< ⲖⲞⲨⲔⲞⲚ 1 >

1 ⲁ̅ ⲈⲠⲒⲆⲎ ⲞⲨⲘⲎϢ ⲀⲨϨⲒⲦⲞⲦⲞⲨ ⲈⲤϦⲈ ϨⲀⲚⲤⲀϪⲒ ⲈⲐⲂⲈ ⲚⲒϨⲂⲎⲞⲨⲒ ⲈⲦⲀⲨϪⲰⲔ ⲈⲂⲞⲖ ⲚϦⲢⲎⲒ ⲚϦⲎⲦⲈⲚ
மகா கனம்பொருந்திய தேயோப்பிலுவே, நாங்கள் முழுநிச்சயமாக நம்புகிற காரியங்களை,
2 ⲃ̅ ⲔⲀⲦⲀ ⲪⲢⲎϮ ⲈⲦⲀⲨϮ ⲈⲦⲞⲦⲈⲚ ⲘⲘⲞϤ ⲚϪⲈⲚⲒϢⲞⲢⲠ ⲈⲦⲀⲨⲚⲀⲨ ⲞⲨⲞϨ ⲀⲨϢⲰⲠⲒ ⲈⲨⲞⲒ ⲚⲢⲈϤϢⲈⲘϢⲒ ⲘⲠⲒⲤⲀϪⲒ
ஆரம்பமுதல் கண்கூடாகப் பார்த்து வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக்குறித்து சரித்திரம் எழுத அநேகம்பேர் முயற்சித்தனர்.
3 ⲅ̅ ⲀⲤⲢⲀⲚⲎⲒ ϨⲰ ⲈⲀⲒⲘⲞϢⲒ ⲚⲤⲀϨⲰⲂ ⲚⲒⲂⲈⲚ ϦⲈⲚⲞⲨⲦⲀϪⲢⲞ ⲈⲤϦⲀⲒ ⲚⲀⲔ ⲈⲪⲢⲎϮ ⲔⲢⲀⲦⲒⲤⲦⲈ ⲐⲈⲞⲪⲒⲖⲈ.
ஆகவே, ஆரம்பமுதல் எல்லாவற்றையும் திட்டமாக விசாரித்து அறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட காரியங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்டும் என்று,
4 ⲇ̅ ϨⲒⲚⲀ ⲚⲦⲈⲔⲤⲞⲨⲈⲚ ⲠⲒⲦⲀϪⲢⲞ ⲚⲦⲈⲚⲒⲤⲀϪⲒ ⲚⲎ ⲈⲦⲀⲨⲈⲢⲔⲀⲐⲎⲬⲒⲚ ⲘⲘⲞⲔ ⲚϦⲢⲎⲒ ⲚϦⲎⲦⲞⲨ.
அவைகளை சரியாக ஒழுங்குப்படுத்தி உமக்கு எழுதுவது எனக்கு நல்லதாகத் தோன்றியது.
5 ⲉ̅ ⲀⲤϢⲰⲠⲒ ϦⲈⲚⲚⲒⲈϨⲞⲞⲨ ⲚⲦⲈⲎⲢⲰⲆⲎⲤ ⲠⲞⲨⲢⲞ ⲚⲦⲈϮⲒⲞⲨⲆⲈⲀ ⲚⲈⲞⲨⲞⲚ ⲞⲨⲞⲨⲎⲂ ⲈⲠⲈϤⲢⲀⲚ ⲠⲈ ⲌⲀⲬⲀⲢⲒⲀⲤ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲚⲒⲈϨⲞⲞⲨ ⲚϢⲈⲘϢⲒ ⲚⲦⲈⲀⲂⲒⲀ ⲞⲨⲞϨ ⲦⲈϤⲤϨⲒⲘⲒ ⲚⲈⲞⲨⲈⲂⲞⲖ ⲦⲈ ϦⲈⲚⲚⲒϢⲈⲢⲒ ⲚⲦⲈⲀⲀⲢⲰⲚ ⲞⲨⲞϨ ⲠⲈⲤⲢⲀⲚ ⲠⲈ ⲈⲖⲒⲤⲀⲂⲈⲦ
யூதேயாதேசத்தின் ராஜாவாகிய ஏரோதின் நாட்களில், அபியா என்னும் ஆசாரிய வம்சத்தைச் சேர்ந்த சகரியா என்னும் பெயர்கொண்ட ஆசாரியன் ஒருவன் இருந்தான். அவனுடைய மனைவி ஆரோனுடைய சந்ததியில் ஒருத்தி, அவளுடைய பெயர் எலிசபெத்து.
6 ⲋ̅ ⲚⲈ ϨⲀⲚⲐⲘⲎⲒ ⲆⲈ ⲘⲠⲂ ⲚⲈⲘⲠⲈⲘⲐⲞ ⲘⲪⲚⲞⲨϮ ⲈⲨⲘⲞϢⲒ ϦⲈⲚⲚⲒⲈⲚⲦⲞⲖⲎ ⲦⲎⲢⲞⲨ ⲚⲈⲘ ⲚⲒⲘⲈⲐⲘⲎⲒ ⲚⲦⲈⲠϬⲞⲒⲤ ⲈⲨⲞⲒ ⲚⲀⲦⲀⲢⲒⲔⲒ.
அவர்கள் இருவரும் கர்த்தர் கொடுத்த எல்லாக் கட்டளைகளின்படியும் நியமங்களின்படியும் குற்றமற்றவர்களாக நடந்து, தேவனுக்குமுன்பாக நீதியுள்ளவர்களாக இருந்தார்கள்.
7 ⲍ̅ ⲞⲨⲞϨ ⲚⲈⲘⲘⲞⲚⲦⲞⲨ ϢⲎⲢⲒ ⲘⲘⲀⲨ ⲠⲈ ϪⲈ ⲞⲨⲎⲒ ⲚⲈⲞⲨⲀⲦϬⲢⲎⲚ ⲦⲈ ⲈⲖⲒⲤⲀⲂⲈⲦ ⲞⲨⲞϨ ⲚⲈⲀⲨⲀⲒⲀⲒ ⲘⲠⲂ ⲠⲈ ϦⲈⲚⲚⲞⲨⲈϨⲞⲞⲨ.
எலிசபெத்து மலடியாக இருந்தபடியால், அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது; இருவரும் முதிர்வயதானவர்களாகவும் இருந்தார்கள்.
8 ⲏ̅ ⲀⲤϢⲰⲠⲒ ⲆⲈ ⲈϤⲒⲢⲒ ⲚⲦⲈϤⲘⲈⲦⲞⲨⲎⲂ ϦⲈⲚϮⲦⲀⲜⲒⲤ ⲚⲦⲈⲚⲈϤⲈϨⲞⲞⲨ ⲚϢⲈⲘϢⲒ ⲘⲠⲈⲘⲐⲞ ⲘⲪϮ
அப்படியிருக்க, அவன் தன் ஆசாரிய முறைமைகளின்படி தேவசந்நிதியிலே ஆசாரிய ஊழியம் செய்துவருகிற காலத்தில்,
9 ⲑ̅ ⲔⲀⲦⲀ ϮⲔⲀϨⲤ ⲚⲦⲈϮⲘⲈⲦⲞⲨⲎⲂ ⲀⲠⲒⲰⲠ ⲒⲈⲢⲞϤ ⲈⲈⲚ ⲤⲐⲞⲒⲚⲞⲨϤⲒ ⲈϨⲢⲎⲒ ⲞⲨⲞϨ ⲀϤϢⲈ ⲚⲀϤ ⲈϦⲞⲨⲚ ⲈⲠⲒⲈⲢⲪⲈⲒ ⲚⲦⲈⲠϬⲞⲒⲤ.
ஆசாரிய ஊழிய முறைகளின்படி அவன் தேவாலயத்திற்குச் சென்று தூபம் காட்டுகிறதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டான்.
