< ⳘⲀⲦⲐⲈⲞⲚ 21 >

1 ⲁ̅ ⲟⲩⲟϩ ϩⲟⲧⲉ ⳿ⲉⲧⲁⲩϧⲱⲛⲧ ⳿ⲉⲒⲗ̅ⲏ̅ⲙ̅ ⲁⲩ⳿ⲓ ⳿ⲉⲂⲏⲑⲫⲁⲅⲏ ϧⲁⲧⲉⲛ ⲡⲓⲧⲱⲟⲩ ⳿ⲛⲧⲉ ⲛⲓϫⲱⲓⲧ ⲧⲟⲧⲉ ⳿ⲁ Ⲓⲏ̅ⲥ̅ ⲟⲩⲱⲣⲡ ⳿ⲙⲙⲁⲑⲏⲧⲏⲥ ⲃ̅.
அவர்கள் எருசலேமுக்கு அருகாமையில் சேர்ந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகேயுக்கு வந்தபோது, இயேசுவானவர் சீடர்களில் இரண்டுபேரைப் பார்த்து:
2 ⲃ̅ ⲉϥϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ⲛⲱⲟⲩ ϫⲉ ⲙⲁϣⲉⲛⲱⲧⲉⲛ ⳿ⲉⲡⲁⲓϯⲙⲓ ⲉⲧⲭⲏ ⳿ⲙⲡⲉⲧⲉⲛ⳿ⲙⲑⲟ ⲟⲩⲟϩ ⳿ⲉⲣⲉⲧⲉⲛ⳿ⲉϫⲓⲙⲓ ⳿ⲛⲟⲩ⳿ⲉ⳿ⲱ ⲉⲥⲥⲟⲛϩ ⲛⲉⲙ ⲟⲩⲥⲏϫ ⲛⲉⲙⲁⲥ ⲃⲟⲗⲟⲩ ⳿ⲁⲛⲓⲧⲟⲩ ⲛⲏⲓ.
உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்திற்குப் போங்கள்; போனவுடனே, அங்கே ஒரு கழுதையையும் அதனோடு ஒரு குட்டியையும் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அவைகளை அவிழ்த்து என்னிடத்தில் கொண்டுவாருங்கள்.
3 ⲅ̅ ⳿ⲁⲣⲉϣⲁⲛ ⲟⲩⲁⲓ ⲇⲉ ⲥⲁϫⲓ ⲛⲉⲙⲱⲧⲉⲛ ⳿ⲁϫⲟⲥ ϫⲉ Ⲡ⳪ ⲡⲉⲧⲉⲣ⳿ⲭⲣⲓ⳿ⲁ ⳿ⲙⲙⲱⲟⲩ ⳿ϥⲛⲁⲟⲩⲟⲣⲡⲟⲩ ⲇⲉ ⲥⲁⲧⲟⲧϥ.
ஒருவன் உங்களுக்கு ஏதாவது சொன்னால்: இவைகள் ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள்; உடனே அவைகளை அனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார்.
4 ⲇ̅ ⲫⲁⲓ ⲇⲉ ϥϣⲱⲡⲓ ϩⲓⲛⲁ ⳿ⲛⲧⲉϥϫⲱⲕ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲛϫⲉ ⲫⲏ⳿ⲉⲧⲁϥϫⲟϥ ⳿ⲉⲃⲟⲗϩⲓⲧⲟⲧϥ ⳿ⲙⲡⲓ⳿ⲡⲣⲟⲫⲏⲧⲏⲥ ⲉϥϫⲱ ⳿ⲙⲙⲟⲥ.
இதோ, உன் ராஜா சாந்தகுணமுள்ளவராக, கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிக்கொண்டு, உன்னிடத்தில் வருகிறார் என்று சீயோன் குமாரத்திக்குச் சொல்லுங்கள்” என்று,
5 ⲉ̅ ϫⲉ ⳿ⲁϫⲟⲥ ⳿ⲛ⳿ⲧϣⲉⲣⲓ ⳿ⲛⲤⲓⲱⲛ ϫⲉ ϩⲏⲡⲡⲉ ⲓⲥ ⲡⲉⲟⲩⲣⲟ ⳿ϥⲛⲏⲟⲩ ⲛⲉ ⳿ⲉⲟⲩⲣⲉⲙⲣⲁⲩϣ ⲡⲉ ⲉϥⲧⲁⲗⲏⲟⲩⲧ ⳿ⲉⲟⲩ⳿ⲉ⳿ⲱ ⲛⲉⲙ ⲟⲩⲥⲏϫ ⳿ⲡϣⲏⲣⲓ ⳿ⲛⲟⲩ⳿ⲉ⳿ⲱ.
தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.
6 ⲋ̅ ⳿ⲉⲧⲁⲩϣⲉⲛⲱⲟⲩ ⲇⲉ ⳿ⲛϫⲉ ⲛⲉϥⲙⲁⲑⲏⲧⲏⲥ ⲟⲩⲟϩ ⳿ⲉⲧⲁⲩ⳿⳿ⲓⲣⲓ ⲕⲁⲧⲁ⳿ⲫⲣⲏϯ ⳿ⲉⲧⲁ Ⲓⲏ̅ⲥ̅ ⲟⲩⲁϩⲥⲁϩⲛⲓ ⲛⲱⲟⲩ.
சீடர்கள்போய், இயேசு தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்து,
7 ⲍ̅ ⲁⲩ⳿ⲓⲛⲓ ⳿ⲛϯ⳿ⲉ⳿ⲱ ⲛⲉⲙ ⲡⲓⲥⲏϫ ⲟⲩⲟϩ ⲁⲩⲧⲁⲗⲟ ⳿ⲛⲛⲟⲩ⳿ϩⲃⲱⲥ ⳿ⲉⲣⲱⲟⲩ ⲟⲩⲟϩ ⲁⲩ⳿ⲑⲣⲉϥϩⲉⲙⲥⲓ ⲥⲁ⳿ⲡϣⲱⲓ ⳿ⲙⲙⲱⲟⲩ.
கழுதையையும் குட்டியையும் கொண்டுவந்து, அவைகள்மேல் தங்களுடைய ஆடைகளைப் போட்டு, அவரை ஏற்றினார்கள்.
