< ⲖⲞⲨⲔⲞⲚ 15 >

1 ⲁ̅ ⲛⲉⲣⲉⲛⲧⲉⲗⲱⲛⲏⲥ ⲇⲉ ⲧⲏⲣⲟⲩ ⲛⲙ ⲣⲣⲉϥⲣⲛⲟⲃⲉ ϩⲱⲛ ⲉϩⲟⲩⲛ ⲉⲣⲟϥ ⲉⲥⲱⲧⲙ ⲉⲣⲟϥ
எல்லா வரி வசூலிப்பவர்களும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்துசேர்ந்தார்கள்.
2 ⲃ̅ ⲛⲉⲩⲕⲣⲙⲣⲙ ⲇⲉ ⲧⲏⲣⲟⲩ ⲛϭⲓ ⲛⲉⲫⲁⲣⲓⲥⲥⲁⲓⲟⲥ ⲙⲛ ⲛⲉⲅⲣⲁⲙⲙⲁⲧⲉⲩⲥ ⲉⲩϫⲱ ⲙⲙⲟⲥ ϫⲉ ⲡⲁⲓ ϣⲉⲡⲣⲉϥⲣⲛⲟⲃⲉ ⲉⲣⲟϥ ⲁⲩⲱ ϥⲟⲩⲱⲙ ⲛⲙⲙⲁⲩ
அப்பொழுது பரிசேயர்களும் வேதபண்டிதர்களும் முறுமுறுத்து: இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடு சாப்பிடுகிறார் என்றார்கள்.
3 ⲅ̅ ⲁϥϫⲱ ⲇⲉ ⲛⲧⲉⲓⲡⲁⲣⲁⲃⲟⲗⲏ ⲉϥϫⲱ ⲙⲙⲟⲥ
அவர்களுக்கு அவர் சொன்ன உவமையாவது:
4 ⲇ̅ ϫⲉ ⲛⲓⲙ ⲣⲣⲱⲙⲉ ⲉⲃⲟⲗ ⲛϩⲏⲧ ⲧⲏⲩⲧⲛ ⲡⲉⲧⲉ ⲟⲩⲛⲧⲁϥ ϣⲉ ⲛⲉⲥⲟⲟⲩ ⲁⲩⲱ ⲉϥϣⲁⲛⲥⲉⲣⲙ ⲟⲩⲁ ⲉⲃⲟⲗ ⲛϩⲏⲧⲟⲩ ⲙⲏ ⲛϥⲛⲁⲕⲁ ⲡⲓⲡⲥⲧⲁⲓⲟⲩⲯⲓⲥ ⲁⲛ ϩⲓⲡϫⲁⲓⲉ ⲛϥⲃⲱⲕ ⲛϥϣⲓⲛⲉ ⲛⲥⲁⲡⲓⲟⲩⲁ ϣⲁⲛⲧϥϩⲉ ⲉⲣⲟϥ
உங்களில் ஒரு மனிதன் நூறு ஆடுகளை உடையவனாக இருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்திரத்திலேவிட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்கும்வரை தேடித்திரியானோ?
5 ⲉ̅ ⲁⲩⲱ ⲉϥϣⲁⲛϩⲉ ⲉⲣⲟϥ ϣⲁϥⲧⲁⲗⲟϥ ⲉϫⲛ ⲛⲉϥⲛⲁϩⲃⲉ ⲉϥⲣⲁϣⲉ
கண்டுபிடித்தபின்பு, அவன் மகிழ்ச்சியோடு அதைத் தன் தோள்களின்மேல் போட்டுக்கொண்டு,
6 ⲋ̅ ⲉϥϣⲁⲛⲉⲓ ⲇⲉ ⲉϩⲣⲁⲓ ⲉⲡⲏⲓ ϣⲁϥⲙⲟⲩⲧⲉ ⲉⲛⲉϥϣⲃⲉⲉⲣ ⲙⲛ ⲛⲉⲧϩⲓⲧⲟⲩⲱϥ ⲉϥϫⲱ ⲙⲙⲟⲥ ⲛⲁⲩ ϫⲉ ⲣⲁϣⲉ ⲛⲙⲙⲁⲓ ϫⲉ ⲁⲓϩⲉ ⲉⲡⲁⲉⲥⲟⲟⲩ ⲉⲛⲧⲁϥⲥⲱⲣⲙ
வீட்டிற்கு வந்து, நண்பர்களையும் அண்டைகுடும்பத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட மகிழுங்கள் என்பான் அல்லவா?