10 ⲓ̅ ⲞⲨⲞϨ ⲚⲀⲢⲈ ⲠⲒⲘⲎϢ ⲦⲎⲢϤ ⲚⲦⲈⲠⲒⲖⲀⲞⲤ ⲚⲀⲨⲦⲰⲂϨ ⲤⲀⲂⲞⲖ ⲘⲪⲚⲀⲨ ⲘⲠⲒⲤⲐⲞⲒⲚⲞⲨϤⲒ.
௧0தூபம் காட்டுகிற நேரத்திலே மக்களெல்லோரும் கூட்டமாக வெளியே ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள்.
11 ⲓ̅ⲁ̅ ⲀϤⲞⲨⲰⲚϨ ⲆⲈ ⲈⲢⲞϤ ⲚϪⲈⲞⲨⲀⲄⲄⲈⲖⲞⲤ ⲚⲦⲈⲠϬⲞⲒⲤ ⲈϤⲞϨⲒ ⲈⲢⲀⲦϤ ⲤⲀⲞⲨⲒⲚⲀⲘ ⲘⲠⲒⲘⲀⲚⲈⲢϢⲰⲞⲨϢⲒ ⲚⲦⲈⲠⲒⲤⲐⲞⲒⲚⲞⲨϤⲒ.
௧௧அப்பொழுது கர்த்தருடைய தூதன் ஒருவன் தூப பீடத்தின் வலதுபக்கத்திலே நின்று அவனுக்குத் தரிசனமானான்.
12 ⲓ̅ⲃ̅ ⲞⲨⲞϨ ⲈⲦⲀϤⲚⲀⲨ ⲚϪⲈⲌⲀⲬⲀⲢⲒⲀⲤ ⲀϤϢⲐⲞⲢⲦⲈⲢ ⲞⲨⲞϨ ⲞⲨϨⲞϮ ⲀⲤⲒ ⲈϨⲢⲎⲒ ⲈϪⲰϤ.
௧௨சகரியா அவனைப் பார்த்து கலங்கி, பயமடைந்தான்.
13 ⲓ̅ⲅ̅ ⲠⲈϪⲀϤ ⲆⲈ ⲚⲀϤ ⲚϪⲈⲠⲒⲀⲄⲄⲈⲖⲞⲤ ϪⲈ ⲘⲠⲈⲢⲈⲢϨⲞϮ ⲌⲀⲬⲀⲢⲒⲀⲤ ϪⲈ ⲞⲨⲎⲒ ⲀⲨⲤⲰⲦⲈⲘ ⲈⲠⲈⲔⲦⲰⲂϨ ⲞⲨⲞϨ ⲦⲈⲔⲤϨⲒⲘⲒ ⲈⲖⲒⲤⲀⲂⲈⲦ ⲈⲤⲈⲘⲒⲤⲒ ⲚⲀⲔ ⲚⲞⲨϢⲎⲢⲒ ⲞⲨⲞϨ ⲈⲔⲈⲘⲞⲨϮ ⲈⲠⲈϤⲢⲀⲚ ϪⲈ ⲒⲰⲀⲚⲚⲎⲤ.
௧௩கர்த்தருடைய தூதன் அவனைப் பார்த்து: சகரியாவே, பயப்படாதே, உன் விண்ணப்பம் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெற்றெடுப்பாள், அவனுக்கு யோவான் என்று பெயர் இடுவாயாக.
14 ⲓ̅ⲇ̅ ⲞⲨⲞϨ ⲈⲢⲈ ⲞⲨⲢⲀϢⲒ ϢⲰⲠⲒ ⲚⲀⲔ ⲚⲈⲘ ⲞⲨⲐⲈⲖⲎⲖ ⲞⲨⲞϨ ⲈⲢⲈ ⲞⲨⲘⲎϢ ⲢⲀϢⲒ ⲈϪⲈⲚ ⲠⲈϤϪⲒⲚⲘⲒⲤⲒ
௧௪உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பதினாலே அநேகர் சந்தோஷப்படுவார்கள்.
15 ⲓ̅ⲉ̅ ϤⲚⲀϢⲰⲠⲒ ⲄⲀⲢ ⲈϤⲞⲒ ⲚⲚⲒϢϮ ⲘⲠⲈⲘⲐⲞ ⲘⲠϬⲞⲒⲤ ⲞⲨⲞϨ ⲞⲨⲎⲢⲠ ⲚⲈⲘ ⲞⲨⲤⲒⲔⲈⲢⲀ ⲚⲚⲈϤⲤⲰⲞⲨ ⲞⲨⲞϨ ϤⲚⲀⲘⲞϨ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲞⲨⲠⲚⲈⲨⲘⲀⲈϤⲞⲨⲀⲂ ⲒⲤϪⲈⲚ ⲈϤϦⲈⲚ ⲐⲚⲈϪⲒ ⲚⲦⲈⲦⲈϤⲘⲀⲨ
௧௫அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாக இருப்பான், திராட்சைரசமும் மதுபானமும் குடிக்கமாட்டான், அவன் எலிசபெத்தின் கர்ப்பத்தில் இருக்கும்போதே பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டிருப்பான்.
16 ⲓ̅ⲋ̅ ⲞⲨⲞϨ ⲈϤⲈⲐⲢⲈ ⲞⲨⲘⲎϢ ⲚⲦⲈⲚⲈⲚϢⲎⲢⲒ ⲘⲠⲒⲤⲖ ⲔⲞⲦⲞⲨ ⲈⲠϬⲞⲒⲤ ⲠⲞⲨⲚⲞⲨϮ.
௧௬அவன் இஸ்ரவேல் வம்சத்தாரில் அநேகரைப் பாவங்களைவிட்டு, அவர்களுடைய தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான்.
17 ⲓ̅ⲍ̅ ⲞⲨⲞϨ ⲚⲐⲞϤ ϤⲚⲀⲈⲢϢⲞⲢⲠ ⲚⲒ ϦⲀϪⲰϤ ⲘⲠⲈϤⲘⲐⲞ ϦⲈⲚⲞⲨⲠⲚⲈⲨⲘⲀⲚⲈⲘ ⲞⲨϪⲞⲘ ⲚⲦⲈⲎⲖⲒⲀⲤ ⲈⲦⲀⲤⲐⲈ ⲠϨⲎⲦ ⲚϨⲀⲚⲒⲞϮ ⲈⲚⲞⲨϢⲎⲢⲒ ⲚⲈⲘ ⲚⲎ ⲈⲦⲞⲒ ⲚⲀⲦⲐⲰⲦ ⲚϨⲎⲦ ϦⲈⲚⲪⲘⲈⲨⲒ ⲚⲦⲈⲚⲒⲐⲘⲎⲒ ⲈⲤⲈⲂⲦⲈ ⲞⲨⲖⲀⲞⲤ ⲘⲠϬⲞⲒⲤ ⲈⲀⲨⲐⲘⲀⲒⲞϤ
௧௭பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான மக்களை கர்த்தருக்கு ஆயத்தப்படுத்த, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உள்ளவனாக கர்த்தருக்கு முன்னே நடப்பான் என்றான்.
18 ⲓ̅ⲏ̅ ⲞⲨⲞϨ ⲠⲈϪⲈ ⲌⲀⲬⲀⲢⲒⲀⲤ ⲘⲠⲒⲀⲄⲄⲈⲖⲞⲤ ϪⲈ ⲚϦⲢⲎⲒ ϦⲈⲚⲞⲨ ϮⲚⲀⲈⲘⲒ ⲈⲪⲀⲒ ⲀⲚⲞⲔ ⲄⲀⲢ ⲞⲨϦⲈⲖⲖⲞ ⲞⲨⲞϨ ⲦⲀⲤϨⲒⲘⲒ ⲀⲤⲀⲒⲀⲒ ϦⲈⲚⲚⲈⲤⲈϨⲞⲞⲨ.
௧௮அப்பொழுது சகரியா தேவதூதனை நோக்கி: இதை நான் எப்படி அறிவேன்; நான் முதிர்வயதானவனாக இருக்கிறேன், என் மனைவியும் வயதானவளாக இருக்கிறாளே என்றான்.