8 ⲏ̅ ⳿ⲡϩⲟⲩ⳿ⲟ ⲇⲉ ⳿ⲛⲛⲓⲙⲏϣ ⲁⲩⲫⲱⲣϣ ⳿ⲛⲛⲟⲩ⳿ϩⲃⲱⲥ ϩⲓ ⲡⲓⲙⲱⲓⲧ ϩⲁⲛⲕⲉⲭⲱⲟⲩⲛⲓ ⲇⲉ ⲁⲩⲕⲱⲣϫ ⳿ⲛϩⲁⲛϫⲁⲗ ⳿ⲉⲃⲟⲗ ϩⲓ ⲛⲓ⳿ϣϣⲏⲛ ⲁⲩⲫⲟⲣϣⲟⲩ ϩⲓ ⲡⲓⲙⲱⲓⲧ.
திரளான மக்கள் தங்களுடைய ஆடைகளை வழியிலே விரித்தார்கள்; வேறுசிலர் மரக்கிளைகளை வெட்டி வழியிலே பரப்பினார்கள்.
9 ⲑ̅ ⲛⲓⲙⲏϣ ⲇⲉ ⳿ⲉⲛⲁⲩⲙⲟϣⲓ ϧⲁϫⲱϥ ⲛⲉⲙ ⲛⲏ⳿ⲉⲛⲁⲩⲙⲟϣⲓ ⳿ⲛⲥⲱϥ ⲛⲁⲩⲱϣ ⳿ⲉⲃⲟⲗ ⲉⲩϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ ⳿ⲱⲥⲀⲛⲛⲁ ⳿ⲡϣⲏⲣⲓ ⳿ⲛⲆⲁⲩⲓⲇ ⳿ϥ⳿ⲥⲙⲁⲣⲱⲟⲩⲧ ⳿ⲛϫⲉ ⲡⲉⲑⲛⲏⲟⲩ ϧⲉⲛ ⳿ⲫⲣⲁⲛ ⳿ⲙⲠ⳪ ⳿ⲱⲥⲀⲛⲛⲁ ϧⲉⲛ ⲛⲏⲉⲧϭⲟⲥⲓ.
முன்னே நடப்பவர்களும் பின்னே நடப்பவர்களுமாகிய திரளான மக்கள்: தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் போற்றப்படத்தக்கவர், உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.
10 ⲓ̅ ⲟⲩⲟϩ ⳿ⲉⲧⲁϥ⳿ⲓ ⳿ⲉϧⲟⲩⲛ ⳿ⲉⲒⲗ̅ⲏ̅ⲙ̅ ⲥⲙⲟⲛⲙⲉⲛ ⳿ⲛϫⲉ ϯⲃⲁⲕⲓ ⲧⲏⲣⲥ ⲉⲩϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ ⲛⲓⲙ ⲡⲉ ⲫⲁⲓ.
௧0அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கும்போது, நகரத்தார் அனைவரும் ஆச்சரியப்பட்டு, இவர் யார்? என்று விசாரித்தார்கள்.
11 ⲓ̅ⲁ̅ ⲛⲓⲙⲏϣ ⲇⲉ ⲛⲁⲩϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ ⲫⲁⲓ ⲡⲉ ⲡⲓ⳿ⲡⲣⲟⲫⲏⲧⲏⲥ Ⲓⲏ̅ⲥ̅ ⲡⲓⲣⲉⲙⲚⲁⲍⲁⲣⲉⲑ ⳿ⲛⲧⲉ ϯⲄⲁⲗⲓⲗⲉ⳿ⲁ.
௧௧அதற்கு மக்கள்: இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள்.
12 ⲓ̅ⲃ̅ ⲟⲩⲟϩ ⲁϥϣⲉⲛⲁϥ ⳿ⲛϫⲉ Ⲓⲏ̅ⲥ̅ ⳿ⲉϧⲟⲩⲛ ⳿ⲉⲡⲓⲉⲣⲫⲉⲓ ⲟⲩⲟϩ ⲁϥϩⲓⲟⲩ⳿ⲓ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲛⲟⲩⲟⲛ ⲛⲓⲃⲉⲛ ⲉⲩϯ ⳿ⲉⲃⲟⲗϧⲉⲛ ⲡⲓⲉⲣⲫⲉⲓ ⲛⲉⲙ ⲛⲏⲉⲧϣⲱⲡ ⲟⲩⲟϩ ⲛⲓ⳿ⲧⲣⲁⲡⲉⲍⲁ ⳿ⲛⲧⲉ ⲛⲓⲣⲉϥⲉⲣⲕⲉⲣⲙⲁ ⲁϥⲫⲟⲛϫⲟⲩ ⲛⲉⲙ ⲛⲓⲕⲁⲑⲉⲇⲣⲁ ⳿ⲛⲧⲉ ⲛⲏⲉⲧϯ ϭⲣⲟⲙⲡⲓ ⳿ⲉⲃⲟⲗ.
௧௨இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து, ஆலயத்திலே விற்கிறவர்களும் வாங்குகிறவர்களுமாகிய அனைவரையும் வெளியே துரத்தி, காசுக்காரர்களுடைய பலகைகளையும் புறா விற்கிறவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்து:
13 ⲓ̅ⲅ̅ ⲟⲩⲟϩ ⲡⲉϫⲁϥ ⲛⲱⲟⲩ ⲉ ⳿ⲥ⳿ⲥϧⲏⲟⲩⲧ ϫⲉ ⲡⲁⲏⲓ ⲉⲩ⳿ⲉⲙⲟⲩϯ ⳿ⲉⲣⲟϥ ϫⲉ ⲟⲩⲏⲓ ⳿ⲙ⳿ⲡⲣⲟⲥⲉⲩⲭⲏ ⳿ⲛⲑⲱⲧⲉⲛ ⲇⲉ ⲧⲉⲧⲉⲛ⳿⳿ⲓⲣⲓ ⳿ⲙⲙⲟϥ ⳿ⲙⲙⲁ⳿ⲛⲭⲱⲡ ⳿ⲛⲥⲟⲛⲓ.
௧௩என்னுடைய வீடு ஜெபவீடு எனப்படும் என்று எழுதியிருக்கிறது; நீங்களோ அதைக் திருடர்களுடைய குகையாக்கினீர்கள் என்றார்.
