< लूका 14 >

1 यीशु फिरी आरामेरे दिहाड़े एक्की फरीसेरे घरे रोट्टी खाने जेव त बड़े फरीसी लोक ध्याने सेइं लोरे थिये तकने, ताके तैसेरी कोई गलती ट्लान।
ஒரு ஓய்வுநாளிலே பரிசேயர்களில் தலைவனாகிய ஒருவனுடைய வீட்டிலே அவர் உணவு உட்கொள்ளும்படிக்குச் சென்றிருந்தார்.
2 तैड़ी अक बिमार मैन्हु थियो ज़ेसेरी ज़ंघां पैखड़ी शोजती थी ते पस-पाक च़लती थी, तै तैड़ी बिशोरो थियो।
அப்பொழுது நீர்க்கோவை வியாதியுள்ள ஒரு மனிதன் அவருக்கு முன்பாக இருந்தான். அவனுக்கு என்ன செய்வாரோவென்று மக்கள் அவர்மேல் நோக்கமாக இருந்தார்கள்.
3 यीशुए शास्त्री ते फरीसी लोकन पुच़्छ़ू, “कि आरामेरे दिहाड़े कानूनेरे मुताबिक कोई बज्झ़ानो जेइज़े की नईं?”
இயேசு நியாயப்பண்டிதர்களையும் பரிசேயர்களையும் பார்த்து: ஓய்வுநாளிலே சுகமாக்குகிறது நியாயமா என்று கேட்டார்.
4 तैना च़ुप राए, तैखन यीशुए तैस बिमारे पुड़ अपनो हथ रख्खो ते तै बज्झ़ाव, ते घरजो भेज़ो।
அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள். அப்பொழுது அவர் அவனை அழைத்து, சுகமாக்கி, அனுப்பிவிட்டு,
5 ते फरीसन सेइं ज़ोवं, “तुसन मरां एरो कौने, ज़ेसेरू मट्ठू या दांत खड्डे मां खिरके ते आरामेरी दिहाड़ी भोए, ते तैस तैट्ठां बेइर न कढे?”
அவர்களை நோக்கி: உங்களில் ஒருவனுடைய கழுதையாவது எருதாவது ஓய்வுநாளில் கிணற்றில் விழுந்தால், அவன் அதை உடனே தூக்கிவிடமாட்டானா என்றார்.
6 ते तैन लोकेईं यीशुएरी गल्लां केरो जुवाब न देइ बटो।
அதற்கு உத்தரவுசொல்ல அவர்களால் கூடாமற்போனது.
7 ज़ैखन यीशुए हेरू कि, ज़ैना लोक धाम ज़ोइतां रोट्टी खाने कुजोरेन केन्च़रे खास लोकां केरि ठार च़ुनतन, तैनी तैन अक मिसाल दित्ती।
விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தெரிந்துகொண்டதை அவர் பார்த்து, அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்:
8 “ज़ैखन तुसन कोई ड्लाएरी धामी मां कुजाए। ज़ै तैनेईं खास मैन्हु केरे लेइ ठार रख्खोरी भोए, तुस तैड़ी न बिश्शथ, भोइ सकते कि होरो कोई तुसन करां जादे खास मैन्हु कुजेवरो भोए।
ஒருவனால் திருமணவிருந்துக்கு நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, பந்தியில் முதன்மையான இடத்தில் உட்காராதே; உன்னைவிட மதிப்புக்குரியவன் ஒருவேளை அவனால் அழைக்கப்பட்டிருப்பான்.
9 ते तुसन दुइये ज़न्न कुजाने बालो तुसन कां एइतां ज़ोए, ए ठार होरि केरे लेइए ते तुसन शरमेइतां खड़े उठनू पे, ते सेब्भन करां पत्र बिशनू पे।
அப்பொழுது உன்னையும் அவனையும் அழைத்தவன் உன்னிடத்தில் வந்து: இவருக்கு இடங்கொடு என்பான்; அப்பொழுது நீ வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போகவேண்டியதாயிருக்கும்.
