< Luke 24 >

1 Khaw khqih nyn ak khuiawh kaw khawnghi lamma cyk, mymcang hqit awh, nukhqi ing bawktui ce khyn unawh phyi na cet uhy.
வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலேயே, அந்தப் பெண்கள் தாங்கள் ஆயத்தம் செய்திருந்த நறுமணப் பொருட்களை எடுத்துக்கொண்டு, கல்லறையை நோக்கிச் சென்றார்கள்.
2 Phyi awhkaw lung ak chang na ang thoeih qu ce hu uhy,
அங்கே கல்லறை வாசலில் வைக்கப்பட்டிருந்த கல் புரட்டித் தள்ளப்பட்டிருப்பதைக் கண்டார்கள்.
3 ak khuina ami lut awh, Bawipa Jesu a qaawk ce am hu uhy.
அவர்கள் உள்ளே நுழைந்தபோது, கர்த்தராகிய இயேசுவினுடைய உடலைக் காணாமல்,
4 Ngaih kyi doena ami awm awh, a hi khawkphlamyihna ak vang thlang pakkhih ce cekkhqi venawh dyih pehy.
அவர்கள் அதைக்குறித்து யோசிக்கையில், திடீரென்று மின்னலைப் போல மின்னுகின்ற உடைகளை அணிந்திருந்த இரண்டுபேர் அவர்களின் அருகே நின்றார்கள்.
5 Amik kqih aih awh, nukhqi ce dek awh koep uhy, cehlai cawhkaw thlang qawi ing, “Ikaw hamna thlak thi anglakawh ak hqing ce nami sui?
அந்தப் பெண்களோ பயந்துபோய், தலைகுனிந்து தரையைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்த இரண்டு பேரும் அவர்களிடம், “உயிருடன் இருக்கிறவரை, நீங்கள் ஏன் இறந்தவர்களிடையே தேடுகிறீர்கள்?
6 Anih ce vawh am awm voel hy, tho hawh hy! Kalili awh nami awm awh awi ak nik kqawn peek khqi ce poek lah uh:
அவர் இங்கே இல்லை; அவர் உயிருடன் எழுந்துவிட்டார்! அவர் உங்களுடன் கலிலேயாவில் இருக்கையிலே, உங்களுக்குச் சொன்னது ஞாபகமில்லையா:
7 'Thlanghqing Capa taw thlak thawlhkhqi kut awh pe kawm usaw, thinglam awh ami tai coengawh, am thum nyn awh tho tlaih kaw,’ a tice,” tinak khqi hy.
‘மானிடமகனாகிய நான் பாவிகளின் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, சிலுவையில் அறையப்படவேண்டும்; மூன்றாம் நாளிலே, திரும்பவும் உயிருடன் எழுந்திருக்க வேண்டும்’ என்று அவர் உங்களுக்குச் சொல்லியிருந்தாரே” என்றார்கள்.
8 Cawh awi ak kqawn peek khqi ce sim tlaih uhy.
அப்பொழுது இயேசுவினுடைய வார்த்தைகள் அந்த பெண்களின் நினைவிற்கு வந்தன.
9 Phyi awhkawng a ming hlat tlaih awh, cawhkaw a kawnglamkhqi boeih ce thlanghqa hlaioet ingkaw ak changkhqi boeih a venawh kqawn pe uhy.
அவர்கள் கல்லறையில் இருந்து திரும்பிவந்தபோது, இவை எல்லாவற்றையும் பதினொரு அப்போஸ்தலரிடமும், மற்றெல்லோரிடமும் சொன்னார்கள்.
10 Cawhkaw nukhqi cetaw Meri Magadalene, Joanna, Jakob a nu Meri ingkaw cawhkaw ak awm nukhqi ing ceityihkhqi venawh kqawn pe uhy.
மகதலேனா மரியாள், யோவன்னாள், யாக்கோபின் தாயாகிய மரியாள் ஆகியோரும், அவர்களுடன் இருந்த மற்ற பெண்களும், அப்போஸ்தலருக்கு இதைச் சொன்னார்கள்.
11 Cehlai nukhqik awi ce a hqawng na poek unawh, cekkhqi ing ap cangna uhy.
அவர்களோ, இந்தப் பெண்கள் சொன்னதை நம்பவில்லை. இவர்கள் சொன்னது அவர்களுக்கு வீண்பேச்சாகத் தோன்றியது.
