< ଲୁକ 15 >

1 ଗଟ୍‌ଦିନ୍‌ ରିବ୍‌ନି ଆର୍‌ ହାହି ଲକ୍‌ମଃନ୍ ଜିସୁର୍‌ କଃତା ସୁଣୁକ୍‌ ତାର୍‌ ହାକ୍‌ ଆସ୍ତି ରିଲାୟ୍‌ ।
எல்லா வரி வசூலிப்பவர்களும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்துசேர்ந்தார்கள்.
2 ସେତାକ୍‌ ପାରୁସିମଃନ୍ ଆର୍‌ ଦଃର୍ମ୍‌ଗୁରୁମଃନ୍‌ ଇରି ଦଃକି କଃରି ଲିନ୍ଦା କଃରୁକେ ଦଃର୍ଲାୟ୍‌ ଆର୍‌ ଲିନ୍ଦା କଃରି କୟ୍‌ଲାୟ୍‌, “ଇ ଲକ୍‌ ହାହିମଃନାର୍‌ ସଃଙ୍ଗ୍ ମିସୁଲା ଆର୍‌ ସେମଃନାର୍‌ ସଃଙ୍ଗ୍ କାଉଁଲା!”
அப்பொழுது பரிசேயர்களும் வேதபண்டிதர்களும் முறுமுறுத்து: இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடு சாப்பிடுகிறார் என்றார்கள்.
3 ସେତାକ୍‌ ଜିସୁ ସେମଃନ୍‌କେ ଇ କଃତା କୟ୍‌ଲା,
அவர்களுக்கு அவர் சொன்ன உவமையாவது:
4 “ତୁମାର୍‌ ବିତ୍ରେ ଇରଃକମ୍‌ କୁୟ୍‌ ଲକ୍‌ ଆଚେ ଜେ, ତାର୍‌ ଜଦି ହାଁଚ୍‌କଳି ମେଣ୍ଡା ରେତି, ଆର୍‌ ସେମଃନାର୍‌ ବିତ୍ରେ ଗଟେକ୍‌ ଆଜେଦ୍‌, ତଃବେ ସେ ଲକ୍‌ ଗଟେକ୍‌ଉଣା ହାଁଚ୍‌କଳି ମେଣ୍ଡାକ୍‌ ହଃଦାୟ୍‌ ଚାଡିକଃରି, ସେ ଆଜିରିଲା ମେଣ୍ଡାକ୍‌ ମିଳାଉତା ହଃତେକ୍‌ ତାକେ କାୟ୍‌ ନଃଲଳେ?
உங்களில் ஒரு மனிதன் நூறு ஆடுகளை உடையவனாக இருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்திரத்திலேவிட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்கும்வரை தேடித்திரியானோ?
5 ଜଃଡେବଃଳ୍‌ ସେ ଲକ୍‌ ଆଜିରିଲା ମେଣ୍ଡାକ୍‌ ମିଳାୟ୍‌ଦ୍‌ ସେ ବଃଡେ ସଃର୍ଦାଅୟ୍‌, ତାକ୍‌ କଃନ୍ଦେ ବୟ୍‌ କଃରି ତାର୍‌ ଗଃରେ ଆଣେଦ୍‌ ।
கண்டுபிடித்தபின்பு, அவன் மகிழ்ச்சியோடு அதைத் தன் தோள்களின்மேல் போட்டுக்கொண்டு,
6 ଆରେକ୍‌ ଅଃହ୍‌ଣାର୍‌ ଲକ୍‌ବାକ୍‌କେ ଆର୍‌ ହାକିହଃଳ୍‌ସାକେ କୁଦି ସେମଃନ୍‌କେ କୟ୍‌ଦ୍‌, ‘ଆସା ତୁମିମଃନ୍ ମର୍‌ ସଃଙ୍ଗ୍ ସଃର୍ଦା କଃରା, କାୟ୍‌ତାକ୍‌ବଃଲେକ୍‌ ଆଜିରିଲା ମେଣ୍ଡାକେ ମିଳାୟ୍‌ଲେ ।’
வீட்டிற்கு வந்து, நண்பர்களையும் அண்டைகுடும்பத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட மகிழுங்கள் என்பான் அல்லவா?
