுகிறதையும் இயேசு பார்த்தபோது ஆவியிலே கலங்கித் துயரமடைந்து:
34 ୩୪ ସେ ପାଚାର୍‌ଲା, “ତାକେ କନ୍ତି କବର୍‌ ଦେଇଆଚାସ୍‌?” ସେମନ୍‌ ତାକେ କଇଲାଇ, “ମାପ୍‌ରୁ ଆସିଦେକା ।”
௩௪அவனை எங்கே வைத்தீர்கள் என்றார். ஆண்டவரே, வந்து பாரும் என்றார்கள்.
35 ୩୫ ଜିସୁ କାନ୍ଦ୍‌ଲା ।
௩௫இயேசு கண்ணீர் விட்டார்.
36 ୩୬ ତେଇ ଜିଉଦି ଲକ୍‌ମନ୍‌ କଇଲାଇ, “ଦେକା, ସେ ଲାଜାର୍‌କେ କେନ୍ତି ଆଲାଦ୍‌ କର୍‌ତେରଇଲା ।”
௩௬அப்பொழுது யூதர்கள்: இதோ, இவர் அவனை எவ்வளவாக நேசித்தார் என்றார்கள்.
37 ୩୭ ମାତର୍‌ ସେମନର୍‌ ବିତ୍‌ରେଅନି କେତେକ୍‌ ଲକ୍‌ କଇଲାଇ, “ଏ ଲକ୍‌ ଜନ୍‌ କାଣାକେ ଆଁକି ଡିସାଇରଇଲା, ସେ ମନ୍‌କଲେ କାଇ ଏ ଲାଜାରର୍‌ ମରନ୍‌ ମିସା ତେବାଇ ନାପାର୍‌ତା କି?”
௩௭அவர்களில் சிலர்: குருடனுடைய கண்களைத் திறந்த இவர். இவனை மரித்துப் போகாமலிருக்கச் செய்யமுடியாதா என்றார்கள்.
38 ୩୮ ତେଇ ଆରିତରେକ୍‌ ଜିସୁ ମନ୍‌ ବିତ୍‌ରେ କିଲ୍‌ବିଲ୍‌ ଅଇ ସମାଦି ଲଗେ ଗାଲା । ସମାଦିଟାନେ ଗଟେକ୍‌ ପାଆର୍‌ ଆରି ପାଆର୍‌ ମୁଆଟେ ଗଟେକ୍‌ ବଡ୍‌ ପାକ୍‌ନା ଡାବିଅଇରଇଲା ।
௩௮அப்பொழுது இயேசு மீண்டும் தமக்குள்ளே கலங்கிக் கல்லறையினிடத்திற்கு வந்தார். அது ஒரு குகையாக இருந்தது; அதின்மேல் ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது.
39 ୩୯ ଜିସୁ ତିଆର୍‌ଲା, “ଏ ପାକ୍‌ନା ଗୁଚାଇଦିଆସ୍‌ ।” ମରିଜାଉ ଲାଜାରର୍‌ ବଇନି ମାର୍‌ତା କଇଲା, “ମାପ୍‌ରୁ ସେଟା କୁଇକରି ଗନ୍ଦି ଗାଲାବେ, କାଇକେବଇଲେ, ତାକେ କବର୍‌ଦେଇ ଚାର୍‌ଦିନ୍‌ ଅଇଗାଲା ।”
௩௯இயேசு: கல்லை எடுத்து போடுங்கள் என்றார். மரித்தவனுடைய சகோதரியாகிய மார்த்தாள் அவரைப் பார்த்து: ஆண்டவரே, இப்பொழுது நாற்றம் எடுக்குமே, நான்கு நாட்கள் ஆனதே என்றாள்.
40 ୪୦ ଜିସୁ ମାର୍‌ତାକେ କଇଲା, “ତୁଇ ଜଦି ବିସ୍‌ବାସ୍‌ କର୍‌ସୁ ବଇଲେ ପର୍‌ମେସରର୍‌ ମଇମା ଦେକ୍‌ସୁ ବଲି ମୁଇ ତକେ କଇ ନ ର‍ଇଲି କି?”
௪0இயேசு அவளைப் பார்த்து: நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா என்றார்.