14 ⲓ̅ⲇ̅ ⲟⲩⲟϩ ⳿ⲉⲧⲁⲩ⳿ⲓ ϩⲁⲣⲟϥ ⳿ⲛϫⲉ ϩⲁⲛⲃⲉⲗⲗⲉⲩ ⲛⲉⲙ ϩⲁⲛϭⲁⲗⲉⲩ ϧⲉⲛ ⲡⲓⲉⲣⲫⲉⲓ ⲟⲩⲟϩ ⲁϥⲉⲣⲫⲁϧⲣⲓ ⳿ⲉⲣⲱⲟⲩ.
௧௪அப்பொழுது, குருடர்களும் முடவர்களும் தேவாலயத்திலே அவரிடத்திற்கு வந்தார்கள், அவர்களை குணமாக்கினார்.
15 ⲓ̅ⲉ̅ ⳿ⲉⲧⲁⲩⲛⲁⲩ ⲇⲉ ⳿ⲛϫⲉ ⲛⲓⲁⲣⲭⲏ⳿ⲉⲣⲉⲩⲥ ⲛⲉⲙ ⲛⲓⲥⲁϧ ⳿ⲉⲛⲓ⳿ϣⲫⲏⲣⲓ ⳿ⲉⲧⲁϥⲁⲓⲧⲟⲩ ⲛⲉⲙ ⲛⲓ⳿ⲁⲗⲱⲟⲩ⳿ⲓ ⲉⲧⲱϣ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⲡⲓⲉⲣⲫⲉⲓ ⲉⲩϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ ⳿ⲱⲥⲀⲛⲛⲁ ⳿ⲡϣⲏⲣⲓ ⳿ⲛⲆⲁⲩⲓⲇ ⲁⲩ⳿ⲭⲣⲉⲙⲣⲉⲙ.
௧௫அவர் செய்த அதிசயங்களையும், தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! என்று தேவாலயத்திலே ஆர்ப்பரிக்கிற பிள்ளைகளையும், பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் பார்த்து, கோபமடைந்து,
16 ⲓ̅ⲋ̅ ⲟⲩⲟϩ ⲡⲉϫⲱⲟⲩ ⲛⲁϥ ϫⲉ ⳿ⲕⲥⲱⲧⲉⲙ ⲁⲛ ϫⲉ ⲟⲩ ⲡⲉⲧⲉ ⲛⲁⲓ ϫⲱ ⳿ⲙⲙⲟϥ Ⲓⲏ̅ⲥ̅ ⲇⲉ ⲡⲉϫⲁϥ ⲛⲱⲟⲩ ϫⲉ ⲥⲉ ⳿ⲙⲡⲉⲧⲉⲛⲱϣ ⳿⳿ⲉⲛⲉϩ ϧⲉⲛ ⲛⲓ⳿ⲅⲣⲁⲫⲏ ϫⲉ ⳿ⲉⲃⲟⲗϧⲉⲛ ⲣⲱⲟⲩ ⲛϩⲁⲛⲕⲟⲩϫⲓ ⳿ⲛ⳿ⲁⲗⲱⲟⲩ⳿ⲓ ⲛⲉⲙ ⲛⲏⲉⲑⲟⲩⲉⲙϭⲓ ⲁⲕⲥⲉⲃⲧⲉ ⲡⲓ⳿ⲥⲙⲟⲩ.
௧௬அவரைப் பார்த்து: இவர்கள் சொல்லுகிறதைக் கேட்கிறீரோ என்றார்கள். அதற்கு இயேசு: ஆம், கேட்கிறேன். குழந்தைகளுடைய வாயினாலும் சிறுவர்களுடைய வாயினாலும் துதி உண்டாகும்படிச் செய்தீர் என்பதை நீங்கள் ஒருபோதும் வாசிக்கவில்லையா என்றார்.
17 ⲓ̅ⲍ̅ ⲟⲩⲟϩ ⳿ⲉⲧⲁϥⲭⲁⲩ ⲁϥ⳿ⲓ ⲥⲁⲃⲟⲗ ⳿ⲛϯⲃⲁⲕⲓ ⳿ⲉⲂⲏⲑⲁⲛⲓ⳿ⲁ ⲟⲩⲟϩ ⲁϥⲉⲛⲕⲟⲧ ⳿ⲙⲙⲁⲩ.
௧௭அவர்களைவிட்டு நகரத்திலிருந்து புறப்பட்டு, பெத்தானியாவிற்குப்போய், அங்கே இரவில் தங்கினார்.
18 ⲓ̅ⲏ̅ ⳿ⲉⲧⲁ ⲧⲟⲟⲩ⳿ⲓ ⲇⲉ ϣⲱⲡⲓ ⲉϥⲛⲁⲧⲁⲥⲑⲟ ⳿ⲉ⳿ϩⲣⲏⲓ ⳿ⲉϯⲃⲁⲕⲓ ⲁϥ⳿ϩⲕⲟ.
௧௮காலையிலே அவர் நகரத்திற்குத் திரும்பிவரும்போது, அவருக்குப் பசியுண்டானது.