7 ମୁଁୟ୍‌ ତୁମିକେ କଃଉଁଲେ, ସେରଃକମ୍‌ ଜୁୟ୍‌ ଲକ୍‌ମଃନାର୍‌ ମଃନ୍‌ ବାଦ୍‌ଲାୟ୍‌ ଆସ୍ତାକ୍‌ ମଃନ୍‌ ନାୟ୍‌, ଇବାନ୍ୟା ଗଟେକ୍‌ଉଣା ହାଁଚ୍‌କଳି ଦଃର୍ମି ଲକ୍‌ମଃନାର୍‌ ତଃୟ୍‌ହୁଣି, ଜେ ହାହ୍‌ ଚାଡେଦ୍‌, ଇରଃକମ୍‌ ଗଟେକ୍‌ ହାହି ଲକାର୍‌ ଗିନେ ସଃର୍ଗେ ଅଃଦିକ୍‌ ସଃର୍ଦା ଅୟ୍‌ଦ୍‌ ।”
அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்து மகிழ்ச்சி உண்டாகிறதைவிட மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த மகிழ்ச்சி உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
8 “ତଃବେ ଇରଃକମ୍‌ କୁୟ୍‌ ମାୟ୍‌ଜି ଆଚେ ଜେ, ତାର୍‌ ଜଦି ଦଃସ୍‌ଗଟ୍‌ ରୁହା ଟଃକା ରଃୟ୍‌ଦ୍‌, ଆର୍‌ ସେତିର୍‌ ଗଟେକ୍‌ ଆଜେଦ୍‌, ତଃବେ ସେ କୁପି ଲାଗାୟ୍‌ କଃରି ଗଃର୍‌ ରୁଣ୍ଡାୟ୍‌ ସେରି ମିଳାଉତା ହଃତେକ୍‌ କାୟ୍‌ ଜଃତୁନେ ନଃଲଳେ?
அன்றியும், ஒரு பெண் பத்து வெள்ளிக்காசுகளை உடையவளாக இருந்து, அதில் ஒரு வெள்ளிக்காசு காணாமற்போனால், விளக்கைக் கொளுத்தி, வீட்டைப் பெருக்கி, அதைக் கண்டுபிடிக்கிறவரைக்கும் அக்கறையோடு தேடாமலிருப்பாளோ?
9 ଆରେକ୍‌ ଆଜିରିଲା ସେ ଟଃକା ମିଳାୟ୍‌ଲେକ୍‌ ସେ ତାର୍‌ ସଃଙ୍ଗ୍‌ମଃନ୍‌କେ ଆର୍‌ ହାକିହଃଳ୍‌ସାକେ କୁଦିକଃରି କୟ୍‌ଦ୍‌, ମର୍‌ ସଃଙ୍ଗ୍ ସଃର୍ଦା କଃରା, ବଃଲେକ୍‌ ମର୍‌ ଜୁୟ୍‌ ଟଃକା ଆଜିରିଲି ସେରି ମିଳାୟ୍‌ଲେ ।
கண்டுபிடித்தபின்பு, தன் தோழிகளையும் அண்டை வீட்டுக்காரிகளையும் கூட வரவழைத்து: காணாமற்போன வெள்ளிக்காசைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட மகிழ்ச்சியாக இருங்கள் என்பாள் அல்லவா?
