< 耶利米哀歌 3 >

1 我是因耶和华忿怒的杖, 遭遇困苦的人。
ஆண்டவருடைய கோபத்தின் பிரம்பினால் ஏற்பட்ட சிறுமையைக் கண்ட மனிதன் நான்.
2 他引导我,使我行在黑暗中, 不行在光明里。
அவர் என்னை வெளிச்சத்திலே அல்ல, இருளிலே அழைத்து நடத்திவந்தார்.
3 他真是终日再三反手攻击我。
அவர் தமது கையை எனக்கு விரோதமாகவே தினமும் திருப்பினார்.
4 他使我的皮肉枯干; 他折断我的骨头。
என் சதையையும், என் தோலையும் கடினமாக்கினார்; என் எலும்புகளை நொறுக்கினார்.
5 他筑垒攻击我, 用苦楚和艰难围困我。
அவர் எனக்கு விரோதமாக மதிலைக்கட்டி, கசப்பினாலும் வருத்தத்தினாலும் என்னைச் சூழ்ந்துகொண்டார்.
6 他使我住在幽暗之处, 像死了许久的人一样。
ஆரம்பகாலத்தில் இறந்தவர்களைப்போல என்னை இருளான இடங்களில் கிடக்கச்செய்தார்.
7 他用篱笆围住我,使我不能出去; 他使我的铜链沉重。
நான் தப்பிப்போகாமலிருக்க என்னைச்சூழ வேலியடைத்தார்; என் விலங்கை கடினமாக்கினார்.
8 我哀号求救; 他使我的祷告不得上达。
நான் சத்தமிட்டுக் கூப்பிட்டாலும், என் ஜெபத்திற்கு வழியை அடைத்துப்போட்டார்.
9 他用凿过的石头挡住我的道; 他使我的路弯曲。
வெட்டின கற்களின் சுவரால் என் வழிகளை அடைத்துப்போட்டார், என் பாதைகளைத் தாறுமாறாக்கினார்.
10 他向我如熊埋伏, 如狮子在隐密处。
௧0அவர் எனக்காகப் பதுங்கியிருக்கிற கரடியும், மறைவிடங்களில் தங்குகிற சிங்கமுமாயிருக்கிறார்.
11 他使我转离正路, 将我撕碎,使我凄凉。
௧௧என்னுடைய வழிகளை அகற்றி, என்னைத் துண்டித்துப்போட்டார்; என்னைப் பயனற்றவனாக்கிவிட்டார்.
12 他张弓将我当作箭靶子。
௧௨தமது வில்லை நாணேற்றி, என்னை அம்புக்கு இலக்காக வைத்தார்.
13 他把箭袋中的箭射入我的肺腑。
௧௩தம்முடைய அம்புகளை வைக்கும் பையின் அம்புகளை என் உள்ளத்தின் ஆழத்தில் படச்செய்தார்.
14 我成了众民的笑话; 他们终日以我为歌曲。
௧௪நான் என் மக்கள் அனைவருக்கும் பரியாசமும், தினமும் அவர்களுடைய கின்னரப் பாடலுமானேன்.
15 他用苦楚充满我,使我饱用茵 。
௧௫கசப்பினால் என்னை நிரப்பி, எட்டியினால் என்னை வெறுப்படையச்செய்தார்.
16 他又用沙石碜断我的牙, 用灰尘将我蒙蔽。
௧௬அவர் உணவிலுள்ள சிறுகற்களால் என் பற்களை நொறுக்கி, என்னைச் சாம்பலில் புரளச்செய்தார்.
17 你使我远离平安, 我忘记好处。
௧௭என் ஆத்துமாவைச் சமாதானத்திற்குத் தூரமாக்கினார்; சுகத்தை மறந்தேன்.
18 我就说:我的力量衰败; 我在耶和华那里毫无指望!
௧௮என் பெலனும், நான் யெகோவாவுக்குக் காத்திருந்த நம்பிக்கையும் அழிந்துபோனது என்றேன்.
19 耶和华啊,求你记念我 如茵 和苦胆的困苦窘迫。
௧௯எட்டியும் பிச்சுமாகிய என் சிறுமையையும் என் தவிப்பையும் நினைத்தருளும்.
20 我心想念这些, 就在里面忧闷。
௨0என் ஆத்துமா அவைகளை நினைத்து நினைத்து எனக்குள் உடைந்துபோகிறது.
21 我想起这事, 心里就有指望。
௨௧இதை என் மனதிலே வைத்து நம்பிக்கை கொண்டிருப்பேன்.
22 我们不致消灭, 是出于耶和华诸般的慈爱; 是因他的怜悯不致断绝。
௨௨நாம் அழிந்துபோகாமலிருக்கிறது யெகோவாவுடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.