10 ज़ैखन भी कोई तुसन धाम ज़ोइतां कुजाए त सेब्भन करां पत्र बिश्शा, ताके ज़ैखन तेरो कुजाने बालो एज्जे ते ज़ोए, ‘दोस्त, अगर एइतां खास ठैरी बिश,’ त तैन लोकां केरे सामने तेरी केत्री बड़याई भोनीए।
௧0நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, கடைசி இடத்தில்போய் உட்காரு; அப்பொழுது உன்னை அழைத்தவன் வந்து: நண்பனே, உயர்ந்த இடத்தில் வாரும் என்று சொல்லும்போது, உன்னுடனே கூடப் பந்தியிருக்கிறவர்களுக்கு முன்பாக உனக்குப் பெருமையுண்டாகும்.
11 किजोकि ज़ै कोई अपनो आप बड्डो बनालो त तै निकड़ो बनाव गालो ते ज़ै कोई अपनो आप निकड़ो बनालो त तै बड्डो बनाव गालो।”
௧௧தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.
12 फिरी यीशुए, तैस फरीसी मैन्हु सेइं ज़ैनी तै कुजोरो थियो ज़ोवं, “ज़ैखन तुस दिसेरी या रातरी धामी मां मैनन् कुजाथ, त अपने दोस्तन या ढ्लान रिशतेदारन या अपने अमीर पड़ोसन न कुजेइयथ। किजोकि तैना भी तीं कुजेइतां तेरू एवसान मुकेइ छ़डेले।
௧௨அன்றியும் அவர் தம்மை விருந்துக்கு அழைத்தவனை நோக்கி: நீ பகல்விருந்தாவது இராவிருந்தாவது பண்ணும்போது, உன் நண்பர்களையாவது உன் சகோதரர்களையாவது, உன் உறவினர்களையாவது, செல்வமுள்ள அண்டை வீட்டாரையாவது அழைக்கவேண்டாம்; அழைத்தால் அவர்களும் உன்னை அழைப்பார்கள், அப்பொழுது உனக்குப் பதிலுக்குப்பதில் செய்ததாகும்.
13 बल्के ज़ैखन तुस धाम देथ त टोंटे, कानो, गरीब गुरबे, परदेशी कुजेइयथ।
௧௩நீ விருந்து பண்ணும்போது ஏழைகளையும் நடக்கமுடியாதவர்களையும், முடவர்களையும், பார்வையற்றவர்களையும் அழைப்பாயாக.
14 ते परमेशर तुसन बरकत देलो, किजोकि तैन कां किछ भी नईं ज़ैस सेइं तैना तुश्शू एवसान मुकेइ बटन, ते तेरे एस एवसानेरो फल धेर्मी लोकन ज़ींते भोने सेइं साथी फैसलेरी दिहैड़ी मैलेलो।”
௧௪அப்பொழுது நீ பாக்கியவானாக இருப்பாய்; அவர்களால் உனக்குத் திரும்பச் செய்யமுடியாது; நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உனக்கு திரும்பச்செய்யப்படும் என்றார்.
15 ट्लाहनन् मरां एक्के एन गल्लां शुन्तां यीशु सेइं ज़ोवं, “परमेशरेरे राज़्ज़ेरी धामी मां खाने बालो धन भोलो।”
௧௫அவரோடுகூடப் பந்தியிருந்தவர்களில் ஒருவன் இவைகளைக் கேட்டபொழுது, அவரை நோக்கி: தேவனுடைய ராஜ்யத்தில் உணவு உட்கொள்ளுகிறவன் பாக்கியவான் என்றான்.
16 यीशुए तैस जुवाब दित्तो, “केन्चे मैने अक बड़ी धाम दित्ती ते बड़े लोक कुजाए।
௧௬அதற்கு அவர்: ஒரு மனிதன் பெரியவிருந்தை ஆயத்தம்பண்ணி, அநேகரை அழைப்பித்தான்.
17 ज़ैखन रोट्टी खानेरो वक्त अव त तैनी अपनो नौकर भेज़ो कि तैन लोकन ज़ैन जो ड्लाएरी धाम बनोरी थी, ‘एज्जा, रोट्टी बनोरोए।’
௧௭விருந்து நேரத்தில் தன் வேலைக்காரனை நோக்கி: நீ அழைக்கப்பட்டவர்களிடத்தில்போய், எல்லாம் ஆயத்தமாக இருக்கிறது வாருங்கள் என்று சொல்லென்று அவனை அனுப்பினான்.