12 Cehlai Piter taw tho nawh, hlanna dawng hy. Hlan ce kuunawh toek hy, cehlai a zawlnaak hi doeng ce a huh awh kawpoek a kyi doena voei tlaih hy.
ஆனால், பேதுரு எழுந்து கல்லறையை நோக்கி ஓடினான். அவன் அங்கு எட்டிப் பார்த்தபோது, அவரைச் சுற்றியிருந்த மெல்லிய துணிகள் மட்டும் கிடப்பதைக் கண்டான். அப்பொழுது அவன், என்ன நடந்ததோ என்று தனக்குள்ளே யோசித்துக் கொண்டு திரும்பிப்போனான்.
13 Ce nyn awh ce a mingmih awhkaw thlang pakkhih taw Jerusalem awhkawng meng khqih ak hla Emmau ami ti khaw na cet hy nih.
இதே நாளிலே, சீடர்களில் இரண்டுபேர் எம்மாவூ எனப்பட்ட கிராமத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்கள். இது எருசலேமில் இருந்து 11 கிலோமீட்டர் தூரம் இருந்தது.
14 Lam awh ani ceh hui awh cawhkaw ik-oeih a kawnglamkhqi ce kqawn hy nih.
அவர்கள் இருவரும், நடந்த எல்லாவற்றையும் குறித்து பேசிக்கொண்டே சென்றார்கள்.
15 Ceamyihna cawhkaw a kawnglamkhqi ce anik kqawn hui awh, Jesu amah qoe qoe ce law nawh cekqawi mi cet haih uhy;
அவர்கள், இப்படி இந்தக் காரியங்களைக்குறித்து கலந்துரையாடிக்கொண்டு போகையில், இயேசு தாமே அவர்களுக்கு அருகே வந்து, அவர்களோடு கூடப்போனார்;
16 cehlai cekqawi ing ama ni hatnaak aham cekqawi a mik ce bym pe qawi hy.
ஆனால், அவர் யார் என்று அறியாமலிருக்க அவர்களின் கண்கள் மூடப்பட்டிருந்தது.
17 Cekqawi a venawh, “Ikaw nu ti nani ceh doena na nik kqawn?” tina qawi hy. Cekkqawi taw ak byi na dyi khak hy nih.
இயேசு அவர்களிடம், “நீங்கள் வழிநெடுகிலும் ஒருவரோடொருவர் எதைக் குறித்து பேசிக்கொண்டீர்கள்?” என்று கேட்டார். அவர்கள் துக்கம் தோய்ந்த முகத்துடன் அந்த இடத்திலே நின்றார்கள்.
18 Thlang pynoet, Kleopa ak mingnaak ing, “Jerusalem na ak cetkhqi ak khuiawh, tuhtloek awhkaw ik-oeih amak sim na nang doeng va ni hy voei?” tina hy nih.
அவர்களில் ஒருவனான கிலெயோப்பா என்பவன் அவரிடம், “அப்படியானால் இந்நாட்களில் எருசலேமில் நடந்த காரியங்களை அறியாதபடிக்கு நீர் அந்நியரோ?” என்று கேட்டான்.
19 Anih ing, “Ikaw nanik kqawn? tina qawi hy. Cekqawi ing, “Nazareth Jesu akawng ti. Anih taw tawngha a haiawh thaawmnaak ing awi kqawn nawh ik-oeih sai hy.
அதற்கு அவர், “என்ன காரியங்கள்?” என்று கேட்டார். அவர்கள் இயேசுவுக்குப் பதிலாக: “நசரேயனாகிய இயேசுவைக்குறித்தவைகளே! அவர் இறைவனுக்கு முன்பாகவும், எல்லா மக்களுக்கு முன்பாகவும் வார்த்தையிலும், செயலிலும் வல்லமையுள்ள இறைவாக்கினராக இருந்தார்.
20 Khawsoih boeikhqi ingkaw kaimih anik ukkungkhqi ing anih ce thih sak aham thlang a kut awh pe unawh, thinglam awh tai uhy;
தலைமை ஆசாரியர்களும், எங்கள் ஆட்சியர்களும் அவரை மரண தண்டனைத் தீர்ப்புக்கு உட்படுத்தி, அவரை சிலுவையில் அறைந்தார்கள்;
21 cehlai kaimih ingtaw anih ce Israelkhqi ak hulkung aham a nang ngaih-u unyng. Ceamyihna a awmnaak ce, tuhngawi ve am thum nyn hawh ni.