23 每早晨,这都是新的; 你的诚实极其广大!
௨௩அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது.
24 我心里说:耶和华是我的分, 因此,我要仰望他。
௨௪யெகோவா என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கை கொண்டிருப்பேன்.
25 凡等候耶和华,心里寻求他的, 耶和华必施恩给他。
௨௫தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும், தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் யெகோவா நல்லவர்.
26 人仰望耶和华, 静默等候他的救恩, 这原是好的。
௨௬யெகோவாவுடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது.
27 人在幼年负轭, 这原是好的。
௨௭தன் இளவயதில் நுகத்தைச் சுமக்கிறது மனிதனுக்கு நல்லது.
28 他当独坐无言, 因为这是耶和华加在他身上的。
௨௮அவரே அதைத் தன்மேல் வைத்தாரென்று அவன் தனிமையாயிருந்து மெளனமாயிருப்பானாக.
29 他当口贴尘埃, 或者有指望。
௨௯நம்பிக்கைக்கு இடமுண்டோ என்று தன் வாய் மண்ணில்படும்படி குப்புறவிழுவானாக.
30 他当由人打他的腮颊, 要满受凌辱。
௩0தன்னை அடிக்கிறவனுக்குத் தன் கன்னத்தைக் காட்டி, அவமானத்தால் நிறைந்திருப்பானாக.
31 因为主必不永远丢弃人。
௩௧ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார்.
32 主虽使人忧愁, 还要照他诸般的慈爱发怜悯。
௩௨அவர் வருத்தப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி மனமிரங்குவார்.
33 因他并不甘心使人受苦, 使人忧愁。
௩௩அவர் மனப்பூர்வமாக மனுமக்களைச் சிறுமையாக்கி வருத்தப்படுத்துகிறதில்லை.
34 人将世上被囚的踹在脚下,
௩௪ஒருவன் பூமியில் சிறைப்பட்டவர்கள் அனைவரையும் தன் கால்களின்கீழ் நசுக்குகிறதையும்,
35 或在至高者面前屈枉人,
௩௫உன்னதமான தேவனின் சமுகத்தில் மனிதர்களுடைய நியாயத்தைப் புரட்டுகிறதையும்,
36 或在人的讼事上颠倒是非, 这都是主看不上的。
௩௬மனிதனை அவனுடைய வழக்கிலே மாறுபாடாக்குகிறதையும், ஆண்டவர் காணாதிருப்பாரோ?
37 除非主命定, 谁能说成就成呢?
௩௭ஆண்டவர் கட்டளையிடாமல் இருக்கும்போது, காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்?
38 祸福不都出于至高者的口吗?
௩௮உன்னதமான தேவனுடைய வாயிலிருந்து தீமையும் நன்மையும் புறப்படுகிறதில்லையோ?
39 活人因自己的罪受罚, 为何发怨言呢?
௩௯உயிருள்ள மனிதன் முறையிடுவானேன்? அவன் தன்னுடைய பாவத்திற்கு வரும் தண்டனையைக்குறித்து முறையிடுகிறதென்ன?
40 我们当深深考察自己的行为, 再归向耶和华。
௪0நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, யெகோவாவிடத்தில் திரும்பக்கடவோம்.
41 我们当诚心向天上的 神举手祷告。
௪௧நாம் நம்முடைய கைகளோடுங்கூட நம்முடைய இருதயத்தையும் பரலோகத்திலிருக்கிற தேவனிடத்திற்கு ஏறெடுப்போமாக.
42 我们犯罪背逆, 你并不赦免。
௪௨நாங்கள் துரோகம்செய்து, கலகம்செய்தோம்; ஆகையால் தேவரீர் மன்னிக்காமல் இருந்தீர்.
43 你自被怒气遮蔽,追赶我们; 你施行杀戮,并不顾惜。
௪௩தேவரீர் கோபத்தால் மூடிக்கொண்டு, எங்களைத் தப்பவிடாமல் பின்தொடர்ந்து கொன்றீர்.
44 你以黑云遮蔽自己, 以致祷告不得透入。
௪௪ஜெபம் உள்ளே நுழையமுடியாதபடி உம்மை மேகத்தால் மூடிக்கொண்டீர்.
45 你使我们在万民中成为污秽和渣滓。
௪௫மக்களுக்குள்ளே எங்களைக் குப்பையும் அருவருப்புமாக்கினீர்.
46 我们的仇敌都向我们大大张口。
௪௬எங்கள் பகைவர்கள் எல்லோரும் எங்களுக்கு விரோதமாகத் தங்கள் வாயைத் திறந்தார்கள்.
