< நீதிமொழிகள் 15 >

1 சாந்தமான பதில் கடுங்கோபத்தை அடக்கும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்.
מענה-רך ישיב חמה ודבר-עצב יעלה-אף
2 ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்; மூடர்களின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும்.
לשון חכמים תיטיב דעת ופי כסילים יביע אולת
3 யெகோவாவின் கண்கள் எந்த இடத்திலுமிருந்து, நல்லவர்களையும், தீயவர்களையும் நோக்கிப்பார்க்கிறது.
בכל-מקום עיני יהוה צפות רעים וטובים
4 ஆரோக்கியமுள்ள நாவு ஜீவமரம்; நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும்.
מרפא לשון עץ חיים וסלף בה שבר ברוח
5 மூடன் தன்னுடைய தகப்பனுடைய புத்தியை அலட்சியப்படுத்துகிறான்; கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி.
אויל--ינאץ מוסר אביו ושמר תוכחת יערים
6 நீதிமானுடைய வீட்டில் அதிக பொக்கிஷம் உண்டு; துன்மார்க்கனுடைய வருமானத்திலோ துன்பம் உண்டு.
בית צדיק חסן רב ובתבואת רשע נעכרת
7 ஞானிகளின் உதடுகள் அறிவை விதைக்கும்; மூடர்களின் இருதயமோ அப்படியல்ல.
שפתי חכמים יזרו דעת ולב כסילים לא-כן
8 துன்மார்க்கர்களுடைய பலி யெகோவாவுக்கு அருவருப்பானது; செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம்.
זבח רשעים תועבת יהוה ותפלת ישרים רצונו
9 துன்மார்க்கர்களுடைய வழி யெகோவாவுக்கு அருவருப்பானது; நீதியைப் பின்பற்றுகிறவனையோ அவர் நேசிக்கிறார்.
תועבת יהוה דרך רשע ומרדף צדקה יאהב
10 ௧0 வழியைவிட்டு விலகுகிறவனுக்குப் புத்திமதி எரிச்சலாக இருக்கும்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான்.
מוסר רע לעזב ארח שונא תוכחת ימות
11 ௧௧ பாதாளமும் அழிவும் யெகோவாவின் பார்வைக்கு முன்பாக இருக்க, மனுமக்களுடைய இருதயம் அதிகமாக அவர் முன்பாக இருக்குமல்லவோ? (Sheol h7585)
שאול ואבדון נגד יהוה אף כי-לבות בני-אדם (Sheol h7585)
12 ௧௨ பரியாசக்காரன் தன்னைக் கடிந்துகொள்ளுகிறவனை நேசிக்கமாட்டான்; ஞானவான்களிடத்தில் போகவுமாட்டான்.
לא יאהב-לץ הוכח לו אל-חכמים לא ילך
13 ௧௩ மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்; மனதுக்கத்தினாலே ஆவி முறிந்துபோகும்.
לב שמח ייטב פנים ובעצבת-לב רוח נכאה
14 ௧௪ புத்திமானுடைய மனம் அறிவைத்தேடும்; மூடர்களின் வாயோ மதியீனத்தை மேயும்.
לב נבון יבקש-דעת ופני (ופי) כסילים ירעה אולת
15 ௧௫ சிறுமைப்பட்டவனுடைய நாட்களெல்லாம் தீங்குள்ளவைகள்; மனரம்மியமோ நிரந்தர விருந்து.
כל-ימי עני רעים וטוב-לב משתה תמיד
16 ௧௬ சஞ்சலத்தோடு கூடிய அதிகப் பொருட்களைவிட, யெகோவாவைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம்.
טוב-מעט ביראת יהוה-- מאוצר רב ומהומה בו
17 ௧௭ பகையோடு இருக்கும் கொழுத்த எருதின் கறியைவிட, சிநேகத்தோடு இருக்கும் இலைக்கறியே நல்லது.