7 ⲍ̅ ϯϫⲱ ⲙⲙⲟⲥ ⲛⲏⲧⲛ ϫⲉ ϣⲁⲣⲉⲟⲩⲣⲁϣⲉ ⲛⲧⲉⲓϩⲉ ϣⲱⲡⲉ ⲉϫⲛ ⲟⲩⲣⲉϥⲣⲛⲟⲃⲉ ⲉϥϣⲁⲛⲙⲉⲧⲁⲛⲟⲓ ⲉϩⲟⲩⲉ ⲡⲓⲡⲥⲧⲁⲓⲟⲩⲯⲓⲥ ⲛⲇⲓⲕⲁⲓⲟⲥ ⲛⲁⲓ ⲉⲧⲉⲛⲥⲉⲣⲭⲣⲓⲁ ⲁⲛ ⲙⲙⲉⲧⲁⲛⲟⲓⲁ
அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்து மகிழ்ச்சி உண்டாகிறதைவிட மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த மகிழ்ச்சி உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
8 ⲏ̅ ⲏ ⲛⲓⲙ ⲛⲥϩⲓⲙⲉ ⲉⲩⲛⲧⲥⲙⲏⲧⲉ ⲛⲇⲣⲁⲭⲙⲏ ⲛⲥⲥⲉⲣⲙⲟⲩⲉⲓ ⲉⲃⲟⲗ ⲛϩⲏⲧⲟⲩ ⲙⲏ ⲛⲥⲛⲁϫⲉⲣⲉⲡϩⲏⲃⲥ ⲁⲛ ⲛⲥⲥⲉϩⲣⲡⲏⲓ ⲛⲥϣⲓⲛⲉ ϩⲛ ⲟⲩⲱⲣϫ ϣⲁⲛⲧⲥϩⲉ ⲉⲣⲟⲥ
அன்றியும், ஒரு பெண் பத்து வெள்ளிக்காசுகளை உடையவளாக இருந்து, அதில் ஒரு வெள்ளிக்காசு காணாமற்போனால், விளக்கைக் கொளுத்தி, வீட்டைப் பெருக்கி, அதைக் கண்டுபிடிக்கிறவரைக்கும் அக்கறையோடு தேடாமலிருப்பாளோ?
9 ⲑ̅ ⲁⲩⲱ ⲉⲥϣⲁⲛϩⲉ ⲉⲣⲟⲥ ϣⲁⲥⲙⲟⲩⲧⲉ ⲉⲛⲉⲥϣⲃⲉⲉⲣ ⲙⲛ ⲛⲉⲧϩⲓⲧⲟⲩⲱⲥ ⲉⲥϫⲱ ⲙⲙⲟⲥ ϫⲉ ⲣⲁϣⲉ ⲛⲙⲙⲁⲓ ϫⲉ ⲁⲓϩⲉ ⲉⲧⲁⲇⲣⲁⲭⲙⲏ ⲉⲛⲧⲁⲓⲥⲟⲣⲙⲉⲥ
கண்டுபிடித்தபின்பு, தன் தோழிகளையும் அண்டை வீட்டுக்காரிகளையும் கூட வரவழைத்து: காணாமற்போன வெள்ளிக்காசைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட மகிழ்ச்சியாக இருங்கள் என்பாள் அல்லவா?
10 ⲓ̅ ϯϫⲱ ⲙⲙⲟⲥ ⲛⲏⲧⲛ ϫⲉ ϣⲁⲣⲉⲟⲩⲣⲁϣⲉ ϣⲱⲡⲉ ⲛⲧⲉⲓϩⲉ ⲙⲡⲉⲙⲧⲟ ⲉⲃⲟⲗ ⲛⲛⲁⲅⲅⲉⲗⲟⲥ ⲙⲡⲛⲟⲩⲧⲉ ⲉϫⲛ ⲟⲩⲣⲉϥⲣⲛⲟⲃⲉ ⲉϥϣⲁⲛⲙⲉⲧⲁⲛⲟⲉⲓ
௧0அதுபோல மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதர்களுக்கு முன்பாக மகிழ்ச்சி உண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
11 ⲓ̅ⲁ̅ ⲡⲉϫⲁϥ ⲇⲉ ϫⲉ ⲟⲩⲣⲱⲙⲉ ⲡⲉⲧⲉ ⲟⲩⲛⲧⲁϥ ϣⲏⲣⲉ ⲥⲛⲁⲩ
௧௧பின்னும் அவர் சொன்னது: ஒரு மனிதனுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள்.