19 ⲓ̅ⲑ̅ ⲞⲨⲞϨ ⲀϤⲈⲢⲞⲨⲰ ⲚϪⲈⲠⲒⲀⲄⲄⲈⲖⲞⲤ ⲠⲈϪⲀϤ ⲚⲀϤ ϪⲈ ⲀⲚⲞⲔ ⲠⲈ ⲄⲀⲂⲢⲒⲎⲖ ⲪⲎ ⲈⲦⲞϨⲒ ⲈⲢⲀⲦϤ ⲘⲠⲈⲘⲐⲞ ⲘⲪⲚⲞⲨϮ ⲞⲨⲞϨ ⲀⲨⲦⲀⲞⲨⲞⲒ ⲈⲤⲀϪⲒ ⲚⲈⲘⲀⲔ ⲞⲨⲞϨ ⲈϨⲒϢⲈⲚⲚⲞⲨϤⲒ ⲚⲀⲔ ⲚⲚⲀⲒ
௧௯தேவதூதன் அவனுக்கு மறுமொழியாக: நான் தேவ சந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன்; உன்னுடனே பேசவும், உனக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கவும் அனுப்பப்பட்டு வந்தேன்;
20 ⲕ̅ ⲞⲨⲞϨ ϨⲎⲠⲠⲈ ⲈⲔⲈϢⲰⲠⲒ ⲈⲔⲬⲰ ⲚⲢⲰⲔ ⲞⲨⲞϨ ⲘⲘⲞⲚ ϢϪⲞⲘ ⲘⲘⲞⲔ ⲈⲤⲀϪⲒ ϢⲀ ⲠⲒⲈϨⲞⲞⲨ ⲈⲦⲈ ⲚⲀⲒ ⲚⲀϢⲰⲠⲒ ⲘⲘⲞϤ ⲘⲪⲘⲀ ϪⲈ ⲘⲠⲈⲔⲚⲀϨϮ ⲈⲚⲀⲤⲀϪⲒ ⲚⲀⲒ ⲈⲐⲚⲀϪⲰⲔ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲠⲞⲨⲤⲎⲞⲨ.
௨0இதோ, குறித்த காலத்திலே நிறைவேறப்போகிற என் வார்த்தைகளை நீ விசுவாசிக்காதபடியால் இவைகள் நிறைவேறும் நாள்வரை நீ பேசமுடியாமல் ஊமையாக இருப்பாய் என்றான்.
21 ⲕ̅ⲁ̅ ⲞⲨⲞϨ ⲚⲀⲢⲈ ⲠⲒⲖⲀⲞⲤ ⲦⲎⲢϤ ϪⲞⲨϢⲦ ⲈⲂⲞⲖ ϦⲀϪⲰϤ ⲚⲌⲀⲬⲀⲢⲒⲀⲤ ⲞⲨⲞϨ ⲚⲀⲨⲈⲢϢⲪⲎ ⲢⲒ ⲠⲈ ⲈⲐⲂⲈϪⲈ ⲀϤⲰⲤⲔ ⲚϦⲞⲨⲚ ϦⲈⲚⲠⲒⲈⲢⲪⲈⲒ.
௨௧மக்கள் சகரியாவுக்காக நீண்டநேரம் காத்திருந்து, அவன் தேவாலயத்தில் இருந்து வெளியே வர தாமதம் செய்ததினால் ஆச்சரியப்பட்டார்கள்.
22 ⲕ̅ⲃ̅ ⲈⲦⲀϤⲒ ⲆⲈ ⲈⲂⲞⲖ ⲚⲀϤϢϪⲈⲘϪⲞⲘ ⲚⲤⲀϪⲒ ⲚⲈⲘⲰⲞⲨ ⲀⲚ ⲠⲈ ⲞⲨⲞϨ ⲀⲨⲈⲘⲒ ϪⲈ ⲞⲨⲞⲨⲰⲚϨ ⲠⲈⲦⲀϤⲚⲀⲨ ⲈⲢⲞϤ ⲚϦⲞⲨⲚ ϦⲈⲚⲠⲒⲈⲢⲪⲈⲒ ⲞⲨⲞϨ ⲚⲐⲞϤ ⲚⲀϤϬⲰⲢⲈⲘ ⲈⲢⲰⲞⲨ ⲠⲈ ⲞⲨⲞϨ ⲀϤⲞϨⲒ ⲈϤⲞⲒ ⲚⲈⲂⲞ.
௨௨அவன் வெளியே வந்தபோது மக்களிடத்தில் பேச முடியாமலிருந்தான்; எனவே தேவாலயத்தில் அவன் ஒரு தரிசனத்தைப் பார்த்தான் என்று அறிந்துகொண்டார்கள். அவன் ஊமையாக இருந்தபடியால் அவர்களுக்கு சைகைகாட்டினான்.
23 ⲕ̅ⲅ̅ ⲞⲨⲞϨ ⲀⲤϢⲰⲠⲒ ⲈⲦⲀⲨⲘⲞϨ ⲈⲂⲞⲖ ⲚϪⲈⲚⲈϤⲈϨⲞⲞⲨ ⲚϢⲈⲘϢⲒ ⲀϤϢⲈ ⲚⲀϤ ⲈⲠⲈϤⲎⲒ.
௨௩அவனுடைய ஊழியத்தின் நாட்கள் நிறைவேறினவுடனே தன் வீட்டிற்குப்போனான்.
24 ⲕ̅ⲇ̅ ⲘⲈⲚⲈⲚⲤⲀ ⲚⲀⲒⲈϨⲞⲞⲨ ⲆⲈ ⲈⲦⲈⲘⲘⲀⲨ ⲀⲤⲈⲢⲂⲞⲔⲒ ⲚϪⲈⲈⲖⲒⲤⲀⲂⲈⲦ ⲦⲈϤⲤϨⲒⲘⲒ ⲞⲨⲞϨ ⲚⲀⲤϨⲰⲠ ⲘⲘⲞⲤ ⲠⲈ ⲚⲈⲚⲀⲂⲞⲦ ⲈⲤϪⲰ ⲘⲘⲞⲤ
௨௪அதற்குப்பின்பு, அவன் மனைவியாகிய எலிசபெத்து கர்ப்பந்தரித்து: மக்கள் மத்தியில் எனக்கு உண்டாயிருந்த அவமானத்தை நீக்கும்படியாகக் கர்த்தர் இந்த நாட்களில் என்மேல் இரக்கம் வைத்து,
25 ⲕ̅ⲉ̅ ϪⲈ ⲠⲀⲒⲢⲎϮ ⲠⲈⲦⲀ ⲠϬⲞⲒⲤ ⲀⲒϤ ⲚⲎⲒ ϦⲈⲚⲚⲒⲈϨⲞⲞⲨ ⲈⲦⲀϤϪⲞⲨϢⲦ ⲈⲢⲞⲒ ⲚϦⲎⲦⲞⲨ ⲈⲰⲖⲒ ⲘⲠⲀϢⲰϢ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲚⲒⲢⲰⲘⲒ.
௨௫எனக்கு இப்படிச் செய்தார் என்று சொல்லி, ஐந்து மாதங்கள் வீட்டைவிட்டு வெளியே போகாமல் இருந்தாள்.
26 ⲕ̅ⲋ̅ ϦⲈⲚ ⲠⲒⲀⲂⲞⲦ ⲆⲈ ⲘⲘⲀϨ ⲀⲨⲞⲨⲰⲢⲠ ⲚⲄⲀⲂⲢⲒⲎⲖ ⲠⲒⲀⲄⲄⲈⲖⲞⲤ ⲈⲂⲞⲖ ϨⲒⲦⲈⲚ ⲪⲚⲞⲨϮ ⲈⲞⲨⲂⲀⲔⲒ ⲚⲦⲈϮⲄⲀⲖⲒⲖⲈⲀ ⲈⲠⲈⲤⲢⲀⲚ ⲠⲈ ⲚⲀⲌⲀⲢⲈⲐ
௨௬எலிசபெத்தின் ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரில்,
27 ⲕ̅ⲍ̅ ϨⲀ ⲞⲨⲠⲀⲢⲐⲈⲚⲞⲤ ⲈⲀⲨⲰⲠ ⲚⲤⲰⲤ ⲚⲞⲨⲢⲰⲘⲒ ⲈⲠⲈϤⲢⲀⲚ ⲠⲈ ⲒⲰⲤⲎⲪ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲠⲎⲒ ⲚⲆⲀⲨⲒⲆ ⲞⲨⲞϨ ⲪⲢⲀⲚ ⲚϮⲠⲀⲢⲐⲈⲚⲞⲤ ⲠⲈ ⲘⲀⲢⲒⲀⲘ.