10 ମୁୟ୍‌ଁ ତୁମିମଃନ୍‌କେ କଃଉଁଲେ, ସେରଃକମ୍‌ ଜେ ହାହ୍‌ଚାଡେଦ୍‌, ଇରଃକମ୍‌ ଗଟେକ୍‌ ହାହିର୍‌ ଗିନେ ଇସ୍ୱରାର୍‌ ଦୁତ୍‌ମଃନାର୍‌ ଚଃମେ ସଃର୍ଦା ଅୟ୍‌ଦ୍‌ ।”
௧0அதுபோல மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதர்களுக்கு முன்பாக மகிழ்ச்சி உண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
11 ଜିସୁ ଆରେକ୍‌ କୟ୍‌ଲା, “ଗଟ୍‌ ଲକାର୍‌ ଜୁଳେକ୍‌ ହୟ୍‌ସି ରିଲାୟ୍‌ ।
௧௧பின்னும் அவர் சொன்னது: ஒரு மனிதனுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள்.
12 ସାନ୍‌ ହୟ୍‌ସି ଉବାସିକ୍‌ କୟ୍‌ଲା, ‘ଉବା, ମର୍‌ ବାଗାର୍‌ ଦଃନ୍‌ବିତ୍‌ ଅଃବେ ମକ୍‌ ଦେ ।’ ତଃବେ ତାର୍‌ ଉବାସି ତାର୍‌ ଦଃନ୍‌ବିତ୍‌କେ ସଃର୍ନେ ଦୁୟ୍‌ ବାୟ୍‌କ୍‌ ବାଟାକଃରି ଦିଲା ।
௧௨அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, சொத்தில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் சொத்தை பங்கிட்டுக்கொடுத்தான்.
13 ଅଃଳକ୍‌ ଦିନ୍ ଗଃଲାହଃଚେ ସାନ୍ ହୟ୍‌ସି ତାର୍‌ ବାଗାର୍‌ ଦଃନ୍‌ବିତ୍‌କେ ଗଟେତଃୟ୍‌ କଃରି ଦୁର୍‌ ଦେସେ ଗଃଲା, ଆର୍‌ ସେତି ଜାୟ୍‌ ହଲ୍ୟାହଲ୍ୟା ଅଃହ୍‌ଣାର୍‌ ଜିବନ୍‌ କାଟି ସଃର୍ନେ ଦଃନ୍‌ବିତ୍‌ ବୁଡାୟ୍‌ଲା ।
௧௩சில நாட்களுக்குப்பின்பு, இளையமகன் தன் சொத்தைவிற்று பணத்தை திரட்டிக்கொண்டு, தூரதேசத்திற்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாக வாழ்ந்து, தன் சொத்தை அழித்துப்போட்டான்.
14 ମଃତର୍‌ ସଃବୁ ଦଃନ୍ ବୁଡାୟ୍‌ଲା ହଃଚେ, ସେ ଦେସେ କଃତାର୍‌ ଅୟ୍‌ଲାକ୍‌, ତାର୍‌ ଅକେଟ୍‌ ଅଃଉଁକେ ଦଃର୍ଲି ।
௧௪எல்லாவற்றையும் அவன் செலவழித்தபின்பு, அந்த தேசத்திலே கொடிய பஞ்சமுண்டானது. அப்பொழுது அவன் வறுமைக்குள்ளானான்,
15 ସେତାର୍‌ଗିନେ ସେ ଜାୟ୍‌ ସେ ଦେସାର୍‌ ଗଟେ ଲକାର୍‌ ତଃୟ୍‌ ଜାୟ୍‌ ଗତି କଃଟ୍‌ଲା ଆର୍‌ ସେ ଲକ୍‌ ତାକ୍‌ ଗୁସ୍ରା ଚଃରାଉଁକେ ତାର୍‌ ହଃଦାୟ୍‌ ହଃଟାୟ୍‌ଲା;
௧௫அந்த தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில்போய் வேலையில் சேர்ந்தான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான்.
16 ଆରେକ୍‌ ଗୁସ୍ରାମଃନ୍‌ ଜୁୟ୍‌ ଚେମି କାତି ରିଲାୟ୍‌, ସେ କାଦି କାୟ୍‌କଃରି ସେ ତାର୍‌ ହେଟ୍‌ ହୁରାଉଁକେ ମଃନ୍‌ କଃର୍ତିରିଲା, ମଃତର୍‌ କେ ତାକ୍‌ କାୟ୍‌ରି ହେଁ ନଃଦେତିରିଲାୟ୍‌ ।
௧௬அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் பசியைதீர்க்க ஆசையாக இருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.