12 ⲓ̅ⲃ̅ ⲡⲉϫⲉⲡⲕⲟⲩⲓ ⲛϩⲏⲧⲟⲩ ⲙⲡⲉϥⲓⲱⲧ ϫⲉ ⲡⲁⲓⲱⲧ ⲙⲁ ⲛⲁⲓ ⲙⲡⲁⲙⲉⲣⲟⲥ ⲉⲧⲧⲁϩⲟ ⲙⲙⲟⲓ ϩⲛ ⲧⲟⲩⲥⲓⲁ ⲁϥⲡⲱϣ ⲇⲉ ⲉϫⲱⲟⲩ ⲛⲛⲉϥⲛⲕⲁ
௧௨அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, சொத்தில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் சொத்தை பங்கிட்டுக்கொடுத்தான்.
13 ⲓ̅ⲅ̅ ⲉⲙⲡⲁⲧⲉϩⲁϩ ⲇⲉ ⲛϩⲟⲟⲩ ⲟⲩⲓⲛⲉ ⲁⲡⲕⲟⲩⲓ ⲛϣⲏⲣⲉ ⲥⲉⲩϩ ⲛⲕⲁ ⲛⲓⲙ ⲉⲧⲛⲧⲁϥⲥ ⲁϥⲁⲡⲟⲇⲏⲙⲓ ⲉⲩⲭⲱⲣⲁ ⲉⲥⲟⲩⲏⲟⲩ ⲁϥϫⲱⲱⲣⲉ ⲉⲃⲟⲗ ⲙⲙⲁⲩ ⲛⲧⲉϥⲟⲩⲥⲓⲁ ⲉϥⲙⲟⲟϣⲉ ϩⲛ ⲟⲩⲙⲛⲧϣⲛⲁ
௧௩சில நாட்களுக்குப்பின்பு, இளையமகன் தன் சொத்தைவிற்று பணத்தை திரட்டிக்கொண்டு, தூரதேசத்திற்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாக வாழ்ந்து, தன் சொத்தை அழித்துப்போட்டான்.
14 ⲓ̅ⲇ̅ ⲛⲧⲉⲣⲉϥϫⲉⲣⲉ ⲛⲕⲁ ⲇⲉ ⲛⲓⲙ ⲉⲃⲟⲗ ⲁⲩⲛⲟϭ ⲛϩⲉⲃⲱⲱⲛ ϣⲱⲡⲉ ϩⲛ ⲧⲉⲭⲱⲣⲁ ⲉⲧⲙⲙⲁⲩ ⲛⲧⲟϥ ⲇⲉ ⲁϥⲁⲣⲭⲓ ⲛϣⲱⲱⲧ
௧௪எல்லாவற்றையும் அவன் செலவழித்தபின்பு, அந்த தேசத்திலே கொடிய பஞ்சமுண்டானது. அப்பொழுது அவன் வறுமைக்குள்ளானான்,
15 ⲓ̅ⲉ̅ ⲁϥⲃⲱⲕ ⲁϥⲧⲟϭϥ ⲉⲩⲁ ⲛⲣⲣⲙⲛϯⲙⲉ ⲛⲧⲉⲭⲱⲣⲁ ⲉⲧⲙⲙⲁⲩ ⲁϥϫⲟⲟⲩϥ ⲉⲧⲉϥⲥⲱϣⲉ ⲉⲙⲟⲟⲛⲉ ⲛϩⲉⲛⲣⲓⲣ
௧௫அந்த தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில்போய் வேலையில் சேர்ந்தான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான்.
16 ⲓ̅ⲋ̅ ⲁⲩⲱ ⲛⲉϥⲉⲡⲓⲑⲩⲙⲓ ⲉⲥⲓ ⲉⲃⲟⲗ ϩⲛ ⲛϭⲁⲣⲁⲧⲉ ⲉⲧⲉ ⲣⲉⲣⲣⲓⲣ ⲟⲩⲱⲙ ⲙⲙⲟⲟⲩ ⲉⲙⲙⲛⲗⲁⲁⲩ ϯⲛⲁϥ
௧௬அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் பசியைதீர்க்க ஆசையாக இருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.