41 ୪୧ ତେଇ ସେମନ୍‌ ପାକ୍‌ନା ଗୁଚାଇଲାଇ । ଜିସୁ ସରଗ୍‌ବାଟେ ମୁ କରି କଇଲା, “ବାବା ତମେ ମର୍‌ ପାର୍‌ତନା ସୁନ୍‌ଲାସ୍‌ ବଲି ମୁଇ ତମ୍‌କେ ଦନିଅବାଦ୍‌ ଦେଲିନି ।
௪௧அப்பொழுது மரித்தவன் வைக்கப்பட்ட இடத்திலிருந்த கல்லை எடுத்துப்போட்டார்கள். இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து: பிதாவே, நீர் எனக்குச் செவிகொடுத்தபடியினால் உமக்கு நன்றி செலுத்துகிறேன்.
42 ୪୨ ତମେ ଜେଡେବେଲେ ମିସା ମର୍‌ ପାର୍‌ତନା ସୁନ୍‌ସା, ଏଟା ମୁଇ ଜାନି, ମାତର୍‌ ଜନ୍‌ ଲକ୍‌ମନ୍‌ ଏ ଚାରିବେଡ୍‌ତି ଟିଆଅଇ ଆଚତ୍‌, ସେମନ୍‌ ଜେନ୍ତିକି ତମେଆକା ମକେ ପାଟାଇଆଚାସ୍‌ ବଲି ବିସ୍‌ବାସ୍‌ କର୍‌ବାଇ, ଏଟାର୍‌ ପାଇ ମୁଇ ଏନ୍ତିବଲି କଇଲି ।”
௪௨நீர் எப்பொழுதும் எனக்குச் செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன்; ஆனாலும் நீர் என்னை அனுப்பினதைச் சூழ்ந்து நிற்கும் மக்கள் விசுவாசிக்கும்படியாக அவர்களுக்காக இதைச் சொன்னேன் என்றார்.
43 ୪୩ ଏନ୍ତି କଇ ସାରାଇ ଜିସୁ ଆକ୍‌ମାରି ଡାକ୍‌ଲା, “ଲାଜାର୍‌ ତୁଇ ବାରଇ ଆଉ ।”
௪௩இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாகக் கூப்பிட்டார்.
44 ୪୪ ଡାକ୍‌ଲା ଦାପ୍‌ରେ ମଲା ଲାଜାର୍‌ ବାରଇ ଆଇଲା । ତାର୍‌ ଆତେ ଗଡେ ମଡା ଲୁଗା ବାନ୍ଦାଅଇରଇଲା । ମୁଏ ମିସା ଗର୍‌ଣ୍ଡା ଗୁଡିଆଇ ଅଇରଇଲା । ଜିସୁ ସେମନ୍‌କେ କଇଲା “ତାକେ ବାନ୍ଦ୍‌ଲାଟା କୁସ୍‌ଲାଇ କରି, ଜିବାକେ ଦିଆସ୍‌ ।”
௪௪அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதத் துணிகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் துணியால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களைப் பார்த்து: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார்.
45 ୪୫ ଜିଉଦି ଲକ୍‌ମନର୍‌ ବିତ୍‌ରେଅନି, ବେସି ଲକ୍‌ ମରିୟମର୍‌ ଲଗେ ଆସିରଇଲାଇ, ଆରି ଜିସୁର୍‌ ଏ କାମ୍‌ ଦେକି, ତାକେ ବିସ୍‌ବାସ୍‌ କଲାଇ ।
௪௫அப்பொழுது மரியாளிடத்தில் வந்து, இயேசு செய்தவைகளைப் பார்த்தவர்களாகிய யூதர்களில் அநேகர் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்.
46 ୪୬ ଆରି ସେମନର୍‌ ବିତ୍‌ରେଅନି କେତେଲକ୍‌ ପାରୁସିମନର୍‌ ଲଗେ ଜାଇକରି ଜିସୁ କରି ରଇବା କାମ୍‌ ଲକ୍‌ମନ୍‌କେ ଜାନାଇଲାଇ ।
௪௬அவர்களில் சிலர் பரிசேயர்களிடம்போய், இயேசு செய்தவைகளை அவர்களுக்கு அறிவித்தார்கள்.