நாங்களோ, இஸ்ரயேலை மீட்கப் போகிறவர் அவரே என்று நம்பிக்கைக் கொண்டிருந்தோம். இவையெல்லாம் நடந்தேறி மூன்று நாட்கள் ஆகின்றன.
22 Cekcoeng bai awh, kaimih ak khuiawh kaw nu thlang vang tloek ing ka ming ngaih ni kyi sak khqi bai hy. Cik mymcang hqit awh phyi na cet hlai uhy,
அதுவுமல்லாமல், எங்களைச் சேர்ந்த சில பெண்கள் இன்று அதிகாலையில் கல்லறைக்குச் சென்றார்கள். அவர்கள் எங்களுக்குத் திகைப்பூட்டும் செய்தியைக் கொண்டுவந்திருக்கிறார்கள்.
23 a qawk ce am hu voel uhy. Cekkhqi ce kami venna law unawh, anih ce hqing tlaih hawh hy, tinawh ak kqawn peekkung khan ceityihkhqi hu unyng, tinawh kqawn law uhy.
அவர்கள், அவருடைய உடலைக் காணவில்லை. அத்துடன் அந்தப் பெண்கள், இறைத்தூதர்களை கண்டதாகவும், இயேசு உயிரோடு இருப்பதாக இறைத்தூதர்கள் தங்களுக்குச் சொன்னதாகவும் எங்களிடம் வந்து சொன்னார்கள்.
24 Kaming lak awhkaw thlang vang tloek ce phyi na cet bai hlai uhy, nukhqi ing amik kqawn peek amyihna hu uhy, cehlai amah ce am hu uhy,” tina hy nih.
அப்பொழுது, எங்களுடைய கூட்டாளிகளில் சிலர் கல்லறைக்குப் போய், பெண்கள் சொன்னபடியே அதைக் கண்டார்கள். இயேசுவையோ அவர்கள் காணவில்லை” என்றார்கள்.
25 Cekkqawi a venawh, “Ikawmyih aih na nu nami qaw nawh, tawnghakhqi ing ami nak kqawn hyt ce awm am namik cangnaak hy voei!
அப்பொழுது இயேசு அவர்களிடம், “இறைவாக்கினர் சொன்னதை எல்லாம் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே!
26 Khrih ing vemyih kyinaakkhqi a huh coengawh a boeimangnaak khuiawh am lut hly nawh nu?” tina hy.
கிறிஸ்து இந்த வேதனைகளை எல்லாம் அனுபவித்தபின் மகிமைக்குள் பிரவேசிக்க வேண்டுமல்லவா?”
27 Mosi awhkawng kqan nawh tawnghakhqi boeih ing, cauk ciimkhqi boeih awh amah akawng ak kqawnkhqi ce kqawn caih pe qawi hy.
என்று சொல்லி, மோசே தொடங்கி எல்லா இறைவாக்கினரும், தம்மைக் குறித்துச் சொல்லியிருந்த வேதவசனங்களை எல்லாம் எடுத்து, இயேசு அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்.
28 A ni cehnaak hly khaw ce a ni pha tawm awh, Jesu taw loen phat hamna cai hy.
அவர்கள் போய்க்கொண்டிருந்த கிராமத்துக்கு அருகில் வந்ததும், இயேசு தாம் தொடர்ந்து அதற்கு அப்பால் போகிறவர்போல காட்டிக்கொண்டார்.
29 Cehlai cekqawi ing, “Kani venawh awm mai, khaw awm my hawh nawh khaw tla tawm hawh hy,” ti nih nawh hlawh hy nih. Cedawngawh cekqawi a venawh awm aham cet hy.
அவர்கள் அவரிடம், “நீர் எங்களுடன் தங்கும், மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று” என்று அவரை வற்புறுத்திக் கேட்டார்கள். எனவே, இயேசு அவர்களுடன் தங்கும்படி சென்றார்.
30 Cekqawi ing mybuh ai aham ang ngawih awh, phaihpi ce lo nawh zeel awi ak kqawn coengawh thek nawh pe qawi hy.
இயேசு அவர்களோடு சாப்பாட்டுப் பந்தியில் இருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து நன்றி செலுத்தியபின், அதைப் பிட்டு அவர்களுக்குக் கொடுக்கத் தொடங்கினார்.