17 ⲓ̅ⲍ̅ ⲁϥⲙⲉⲕⲙⲟⲩⲕϥ ⲇⲉ ⲡⲉϫⲁϥ ϫⲉ ⲟⲩⲛⲟⲩⲏⲣ ⲛϫⲁⲓⲃⲉⲕⲉ ⲛⲧⲉⲡⲁⲓⲱⲧ ⲥⲏⲟⲩ ⲙⲡⲟⲓⲕ ⲁⲛⲟⲕ ⲇⲉ ⲉⲓⲛⲁⲙⲟⲩ ⲙⲡⲉⲓⲙⲁ ϩⲁ ⲡⲉϩⲕⲟ
௧௭அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய வேலைக்காரர்கள் எத்தனையோ பேருக்கு நிறைவான உணவு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன்.
18 ⲓ̅ⲏ̅ ϯⲛⲁⲧⲱⲟⲩⲛ ⲧⲁⲃⲱⲕ ϣⲁⲡⲁⲓⲱⲧ ⲛⲧⲁϫⲟⲟⲥ ⲛⲁϥ ϫⲉ ⲡⲁⲓⲱⲧ ⲁⲓⲣⲛⲟⲃⲉ ⲉⲧⲡⲉ ⲁⲩⲱ ⲙⲡⲉⲕⲙⲧⲟ ⲉⲃⲟⲗ
௧௮நான் எழுந்து என் தகப்பனிடத்திற்குப்போய்: தகப்பனே, பரலோகத்திற்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவம் செய்தேன்.
19 ⲓ̅ⲑ̅ ⲛϯⲙⲡϣⲁ ⲁⲛ ϫⲓⲛ ⲧⲉⲛⲟⲩ ⲉⲙⲟⲩⲧⲉ ⲉⲣⲟⲓ ϫⲉ ⲡⲉⲕϣⲏⲣⲉ ⲁⲁⲧ ⲛⲑⲉ ⲟⲩⲁ ⲛⲛⲉⲓϫⲁⲓ ⲃⲉⲕⲉ
௧௯இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் தகுதியற்றவன், உம்முடைய வேலைக்காரர்களில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி;
20 ⲕ̅ ⲁϥⲧⲱⲟⲩⲛ ⲇⲉ ⲁϥⲉⲓ ϣⲁ ⲡⲉϥⲓⲱⲧ ⲉⲧⲓ ⲇⲉ ⲉϥⲙⲡⲟⲩⲉ ⲁⲡⲉϥⲓⲱⲧ ⲛⲁⲩ ⲉⲣⲟϥ ⲁϥϣⲛϩⲧⲏϥ ⲉϩⲣⲁⲉⲓ ⲉϫⲱϥ ⲁϥⲡⲱⲧ ⲁϥⲡⲁϩⲧϥ ⲉϫⲛ ⲡⲉϥⲙⲁⲕϩ ⲁϥϯⲡⲓ ⲉⲣⲱϥ
௨0எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தம்செய்தான்.
21 ⲕ̅ⲁ̅ ⲡⲉϫⲉⲡⲉϥϣⲏⲣⲉ ⲇⲉ ⲛⲁϥ ϫⲉ ⲡⲁⲓⲱⲧ ⲁⲓⲣⲛⲟⲃⲉ ⲉⲧⲡⲉ ⲁⲩⲱ ⲙⲡⲉⲕⲙⲧⲟ ⲉⲃⲟⲗ ⲛϯⲙⲡϣⲁ ⲁⲛ ϫⲓⲛ ⲧⲉⲛⲟⲩ ⲉⲙⲟⲩⲧⲉ ⲉⲣⲟⲓ ϫⲉ ⲡⲉⲕϣⲏⲣⲉ
௨௧குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே பரலோகத்திற்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவம் செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் தகுதியற்றவன் என்று சொன்னான்.