47 恐惧和陷坑,残害和毁灭, 都临近我们。
௪௭பயமும், படுகுழியும், பயனற்றநிலையும், அழிவும் எங்களுக்கு நேரிட்டது.
48 因我众民遭的毁灭, 我就眼泪下流如河。
௪௮மகளாகிய என் மக்கள் அடைந்த கேட்டினால் என் கண்களிலிருந்து கண்ணீர் வடிகிறது.
49 我的眼多多流泪, 总不止息,
௪௯யெகோவா பரலோகத்திலிருந்து நோக்கிப்பார்க்கும்வரை,
50 直等耶和华垂顾, 从天观看。
௫0என் கண் இடைவிடாமல் ஓய்வின்றி வழிகிறது.
51 因我本城的众民, 我的眼,使我的心伤痛。
௫௧என் பட்டணத்தின் பெண்கள் அனைவரினிமித்தம், என் கண் என் ஆத்துமாவுக்கு வேதனையுண்டாக்குகிறது.
52 无故与我为仇的追逼我, 像追雀鸟一样。
௫௨காரணமே இல்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என்னை ஒரு பறவையைப்போல வேட்டையாடினார்கள்.
53 他们使我的命在牢狱中断绝, 并将一块石头抛在我身上。
௫௩படுகுழியிலே என் உயிரை ஒடுக்கி, என்மேல் கல்லைவைத்தார்கள்.
54 众水流过我头, 我说:我命断绝了!
௫௪தண்ணீர் என் தலைக்குமேல் வந்தது; அழிந்தேன் என்றேன்.
55 耶和华啊, 我从深牢中求告你的名。
௫௫மகா ஆழமான குழியிலிருந்து, யெகோவாவே, உம்முடைய பெயரைச் சொல்லிக் கூப்பிட்டேன்.
56 你曾听见我的声音; 我求你解救, 你不要掩耳不听。
௫௬என் சத்தத்தைக் கேட்டீர்; என் பெருமூச்சுக்கும் என் கூப்பிடுதலுக்கும் உமது செவியை அடைத்துக்கொள்ளாதேயும்.
57 我求告你的日子,你临近我, 说:不要惧怕!
௫௭நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டநாளிலே நீர் கேட்டு: பயப்படாதே என்றீர்.
58 主啊,你伸明了我的冤; 你救赎了我的命。
௫௮ஆண்டவரே, என் ஆத்துமாவின் வழக்கை நடத்தினீர்; என் உயிரை மீட்டுக்கொண்டீர்.
59 耶和华啊,你见了我受的委屈; 求你为我伸冤。
௫௯யெகோவாவே, எனக்கு உண்டான அநியாயத்தைக் கண்டீர்; எனக்கு நியாயம் செய்யும்.
60 他们仇恨我,谋害我, 你都看见了。
௬0அவர்களுடைய எல்லா விரோதத்தையும், அவர்கள் எனக்கு விரோதமாக நினைத்த எல்லா நினைவுகளையும் கண்டீர்.
61 耶和华啊,你听见他们辱骂我的话, 知道他们向我所设的计,
௬௧யெகோவாவே, அவர்கள் அவமதித்த அவமானங்களையும், அவர்கள் எனக்கு விரோதமாக நினைத்த எல்லா நினைவுகளையும்,
62 并那些起来攻击我的人口中所说的话, 以及终日向我所设的计谋。
௬௨எனக்கு விரோதமாக எழும்பினவர்களின் வாய்ச்சொற்களையும், அவர்கள் நாள்முழுவதும் எனக்கு விரோதமாக யோசிக்கும் யோசனைகளையும் கேட்டீர்.
63 求你观看, 他们坐下,起来,都以我为歌曲。
௬௩அவர்கள் உட்கார்ந்திருப்பதையும் அவர்கள் எழுந்திருப்பதையும் நோக்கிப் பாரும்; நான் அவர்களுடைய பாடலாயிருக்கிறேன்.
64 耶和华啊,你要按着他们手所做的 向他们施行报应。
௬௪யெகோவாவே, அவர்களுடைய கைகள் செய்த செயல்களுக்குத்தக்கதாக அவர்களுக்குப் பலன் கொடுப்பீர்.
65 你要使他们心里刚硬, 使你的咒诅临到他们。
௬௫அவர்களுக்கு மனவேதனையைக் கொடுப்பீர், உம்முடைய சாபம் அவர்கள்மேல் இருக்கும்.
66 你要发怒追赶他们, 从耶和华的天下除灭他们。
௬௬கோபமாக அவர்களைப் பின்தொடர்ந்து, யெகோவாவுடைய வானங்களின் கீழே அவர்கள் இல்லாதபடி அவர்களை அழித்துவிடுவீர்.

< 耶利米哀歌 3 >