47 ୪୭ ପଚେ ମୁକିଅ ପୁଜାରିମନ୍‌ ଆରି ପାରୁସିମନ୍‌ ଗଟେକ୍‌ ବଡ୍‌ ପଁଚାଦି ଡାକାଇ କଇଲାଇ, “ଆମେ କାଇଟା କରୁ? ଦେକା ଏ ଲକ୍‌ ତା କେତେକ୍‌ କେତେକ୍‌ କାବାଅଇଜିବା କାମ୍‌ମନ୍‌ କଲାନି ।
௪௭அப்பொழுது பிரதான ஆசாரியர்களும் பரிசேயர்களும் ஆலோசனை சங்கத்தைக் கூடிவரச்செய்து, நாம் என்ன செய்கிறது? இந்த மனிதன் அநேக அற்புதங்களைச் செய்கிறானே.
48 ୪୮ ଆମେ ଜଦି ଆକେ ଏନ୍ତାରି ଚାଡିଦେଉଁ ବଇଲେ ସବୁଲକ୍‌ ତାର୍‌ଟାନେ ବିସ୍‌ବାସ୍‌ କର୍‌ବାଇ ଆରି ରମିୟ ଅଦିକାରି ଆସିକରି ଆମର୍‌ ଏ ମନ୍ଦିର୍‌ ଆରି ଆମର୍‌ ବିସ୍‌ବାସ୍‌ କର୍‌ବା ଦରମ୍‌ ସବୁ କୁରୁପ୍‌ନାସ୍‌ କରିପାକାଇସି ।”
௪௮நாம் இவனை இப்படியே விட்டுவிட்டால், எல்லோரும் இவனை விசுவாசிப்பார்கள்; அப்பொழுது ரோமர்கள் வந்து நம்முடைய இடத்தையும் மக்களையும் அழித்துப்போடுவார்களே என்றார்கள்.
49 ୪୯ ମାତର୍‌ ସେମନର୍‌ ବିତ୍‌ରେଅନି ଗଟେକ୍‌ କୟାପା ନାଉଁର୍‌, ସେ ବରସର୍‌ ପାଇ ବାଚିରଇବା ବଡ୍‌ ପୁଜାରି, କଇଲା “ତମେ କେତେ ବକୁଆ ଲକ୍‌ମନ୍‌!
௪௯அப்பொழுது அவர்களில் ஒருவனும், அந்த வருடத்துப் பிரதான ஆசாரியனுமாகிய காய்பா என்பவன் அவர்களைப் பார்த்து: உங்களுக்கு ஒன்றும் தெரியாது;
50 ୫୦ ତମେ କାଇ ବୁଜି ନାପାର୍‌ଲାସ୍‌ନି? ଗୁଲାଇ ଜାତି ନାସ୍‌ ଅଇବା ବାଦୁଲେ ଗଟେକ୍‌ ଲକ୍‌ ମର୍‌ବାଟା ନିକ ।”
௫0மக்கள் எல்லோரும் கெட்டுப்போகாதபடிக்கு ஒரே மனிதன் மக்களுக்காக மரிப்பது நமக்கு நலமாக இருக்கும் என்று நீங்கள் சிந்திக்காமல் இருக்கிறீர்கள் என்றான்.
51 ୫୧ କୟାପା ସତ‍ଇସେ ତାର୍‌ ନିଜର୍‌ଟାନେ ଅନି ଏନ୍ତି କଇ ନ ରଇଲା, ମାତର୍‌ ସେ ବରସର୍‌ ବଡ୍‌ ପୁଜାରି ଅଇରଇଲାର୍‌ ଲାଗି ପଚର୍‌ ଗଟ୍‍ନା ସବୁ ବବିସତ୍‌କାତା ତାର୍‌ ମୁଏଁ ଅନି ବାରଇରଇଲା । ସେ ଜାନିଦେଇ ରଇଲା ଜେ,
௫௧இதை அவன் தானாகச் சொல்லாமல், அந்த வருடத்துப் பிரதான ஆசாரியனானபடியினாலே இயேசு யூதமக்களுக்காக மரிக்கப்போகிறார் என்றும்,
52 ୫୨ ଚିନ୍‌ ଚତର୍‌ ଅଇଜାଇରଇବା ପର୍‌ମେସରର୍‌ ଲକ୍‌ମନ୍‌କେ ଟୁଲିଆଇ, ଗଟେକ୍‌ କୁଟୁମ୍‌ କରାଇବାକେ ଜିସୁ ମର୍‌ବାକେ ଗାଲାନି ।
௫௨அந்த மக்களுக்காக மாத்திரமல்ல, சிதறியிருக்கிற தேவனுடைய பிள்ளைகளை ஒன்றாகச் சேர்க்கிறதற்காகவும் மரிக்கப்போகிறார் என்றும் தீர்க்கதரிசனமாக சொன்னான்.