17 ମଃତର୍‌ ସେ ଚେତ୍‌ନା ହାୟ୍‌ କୟ୍‌ଲା, ‘ମର୍‌ ଉବାର୍‌ ଗଃରେ କଃବାଳିମଃନାର୍‌ କାଦି ଅଃଗ୍‌ଳି ଜଃଉଁଲି, ମଃତର୍‌ ମୁୟ୍‌ଁ ଇତି ରଃୟ୍‌ କଃରି ବୁକେ ମଃରୁଲେ ।
௧௭அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய வேலைக்காரர்கள் எத்தனையோ பேருக்கு நிறைவான உணவு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன்.
18 ଅଃବେ ମୁୟ୍‌ଁ ଉଟି ମର୍‌ ଉବାର୍‌ ହାକ୍‌ ଜାୟ୍‌ନ୍ଦ୍ ଆର୍‌ ତାକ୍‌ କୟ୍‌ଦ୍‌, ଉବା, ସଃର୍ଗାର୍‌ ମାପ୍ରୁର୍‌ ବିରଦେ ଆର୍‌ ତର୍‌ ବିରଦେ ମୁଁୟ୍‌ ହାହ୍‌ କଃଲେ ଆଚି ।
௧௮நான் எழுந்து என் தகப்பனிடத்திற்குப்போய்: தகப்பனே, பரலோகத்திற்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவம் செய்தேன்.
19 ଆଜିହୁଣି ମୁୟ୍‌ଁ ତର୍‌ ହୟ୍‌ଦି ବଃଲାୟ୍‌ ଅଃଉଁକେ ମର୍‌ ଆରେକ୍‌ ଜୟ୍‌ଗ୍‌ ନାୟ୍‌, ମଃତର୍‌ ଅଃବେ ମକ୍‌ ତର୍‌ ଗଟେକ୍‌ ଗତିକଃବାଳି ହର୍‌ କଃରି ଦଃର୍‌ ।’
௧௯இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் தகுதியற்றவன், உம்முடைய வேலைக்காரர்களில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி;
20 ସେ ଉଟି ତାର୍‌ ଉବାସିର୍‌ ହାକ୍‌ ଗଃଲା, ମଃତର୍‌ ସେ ଦୁରିକ୍‌ ରିଲା ବଃଳ୍‌ ତାର୍‌ ଉବାସି ତାକ୍‌ ଦଃକି ଦଃୟା ଦଃକାୟ୍‌ଲା, ଆର୍‌ ଦଃବ୍‌ଳିଜାୟ୍‌ ତାକେ ହଃଟଳି କଃରି ଲଃବଦେ ଚୁମ୍‌ଲା ।
௨0எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தம்செய்தான்.
21 ହୟ୍‌ସି ତାକ୍‌ କୟ୍‌ଲା, ‘ଉବା, ସଃର୍ଗାର୍‌ ମାପ୍ରୁର୍‌ ବିରଦେ ଆର୍‌ ତର୍‌ ବିରଦେ ମୁୟ୍‌ଁ ହାହ୍‌ କଃରିଆଚି, ଅଃବେ ଆର୍‌ ତର୍‌ ହଅ ବଃଲି କଃଉଆୟ୍‌ ଅଃଉତାର୍‌ ମୁଁୟ୍‌ ଜୟ୍‌ଗ୍‌ ନାୟ୍‌ ।’
௨௧குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே பரலோகத்திற்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவம் செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் தகுதியற்றவன் என்று சொன்னான்.