22 ⲕ̅ⲃ̅ ⲡⲉϫⲉⲡⲓⲱⲧ ⲇⲉ ⲛⲛⲉϥϩⲙϩⲁⲗ ϫⲉ ϭⲉⲡⲏ ⲁⲛⲓⲛⲉ ⲉⲃⲟⲗ ⲛⲧⲉⲥⲧⲟⲗⲏ ⲉⲧⲛⲁⲛⲟⲩⲥ ⲛⲧⲉⲧⲛⲧⲁⲁⲥ ϩⲓⲱⲱϥ ⲛⲧⲉⲧⲛϯ ⲛⲟⲩⲝⲟⲩⲣ ⲉⲧⲉϥϭⲓϫ ⲁⲩⲱ ⲟⲩⲧⲟⲟⲩⲉ ⲉⲛⲉϥⲟⲩⲉⲣⲏⲧⲉ
௨௨அப்பொழுது தகப்பன் தன் வேலைக்காரர்களை நோக்கி: நீங்கள் உயர்ந்த ஆடைகளை கொண்டுவந்து இவனுக்கு உடுத்தி இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள்.
23 ⲕ̅ⲅ̅ ⲛⲧⲉⲧⲛⲙⲡⲙⲁⲥⲉ ⲉⲧⲥⲁⲛⲁϣⲧ ⲛⲧⲉⲧⲛϣⲁⲁⲧϥ ⲛⲧⲉⲧⲛⲟⲩⲱⲙ ⲛⲧⲉⲧⲛⲉⲩⲫⲣⲁⲛⲉ
௨௩கொழுத்தக் கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் விருந்து கொண்டாடுவோம்.
24 ⲕ̅ⲇ̅ ϫⲉ ⲡⲁϣⲏⲣⲉ ⲡⲁⲓ ⲉⲛⲉϥⲙⲟⲟⲩⲧ ⲡⲉ ⲁϥⲱⲛϩ ⲛⲉϥⲥⲟⲣⲙ ⲡⲉ ⲁⲓϩⲉ ⲉⲣⲟϥ ⲁⲩⲁⲣⲭⲓ ⲇⲉ ⲛⲉⲩⲫⲣⲁⲛⲉ
௨௪என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் கொண்டாடத் தொடங்கினார்கள்.
25 ⲕ̅ⲉ̅ ⲛⲉⲣⲉⲡⲉϥⲛⲟϭ ⲇⲉ ⲛϣⲏⲣⲉ ⲡⲉ ϩⲛ ⲧⲥⲱϣⲉ ⲉϥⲛⲏⲟⲩ ⲇⲉ ⲉϩⲣⲁⲓ ⲁϥϩⲱⲛ ⲉϩⲟⲩⲛ ⲉⲡⲏⲓ ⲁϥⲥⲱⲧⲙ ⲉⲩⲥⲩⲙⲫⲱⲛⲓⲁ ⲛⲙⲟⲩⲭⲟⲣⲟⲥ
௨௫அவனுடைய மூத்தகுமாரன் வயலில் இருந்தான். அவன் திரும்பி வீட்டிற்கு அருகில் வருகிறபோது, கீதவாத்தியத்தையும் நடனக்களிப்பையும் கேட்டு;
26 ⲕ̅ⲋ̅ ⲁϥⲙⲟⲩⲧⲉ ⲉⲩⲁ ⲛⲛϩⲙϩⲁⲗ ⲁϥϫⲛⲟⲩϥ ϫⲉ ⲟⲩ ⲛⲉ ⲛⲁⲓ
௨௬வேலைக்காரர்களில் ஒருவனை அழைத்து: இதென்ன என்று விசாரித்தான்.
27 ⲕ̅ⲍ̅ ⲛⲧⲟϥ ⲇⲉ ⲡⲉϫⲁϥ ⲛⲁϥ ϫⲉ ⲡⲉⲕⲥⲟⲛ ⲡⲉⲛⲧⲁϥⲉⲓ ⲁⲡⲉⲕⲓⲱⲧ ϣⲱⲱⲧ ⲉⲣⲟϥ ⲙⲡⲙⲁⲥⲉ ⲉⲧⲥⲁⲛⲁϣⲧ ϫⲉ ⲁϥϩⲉ ⲉⲣⲟϥ ⲉϥⲟⲩⲟϫ
௨௭அதற்கு அவன்: உம்முடைய சகோதரன் வந்தார், அவர் மறுபடியும் சுகத்துடனே உம்முடைய தகப்பனிடத்தில் வந்து சேர்ந்தபடியினாலே அவருக்காகக் கொழுத்தக் கன்றை அடித்திருக்கிறார் என்றான்.