53 ୫୩ ତେବର୍‌ପାଇ ସେ ଦିନେଅନି ଜିଉଦିନେତାମନ୍‌ ଜିସୁକେ ମରାଇବାକେ ପାଁଚ୍‌ନା କଲାଇ ।
௫௩அந்தநாள்முதல் அவரைக் கொலைசெய்யும்படிக்கு ஆலோசனை செய்தார்கள்.
54 ୫୪ ତେବେ ଜିସୁ ଜିଉଦି ଲକ୍‌ମନର୍‌ ବିତ୍‌ରେ ସବୁଲକ୍‌ ଜାନ୍‌ଲା ପାରା ବୁଲାଚାଲା ନ କର୍‌ତେ ରଇଲା । ସେ ଜାଗାଇଅନି ବାରଇଜାଇକରି, ମରୁବାଲି ବୁଏଁ ରଇବା କିନରା ଜାଗାଇ ରଇଲା ଏପ୍‌ରଇମ୍‌ ନାଉଁର୍‌ ଗଟେକ୍‌ ଗଡେ ଜାଇ ସିସ୍‌ମନର୍‌ ସଙ୍ଗ୍‌ ତେଇ ରଇଲା ।
௫௪ஆகவே, இயேசு அதன்பின்பு வெளியரங்கமாக யூதர்களுக்குள்ளே தங்காமல், அந்த இடத்தைவிட்டு வனாந்திரத்திற்கு அருகான இடமாகிய எப்பிராயீம் என்னப்பட்ட ஊருக்குப்போய், அங்கே தம்முடைய சீடர்களோடு தங்கியிருந்தார்.
55 ୫୫ ଜିଉଦିମନର୍‌ ନିସ୍‌ତାର୍‌ ପରବ୍‌ କେଟିଆଇଲା । ସେ ପରବ୍‌ ଅଇବା ଆଗ୍‌ତୁ ନିଜେ ନିଜେ ସୁକଲ୍‌ ଅଇବାକେ ଗୁଲାଇ ରାଇଜର୍‌ ଲକ୍‌ମନ୍‌ ନିସ୍‌ତାର୍‌ ପରବ୍‌ ଆଗ୍‌ତୁ ଜିରୁସାଲାମ୍‌ ଜିବାକେ ବାଟ୍‍ଦାର୍‌ଲାଇ ।
௫௫யூதர்களுடைய பஸ்காபண்டிகை நெருங்கியிருந்தது. அதற்கு முன்னே அநேகர் தங்களைச் சுத்திகரித்துக்கொள்வதற்கு தங்களுடைய நாட்டிலிருந்து எருசலேமுக்குப் போனார்கள்.
56 ୫୬ ସେମନ୍‌ ଜିସୁକେ କଜ୍‌ଲାଇ ଆରି ମନ୍ଦିର୍‌ ଟିଆଅଇଲାବେଲେ ତାକର୍‌ ତାକର୍‌ ବିତ୍‌ରେ କୁଆବଲା ଅଇଲାଇ, “ସେ ପରବ୍‌ଟାନେ ନ ଆସେବଲି କାଇ ତମେ ବାବ୍‌ଲାସ୍‌ନି କି?”
௫௬அங்கே அவர்கள் இயேசுவைத் தேடிக்கொண்டு தேவாலயத்தில் நிற்கும்போது, ஒருவரையொருவர் பார்த்து: உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது, அவர் பண்டிகைக்கு வரமாட்டாரோ என்று பேசிக்கொண்டார்கள்.
57 ୫୭ ମୁକିଅ ପୁଜାରି ଆରି ପାରୁସି ଲକ୍‌ମନ୍‌ ଜିସୁକେ ଦାର୍‌ବାକେ ସେ କନ୍ତି ଆଚେ ଜାନିରଇବାଇ ବଲି, ସେଟା ଆଦେସ୍‌ ଦେଇରଇଲାଇ ।
௫௭பிரதான ஆசாரியர்களும் பரிசேயர்களும் அவரைப் பிடிக்கும்படி யோசித்து, அவர் இருக்கிற இடத்தை எவனுக்காவது தெரிந்திருந்தால், அதை அறிவிக்கவேண்டும் என்று கட்டளையிட்டிருந்தார்கள்.

< ଜଅନ୍‌ 11 >