18 पन धामी बालेईं सेब्भेईं मिलतां एतराज़ कियो ते पेइले मैने ज़ोवं, ‘मीं ऊडार घिन्नेरू आए, मीं तैस हेरने गानूए ते अवं तीं कां मिनत केरतां कि मीं राने दे।’
௧௮அவர்களெல்லோரும் சாக்குப்போக்குச்சொல்லத் தொடங்கினார்கள். ஒருவன்: ஒரு வயலை வாங்கியிருக்கிறேன், நான் கட்டாயமாகப்போய் அதைப் பார்க்கவேண்டும், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
19 त होरो ज़ोने लगो, ‘मीं पंच़ हल्लां दांत घिन्नोरेन ते अवं तैन लाने परखने च़लोरोईं। अवं तीं कां मिनत केरतां कि मीं राने दे।’
௧௯வேறொருவன்: ஐந்து ஏர்மாடுகள் வாங்கியிருக்கிறேன், அதை ஓட்டிப்பார்க்கப்போகிறேன், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
20 अक होरो मैन्हु लगो ज़ोने, ‘मीं ड्ला बनावरोए, एल्हेरेलेइ अवं न एज्जी बेटि।’
௨0வேறொருவன்: எனக்கு இப்போதுதான் திருமணம் முடிந்திருக்கிறது, அதினால் நான் வரக்கூடாது என்றான்.
21 तैखन नौकरे वापस एइतां एन सैरी गल्लां अपने मालिके शुनेईं, त मालिके बड़ी सरक अई, तैनी अपने नौकरे जो ज़ोवं, ‘इस नगर मां गा ते लेंगे लुथे, गरीब गुरबे नग्गे, नियन्ने भत्ते, टोंटे, कानो इरां कुजा।’
௨௧அந்த வேலைக்காரன் வந்து, இவைகளைத் தன் எஜமானுக்கு அறிவித்தான். அப்பொழுது வீட்டெஜமான் கோபமடைந்து, தன் வேலைக்காரனை நோக்கி: நீ பட்டணத்தின் தெருக்களிலும் வீதிகளிலும் சீக்கிரமாகப்போய், ஏழைகளையும் நடக்கமுடியாதவர்களையும், முடவர்களையும், பார்வையற்றவர்களையும் இங்கே அழைத்துக்கொண்டுவா என்றான்.
22 नौकरे ज़ोवं, ‘हे मालिक ज़ैन तीं ज़ोवं, मीं तैन्ने कमाव, पन फिरी भी ठार खाली आए।’
௨௨வேலைக்காரன் அப்படியே செய்து: ஆண்டவரே, நீர் கட்டளையிட்டபடி செய்தாயிற்று, இன்னும் இடம் இருக்கிறது என்றான்.
23 मालिके नौकरे सेइं ज़ोवं, ‘बत्तारे आसे पासे ऊडारन मांमेइं गा ते लोक मजबूर केरतां आन, ताके मेरू घर भेरतां भोए।
௨௩அப்பொழுது எஜமான் வேலைக்காரனை நோக்கி: நீ சாலையோரங்களிலும் குறுகியவழி அருகிலும்போய், என் வீடு நிறையும்படியாக மக்களை உள்ளே வரும்படி வற்புறுத்தி அழைத்துக்கொண்டுவா;
24 किजोकि अवं तीं सेइं ज़ोताईं कि ज़ैन लोक पेइले कुजेवरे थिये, यानी खास ठैरारे लेइ कुजेवरे थिये, तैन मरां कोई भी मेरी धामी मां रोट्टी न खेइ सकेलो।’”
௨௪அழைக்கப்பட்டிருந்த அந்த மனிதர்களில் ஒருவன்கூட என் விருந்தை ருசிபார்ப்பதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றான் என்று சொன்னார்.