28 ⲕ̅ⲏ̅ ⲁϥⲛⲟⲩϭⲥ ⲇⲉ ⲙⲡϥⲟⲩⲱϣ ⲉⲃⲱⲕ ⲉϩⲟⲩⲛ ⲁⲡⲉϥⲓⲱⲧ ⲇⲉ ⲉⲓ ⲉⲃⲟⲗ ⲁϥⲥⲉⲡⲥⲱⲡϥ
௨௮அப்பொழுது அவன் கோபமடைந்து உள்ளே போக விருப்பமில்லாதிருந்தான். தகப்பனோ வெளியே வந்து அவனை வருந்தி அழைத்தான்.
29 ⲕ̅ⲑ̅ ⲛⲧⲟϥ ⲇⲉ ⲁϥⲟⲩⲱϣⲃ ⲡⲉϫⲁϥ ⲙⲡⲉϥⲓⲱⲧ ϫⲉ ⲓⲥⲟⲩⲙⲏⲏϣⲉ ⲣⲣⲟⲙⲡⲉ ϯⲟ ⲛⲁⲕ ⲛϩⲙϩⲁⲗ ⲙⲡⲓⲕⲱ ⲛⲥⲱⲓ ⲉⲛⲉϩ ⲟⲩⲉⲓ ⲛⲛⲉⲛⲧⲟⲗⲏ ⲛⲧⲟⲟⲧⲕ ⲁⲩⲱ ⲙⲡⲕϯ ⲛⲁⲓ ⲉⲛⲉϩ ⲛⲟⲩⲙⲁⲥ ⲃⲃⲁⲁⲙⲡⲉ ⲉⲧⲣⲁⲉⲩⲫⲣⲁⲛⲉ ⲛⲙⲛⲁϣⲃⲉⲉⲣ
௨௯அவன் தகப்பனுக்கு மறுமொழியாக: இதோ, இத்தனை வருடகாலமாக நான் உமக்கு வேலைச்செய்து, எப்பொழுதுமே எல்லாவற்றிலும் உம்முடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்திருந்தும், என் நண்பர்களோடு நான் மகிழ்ச்சியாக இருக்கும்படி நீர் ஒருபோதும் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்கவில்லை.
30 ⲗ̅ ⲛⲧⲉⲣⲉⲡⲉⲕϣⲏⲣⲉ ⲇⲉ ⲉⲓ ⲡⲁⲓ ⲉⲛⲧⲁϥⲟⲩⲱⲙ ⲛⲛⲉⲕⲛⲕⲁ ⲛⲙⲙⲡⲟⲣⲛⲟⲥ ⲁⲕϣⲱⲱⲧ ⲉⲣⲟϥ ⲙⲡⲙⲁⲥⲉ ⲉⲧⲥⲁⲛⲁϣⲧ
௩0வேசிகளிடத்தில் உம்முடைய சொத்துக்களை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே கொழுத்தக் கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே என்றான்.
31 ⲗ̅ⲁ̅ ⲛⲧⲟϥ ⲇⲉ ⲡⲉϫⲁϥ ⲛⲁϥ ϫⲉ ⲡⲁϣⲏⲣⲉ ⲛⲧⲟⲕ ⲕϣⲟⲟⲡ ⲛⲙⲙⲁⲓ ⲟⲩⲟⲓϣ ⲛⲓⲙ ⲁⲩⲱ ⲛⲟⲩⲓ ⲧⲏⲣⲟⲩ ⲛⲟⲩⲕ ⲛⲉ
௩௧அதற்குத் தகப்பன்: மகனே, நீ எப்போதும் என்னோடு இருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாக இருக்கிறது.
32 ⲗ̅ⲃ̅ ϣϣⲉ ⲇⲉ ⲉⲣⲟⲛ ⲉⲧⲣⲉⲛⲣⲁϣⲉ ⲛⲧⲛⲉⲩⲫⲣⲁⲛⲉ ϫⲉ ⲡⲉⲕⲥⲟⲛ ⲡⲁⲓ ⲉⲛⲉϥⲙⲟⲟⲩⲧ ⲡⲉ ⲁϥⲱⲛϩ ⲛⲉϥⲥⲟⲣⲙ ⲡⲉ ⲁⲓϩⲉ ⲉⲣⲟϥ
௩௨உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் கொண்டாடி மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமே என்று சொன்னான் என்றார்.

< ⲖⲞⲨⲔⲞⲚ 15 >