19 ⲓ̅ⲑ̅ ⲟⲩⲟϩ ⳿ⲉⲧⲁϥⲛⲁⲩ ⳿ⲉⲟⲩⲃⲱ ⳿ⲛⲕⲉⲛⲧⲉ ϩⲓ ⲡⲓⲙⲱⲓⲧ ⲟⲩⲟϩ ⳿ⲉⲧⲁϥ⳿ⲓ ϩⲁⲣⲟⲥ ⳿ⲙⲡⲉϥϫⲉⲙ ⳿ϩⲗⲓ ϩⲓⲱⲧⲥ ⳿ⲉⲃⲏⲗ ⳿ⲉϩⲁⲛϫⲱⲃⲓ ⳿ⲙⲙⲁⲩⲁⲧⲟⲩ ⲟⲩⲟϩ ⲡⲉϫⲁϥ ⲛⲁⲥ ϫⲉ ⳿ⲛⲛⲉ ⲟⲩⲧⲁϩ ⳿ⲓ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲛϧⲏϯ ϣⲁ ⳿⳿ⲉⲛⲉϩ ⲟⲩⲟϩ ⲁⲥϣⲱⲟⲩ⳿ⲓ ⳿ⲛϫⲉ ϯⲃⲱ ⳿ⲛⲕⲉⲛⲧⲉ ⲓⲥϫⲉⲛ ϯⲟⲩⲛⲟⲩ ⳿ⲉⲧⲉ⳿ⲙⲙⲁⲩ. (aiōn g165)
௧௯அப்பொழுது வழியருகே ஒரு அத்திமரத்தைப் பார்த்து, அதினிடத்திற்குப்போய், அதிலே இலைகளையன்றி வேறொன்றையும் காணாமல்: இனி ஒருபோதும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்றார்; உடனே அத்திமரம் பட்டுப்போனது. (aiōn g165)
20 ⲕ̅ ⲟⲩⲟϩ ⳿ⲉⲧⲁⲩⲛⲁⲩ ⳿ⲛϫⲉ ⲛⲓⲙⲁⲑⲏⲧⲏⲥ ⲛⲁⲩⲉⲣ⳿ϣⲫⲏⲣⲓ ⲉⲩϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ ⲡⲱⲥ ⳿ⲁ ⲧⲁⲓⲃⲱ ⳿ⲛⲕⲉⲛⲧⲉ ϣⲱⲟⲩ⳿ⲓ ⳿ⲛⲧⲁⲓⲟⲩⲛⲟⲩ.
௨0சீடர்கள் அதைப் பார்த்து: இந்த அத்திமரம் எத்தனை சீக்கிரமாகப் பட்டுப்போனது! என்று சொல்லி ஆச்சரியப்பட்டார்கள்.
21 ⲕ̅ⲁ̅ ⲁϥ⳿ⲉⲣⲟⲩ⳿ⲱ ⲇⲉ ⳿ⲛϫⲉ Ⲓⲏ̅ⲥ̅ ⲡⲉϫⲁϥ ⲛⲱⲟⲩ ϫⲉ ⳿ⲁⲙⲏⲛ ϯϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ⲛⲱⲧⲉⲛ ϫⲉ ⳿ⲉϣⲱⲡ ⳿ⲉⲟⲩⲟⲛⲧⲉⲧⲉⲛ ⲛⲁϩϯ ⳿ⲙⲙⲁⲩ ⲟⲩⲟϩ ⳿ⲛⲧⲉⲧⲉⲛ⳿ϣⲧⲉⲙⲉⲣϩⲏⲧ ⲃ̅ ⳿ⲙⲫⲁ ⲧⲁⲓⲃⲱ ⳿ⲛⲕⲉⲛⲧⲉ ⳿ⲙⲙⲁⲩⲁⲧϥ ⲁⲛ ⲡⲉ ⳿ⲉⲧⲉⲧⲉⲛⲛⲁⲁⲓϥ ⲁⲗⲗⲁ ⳿ⲁⲣⲉⲧⲉⲛϣⲁⲛϫⲟⲥ ⳿ⲙⲡⲁⲓⲧⲱⲟⲩ ϫⲉ ϥⲓⲧⲕ ⲟⲩⲟϩ ⲙⲁϣⲉⲛⲁⲕ ⳿ⲉ⳿ⲫⲓⲟⲙ ⲉⲥ⳿ⲉϣⲱⲡⲓ.
௨௧இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசமுள்ளவர்களாக இருந்தால், இந்த அத்திமரத்திற்குச் செய்ததை நீங்கள் செய்வதுமல்லாமல், இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து கடலிலே தள்ளுண்டுபோ என்று சொன்னாலும் அப்படியாகும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
22 ⲕ̅ⲃ̅ ⲟⲩⲟϩ ϩⲱⲃ ⲛⲓⲃⲉⲛ ⳿ⲉⲧⲉⲧⲉⲛⲛⲁⲉⲣ⳿ⲉⲧⲓⲛ ⳿ⲙⲙⲱⲟⲩ ϧⲉⲛ ⲟⲩ⳿ⲡⲣⲟⲥⲉⲩⲭⲏ ⳿ⲉⲣⲉⲧⲉⲛⲛⲁϩϯ ⳿ⲉⲣⲉⲧⲉⲛ⳿ⲉϭⲓⲧⲟⲩ.
௨௨மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாக ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார்.
23 ⲕ̅ⲅ̅ ⲟⲩⲟϩ ⳿ⲉⲧⲁϥ⳿ⲓ ⳿ⲉϧⲟⲩⲛ ⳿ⲉⲡⲓⲉⲣⲫⲉⲓ ⲁⲩ⳿ⲓ ϩⲁⲣⲟϥ ⲉϥϯ⳿ⲥⲃⲱ ⳿ⲛϫⲉ ⲛⲓⲁⲣⲭⲏ⳿ⲉⲣⲉⲩⲥ ⲛⲉⲙ ⲛⲓ⳿ⲡⲣⲉⲥⲃⲩⲧⲉⲣⲟⲥ ⳿ⲛⲧⲉ ⲡⲓⲗⲁⲟⲥ ⲉⲩϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ ⲁⲕ⳿⳿ⲓⲣⲓ ⳿ⲛⲛⲁⲓ ϧⲉⲛ ⲁϣ ⳿ⲛⲉⲣϣⲓϣⲓ ⲟⲩⲟϩ ⲛⲓⲙ ⲡⲉⲧⲁϥϯ ⳿ⲙⲡⲁⲓⲉⲣϣⲓϣⲓ ⲛⲁⲕ.
௨௩அவர் தேவாலயத்தில் வந்து, உபதேசம்பண்ணும்போது, பிரதான ஆசாரியர்களும் மக்களின் மூப்பர்களும் அவரிடத்தில் வந்து: நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? என்று கேட்டார்கள்.