31 Cawhkawng ani mik dai nawh anih ce hat hy nih, cehlai qeng pe qawi valh hy.
அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டன. அவர்கள் அவரை இன்னார் என்று அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே, இயேசு அவர்களுடைய பார்வையில் இருந்து மறைந்து போய்விட்டார்.
32 “Lam awh ni pau unawh, cauk ciim ak kqawn caih law awh ce nik kawlung mai amyihna kqawng saw kaw my?” ti hy nih.
அப்பொழுது அவர்கள், “வழியிலே அவர் நம்மோடு பேசியபோதும், வேதவசனங்களை நமக்கு விளக்கும்போதும், நம்முடைய இருதயங்கள் நமக்குள்ளே பற்றி எரிந்ததல்லவா?” என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
33 Tho nih nawh Jerusalem na hlat tlaih hy nih. Cawh Thlanghqa hlaioet ingkaw ak changkhqi kutoet na aming cun ce hu hy nih.
அவர்கள் எழுந்து, உடனே எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். அங்கே பதினொருவரும், அவர்களுடன் இருந்தவர்களும் ஒன்றுகூடியிருப்பதைக் கண்டார்கள்.
34 Cekkhqi ing, “Bawipa taw tho tang tang hy, Simon a venna awm dang qu hy,” ti uhy.
அவர்கள் எல்லோரும், “கர்த்தர் உயிரோடு எழுந்திருக்கிறார். அவர் சீமோனுக்குக் காட்சியளித்தது உண்மைதான்!” என்று சொல்லிக்கொண்டார்கள்.
35 A ningnih ingawm lam awh ik-oeih ani huhkhqi, Jesu ing phaihpi ak eh awh ani hat qunaakkhqi ce kqawn pek khqi hy nih.
அப்பொழுது, இந்த இருவரும் தங்களுக்கு வழியிலே நடந்ததையும், இயேசு அப்பத்தைப் பிட்டுக் கொடுத்தபோது, தாங்கள் அவரை எப்படி அறிந்துகொண்டார்கள் என்பதையும் அவர்களுக்குச் சொன்னார்கள்.
36 Ce akawng ce amik kqawn hui awh, Jesu ing, “Naming khanawh ngaihdingnaak awm seh,” tinak khqi hy.
சீடர்கள் இதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போதே, இயேசு தாமே அவர்கள் நடுவே நின்று, “உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக” என்று சொன்னார்.
37 Cemoeseinu, a mingmih ing ly unawh kqih uhy, myihla ak huna ngai qu uhy.
அவர்கள் திடுக்கிட்டு பயமடைந்து, தாங்கள் இறந்துபோனவரின் ஆவியைக் காண்கிறதாக நினைத்துக் கொண்டார்கள்.
38 Anih ing cekkhqi venawh, “Ikawtih naming ngaih a kyi? Ikawtih namik kawlung awh upvoetnaak nami taak?
இயேசு அவர்களிடம், “நீங்கள் ஏன் குழப்பம் அடைந்திருக்கிறீர்கள்? உங்கள் உள்ளங்களில் ஏன் சந்தேகம் எழும்புகிறது?
39 Ka kut ingkaw ka khaw khqi ve toek lah uh. Kai kamah qoe qoe ni! Ni bi unawh, toek lah uh; myihla ingtaw quh ingkaw sa am tahy, cehlai kai taw ta nyng,”,” tinak khqi hy.
என்னுடைய கைகளையும், கால்களையும் பாருங்கள். இது நான், நானேதான்! என்னைத் தொட்டுப் பாருங்கள்; நீங்கள் என்னில் காண்கிறதுபோல, சதையும் எலும்புகளும் ஒரு ஆவிக்கு இருப்பதில்லையே?” என்றார்.
40 Ve ak awi ak kqawn coengawh, a kut ingkaw a khaw ce huh khqi hy.
இயேசு இதைச் சொல்லி முடித்தபோது, தமது கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.
41 Cekkhqi ing zeelmang ingkaw ngaih kyi doena am cangna bak bak uhy tice a huh awh, cekkhqi venawh, “Ai kawi namik ta aw?” tinak khqi hy.
அவர்களோ சந்தோஷத்தாலும், வியப்பாலும் நிறைந்தார்கள். அதை அவர்களால் இன்னும் நம்பமுடியவில்லை. அப்பொழுது இயேசு அவர்களிடம், “சாப்பிடுகிறதற்கு ஏதாவது இங்கே உங்களிடம் இருக்கிறதா?” என்று கேட்டார்.