22 ମଃତର୍‌ ଉବାସି ତାର୍‌ ଗତିଦଃଙ୍ଗ୍‌ଳାମଃନ୍‌କ୍‌ କୟ୍‌ଲା, ସଃବ୍‌କେ ନିକ ବଃସ୍ତର୍‌ ବେଗି ଆଣି ଆକ୍‌ ହିନ୍ଦାଉଆ, ତାର୍‌ ଆତେ ହାଜେର୍‌ ଆର୍‌ ତାର୍‌ ହାଦେ ହାଣ୍ଡାୟ୍‌ ହିନ୍ଦାଉଆ ।
௨௨அப்பொழுது தகப்பன் தன் வேலைக்காரர்களை நோக்கி: நீங்கள் உயர்ந்த ஆடைகளை கொண்டுவந்து இவனுக்கு உடுத்தி இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள்.
23 ଆରେକ୍‌ ଗଟେକ୍‌ ଦୁମା ମେଣ୍ଡା ମାରା; ଆସା ଅଃମିମଃନ୍‌ ବଜି କଃରି ସଃର୍ଦା କଃରୁଆଁ ।
௨௩கொழுத்தக் கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் விருந்து கொண்டாடுவோம்.
24 ବଃଲେକ୍‌ ମର୍‌ ଇ ହଅ ମଃରି ଜାୟ୍‌ରିଲା ଆରେକ୍‌ ବାଚ୍‌ଲା; ଆଜିରିଲା, ଆରେକ୍‌ ମିଳ୍‌ଲା । ତଃବେ ସେମଃନ୍ ସଃର୍ଦା କଃରୁକେ ଦଃର୍ଲାୟ୍‌ ।”
௨௪என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் கொண்டாடத் தொடங்கினார்கள்.
25 “ସଃଡେବଃଳ୍‌ ତାର୍‌ ବଃଡ୍ ହୟ୍‌ସି ହଃଦାୟ୍‌ ରିଲା । ସେ ଜଃଡେବଃଳ୍‌ ଆସି ଗଃର୍‌ ଚଃମେ ହଚ୍‌ଲା, ସଃଡେବଃଳ୍‌ ବାଜା ବାଜ୍‌ତାର୍‌ ଆର୍‌ ନାଚ୍‌ତାର୍‌ ଆଉଲି ସୁଣିକଃରି,
௨௫அவனுடைய மூத்தகுமாரன் வயலில் இருந்தான். அவன் திரும்பி வீட்டிற்கு அருகில் வருகிறபோது, கீதவாத்தியத்தையும் நடனக்களிப்பையும் கேட்டு;
26 ସେ ଦଃଙ୍ଗ୍‌ଳାମଃନାର୍‌ ବିତ୍ରେ ଗଟ୍‌ଲକେ କୁଦିକଃରି ଇସଃବୁ କାୟ୍‌ରି ଅଃଉଁଲି ବଃଲି ତାକ୍‌ ହଃଚାର୍ଲା ।
௨௬வேலைக்காரர்களில் ஒருவனை அழைத்து: இதென்ன என்று விசாரித்தான்.
27 ସେ ଦଃଙ୍ଗ୍‌ଳା ତାକ୍‌ କୟ୍‌ଲା, ତର୍‌ ବାୟ୍‌ଦି ଗଃରେ ବାଉଳି ଆସିଆଚେ, ଆର୍‌ ତର୍‌ ଉବାଦି ତାକ୍‌ ନିକ ଗଃଗାଳେ ହାୟ୍‌ଲାକ୍‌ ଦୁମା ମେଣ୍ଡା ମାରିଆଚେ ।”
௨௭அதற்கு அவன்: உம்முடைய சகோதரன் வந்தார், அவர் மறுபடியும் சுகத்துடனே உம்முடைய தகப்பனிடத்தில் வந்து சேர்ந்தபடியினாலே அவருக்காகக் கொழுத்தக் கன்றை அடித்திருக்கிறார் என்றான்.