24 ⲕ̅ⲇ̅ ⲁϥ⳿ⲉⲣⲟⲩ⳿ⲱ ⳿ⲛϫⲉ Ⲓⲏ̅ⲥ̅ ⲡⲉϫⲁϥ ⲛⲱⲟⲩ ϫⲉ ϯⲛⲁϣⲉⲛ ⲑⲏⲛⲟⲩ ϩⲱ ⳿ⲉⲟⲩⲥⲁϫⲓ ⳿ⲉϣⲱⲡ ⳿ⲁⲣⲉⲧⲉⲛϣⲁⲛⲧⲁⲙⲟⲓ ⳿ⲉⲣⲟϥ ⳿ⲁⲛⲟⲕ ϩⲱ ϯⲛⲁⲧⲁⲙⲱⲧⲉⲛ ϫⲉ ⲁⲓ⳿⳿ⲓⲣⲓ ⳿ⲛⲛⲁⲓ ϧⲉⲛ ⲁϣ ⳿ⲛⲉⲣϣⲓϣⲓ.
௨௪இயேசு மறுமொழியாக: நானும் உங்களிடம் ஒரு காரியத்தைக் கேட்கிறேன், அதை எனக்குச் சொல்லுவீர்களானால், நானும் எந்த அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லுவேன்.
25 ⲕ̅ⲉ̅ ⲡⲓⲱⲙⲥ ⳿ⲛⲧⲉ Ⲓⲱⲁⲛⲛⲏⲥ ⲛⲉ ⲟⲩ ⳿ⲉⲃⲟⲗ ⲑⲱⲛ ⲡⲉ ⲟⲩ ⳿ⲉⲃⲟⲗϧⲉⲛ ⳿ⲧⲫⲉ ⲡⲉ ϣⲁⲛ ⲟⲩ ⳿ⲉⲃⲟⲗϧⲉⲛ ⲛⲓⲣⲱⲙⲓ ⲡⲉ ⳿ⲛⲑⲱⲟⲩ ⲇⲉ ⲛⲁⲩⲙⲟⲕⲙⲉⲕ ⳿ⲛ⳿ϧⲣⲏⲓ ⳿ⲛϧⲏⲧⲟⲩ ⲉⲩϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ ⳿ⲉϣⲱⲡ ⲁⲛϣⲁⲛϫⲟⲥ ϫⲉ ⲟⲩ ⳿ⲉⲃⲟⲗϧⲉⲛ ⳿ⲧⲫⲉ ⲡⲉ ⳿ϥⲛⲁϫⲟⲥ ⲛⲁⲛ ϫⲉ ⲉⲑⲃⲉ ⲟⲩ ⳿ⲙⲡⲉⲧⲉⲛⲛⲁϩϯ ⳿ⲉⲣⲟϥ.
௨௫யோவான் கொடுத்த ஞானஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனிதர்களால் உண்டாயிற்றோ? யாரால் உண்டானது? என்று கேட்டார். அதற்கு அவர்கள்: தேவனால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், பின்னே ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று நம்மைக் கேட்பார்;
26 ⲕ̅ⲋ̅ ⳿ⲉϣⲱⲡ ⲇⲉ ⲁⲛϣⲁⲛϫⲟⲥ ϫⲉ ⲟⲩ ⳿ⲉⲃⲟⲗⲉⲛ ⲛⲓⲣⲱⲙⲓ ⲡⲉ ⲧ⳿ⲉⲛⲉⲣϩⲟϯ ϧⲁ⳿ⲧϩⲏ ⳿ⲙⲡⲓⲙⲏϣ Ⲓⲱⲁⲛⲛⲏⲥ ⲅⲁⲣ ⳿ⲛⲧⲟⲧⲟⲩ ϩⲱⲥ ⲟⲩ⳿ⲡⲣⲟⲫⲏⲧⲏⲥ.
௨௬மனிதர்களால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், மக்களுக்குப் பயப்படுகிறோம், எல்லோரும் யோவானைத் தீர்க்கதரிசியென்று எண்ணுகிறார்களே என்று, தங்களுக்குள்ளே ஆலோசனைசெய்து,
27 ⲕ̅ⲍ̅ ⲟⲩⲟϩ ⲁⲩ⳿ⲉⲣⲟⲩ⳿ⲱ ⲡⲉϫⲱⲟⲩ ⳿ⲛⲒⲏ̅ⲥ̅ ϫⲉ ⲧⲉⲛ⳿ⲉⲙⲓ ⲁⲛ ⲡⲉϫⲁϥ ⲇⲉ ⲛⲱⲟⲩ ϫⲉ ⲟⲩⲇⲉ ⳿ⲁⲛⲟⲕ ϩⲱ ⳿ⲛϯⲛⲁⲧⲁⲙⲱⲧⲉⲛ ⲁⲛ ϫⲉ ⲁⲓ⳿⳿ⲓⲣⲓ ⳿ⲛⲛⲁⲓ ϧⲉⲛ ⲁϣ ⳿ⲛⲉⲣϣⲓϣⲓ.
௨௭இயேசுவிற்கு மறுமொழியாக: எங்களுக்குத் தெரியாது என்றார்கள். அப்பொழுது, அவர்: நானும் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்வதில்லை என்றார்.
28 ⲕ̅ⲏ̅ ⲟⲩ ⲇⲉ ⲡⲉ ⲧⲉⲧⲉⲛⲙⲉⲩⲓ ⳿ⲉⲣⲟϥ ⲛⲉ ⲟⲩⲟⲛ ⲟⲩⲣⲱⲙⲓ ⳿ⲉⲟⲩⲟⲛⲧⲉϥ ϣⲏⲣⲓ ⲃ̅ ⳿ⲙⲙⲁⲩ ⲁϥ⳿ⲓ ϩⲁ ⲡⲓϩⲟⲩⲓⲧ ⲡⲉϫⲁϥ ⲛⲁϥ ϫⲉ ⲡⲁϣⲏⲣⲓ ⲙⲁϣⲉⲛⲁⲕ ⳿ⲙⲫⲟⲟⲩ ⳿ⲁⲣⲓϩⲱⲃ ϧⲉⲛ ⲡⲁⲓⲁϩ⳿ⲁⲗⲟⲗⲓ.
௨௮ஆனாலும், உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒரு மனிதனுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள்; மூத்தவனிடத்தில் அவன் வந்து: மகனே, நீ போய் இன்றைக்கு என் திராட்சைத்தோட்டத்தில் வேலைசெய் என்றான்.
29 ⲕ̅ⲑ̅ ⳿ⲛⲑⲟϥ ⲇⲉ ⲁϥ⳿ⲉⲣⲟⲩ⳿ⲱ ⲡⲉϫⲁϥ ϫⲉ ⳿ⲁⲛⲟⲕ ⲡⲁ⳪ ⲟⲩⲟϩ ⳿ⲙⲡⲉϥϣⲉⲛⲁϥ.