௨௭தாவீதின் வம்சத்தை சேர்ந்த யோசேப்பு என்கிற பெயருள்ள மனிதனுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிப் பெண்ணிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான்; அந்தக் கன்னிப் பெண்ணின் பெயர் மரியாள்.
28 ⲕ̅ⲏ̅ ⲞⲨⲞϨ ⲈⲦⲀϤϢⲈ ⲚⲀϤ ⲈϦⲞⲨⲚ ϢⲀⲢⲞⲤ ⲠⲈϪⲀϤ ⲚⲀⲤ ϪⲈ ⲬⲈⲢⲈ ⲐⲎ ⲈⲐⲘⲈϨ ⲚϨⲘⲞⲦ ⲠϬⲞⲒⲤ ⲚⲈⲘⲈ.
௨௮அவள் இருந்த வீட்டில் தேவதூதன் தோன்றி: கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், பெண்களுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான்.
29 ⲕ̅ⲑ̅ ⲚⲐⲞⲤ ⲆⲈ ⲀⲤϢⲐⲞⲢⲦⲈⲢ ⲈϪⲈⲚ ⲠⲀⲒⲤⲀϪⲒ ⲞⲨⲞϨ ⲚⲀⲤⲘⲞⲔⲘⲈⲔ ⲠⲈ ϪⲈ ⲞⲨ ⲀϢ ⲚⲢⲎϮ ⲠⲈ ⲠⲀⲒⲀⲤⲠⲀⲤⲘⲞⲤ.
௨௯அவளோ அவனைப் பார்த்து, அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துக்கள் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள்.
30 ⲗ̅ ⲞⲨⲞϨ ⲠⲈϪⲈ ⲠⲒⲀⲄⲄⲈⲖⲞⲤ ⲚⲀⲤ ϪⲈ ⲘⲠⲈⲢⲈⲢϨⲞϮ ⲘⲀⲢⲒⲀⲘ ⲀⲢⲈϪⲒⲘⲒ ⲄⲀⲢ ⲚⲞⲨϨⲘⲞⲦ ⲘⲠⲈⲘⲐⲞ ⲘⲪϮ
௩0தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடமிருந்து கிருபைபெற்றாய்.
31 ⲗ̅ⲁ̅ ⲞⲨⲞϨ ϨⲎⲠⲠⲈ ⲦⲈⲢⲀⲈⲢⲂⲞⲔⲒ ⲞⲨⲞϨ ⲚⲦⲈⲘⲒⲤⲒ ⲚⲞⲨϢⲎⲢⲒ ⲞⲨⲞϨ ⲈⲢⲈⲘⲞⲨϮ ⲈⲠⲈϤⲢⲀⲚ ϪⲈ ⲒⲎⲤⲞⲨⲤ.
௩௧இதோ, நீ கர்ப்பம் தரித்து ஒரு குமாரனைப் பெற்றெடுப்பாய், அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக.
32 ⲗ̅ⲃ̅ ⲪⲀⲒ ⲈϤⲈⲈⲢⲞⲨⲚⲒϢϮ ⲞⲨⲞϨ ⲈⲨⲈⲘⲞⲨϮ ⲈⲢⲞϤ ϪⲈ ⲠϢⲎⲢⲒ ⲘⲠⲈⲦϬⲞⲤⲒ ⲞⲨⲞϨ ⲈϤⲈϮ ⲚⲀϤ ⲚϪⲈⲠϬⲞⲒⲤ ⲪⲚⲞⲨϮ ⲘⲠⲐⲢⲞⲚⲞⲤ ⲚⲆⲀⲨⲒⲆ ⲠⲈϤⲒⲰⲦ
௩௨அவர் பெரியவராக இருப்பார், உன்னதமான தேவனுடைய குமாரன் எனப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.
33 ⲗ̅ⲅ̅ ⲞⲨⲞϨ ϤⲚⲀⲈⲢⲞⲨⲢⲞ ⲈϪⲈⲚ ⲠⲎⲒ ⲚⲒⲀⲔⲰⲂ ϢⲀ ⲈⲚⲈϨ ⲞⲨⲞϨ ⲚⲚⲈ ϦⲀⲈ ϢⲰⲠⲒ ⲚⲦⲈϤⲘⲈⲦⲞⲨⲢⲞ. (aiōn g165)
௩௩அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய இராஜ்யத்திற்கு முடிவு இல்லை என்றான். (aiōn g165)
34 ⲗ̅ⲇ̅ ⲠⲈϪⲈ ⲘⲀⲢⲒⲀⲘ ⲆⲈ ⲘⲠⲒⲀⲄⲄⲈⲖⲞⲤ ϪⲈ ⲠⲰⲤ ⲪⲀⲒ ⲚⲀϢⲰⲠⲒ ⲘⲘⲞⲒ ⲈⲠⲒⲆⲎ ϮⲤⲰⲞⲨⲚ ⲚϨⲀⲒ ⲀⲚ
௩௪அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: நான் கன்னிப்பெண்ணாய் இருக்கிறேனே, இது எப்படி நடக்கும்? என்றாள்.
35 ⲗ̅ⲉ̅ ⲞⲨⲞϨ ⲀϤⲈⲢⲞⲨⲰ ⲚϪⲈⲠⲒⲀⲄⲄⲈⲖⲞⲤ ⲠⲈϪⲀϤ ⲚⲀⲤ ϪⲈ ⲞⲨⲠⲚⲈⲨⲘⲀⲈϤⲞⲨⲀⲂ ϤⲚⲀⲒ ⲈϨⲢⲎⲒ ⲈϪⲰ ⲞⲨⲞϨ ⲞⲨϪⲞⲘ ⲚⲦⲈⲠⲈⲦϬⲞⲤⲒ ⲈⲐⲚⲀⲈⲢϦⲎ ⲒⲂⲒ ⲈⲢⲞ ⲈⲐⲂⲈⲪⲀⲒ ⲪⲎ ⲈⲦⲞⲨⲚⲀⲘⲀⲤϤ ϤⲞⲨⲀⲂ ⲈⲨⲈⲘⲞⲨϮ ⲈⲢⲞϤ ϪⲈ ⲠϢⲎⲢⲒ ⲘⲪⲚⲞⲨϮ.
௩௫தேவதூதன் அவளுக்கு மறுமொழியாக; பரிசுத்த ஆவியானவர் உன்மேல் வருவார்; உன்னதமான தேவனுடைய பலம் உன்னை மூடும்; எனவே உன் கர்ப்பத்தில் பிறக்கும் இந்தப் பரிசுத்தக் குழந்தை, தேவனுடைய குமாரன் என்று அழைக்கப்படும்.
36 ⲗ̅ⲋ̅ ⲞⲨⲞϨ ϨⲎⲠⲠⲈ ⲒⲤ ⲈⲖⲒⲤⲀⲂⲈⲦ ⲦⲈⲤⲤⲨⲄⲄⲈⲚⲎ ⲤⲀⲤⲈⲢⲂⲞⲔⲒ ϨⲰⲤ ⲚⲞⲨϢⲎⲢⲒ ϦⲈⲚⲦⲈⲤⲘⲈⲦϦⲈⲖⲖⲰ ⲞⲨⲞϨ ⲪⲀⲒ ⲠⲈⲤⲘⲀϨ ⲚⲀⲂⲞⲦ ⲠⲈ ⲐⲎ ⲈⲦⲞⲨⲘⲞⲨϮ ⲈⲢⲞⲤ ϪⲈ ϮⲀⲦϬⲢⲎⲚ.
