< Isaiah 27 >

1 Tekah khohnin ah tah BOEIPA loh a cunghang aka ning tih aka len neh aka tlungluen neh Leviathan rhul aka yingyet khaw, Leviathan rhul kawl khaw a cawh ni. Te vaengah tuipuei kah tuihnam te khaw a ngawn ni.
அக்காலத்திலே யெகோவா லிவியாதான் என்னும் நீண்ட பாம்பை, லிவியாதான் என்னும் கோணலான சர்ப்பத்தையே, மிக பெரியதும் பலத்ததுமான தமது பட்டயத்தால் தண்டிப்பார்; சமுத்திரத்தில் இருக்கிற வலுசர்ப்பத்தைக் கொன்றுபோடுவார்.
2 Tekah khohnin ah tah naidoeh misurdum te doo laeh.
அக்காலத்திலே நல்ல திராட்சைரசத்தைத் தரும் திராட்சைத்தோட்டம் உண்டாயிருக்கும்; அதைக் குறித்துப் பாடுங்கள்.
3 BOEIPA kamah loh te ka kueinah tih mikhaptok ah ka suep. Te te khoyin loh cawh ve ka ti dongah khothaih ah ka kueinah.
யெகோவாவாகிய நான் அதைக் காப்பாற்றி, அடிக்கடி அதற்குத் தண்ணீர்ப்பாய்ச்சி, ஒருவரும் அதைச் சேதப்படுத்தாமலிருக்க அதை இரவும்பகலும் காத்துக்கொள்வேன்.
4 Kosi he kai taengah om pawh. Caemtloek vaengkah lota hling kai taengah aka pae te unim? Te te cuk thil vetih rhenten ka hlup mako.
கோபம் என்னிடத்தில் இல்லை; முட்செடியையும் நெரிஞ்சிலையும் எனக்கு விரோதமாக போரில் கொண்டுவருகிறவன் யார்? நான் அவைகள்மேல் வந்து, அவைகளை எல்லாம் கொளுத்திவிடுவேன்;
5 Te cakhaw ka lunghim te hangdang thil saeh lamtah kamah taengah rhoepnah saii saeh, kamah taengah rhoepnah saii saeh.
இல்லாவிட்டால் அவன் என்பெலனைப் பற்றிக்கொண்டு என்னுடன் ஒப்புரவாகட்டும்; அவன் என்னுடன் ஒப்புரவாவான்.
6 A yung a hlak tue a pha vaengah Jakob te khooi ni. Te vaengah Israel khaw saihnim vetih a thaih loh lunglai ah baetawt ni.
யாக்கோபு வேர்பற்றி, இஸ்ரவேல் பூத்துக்காய்த்து உலகத்தைப் பலனால் நிரப்பும் நாட்கள் வரும்.
7 Hmasoe banglam nim anih te a boh khaw a boh aih? Ngawnnah banglam nim a ngawn khaw a ngawn aih.
அவர் அவனை அடித்தவர்களை அடித்ததுபோல இவனை அடிக்கிறாரோ? அவர்கள் கொல்லப்படும் கொலையாக இவன் கொல்லப்படுகிறானோ?
8 A rhimong la tueih ham na mah coeng. A hil neh khothaih kanghawn bangla khak a haek.
தேவரீர் இஸ்ரவேல் மக்களைத் துரத்திவிடும்போது குறைவாக அதனுடன் வழக்காடுகிறீர்; கொண்டல் காற்றடிக்கிற நாளிலே அவர் தம்முடைய கடுங்காற்றினால் அதை விலக்கிவிடுகிறார்.
9 Te dongah he nen ni Jakob kathaesainah a dawth pah vetih a tholh kah a thaih boeih he a khoe pa eh. Te vaengah hmueihtuk kah lungto boeih te lungbok lung bangla a khueh ni. Asherah neh bunglawn a dae pah vetih te thoo voel mahpawh.
ஆகையால், அதினால் யாக்கோபின் அக்கிரமம் நீக்கப்படும்; தோப்புஉருவங்களும், சிலைகளும் இனி நிற்காமல் அவர்கள் பலிபீடங்களின் கற்களையெல்லாம் நொறுக்கப்பட்ட சுண்ணாம்பு கற்களாக்கிவிடும்போது, அவர்களுடைய பாவத்தை அவர் நீக்கிவிடுவாரென்பதே அதினால் உண்டாகும் பலன்.
10 Khopuei cakrhuet tolkhoeng bueng te a hlah tih, khosoek bangla a hnoo. Vaito ca loh hnap a luem thil tih pahoi a kol thil vaengah tah a boe khaw a thok sak.
௧0பாதுகாப்பான நகரம் வெட்டாந்தரையாகும், அந்த குடியிருப்பு தள்ளுண்டு வனாந்திரத்தைப்போல விட்டுவிடப்பட்டதாயிருக்கும்; கன்றுக்குட்டிகள் அங்கே மேய்ந்து, அங்கே படுத்துக்கொண்டு, அதின் தழைகளைத் தின்னும்.
11 A vuei aka rhae he a khaem uh. Huta ha pawk vaengah te a tok uh dae pilnam kah yakmingnah om pawh. Te dongah anih aka saii loh anih a haidam tih anih aka saii loh anih te rhen pawh.
௧௧அதின் கிளைகள் உலரும்போது ஒடிந்துபோகும்; பெண்கள் வந்து அவைகளைக் கொளுத்திவிடுவார்கள்; அது உணர்வுள்ள மக்களல்ல; ஆகையால் அதை உண்டாக்கினவர் அதற்கு இரங்காமலும், அதை உருவாக்கினவர் அதற்குக் கிருபை செய்யாமலும் இருப்பார்.
12 Tekah khohnin a pha vaengah tuiva lamloh Egypt soklong duela cangmo te BOEIPA loh a boh ni. Nangmih Israel ca rhoek te pakhat phoeiah pakhat n'yoep ni.
௧௨அக்காலத்திலே, யெகோவா ஆற்றங்கரையின் விளைவு துவங்கி எகிப்தின் நதிவரை போரடிப்பார்; இஸ்ரவேல் மக்களே, நீங்கள் ஒவ்வொருவராகச் சேர்க்கப்படுவீர்கள்.
13 Tekah khohnin a pha vaengah tuki a len te a ueng vetih Assyria khohmuen ah aka milh khaw ha pawk uh ni. Egypt kho kah a heh rhoek loh Jerusalem kah tlang cim dongah BOEIPA a bawk uh ni.
௧௩அக்காலத்திலே பெரிய எக்காளம் ஊதப்படும்; அப்பொழுது, அசீரியா தேசத்திலே சிதறடிக்கப்பட்டவர்களும், எகிப்துதேசத்திலே துரத்திவிடப்பட்டவர்களும் வந்து, எருசலேமிலுள்ள பரிசுத்த மலையிலே யெகோவாவைப் பணிந்துகொள்ளுவார்கள்.

< Isaiah 27 >