௨௯அதற்கு அவன்: மாட்டேன் என்றான்; ஆனாலும், பின்பு அவன் மனஸ்தாபப்பட்டுப்போனான்.
30 ⲗ̅ ⲁϥ⳿ⲓ ϩⲁ ⲡⲓⲙⲁϩⲃ̅ ⲁϥϫⲟⲥ ⲛⲁϥ ⲟⲛ ⳿ⲙⲡⲁⲓⲣⲏϯ ⳿ⲛⲑⲟϥ ⲇⲉ ⲁϥ⳿ⲉⲣⲟⲩ⳿ⲱ ⲡⲉϫⲁϥ ϫⲉ ⳿ⲛϯⲟⲩⲱϣ ⲁⲛ ⳿ⲉ⳿ⲡϧⲁ⳿ⲉ ⲇⲉ ⳿ⲉⲧⲁϥⲟⲩⲉⲙ⳿ϩⲑⲏϥ ⲁϥϣⲉⲛⲁϥ.
௩0இளையவனிடத்திலும் அவன் வந்து, அப்படியே சொன்னான்; அதற்கு அவன்: போகிறேன் ஐயா, என்று சொல்லியும், போகவில்லை.
31 ⲗ̅ⲁ̅ ⲛⲓⲙ ⳿ⲉⲃⲟⲗϧⲉⲛ ⲡⲓⲃ̅ ⲁϥⲉⲣ ⲡⲉⲧⲉϩⲛⲉ ⲡⲉϥⲓⲱⲧ ⲡⲉϫⲱⲟⲩ ϫⲉ ⲡⲓϧⲁ⳿ⲉ ⲡⲉ ⲡⲉϫⲉ Ⲓⲏ̅ⲥ̅ ⲛⲱⲟⲩ ϫⲉ ⳿ⲁⲙⲏⲛ ϯϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ⲛⲱⲧⲉⲛ ϫⲉ ⲡⲓⲧⲉⲗⲱⲛⲏⲥ ⲛⲉⲙ ⲛⲓⲡⲟⲣⲛⲟⲥ ⲥⲉⲛⲁⲉⲣϣⲟⲣⲡ ⳿ⲉⲣⲱⲧⲉⲛ ⳿ⲉϯⲙⲉⲧⲟⲩⲣⲟ ⳿ⲛⲧⲉ Ⲫϯ.
௩௧இவ்விருவரில் எவன் தகப்பனுடைய விருப்பத்தின்படி செய்தவன் என்று கேட்டார்; அதற்கு அவர்கள்: மூத்தவன்தான் என்றார்கள். அப்பொழுது, இயேசு அவர்களைப் பார்த்து: வரி வசூலிப்பவர்களும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
32 ⲗ̅ⲃ̅ ⲁϥ⳿ⲓ ⲅⲁⲣ ϩⲁⲣⲱⲧⲉⲛ ⳿ⲛϫⲉ Ⲓⲱⲁⲛⲛⲏⲥ ϧⲉⲛ ⳿ⲫⲓⲙⲱⲓⲧ ⳿ⲛⲧⲉ ϯⲙⲉⲑⲙⲏⲓ ⲟⲩⲟϩ ⳿ⲙⲡⲉⲧⲉⲛⲛⲁϩϯ ⳿ⲉⲣⲟϥ ⲛⲓⲧⲉⲗⲱⲛⲏⲥ ⲇⲉ ⲛⲉⲙ ⲛⲓⲡⲟⲣⲛⲟⲥ ⲁⲩⲛⲁϩϯ ⳿ⲉⲣⲟϥ ⳿ⲛⲑⲱⲧⲉⲛ ⲇⲉ ⳿ⲁⲣⲉⲧⲉⲛⲛⲁⲩ ⲟⲩⲇⲉ ⳿ⲙⲡⲉⲧⲉⲛⲟⲩⲉⲙ ⳿ϩⲑⲏⲧⲉⲛ ⳿ⲉ⳿ⲡϧⲁ⳿ⲉ ⳿ⲉ⳿ⲡϫⲓⲛⲛⲁϩϯ ⳿ⲉⲣⲟϥ.
௩௨ஏனென்றால், யோவான் நீதிமார்க்கமாக உங்களிடம் வந்திருந்தும், நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை; வரி வசூலிப்பவர்களும் வேசிகளுமோ அவனை விசுவாசித்தார்கள்; அதை நீங்கள் கண்டும், அவனை விசுவாசிக்கும்படியாகப் பின்பாவது மனஸ்தாபப்படவில்லை என்றார்.
33 ⲗ̅ⲅ̅ ⲥⲱⲧⲉⲙ ⳿ⲉⲕⲉ ⲡⲁⲣⲁⲃⲟⲗⲏ ⲛⲉ ⲟⲩⲟⲛ ⲟⲩⲣⲱⲙⲓ ⳿ⲛⲛⲉⲃⲓⲟϩⲓ ⳿ⲉⲁϥϭⲟ ⳿ⲛⲟⲩⲓⲁϩ⳿ⲁⲗⲟⲗⲓ ⲟⲩⲟϩ ⲁϥⲧⲁⲕⲧⲟ ⳿ⲛⲟⲩϫⲟⲓ ⳿ⲉⲣⲟϥ ⲟⲩⲟϩ ⲁϥϣⲱⲕ ⳿ⲛⲟⲩ⳿ϩⲣⲱⲧ ⳿ⲛϧⲏⲧϥ ⲟⲩⲟϩ ϥⲕⲱⲧ ⳿ⲛⲟⲩⲡⲩⲣⲅⲟⲥ ⳿ⲛϧⲏⲧϥ ⲟⲩⲟϩ ⲁϥⲧⲏⲓϥ ⳿ⲉⲧⲟⲧⲟⲩ ⳿ⲛϩⲁⲛⲟⲩⲓⲏ ⲟⲩⲟϩ ⲁϥϣⲉⲛⲁϥ ⳿ⲉ⳿ⲡϣⲉⲙⲙⲟ.