28 “ସେତାର୍‌ଗିନେ ସେ ରିସା ଅୟ୍‌କଃରି ଗଃରେ ଜଃଉଁକେ ମଃନ୍‌ ନଃକେଲା; ମଃତର୍‌ ତାର୍‌ ଉବାସି ଆସିକଃରି ତାକ୍‌ କଃତେକ୍‌ ଗଃଉଆରି କଃରୁକେ ଦଃର୍ଲା ।
௨௮அப்பொழுது அவன் கோபமடைந்து உள்ளே போக விருப்பமில்லாதிருந்தான். தகப்பனோ வெளியே வந்து அவனை வருந்தி அழைத்தான்.
29 ମଃତର୍‌ ସେ ଉବାସିକ୍‌ କୟ୍‌ଲା, ଦଃକ୍‌, ଅଃତେକ୍‌ ବଃର୍ସ୍‌ ଅୟ୍‌ଲି ମୁୟ୍‌ଁ ତର୍‌ ଗଟ୍‌ ଦଃଙ୍ଗ୍‌ଳା ହର୍‌ କଃରି ସେବା କଃରିଆସୁଲେ, ଆର୍‌ କଃବେ ହେଁ ମୁୟ୍‌ଁ ତର୍‌ ଆଦେସ୍‌ ଅମାନ୍ୟା ନଃକେରି, ଅୟ୍‌ଲେକ୍‌ ହେଁ ମର୍‌ ସଃଙ୍ଗ୍‌ମଃନାର୍‌ ସଃଙ୍ଗ୍ ମିସିକଃରି ବଜି କଃରୁକେ ତୁୟ୍‌ ମକ୍‌ କଃବେ ମେଣ୍ଡାହିଲା ହେଁ ନଃଦେସି;
௨௯அவன் தகப்பனுக்கு மறுமொழியாக: இதோ, இத்தனை வருடகாலமாக நான் உமக்கு வேலைச்செய்து, எப்பொழுதுமே எல்லாவற்றிலும் உம்முடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்திருந்தும், என் நண்பர்களோடு நான் மகிழ்ச்சியாக இருக்கும்படி நீர் ஒருபோதும் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்கவில்லை.
30 ମଃତର୍‌ ତର୍‌ ଇ ଜୁୟ୍‌ ହୟ୍‌ଦି ଦାରିୟାଣିମଃନାର୍‌ ସଃଙ୍ଗ୍ ତର୍‌ ଦଃନ୍‌ବିତ୍‌ ବୁଡାୟ୍‌ଲା ଆର୍‌ ଜଃଡେବଃଳ୍‌ ସେ ବାଉଳି ଆୟ୍‌ଲା, ସଃଡେବଃଳ୍‌ ତୁୟ୍‌ ତାର୍‌ ଗିନେ ଗଟ୍‌ ଦୁମା ମେଣ୍ଡା ମାର୍‌ଲିସ୍‌ ।
௩0வேசிகளிடத்தில் உம்முடைய சொத்துக்களை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே கொழுத்தக் கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே என்றான்.
31 ତଃବେ ତାର୍‌ ଉବାସି ତାକେ କୟ୍‌ଲା, ହଅରେ ତୁୟ୍‌ ତ ସଃବୁବଃଳ୍‌ ମର୍‌ ସଃଙ୍ଗ୍ ଆଚ୍‌ସି, ଆର୍‌ ଜୁୟ୍‌ସଃବୁ ମର୍‌ ସେରି ସଃବୁ ତର୍‌;
௩௧அதற்குத் தகப்பன்: மகனே, நீ எப்போதும் என்னோடு இருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாக இருக்கிறது.
32 ମଃତର୍‌ ଇ ଜୁୟ୍‌ ତର୍‌ ବାୟ୍‌ଦି ମଃରି ଜାୟ୍‌ରିଲା ଆରେକ୍‌ ବଚ୍‌ଲା, ଆଜିରିଲା ଆରେକ୍‌ ମିଳ୍‌ଲା, ସେତାର୍‌ ଗିନେ ବଜି ଆର୍‌ ସଃର୍ଦା କଃର୍ତାର୍‌ ରିଲି ।”
௩௨உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் கொண்டாடி மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமே என்று சொன்னான் என்றார்.

< ଲୁକ 15 >