42 Cekkhqi ing nga a ming sai ce pe uhy.
அவர்கள் நெருப்பில் சுட்ட ஒரு மீன் துண்டை அவருக்குக் கொடுத்தார்கள்.
43 Nga ce lo nawh cekkhqi amik huh awh ai pek khqi hy.
அவர் அதை எடுத்து, அவர்கள் முன்பாகவே சாப்பிட்டார்.
44 A mingmih a venawh, “Ve maw nangmih a venawh ka awm awh kanik kqawn peek khqi hy: Mosi a cawngpyinaak cauk, Tawngha cauk ingkaw Saam cauk awhkaw kai akawng qee na ak awmkhqi boeih ce a soepnaak aham ni, ka tice,” tinak khqi hy.
“நான் உங்களோடு இருக்கையில், உங்களுக்கு இதைச் சொல்லியிருந்தேனே: மோசேயினுடைய சட்டத்திலும், இறைவாக்குகளிலும், சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியிருக்கிறவை யாவும் நிறைவேற வேண்டியதாயிருந்தது” என்றார்.
45 Cekcoengawh cauk awi ce aming zaksimnaak aham cekkhqi ak kawlung ce awng pek khqi hy.
பின்பு அவர்கள், வேதவசனங்களை விளங்கிக்கொள்ளத்தக்கதாக, இயேசு அவர்களுடைய மனதைத் திறந்தார்.
46 A mingmih a venawh, “Vemyihna qee hyt ce awm hy: Khrih ing khuikhanaak zaawk kawmsaw, am thum nyn awh thlakthi anglak awhkawng tho tlaih kaw,
இயேசு அவர்களிடம், “எழுதப்பட்டிருப்பது இதுவே: கிறிஸ்து வேதனை அனுபவிப்பார், மூன்றாம் நாளிலோ உயிருடன் எழுந்திருப்பார்.
47 Jerusalem awhkawng kqan kawmsaw, penglum boeih venawh ang ming awh zutnaak ingkaw thawlh qeenkhaw ngainaak ce khypyi kawm uh.
மனந்திரும்புதலைக் குறித்ததும், பாவமன்னிப்பைக் குறித்ததுமான நற்செய்தியை, எருசலேம் தொடங்கி எல்லா ஜனங்களுக்கும், அவருடைய பெயரில் அறிவிக்கவேண்டும்.
48 Ve a kawnglam boeih ak simpyikung na awm uhyk ti.
இவைகளுக்கெல்லாம் நீங்கள் சாட்சிகளாய் இருக்கிறீர்கள்.
49 Ka pa ak awikam ce nangmih aham tyi law kawng nyng; cehlai khan benna kawng thaawmnaak ing thoeicam na nami awm hlan dy taw ve khawk bau khuiawh ana awm kawm uk ti,” tinak khqi hy.
என் பிதா உங்களுக்குத் தருவதாக வாக்களித்த பரிசுத்த ஆவியானவரை, நான் உங்களுக்கு அனுப்புகிறேன்; உன்னதத்தில் இருக்கும் அந்த வல்லமையினால் நீங்கள் உடுத்துவிக்கப்படும்வரை, இந்தப் பட்டணத்திலே தங்கியிருங்கள்” என்றார்.
50 A mingmih ce Bethani khaw benna cehpyi khqi nawh, a kut soeng nawh zosennaak ce pek khqi hy.
இயேசு பெத்தானியாவரை அவர்களைக் கூட்டிக்கொண்டுபோய், அவர் தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தார்.
51 A mingmih ce zosennaak a peek khqi coengawh khan benna pawm quna ce awm hy.
இயேசு அவர்களை ஆசீர்வதித்துக் கொண்டிருந்தபோதே, அவர்களைவிட்டுப் பரலோகத்திற்குள் எடுத்துக்கொள்ளப்பட்டார்.
52 Cawh amah ce bawk unawh zeelmang doena Jerusalem na ce hlat tlaih uhy.
அப்பொழுது அவர்கள் இயேசுவை வழிபட்டு, மிகுந்த மகிழ்ச்சியுடனே எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள்.
53 Bawkim awh ce awm poe unawh, Khawsa ce kyihcah uhy.
அவர்கள் இறைவனைத் துதித்துக்கொண்டு, ஆலயத்திலேயே தொடர்ந்து தங்கியிருந்தார்கள்.

< Luke 24 >