௩௩வேறொரு உவமையைக் கேளுங்கள்: வீட்டெஜமானாகிய ஒரு மனிதன் இருந்தான், அவன் ஒரு திராட்சைத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, அதில் ஒரு ஆலையை உருவாக்கி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரர்களுக்கு அதைக் குத்தகைக்கு விட்டு, வெளிதேசத்திற்குச் சென்றிருந்தான்.
34 ⲗ̅ⲇ̅ ϩⲟⲧⲉ ⲇⲉ ⳿ⲉⲧⲁϥϧⲱⲛⲧ ⳿ⲛϫⲉ ⳿ⲡⲥⲏⲟⲩ ⳿ⲛⲧⲉ ⲛⲓⲟⲩⲧⲁϩ ⲁϥⲟⲩⲱⲣⲡ ⳿ⲛⲛⲉϥ⳿ⲉⲃⲓⲁⲓⲕ ϩⲁ ⲛⲓⲟⲩⲓⲏ ⳿ⲉϭⲓ ⳿ⲛⲛⲉϥⲟⲩⲧⲁϩ.
௩௪அறுவடைக்காலம் நெருங்கியபோது, அதின் கனிகளை வாங்கிக்கொண்டுவரும்படி தன் வேலைக்காரர்களைத் தோட்டக்காரர்களிடத்தில் அனுப்பினான்.
35 ⲗ̅ⲉ̅ ⲟⲩⲟϩ ⳿ⲁ ⲛⲓⲟⲩⲓⲏ ϭⲓ ⳿ⲛⲛⲉϥ⳿ⲉⲃⲓⲁⲓⲕ ⲟⲩⲁⲓ ⲙⲉⲛ ⲁⲩϩⲓⲟⲩ⳿ⲓ ⳿ⲉⲣⲟϥ ⲕⲉ ⲟⲩⲁⲓ ⲇⲉ ⲁⲩϧⲟⲑⲃⲉϥ ⲕⲉ ⲟⲩⲁⲓ ⲇⲉ ⲁⲩϩⲓ⳿ⲱⲛⲓ ⳿ⲉⲣⲟϥ.
௩௫தோட்டக்காரர்கள் அந்த வேலைக்காரர்களைப்பிடித்து, ஒருவனை அடித்து, ஒருவனைக் கொலைசெய்து, ஒருவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்.
36 ⲗ̅ⲋ̅ ⲡⲁⲗⲓⲛ ⲟⲛ ⲁϥⲧⲁⲟⲩ⳿ⲟ ⳿ⲛϩⲁⲛⲕⲉ⳿ⲉⲃⲓⲁⲓⲕ ⲉⲩⲟϣ ⳿ⲉⲛⲓϩⲟⲩ⳿ⲁϯ ⲟⲩⲟϩ ⲁⲩ⳿⳿ⲓⲣⲓ ⲛⲱⲟⲩ ⲟⲛ ⳿ⲙⲡⲁⲓⲣⲏϯ.
௩௬பின்னும் அவன் முந்தினவர்களிலும் அதிகமான வேறு வேலைக்காரர்களை அனுப்பினான்; அவர்களையும் அப்படியே செய்தார்கள்.
37 ⲗ̅ⲍ̅ ⳿ⲉ⳿ⲡϧⲁ⳿ⲉ ⲇⲉ ⲁϥⲟⲩⲱⲣⲡ ⳿ⲙⲡⲉϥϣⲏⲣⲓ ϩⲁⲣⲱⲟⲩ ⲉϥϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ ⲥⲉⲛⲁ⳿ϣⲫⲓⲧ ϧⲁ⳿ⲧϩⲏ ⳿ⲙⲡⲁϣⲏⲣⲓ.
௩௭அவன்: என் குமாரனுக்கு பயப்படுவார்கள் என்று சொல்லி, தன் குமாரனை அவர்களிடத்தில் அனுப்பினான்.
38 ⲗ̅ⲏ̅ ⲛⲓⲟⲩⲓⲏ ⲇⲉ ⳿ⲉⲧⲁⲩⲛⲁⲩ ⳿ⲉⲡⲓϣⲏⲣⲓ ⲡⲉϫⲱⲟⲩ ⳿ⲛ⳿ϧⲣⲏⲓ ⳿ⲛϧⲏⲧⲟⲩ ϫⲉ ⲫⲁⲓ ⲡⲉ ⲡⲓ⳿ⲕⲗⲏⲣⲟⲛⲟⲙⲟⲥ ⳿ⲁⲙⲱⲓⲛⲓ ⳿ⲛⲧⲉⲛϧⲟⲑⲃⲉϥ ⲟⲩⲟϩ ⳿ⲛⲧⲉⲛϭⲓ ⳿ⲛⲧⲉϥ⳿ⲕⲗⲏⲣⲟⲛⲟⲙⲓ⳿ⲁ.
௩௮தோட்டக்காரர்கள் குமாரனைக் கண்டபோது: இவனே வாரிசு; இவனைக் கொன்று, இவனுடைய சொத்தை எடுத்துக்கொள்ளுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு;
39 ⲗ̅ⲑ̅ ⲟⲩⲟϩ ⲁⲩϭⲓⲧϥ ⲁⲩϩⲓⲧϥ ⲥⲁⲃⲟⲗ ⳿ⲙⲡⲓⲓⲁϩ⳿ⲁⲗⲟⲗⲓ ⲟⲩⲟϩ ⲁⲩϧⲟⲑⲃⲉϥ.
௩௯அவனைப் பிடித்துத் திராட்சைத்தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொலைசெய்தார்கள்.
40 ⲙ̅ ⳿ⲉϣⲱⲡ ⲁϥϣⲁⲛ⳿ⲓ ⳿ⲛϫⲉ ⳿ⲡ⳪ ⳿ⲙⲡⲓⲓⲁϩ⳿ⲁⲗⲟⲗⲓ ⲟⲩ ⲡⲉ ⳿ⲉⲧⲉϥⲛⲁⲁⲓϥ ⳿ⲛⲛⲓⲟⲩⲓⲏ ⳿ⲉⲧⲉ⳿ⲙⲙⲁⲩ.
௪0அப்படியிருக்க, திராட்சைத்தோட்டத்தின் எஜமான் வரும்போது, அந்தத் தோட்டக்காரர்களை என்ன செய்வான் என்று கேட்டார்.