௩௬இதோ, உன் இனத்தைச் சேர்ந்த எலிசபெத்தும் தன்னுடைய முதிர்வயதிலே ஒரு குமாரனைக் கர்ப்பம் தரித்திருக்கிறாள்; குழந்தை இல்லாதவள் என்று சொல்லப்பட்ட அவளுக்கு இது ஆறாவது மாதம்.
37 ⲗ̅ⲍ̅ ϪⲈ ⲘⲘⲞⲚ ϨⲖⲒ ⲚⲤⲀϪⲒ ⲞⲒ ⲚⲀⲦϪⲞⲘ ϦⲀⲦⲈⲚ ⲪⲚⲞⲨϮ.
௩௭தேவனாலே செய்யமுடியாத காரியம் ஒன்றும் இல்லை என்றான்.
38 ⲗ̅ⲏ̅ ⲠⲈϪⲈ ⲘⲀⲢⲒⲀⲘ ⲆⲈ ϪⲈ ⲒⲤ ϮⲂⲰⲔⲒ ⲚⲦⲈⲠϬⲞⲒⲤ ⲈⲤⲈϢⲰⲠⲒ ⲚⲎⲒ ⲔⲀⲦⲀ ⲠⲈⲔⲤⲀϪⲒ ⲞⲨⲞϨ ⲀϤϢⲈ ⲚⲀϤ ⲈⲂⲞⲖ ϨⲀⲢⲞⲤ ⲚϪⲈⲠⲒⲀⲄⲄⲈⲖⲞⲤ.
௩௮அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு நடக்கட்டும் என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளைவிட்டுப் போய்விட்டான்.
39 ⲗ̅ⲑ̅ ⲀⲤⲦⲰⲚⲤ ⲆⲈ ⲚϪⲈⲘⲀⲢⲒⲀⲘ ϦⲈⲚⲚⲒⲈϨⲞⲞⲨ ⲈⲦⲈⲘⲘⲀⲨ ⲀⲤϢⲈ ⲚⲀⲤ ϦⲈⲚⲞⲨⲒⲎⲤⲞⲨⲤ ⲈⲠⲒⲒⲀⲚⲦⲰⲞⲨ ⲈⲞⲨⲂⲀⲔⲒ ⲚⲦⲈⲒⲞⲨⲆⲀ
௩௯அந்த நாளில் மரியாள் எழுந்து, மலைநாடாகிய யூதேயாவில் உள்ள ஒரு பட்டணத்திற்கு சீக்கிரமாகப்போய்,
40 ⲙ̅ ⲞⲨⲞϨ ⲀⲤϢⲈ ⲈϦⲞⲨⲚ ⲈⲠⲎⲒ ⲚⲌⲀⲬⲀⲢⲒⲀⲤ ⲞⲨⲞϨ ⲀⲤⲈⲢⲀⲤⲠⲀⲌⲈⲤⲐⲈ ⲚⲈⲖⲒⲤⲀⲂⲈⲦ
௪0சகரியாவின் வீட்டிற்குச் சென்று, எலிசபெத்தை வாழ்த்தினாள்.
41 ⲙ̅ⲁ̅ ⲞⲨⲞϨ ⲀⲤϢⲰⲠⲒ ⲈⲦⲀⲤⲤⲰⲦⲈⲘ ⲚϪⲈⲈⲖⲒⲤⲀⲂⲈⲦ ⲈⲠⲀⲤⲠⲀⲤⲘⲞⲤ ⲘⲘⲀⲢⲒⲀⲘ ⲀϤⲔⲒⲘ ⲚϪⲈⲠⲒⲘⲀⲤ ϦⲈⲚⲦⲈⲤⲚⲈϪⲒ ⲞⲨⲞϨ ⲀⲤⲘⲞϨ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲞⲨⲠⲚⲈⲨⲘⲀⲈϤⲞⲨⲀⲂ ⲚϪⲈⲈⲖⲒⲤⲀⲂⲈⲦ
௪௧எலிசபெத்து மரியாளுடைய வாழ்த்துக்களைக் கேட்டபொழுது, அவளுடைய கர்ப்பத்தில் இருந்த குழந்தை துள்ளியது; எலிசபெத்து பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு,
42 ⲙ̅ⲃ̅ ⲞⲨⲞϨ ⲀⲤⲰϢ ⲈⲠϢⲰⲒ ϦⲈⲚⲞⲨⲚⲒϢϮ ⲚⲤⲘⲎ ⲞⲨⲞϨ ⲠⲈϪⲀⲤ ⲦⲈⲤⲘⲀⲢⲰⲞⲨⲦ ⲚⲐⲞ ϦⲈⲚⲚⲒϨⲒⲞⲘⲒ ⲞⲨⲞϨ ϤⲤⲘⲀⲢⲰⲞⲨⲦ ⲚϪⲈⲠⲞⲨⲦⲀϨ ⲚⲦⲈⲦⲈⲚⲈϪⲒ
௪௨அதிக சத்தமாக: பெண்களுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது.
43 ⲙ̅ⲅ̅ ⲪⲀⲒ ⲞⲨⲈⲂⲞⲖ ⲐⲰⲚ ⲚⲎⲒ ⲠⲈ ϪⲈ ⲚⲦⲈⲐⲘⲀⲨ ⲘⲠⲀϬⲞⲒⲤ ⲒϨⲀⲢⲞⲒ
௪௩என் ஆண்டவருடைய தாயார் என்னிடம் வர நான் என்ன பாக்கியம் செய்தேன்!
44 ⲙ̅ⲇ̅ ϨⲎⲠⲠⲈ ⲄⲀⲢ ⲒⲤϪⲈⲚ ⲈⲦⲀⲤϢⲰⲠⲒ ⲚϪⲈⲦⲤⲘⲎ ⲚⲦⲈⲠⲈⲀⲤⲠⲀⲤⲘⲞⲤ ϦⲈⲚⲚⲀⲘⲀϢϪ ⲀϤⲔⲒⲘ ⲚϪⲈⲠⲒⲘⲀⲤ ϦⲈⲚⲞⲨⲐⲈⲖⲎⲖ ϦⲈⲚⲦⲀⲚⲈϪⲒ
௪௪இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் கர்ப்பத்திலுள்ள குழந்தை மகிழ்ச்சியால் துள்ளியது.
45 ⲙ̅ⲉ̅ ⲞⲨⲞϨ ⲰⲞⲨⲚⲒⲀⲦⲤ ⲚⲐⲎ ⲈⲦⲀⲤⲚⲀϨϮ ϪⲈ ⲠϪⲰⲔ ⲈⲂⲞⲖ ⲚⲀϢⲰⲠⲒ ⲚⲚⲎ ⲈⲦⲀⲨⲤⲀϪⲒ ⲘⲘⲰⲞⲨ ⲚⲀⲤ ⲈⲂⲞⲖ ϨⲒⲦⲈⲚ ⲠϬⲞⲒⲤ.
௪௫விசுவாசித்தவளே, நீ பாக்கியவதி, கர்த்தராலே உனக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும் என்றாள்.
46 ⲙ̅ⲋ̅ ⲞⲨⲞϨ ⲠⲈϪⲈ ⲘⲀⲢⲒⲀⲘ ⲀⲦⲀⲮⲨⲬⲎ ϬⲒⲤⲒ ⲘⲠϬⲞⲒⲤ.
௪௬அப்பொழுது மரியாள்: “என் ஆத்துமா கர்த்த்தரை மகிமைப்படுத்துகிறது.