טוב ארחת ירק ואהבה-שם-- משור אבוס ושנאה-בו
18 ௧௮ கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்; நீடியசாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான்.
איש חמה יגרה מדון וארך אפים ישקיט ריב
19 ௧௯ சோம்பேறியின் வழி முள்வேலிக்குச் சமம்; நீதிமானுடைய வழியோ ராஜபாதை.
דרך עצל כמשכת חדק וארח ישרים סללה
20 ௨0 ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மதியற்ற மனிதனோ தன்னுடைய தாயை அலட்சியப்படுத்துகிறான்.
בן חכם ישמח-אב וכסיל אדם בוזה אמו
21 ௨௧ மூடத்தனம் புத்தியீனனுக்குச் சந்தோஷம்; புத்திமானோ தன்னுடைய செயல்களைச் செம்மைப்படுத்துகிறான்.
אולת שמחה לחסר-לב ואיש תבונה יישר-לכת
22 ௨௨ ஆலோசனை இல்லாததால் எண்ணங்கள் சிதைந்துபோகும்; ஆலோசனைக்காரர்கள் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும்.
הפר מחשבות באין סוד וברב יועצים תקום
23 ௨௩ மனிதனுக்குத் தன்னுடைய வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்; ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!
שמחה לאיש במענה-פיו ודבר בעתו מה-טוב
24 ௨௪ கீழான பாதாளத்தைவிட்டு விலகும்படி, விவேகிக்கு வாழ்வின் வழியானது உன்னதத்தை நோக்கும் வழியாகும். (Sheol h7585)
ארח חיים למעלה למשכיל-- למען סור משאול מטה (Sheol h7585)
25 ௨௫ அகங்காரியின் வீட்டைக் யெகோவா பிடுங்கிப்போடுவார்; விதவையின் எல்லையையோ நிலைப்படுத்துவார்.
בית גאים יסח יהוה ויצב גבול אלמנה
26 ௨௬ துன்மார்க்கர்களுடைய நினைவுகள் யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்; சுத்தமானவர்களுடைய வார்த்தைகளோ இன்பமானவைகள்.
תועבת יהוה מחשבות רע וטהרים אמרי-נעם
27 ௨௭ பொருளாசைக்காரன் தன்னுடைய வீட்டைக் கலைக்கிறான்; லஞ்சங்களை வெறுக்கிறவனோ பிழைப்பான்.
עכר ביתו בוצע בצע ושונא מתנת יחיה
28 ௨௮ நீதிமானுடைய மனம் பதில் சொல்ல யோசிக்கும்; துன்மார்க்கனுடைய வாயோ தீமைகளைக் கொப்பளிக்கும்.
לב צדיק יהגה לענות ופי רשעים יביע רעות
29 ௨௯ துன்மார்க்கர்களுக்குக் யெகோவா தூரமாக இருக்கிறார்; நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார்.
רחוק יהוה מרשעים ותפלת צדיקים ישמע
30 ௩0 கண்களின் ஒளி இருதயத்தைப் பூரிப்பாக்கும்; நற்செய்தி எலும்புகளை ஆரோக்கியமாக்கும்.
מאור-עינים ישמח-לב שמועה טובה תדשן-עצם
31 ௩௧ வாழ்வுக்கேதுவான கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளும் காது ஞானிகளிடத்திலே தங்கும்.
אזן--שמעת תוכחת חיים בקרב חכמים תלין
32 ௩௨ புத்திமதியைத் தள்ளிவிடுகிறவன் தன்னுடைய ஆத்துமாவை வெறுக்கிறான்; கடிந்துகொள்ளுதலைக் கேட்கிறவனோ ஞானமடைவான்.
פורע מוסר מואס נפשו ושומע תוכחת קונה לב
33 ௩௩ யெகோவாவுக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை.
יראת יהוה מוסר חכמה ולפני כבוד ענוה

< நீதிமொழிகள் 15 >