41 ⲙ̅ⲁ̅ ⲡⲉϫⲱⲟⲩ ⲛⲁϥ ϫⲉ ⲛⲓⲕⲁⲕⲱⲥ ⲉϥ⳿ⲉⲧⲁⲕⲱⲟⲩ ⳿ⲛⲕⲁⲕⲱⲥ ⲟⲩⲟϩ ⲡⲓⲓⲁϩ⳿ⲁⲗⲟⲗⲓ ⲉϥ⳿ⲉⲧⲏⲓϥ ⳿ⲉⲧⲟⲧⲟⲩ ⳿ⲛϩⲁⲛⲕⲉⲟⲩⲓⲏ ⲛⲏⲉⲑⲛⲁϯ ⳿ⲛⲛⲉϥⲟⲩⲧⲁϩ ⲛⲁϥ ϧⲉⲛ ⲡⲟⲩⲥⲏⲟⲩ.
௪௧அதற்கு அவர்கள்: அந்தக் கொடியவர்களைக் கொடுமையாக அழித்து, ஏற்றக் காலங்களில் தனக்குக் கனிகளைக் கொடுக்கக்கூடிய வேறு தோட்டக்காரர்களிடத்தில் திராட்சைத்தோட்டத்தைக் குத்தகைக்குக் கொடுப்பான் என்றார்கள்.
42 ⲙ̅ⲃ̅ ⲟⲩⲟϩ ⲡⲉϫⲉ Ⲓⲏ̅ⲥ̅ ⲛⲱⲟⲩ ϫⲉ ⳿ⲙⲡⲉⲧⲉⲛⲱϣ ⳿⳿ⲉⲛⲉϩ ϧⲉⲛ ⲛⲓ⳿ⲅⲣⲁⲫⲏ ϫⲉ ⲡⲓ⳿ⲱⲛⲓ ⳿ⲉⲧⲁⲩϣⲟϣϥ ⳿ⲛϫⲉ ⲛⲓ⳿ⲉⲕⲟϯ ⲫⲁⲓ ⲁϥϣⲱⲡⲓ ⳿ⲛϫⲱϫ ⳿ⲛⲗⲁⲕϩ ⳿ⲉⲧⲁ ⲫⲁⲓ ϣⲱⲡⲓ ⳿ⲉⲃⲟⲗϩⲓⲧⲉⲛ Ⲡ⳪ ⲟⲩⲟϩ ⳿ϥⲟⲓ ⳿ⲛ⳿ϣⲫⲏⲣⲓ ϧⲉⲛ ⲛⲉⲛⲃⲁⲗ.
௪௨இயேசு அவர்களைப் பார்த்து: வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லானது, அது கர்த்தராலே ஆனது, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று நீங்கள் வேதத்தில் ஒருபோதும் வாசிக்கவில்லையா?
43 ⲙ̅ⲅ̅ ⲉⲑⲃⲉ ⲫⲁⲓ ϯϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ⲛⲱⲧⲉⲛ ϫⲉ ϯⲙⲉⲧⲟⲩⲣⲟ ⳿ⲛⲧⲉ Ⲫϯ ⲉⲩ⳿ⲉⲟⲗⲥ ⳿ⲛⲧⲉⲛⲑⲏⲛⲟⲩ ⲟⲩⲟϩ ⲉⲩ⳿ⲉⲧⲏⲓⲥ ⳿ⲛⲕⲉ ⲉⲑⲛⲟⲥ ⲫⲏⲉⲑⲛⲁ⳿⳿ⲓⲣⲓ ⳿ⲛⲛⲉⲥⲟⲩⲧⲁϩ.
௪௩ஆகவே, தேவனுடைய ராஜ்யம் உங்களிடமிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகின்ற மக்களுக்குக் கொடுக்கப்படும்.
44 ⲙ̅ⲇ̅ ⲟⲩⲟϩ ⲫⲏⲉⲑⲛⲁϩⲉⲓ ⳿ⲉϫⲉⲛ ⲡⲁⲓ⳿ⲱⲛⲓ ⲉϥ⳿ⲉⲗⲁⲥϥ ⲫⲏ ⲇⲉ ⳿ⲉⲧⲉϥⲛⲁϩⲉⲓ ⳿ⲉϫⲱϥ ⲉϥ⳿ⲉϣⲁϣϥ ⳿ⲉⲃⲟⲗ.
௪௪இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
45 ⲙ̅ⲉ̅ ⳿ⲉⲧⲁⲩⲥⲱⲧⲉⲙ ⲇⲉ ⳿ⲛϫⲉ ⲛⲓⲁⲣⲭⲏ⳿ⲉⲣⲉⲩⲥ ⲛⲉⲙ ⲛⲓⲪⲁⲣⲓⲥⲉⲟⲥ ⳿⳿ⲉⲛⲉϥⲡⲁⲣⲁⲃⲟⲗⲏ ⲁⲩ⳿ⲉⲙⲓ ϫⲉ ⲁϥϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ⲉⲑⲃⲏⲧⲟⲩ.
௪௫பிரதான ஆசாரியர்களும் பரிசேயர்களும் அவருடைய உவமைகளைக் கேட்டு, தங்களைக்குறித்துச் சொல்லுகிறார் என்று அறிந்து,
46 ⲙ̅ⲋ̅ ⲟⲩⲟϩ ⲛⲁⲩⲕⲱϯ ⳿ⲉ⳿ⲁⲙⲟⲛⲓ ⳿ⲙⲙⲟϥ ⲡⲉ ⲁⲩⲉⲣϩⲟϯ ϧⲁ⳿ⲧϩⲏ ⳿ⲙⲡⲓⲙⲏϣ ϫⲉ ⲛⲁϥⲭⲏ ⳿ⲛⲧⲟⲧⲟⲩ ⲡⲉ ϩⲱⲥ ⲟⲩ⳿ⲡⲣⲟⲫⲏⲧⲏⲥ
௪௬அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆனாலும் மக்கள் அவரைத் தீர்க்கதரிசியென்று நினைத்தபடியினால் அவர்களுக்குப் பயந்திருந்தார்கள்.

< ⳘⲀⲦⲐⲈⲞⲚ 21 >