47 ⲙ̅ⲍ̅ ⲞⲨⲞϨ ⲀⲠⲀⲠⲚⲈⲨⲘⲀⲐⲈⲖⲎⲖ ⲈϪⲈⲚ ⲪⲚⲞⲨϮ ⲠⲀⲤⲰⲦⲎⲢ
௪௭என் ஆவி என் இரட்சகராகிய தேவனிடம் மகிழ்ச்சியாக இருக்கிறது.
48 ⲙ̅ⲏ̅ ϪⲈ ⲀϤϪⲞⲨϢⲦ ⲈϦⲢⲎⲒ ⲈϪⲈⲚ ⲠⲐⲈⲂⲒⲞ ⲚⲦⲈⲦⲈϤⲂⲰⲔⲒ ϨⲎⲠⲠⲈ ⲄⲀⲢ ⲒⲤϪⲈⲚ ϮⲚⲞⲨ ⲤⲈⲚⲀⲈⲢⲘⲀⲔⲀⲢⲒⲌⲒⲚ ⲘⲘⲞⲒ ⲚϪⲈⲚⲒⲄⲈⲚⲈⲀ ⲦⲎⲢⲞⲨ
௪௮தேவன் அடிமையாகிய என்னுடைய தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இனி எல்லா வம்சங்களும் என்னை பாக்கியம் பெற்றவள் என்பார்கள்.
49 ⲙ̅ⲑ̅ ϪⲈ ⲀϤⲒⲢⲒ ⲚⲎⲒ ⲚϨⲀⲚⲘⲈⲐⲚⲒϢϮ ⲚϪⲈⲪⲎ ⲈⲦϪⲞⲢ ⲞⲨⲞϨ ϤⲞⲨⲀⲂ ⲚϪⲈⲠⲈϤⲢⲀⲚ
௪௯வல்லமையுடைய தேவன் மகிமையான காரியங்களை எனக்குச் செய்தார்; அவருடைய நாமம் பரிசுத்தமானது.
50 ⲛ̅ ⲞⲨⲞϨ ⲠⲈϤⲚⲀⲒ ϢⲰⲠⲒ ϢⲀ ϨⲀⲚϪⲰⲞⲨ ⲚⲈⲘ ϨⲀⲚϪⲰⲞⲨ ⲚⲚⲎ ⲈⲦⲈⲢϨⲞϮ ϦⲀⲦⲈϤϨⲎ
௫0அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்து நடக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்கும் இருக்கும்.
51 ⲛ̅ⲁ̅ ⲀϤⲒⲢⲒ ⲚⲞⲨⲀⲘⲀϨⲒ ϦⲈⲚⲠⲈϤϪⲪⲞⲒ ⲀϤϪⲰⲢ ⲈⲂⲞⲖ ⲚⲚⲒϬⲀⲤⲒϨⲎⲦ ϦⲈⲚⲪⲘⲈⲨⲒ ⲚⲦⲈⲠⲞⲨϨⲎⲦ
௫௧அவர் தம்முடைய கரங்களினாலே வல்லமையுள்ள காரியங்களைச் செய்தார்; இருதய சிந்தைகளில் பெருமையுள்ளவர்களைச் சிதறிப்போகப்பண்ணினார்.
52 ⲛ̅ⲃ̅ ⲀϤⲢⲰϦⲦ ⲚϨⲀⲚϪⲰⲢⲒ ⲈⲂⲞⲖ ϨⲒ ϨⲀⲚⲐⲢⲞⲚⲞⲤ ⲞⲨⲞϨ ⲀϤϬⲒⲤⲒ ⲚⲚⲎ ⲈⲦⲐⲈⲂⲒⲎⲞⲨⲦ.
௫௨ராஜாக்களை பதவிகளிலிருந்து நீக்கி, தாழ்மையானவர்களை உயர்த்தினார்.
53 ⲛ̅ⲅ̅ ⲚⲎ ⲈⲦϨⲞⲔⲈⲢ ⲀϤⲐⲢⲞⲨⲤⲒ ⲚⲀⲄⲀⲐⲞⲚ ⲞⲨⲞϨ ⲚⲎ ⲈⲦⲞⲒ ⲚⲢⲀⲘⲀⲞ ⲀϤⲞⲨⲞⲢⲠⲞⲨ ⲈⲂⲞⲖ ⲈⲨϢⲞⲨⲒⲦ
௫௩பசியுள்ளவர்களுக்கு நன்மையானதைக் கொடுத்து, செல்வந்தர்களுக்கு ஒன்றும் கொடுக்காமல் வெறுமையாக அனுப்பிவிட்டார்.
54 ⲛ̅ⲇ̅ ⲀϤϮ ⲦⲞⲦϤ ⲘⲠⲒⲤⲖ ⲠⲈϤⲀⲖⲞⲨ ⲈⲈⲢⲪⲘⲈⲨⲒ ⲘⲠⲈϤⲚⲀⲒ
௫௪நம்முடைய முற்பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன் வம்சத்திற்கும் எப்பொழுதும் இரக்கம் செய்ய நினைத்து, (aiōn g165)
55 ⲛ̅ⲉ̅ ⲔⲀⲦⲀ ⲪⲢⲎϮ ⲈⲦⲀϤⲤⲀϪⲒ ⲚⲈⲘ ⲚⲈⲚⲒⲞϮ ⲀⲂⲢⲀⲀⲘ ⲚⲈⲘ ⲠⲈϤϪⲢⲞϪ ϢⲀ ⲈⲚⲈϨ. (aiōn g165)
௫௫அவருடைய மக்களாகிய இஸ்ரவேல் தேசத்தினர்களுக்கு உதவி செய்தார்” என்றாள்.
56 ⲛ̅ⲋ̅ ⲀⲤϢⲰⲠⲒ ⲆⲈ ⲚⲈⲘⲀⲤ ⲚϪⲈⲘⲀⲢⲒⲀⲘ ⲚⲄ ⲚⲀⲂⲞⲦ ⲞⲨⲞϨ ⲀⲤⲔⲞⲦⲤ ⲈⲠⲈⲤⲎⲒ.
௫௬மரியாள் ஏறக்குறைய மூன்று மாதங்கள் எலிசெபெத்துடன் தங்கியிருந்து, பின்பு தன் வீட்டிற்குத் திரும்பிப்போனாள்.
57 ⲛ̅ⲍ̅ ⲀⲠⲒⲤⲎⲞⲨ ⲆⲈ ⲘⲞϨ ⲈⲂⲞⲖ ⲚⲦⲈⲈⲖⲒⲤⲀⲂⲈⲦ ⲈⲐⲢⲈⲤⲘⲒⲤⲒ ⲞⲨⲞϨ ⲀⲤⲘⲒⲤⲒ ⲚⲞⲨϢⲎⲢⲒ.
௫௭எலிசபெத்திற்குப் பிரசவநேரம் வந்தபோது அவள் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.
58 ⲛ̅ⲏ̅ ⲞⲨⲞϨ ⲀⲨⲤⲰⲦⲈⲘ ⲚϪⲈⲚⲎ ⲈⲦⲈⲘⲠⲔⲰϮ ⲘⲠⲈⲤⲎⲒ ⲚⲈⲘ ⲚⲈⲤⲤⲨⲄⲄⲈⲚⲎⲤ ϪⲈ ⲀⲠϬⲞⲒⲤ ⲈⲢ ⲠⲈϤⲚⲀⲒ ⲚⲞⲨⲚⲒϢϮ ⲚⲈⲘⲀⲤ ⲞⲨⲞϨ ⲚⲀⲨⲢⲀϢⲒ ⲚⲈⲘⲀⲤ ⲠⲈ.
௫௮கர்த்தர் அவள்மேல் எவ்வளவு இரக்கமாக இருந்தார் என்று அவள் அருகில் வசிப்பவர்களும் சொந்தங்களும் கேள்விப்பட்டு, அவளோடு சேர்ந்து சந்தோஷப்பட்டார்கள்.