25 बड़े लोक यीशु पत्ती च़लोरे थिये, यीशुए पत्रोवं तक्कू ते ज़ोवं।
௨௫பின்பு அநேக மக்கள் அவரோடுகூடப் பயணமாகப் போகும்போது, அவர்களிடமாக அவர் திரும்பிப்பார்த்து:
26 “अगर कोई मीं कां एज्जे, ते अपने अम्मा बाजी, कुआन्श, बच्चन, ढ्लान ते बेइन्न ते अपने जानी करां जादे प्यार मीं सेइं न केरे त तै मेरो चेलो न भोइ सके।
௨௬யாராவது ஒருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீடனாக இருக்கமாட்டான்.
27 ते ज़ै कोई मेरो चेलो भोनेरी वजाई सेइं दुःख झ़ैल्लनेरे लेइ त कने मरनेरे लेइ तियार नईं, त तै मेरो चेलो न भोइसखे।
௨௭தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என் பின்னே வராதவன் எனக்குச் சீடனாக இருக்கமுடியாது.
28 तुसन मरां एरो कोई भोए, ज़ै गुम्मट बनानू चाए, ते पेइले बिश्तां हिसाब न केरे, कि पूरो केरनेरे लेइ मीं कां खर्च़ो आए कि नईं।
௨௮உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்டவிருப்பமாக இருந்து,
29 कधे एरू न भोए कि खाइ कटनेरे बाद तैस बनेइ न सके ते तकने बाले हसते रान।
௨௯அஸ்திபாரம் போட்டப்பின்பு வேலையை முடிக்கமுடியாமற்போனால், பார்க்கிறவர்களெல்லோரும்:
30 ‘ते ज़ोन एनी मैने बनानू त शुरू कियूं, पन बनेइ न बटो।’
௩0இந்த மனிதன் கட்டத்தொடங்கி, முடிக்க முடியாமற்போனான் என்று சொல்லி தன்னை ஏளனமாக பேசாதபடிக்கு, அதைக் கட்டிமுடிப்பதற்கு தனக்கு வேண்டிய பொருளாதாரம் உண்டோ இல்லையோ என்று முன்பு அவன் உட்கார்ந்து செலவாகும் தொகையைக் கணக்குப்பார்க்காமல் இருப்பானோ?
31 या फर्ज़ केरा कि कोई राज़ो होरि राज़े सेइं लड़ाई केरनेरे लेइ सोची राहोरो भोए त कुन पेइले एन न सोचे कि 10000 फौजी जवानन् सेइं अवं 20000 फौजी जवावन सेइं तैसेरो मुकाबलो केरि सकतां कि नईं?
௩௧அன்றியும் ஒரு ராஜா மற்றொரு ராஜாவோடு போர்செய்யப்போகிறபோது, தன்மேல் இருபதாயிரம் போர்வீரர்களோடு வருகிற அவனைத் தான் பத்தாயிரம் போர்வீரர்களைக்கொண்டு எதிர்க்கக்கூடுமோ கூடாதோ என்று முன்னமே உட்கார்ந்து ஆலோசனை செய்யாமலிருப்பானோ?
32 अगर तै मुकाबलो न केरि सखे त तैस फौजी सेइं ज़ै दूरे, मैन्हु भेज़तां तैस सेइं सल्लारी मिनत केरेलो।
௩௨கூடாதென்று கண்டால், மற்றவன் இன்னும் தூரத்திலிருக்கும்போதே, தூதுவரை அனுப்பி, சமாதானத்துக்கானவைகளைக் கேட்டுக்கொள்வானே.
33 एन्च़रे अगर ज़ै कोई तुसन मरां अपनू सब किछ न छ़डे त मेरो चेलो न भोइसखे।
௩௩அப்படியே உங்களில் எவனாவது தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீடனாக இருக்கமாட்டான்.
34 “लून रोड़ी चीज़े, पन अगर लूनेरो लूनार मुकी गाए त तैन कोस सेइं लूने बनाव गालू?
௩௪உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால் எதினால் சாரமாக்கப்படும்?
35 लोक तैस बेइरोवं शेरी देले, ज़ै कोई समझ़नू चाते, तै ध्याने सेइं शुने ते समझ़े।”
௩௫அது நிலத்துக்காவது எருவுக்காவது உதவாது, அதை வெளியே கொட்டிப்போடுவார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கவேண்டும் என்றார்.

< लूका 14 >