59 ⲛ̅ⲑ̅ ⲀⲤϢⲰⲠⲒ ⲆⲈ ϦⲈⲚⲠⲒⲈϨⲞⲞⲨ ⲘⲘⲀϨⲎ ⲀⲨⲒ ϪⲈ ⲚⲦⲞⲨⲤⲞⲨⲂⲈ ⲠⲒⲀⲖⲞⲨ ⲞⲨⲞϨ ⲚⲀⲨⲘⲞⲨϮ ⲈⲢⲞϤ ⲠⲈ ⲈⲪⲢⲀⲚ ⲘⲠⲈϤⲒⲰⲦ ⲌⲀⲬⲀⲢⲒⲀⲤ
௫௯எட்டாவது நாளிலே குழந்தைக்கு விருத்தசேதனம்பண்ண அவர்கள் எல்லோரும் கூடிவந்து, குழந்தையின் தகப்பனுடைய பெயராகிய சகரியா என்ற பெயரையே குழந்தைக்கும் வைக்க விரும்பினார்கள்.
60 ⲝ̅ ⲞⲨⲞϨ ⲀⲤⲈⲢⲞⲨⲰ ⲚϪⲈⲦⲈϤⲘⲀⲨ ⲠⲈϪⲀⲤ ϪⲈ ⲘⲘⲞⲚ ⲀⲖⲖⲀ ⲘⲞⲨϮ ⲈⲠⲈϤⲢⲀⲚ ϪⲈ ⲒⲰⲀⲚⲚⲎⲤ.
௬0அப்பொழுது எலிசெபெத்து: “அப்படி வேண்டாம், குழந்தைக்கு யோவான் என்று பெயர் வைக்கவேண்டும் என்றாள்.
61 ⲝ̅ⲁ̅ ⲞⲨⲞϨ ⲠⲈϪⲰⲞⲨ ⲚⲀⲤ ϪⲈ ⲘⲘⲞⲚ ϨⲖⲒ ϦⲈⲚⲦⲈⲤⲨⲄⲄⲈⲚⲒⲀ ⲈⲨⲘⲞⲨϮ ⲈⲢⲞϤ ⲘⲠⲀⲒⲢⲀⲚ.
௬௧அதற்கு அவர்கள்: உன் உறவினர்களில் இந்தப் பெயருள்ளவன் ஒருவனும் இல்லையே” என்று சொல்லி,
62 ⲝ̅ⲃ̅ ⲀⲨϬⲰⲢⲈⲘ ⲆⲈ ⲈⲠⲈϤⲒⲰⲦ ϪⲈ ⲀⲬⲞⲨⲰϢ ⲈⲘⲞⲨϮ ⲈⲢⲞϤ ϪⲈ ⲚⲒⲘ.
௬௨சகரியாவைப் பார்த்து: குழந்தைக்கு என்ன பெயர் வைக்க விரும்புகிறீர் என்று சைகையினால் கேட்டார்கள்.
63 ⲝ̅ⲅ̅ ⲞⲨⲞϨ ⲈⲦⲀϤⲈⲢⲈⲦⲒⲚ ⲚⲞⲨⲠⲒⲚⲀⲔⲒⲤ ⲀϤⲤϦⲀⲒ ⲈϤϪⲰ ⲘⲘⲞⲤ ϪⲈ ⲒⲰⲀⲚⲚⲎⲤ ⲠⲈ ⲠⲈϤⲢⲀⲚ ⲞⲨⲞϨ ⲚⲀⲨⲈⲢϢⲪⲎⲢⲒ ⲦⲎⲢⲞⲨ ⲠⲈ.
௬௩அவன் எழுத்துப் பலகையைக் கேட்டு வாங்கி,” இவன் பெயர் யோவான்,” என்று எழுதினான்; எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள்.
64 ⲝ̅ⲇ̅ ⲀⲢⲰϤ ⲆⲈ ⲞⲨⲰⲚ ⲚϮϨⲞϮ ϦⲈⲚⲞⲨϨⲞϮ ⲚⲈⲘ ⲠⲈϤⲖⲀⲤ ⲞⲨⲞϨ ⲚⲀϤⲤⲀϪⲒ ⲠⲈ ⲈϤⲤⲘⲞⲨ ⲈⲪⲚⲞⲨϮ.
௬௪உடனே அவனுடைய வாய் திறக்கப்பட்டது, அவன் பேசி, தேவனை ஸ்தோத்திரித்துப் புகழ்ந்தான்.
65 ⲝ̅ⲉ̅ ⲞⲨⲞϨ ⲀⲤϢⲰⲠⲒ ⲚϪⲈⲞⲨϨⲞϮ ⲈϪⲈⲚ ⲞⲨⲞⲚ ⲚⲒⲂⲈⲚ ⲈⲦϢⲞⲠ ⲘⲠⲞⲨⲔⲰϮ ⲞⲨⲞϨ ⲚⲀⲨⲤⲀϪⲒ ⲚⲚⲀⲒ ⲦⲎⲢⲞⲨ ϨⲒ ⲠⲒⲒⲀⲚⲦⲰⲞⲨ ⲚⲦⲈⲒⲞⲨⲆⲀ.
௬௫அதினால் அவர்களைச் சுற்றி வாழ்ந்த அனைவருக்கும் பயம் உண்டானது. மேலும் யூதேயா மலைநாடு முழுவதும் இந்தச் செய்தி பரவி, இதைக்குறித்து அதிகமாகப் பேசப்பட்டது.
66 ⲝ̅ⲋ̅ ⲞⲨⲞϨ ⲚⲀⲨⲘⲞⲔⲘⲈⲔ ⲦⲎⲢⲞⲨ ϦⲈⲚⲠⲞⲨϨⲎⲦ ⲚϪⲈⲚⲎ ⲈⲦⲤⲰⲦⲈⲘ ⲈⲨϪⲰ ⲘⲘⲞⲤ ϪⲈ ⲞⲨ ϨⲀⲢⲀ ⲠⲈⲐⲚⲀϢⲰⲠⲒ ⲘⲠⲀⲒⲀⲖⲞⲨ ⲔⲈ ⲄⲀⲢ ⲚⲀⲢⲈ ⲦϪⲒϪ ⲘⲠϬⲞⲒⲤ ⲬⲎ ⲚⲈⲘⲀϤ.
௬௬இதைக் கேள்விப்பட்டவர்கள் எல்லோரும் தங்களுடைய மனதிலே நடந்தவைகளை நினைத்து, இந்தக் குழந்தை வளர்ந்து எப்படிப்பட்ட காரியங்களைச் செய்யுமோ என்றார்கள். கர்த்தருடைய கரம் அந்தக் குழந்தையோடு இருந்தது.
67 ⲝ̅ⲍ̅ ⲞⲨⲞϨ ⲌⲀⲬⲀⲢⲒⲀⲤ ⲠⲈϤⲒⲰⲦ ⲀϤⲘⲞϨ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲞⲨⲠⲚⲈⲨⲘⲀⲈϤⲞⲨⲀⲂ ⲞⲨⲞϨ ⲀϤⲈⲢⲠⲢⲞⲪⲎ ⲦⲈⲨⲒⲚ ⲈϤϪⲰ ⲘⲘⲞⲤ.
௬௭அவனுடைய தகப்பனாகிய சகரியா பரிசுத்த ஆவியானவராலே நிரப்பப்பட்டு, தீர்க்கதரிசனமாக:
68 ⲝ̅ⲏ̅ ϤⲤⲘⲀⲢⲰⲞⲨⲦ ⲚϪⲈⲠϬⲞⲒⲤ ⲪⲚⲞⲨϮ ⲘⲠⲒⲤⲖ ϪⲈ ⲀϤϪⲈⲘⲠϢⲒⲚⲒ ⲞⲨⲞϨ ⲀϤⲒⲢⲒ ⲚⲞⲨⲤⲰϮ ⲘⲠⲈϤⲖⲀⲞⲤ
௬௮“இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.
69 ⲝ̅ⲑ̅ ⲞⲨⲞϨ ⲀϤⲦⲞⲨⲚⲞⲤ ⲞⲨⲦⲀⲠ ⲚⲚⲞϨⲈⲘ ⲚⲀⲚ ϦⲈⲚⲠⲎⲒ ⲚⲆⲀⲨⲒⲆ ⲠⲈϤⲀⲖⲞⲨ.
௬௯அவர் நம்முடைய முற்பிதாக்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின இரக்கத்தைச் செய்வதற்கும்;
70 ⲟ̅ ⲔⲀⲦⲀ ⲪⲢⲎϮ ⲈⲦⲀϤⲤⲀϪⲒ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲢⲰⲞⲨ ⲚⲚⲈϤⲠⲢⲞⲪⲎⲦⲎⲤ ⲈⲐⲞⲨⲀⲂ ⲒⲤϪⲈⲚ ⲠⲈⲚⲈϨ (aiōn g165)
௭0தம்முடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைத்தருளி: (aiōn g165)
71 ⲟ̅ⲁ̅ ⲞⲨⲚⲞϨⲈⲘ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲚⲈⲚϪⲀϪⲒ ⲚⲈⲘ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲚⲈⲚϪⲒϪ ⲚⲞⲨⲞⲚ ⲚⲒⲂⲈⲚ ⲈⲐⲘⲞⲤϮ ⲘⲘⲞⲚ
௭௧உங்களுடைய சத்துருக்களின் கைகளில் இருந்து நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, உயிரோடிருக்கும் நாட்களெல்லாம் பயமில்லாமல் எனக்கு முன்பாகப் பரிசுத்தத்தோடும் நீதியோடும் எனக்கு ஊழியம் செய்யவும் கட்டளையிடுவேன் என்று,
72 ⲟ̅ⲃ̅ ⲈⲒⲢⲒ ⲚⲞⲨⲚⲀⲒ ⲚⲈⲘ ⲚⲈⲚⲒⲞϮ ⲞⲨⲞϨ ⲈⲈⲢⲪⲘⲈⲨⲒ ⲚⲦⲈϤⲆⲒⲀⲐⲎⲔⲎ ⲈⲐⲞⲨⲀⲂ.
௭௨அவர் நம்முடைய முற்பிதாவாகிய ஆபிரகாமுக்கு கொடுத்த ஆணையை நிறைவேற்றுவதற்கும்;
73 ⲟ̅ⲅ̅ ⲠⲒⲀⲚⲀϢ ⲈⲦⲀϤⲰⲢⲔ ⲘⲘⲞϤ ⲚⲀⲂⲢⲀⲀⲘ ⲠⲈⲚⲒⲰⲦ
௭௩ஆதிமுதல் கொண்டிருந்த தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளின் வாக்கினால் தேவன் சொன்னபடியே,
74 ⲟ̅ⲇ̅ ⲈⲠϪⲒⲚⲦⲎⲒⲤ ⲚⲀⲚ ⲚⲀⲦⲈⲢϨⲞϮ ⲈⲀⲚⲚⲞϨⲈⲘ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲚⲈⲚϪⲒϪ ⲚⲚⲈⲚϪⲀϪⲒ ⲈϢⲈⲘϢⲒ ⲘⲘⲞϤ
௭௪தமது மக்களைச் சந்தித்து மீட்டுக்கொண்டு, நம்முடைய சத்துருக்களிடம் இருந்தும், நம்மைப் பகைக்கிற எல்லோருடைய கைகளில் இருந்தும், நம்மை இரட்சிப்பதற்காக,
75 ⲟ̅ⲉ̅ ϦⲈⲚ ⲞⲨⲦⲞⲨⲂⲞ ⲚⲈⲘ ⲞⲨⲘⲈⲐⲘⲎⲒ ⲘⲠⲈϤⲘⲐⲞ ⲚⲚⲈⲚⲈϨⲞⲞⲨ ⲦⲎⲢⲞⲨ.
௭௫தம்முடைய தாசனாகிய தாவீதின் வம்சத்திலே நமக்கு ஒரு வல்லமையுள்ள இரட்சகரை அனுப்பினார்.
76 ⲟ̅ⲋ̅ ⲞⲨⲞϨ ⲚⲐⲞⲔ ⲆⲈ ⲠⲒⲀⲖⲞⲨ ⲈⲨⲈⲘⲞⲨϮ ⲈⲢⲞⲔ ϪⲈ ⲠⲒⲠⲢⲞⲪⲎⲦⲎⲤ ⲚⲦⲈⲠⲈⲦϬⲞⲤⲒ ⲬⲚⲀⲈⲢϢⲞⲢⲠ ⲄⲀⲢ ⲘⲘⲞϢⲒ ⲘⲠⲈⲘⲐⲞ ⲘⲠϬⲞⲒⲤ ⲈⲤⲈⲂⲦⲈ ⲚⲈϤⲘⲰⲒⲦ
௭௬என் மகனே, நீ உன்னதமான தேவனுடைய தீர்க்கதரிசி என்று அழைக்கப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம்பண்ணவும்,
77 ⲟ̅ⲍ̅ ⲈϮ ⲚⲞⲨⲈⲘⲒ ⲚⲦⲈⲪⲚⲞϨⲈⲘ ⲘⲠⲈϤⲖⲀⲞⲤ ϦⲈⲚⲞⲨⲬⲰ ⲈⲂⲞⲖ ⲚⲦⲈϨⲀⲚⲚⲞⲂⲒ
௭௭நமது தேவனுடைய உருக்கமான இரக்கத்தினாலே அவருடைய மக்களுக்குப் பாவமன்னிப்பாகிய இரட்சிப்பைத் தெரியப்படுத்தவும், அவருக்கு முன்னே நடந்துபோவாய்.
78 ⲟ̅ⲏ̅ ⲈⲐⲂⲈ ⲚⲒⲘⲈⲦϢⲈⲚϨⲎⲦ ⲚⲦⲈⲪⲚⲀⲒ ⲘⲠⲈⲚⲚⲞⲨϮ ϦⲈⲚⲚⲀⲒ ⲈⲦⲀϤⲚⲀϢⲒⲚⲒ ⲈⲢⲞⲚ ⲚϦⲎⲦⲞⲨ ϪⲈ ⲀⲚⲀⲦⲞⲖⲎ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲠϬⲒⲤⲒ
௭௮இருளிலும், மரண பயத்திலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் கொடுக்கவும்,
79 ⲟ̅ⲑ̅ ⲈⲈⲢⲞⲨⲰⲒⲚⲒ ⲚⲚⲎ ⲈⲦϨⲈⲘⲤⲒ ϦⲈⲚⲠⲬⲀⲔⲒ ⲚⲈⲘ ⲦϦⲎⲒⲂⲒ ⲘⲪⲘⲞⲨ ⲈⲠϪⲒⲚⲤⲞⲨⲦⲈⲚ ⲚⲈⲚϬⲀⲖⲀⲨϪ ⲈⲪⲘⲰⲒⲦ ⲚⲦⲈϮϨⲒⲢⲎⲚⲎ.
௭௯நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அந்த இரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய சூரியன் நம்மிடம் வந்திருக்கிறது” என்றான்.
80 ⲡ̅ ⲠⲒⲀⲖⲞⲨ ⲆⲈ ⲀϤⲀⲒⲀⲒ ⲞⲨⲞϨ ⲚⲀϤⲀⲘⲀϨⲒ ϦⲈⲚⲠⲒⲠⲚⲈⲨⲘⲀⲞⲨⲞϨ ⲚⲀϤⲬⲎ ⲠⲈ ϨⲒ ⲚⲒϢⲀϤⲈⲨ ϢⲀ ⲠⲒⲈϨⲞⲞⲨ ⲚⲦⲈⲠⲈϤⲞⲨⲰⲚϨ ⲈⲂⲞⲖ ϢⲀ ⲠⲒⲤⲖ.
௮0அந்தப் பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பெலனடைந்து, இஸ்ரவேல் மக்களுக்கு வெளிப்படையாக உபதேசிக்கும் நாள் வரும்வரைக்கும் வனாந்திரங்களிலே வாழ்ந்து வந்தான்.

< ⲖⲞⲨⲔⲞⲚ 1 >