< வெளிப்படுத்தின விசேஷம் 1 >
1 இது இயேசுகிறிஸ்துவின் வெளிப்பாடு. விரைவில் நிகழவிருக்கும் சம்பவங்கள் என்ன என்பதைத் தமது ஊழியர்களுக்கு காண்பிக்கிறதற்காக, இறைவன் இந்த வெளிப்பாட்டை இயேசுகிறிஸ்துவுக்குக் கொடுத்தார். அவர் தமது இறைத்தூதனை தமது ஊழியனான யோவானிடம் அனுப்பி இதை அவனுக்கு தெரியப்படுத்தினார்.
යත් ප්රකාශිතං වාක්යම් ඊශ්වරඃ ස්වදාසානාං නිකටං ශීඝ්රමුපස්ථාස්යන්තීනාං ඝටනානාං දර්ශනාර්ථං යීශුඛ්රීෂ්ටේ සමර්පිතවාන් තත් ස ස්වීයදූතං ප්රේෂ්ය නිජසේවකං යෝහනං ඥාපිතවාන්|
2 இது இறைவனுடைய வார்த்தையைக் குறித்தும், இயேசுகிறிஸ்துவைக் குறித்தும் சாட்சியாக யோவான் தான் கண்ட எல்லாவற்றையும் அறிவித்தான்.
ස චේශ්වරස්ය වාක්යේ ඛ්රීෂ්ටස්ය සාක්ෂ්යේ ච යද්යද් දෘෂ්ටවාන් තස්ය ප්රමාණං දත්තවාන්|
3 இவை நிறைவேறும் காலம் நெருங்கிவிட்டதினால், இந்த இறைவாக்கின் வார்த்தைகளை வாசிக்கிறவர்களும் இதைக் கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறபடி நடக்கிறவர்களும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
ඒතස්ය භවිෂ්යද්වක්තෘග්රන්ථස්ය වාක්යානාං පාඨකඃ ශ්රෝතාරශ්ච තන්මධ්යේ ලිඛිතාඥාග්රාහිණශ්ච ධන්යා යතඃ ස කාලඃ සන්නිකටඃ|
4 யோவானாகிய நான், ஆசியாவிலுள்ள ஏழு திருச்சபைகளுக்கு எழுதுகிறதாவது: இருந்தவரும், இருக்கிறவரும், வரப்போகிறவரிடமிருந்து உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. அவருடைய அரியணைக்கு முன்பாக இருக்கிற ஏழு ஆவிகளிடமிருந்தும்,
යෝහන් ආශියාදේශස්ථාඃ සප්ත සමිතීඃ ප්රති පත්රං ලිඛති| යෝ වර්ත්තමානෝ භූතෝ භවිෂ්යංශ්ච යේ ච සප්තාත්මානස්තස්ය සිංහාසනස්ය සම්මුඛේ තිෂ්ඨන්ති
5 இயேசுகிறிஸ்துவினிடமிருந்தும் கிறிஸ்துவே உண்மையான சாட்சி, இறந்தவர்களிடையே முதற்பேறானவர், பூமியிலுள்ள அரசர்களை ஆளுகை செய்கிறவர். அவரே நம்மில் அன்பு செலுத்தி, தமது இரத்தத்தினாலே, நமது பாவங்களிலிருந்து நம்மை விடுதலையாக்கினார்.
යශ්ච යීශුඛ්රීෂ්ටෝ විශ්වස්තඃ සාක්ෂී මෘතානාං මධ්යේ ප්රථමජාතෝ භූමණ්ඩලස්ථරාජානාම් අධිපතිශ්ච භවති, ඒතේභ්යෝ (අ)නුග්රහඃ ශාන්තිශ්ච යුෂ්මාසු වර්ත්තතාං|
6 தமது இறைவனும், பிதாவுமானவருக்கு முன்பாக நாம் ஊழியம் செய்யும்படி, நம்மை ஒரு அரசாகவும், ஆசாரியராகவும் ஏற்படுத்தியிருக்கிற இயேசுகிறிஸ்துவுக்கே என்றென்றும் மகிமையும், வல்லமையும் உண்டாவதாக! ஆமென். (aiōn )
යෝ (අ)ස්මාසු ප්රීතවාන් ස්වරුධිරේණාස්මාන් ස්වපාපේභ්යඃ ප්රක්ෂාලිතවාන් තස්ය පිතුරීශ්වරස්ය යාජකාන් කෘත්වාස්මාන් රාජවර්ගේ නියුක්තවාංශ්ච තස්මින් මහිමා පරාක්රමශ්චානන්තකාලං යාවද් වර්ත්තතාං| ආමේන්| (aiōn )
7 “இதோ பாருங்கள், இயேசு மேகங்கள் மீது வருகிறார்” மற்றும் “எல்லா கண்களும் அவரைக்காணும், அவரைக் குத்தியவர்களும் அவரை நோக்கிப் பார்ப்பார்கள்”; பூமியிலுள்ள எல்லா மக்களும், “அவர் நிமித்தம் புலம்புவார்கள்.”
පශ්යත ස මේඝෛරාගච්ඡති තේනෛකෛකස්ය චක්ෂුස්තං ද්රක්ෂ්යති යේ ච තං විද්ධවන්තස්තේ (අ)පි තං විලෝකිෂ්යන්තේ තස්ය කෘතේ පෘථිවීස්ථාඃ සර්ව්වේ වංශා විලපිෂ්යන්ති| සත්යම් ආමේන්|
8 “நானே தொடக்கமும் முடிவுமாய் இருக்கிறேன்,” என்று, “இருக்கிறவரும், இருந்தவரும், வரப்போகிறவருமாகிய, எல்லாம் வல்லவராயிருக்கிறவருமாகிய” இறைவனாகிய கர்த்தர் சொல்கிறார்.
වර්ත්තමානෝ භූතෝ භවිෂ්යංශ්ච යඃ සර්ව්වශක්තිමාන් ප්රභුඃ පරමේශ්වරඃ ස ගදති, අහමේව කඃ ක්ෂශ්චාර්ථත ආදිරන්තශ්ච|
9 உங்கள் சகோதரனான யோவானாகிய நான், கிறிஸ்துவில் நமக்குரிய துன்பத்திலும், அரசிலும், துன்பத்தைப் பொறுமையோடு சகிப்பதிலும், உங்கள் பங்காளியாயிருக்கிறேன். இறைவனுடைய வார்த்தையைப் பிரசங்கிக்கிறதாலும், இயேசுவுக்கு சாட்சியாயிருப்பதாலும், நான் நாடுகடத்தப்பட்டு, பத்மு தீவில் இருந்தேன்.
යුෂ්මාකං භ්රාතා යීශුඛ්රීෂ්ටස්ය ක්ලේශරාජ්යතිතික්ෂාණාං සහභාගී චාහං යෝහන් ඊශ්වරස්ය වාක්යහේතෝ ර්යීශුඛ්රීෂ්ටස්ය සාක්ෂ්යහේතෝශ්ච පාත්මනාමක උපද්වීප ආසං|
10 கர்த்தருடைய நாளிலே, நான் பரிசுத்த ஆவியானவரில் நிரப்பப்பட்டு இருக்கையில், எனக்குப் பின்னால் எக்காளத்தைப் போன்ற உரத்த சத்தமான ஒரு குரலைக் கேட்டேன்.
තත්ර ප්රභෝ ර්දිනේ ආත්මනාවිෂ්ටෝ (අ)හං ස්වපශ්චාත් තූරීධ්වනිවත් මහාරවම් අශ්රෞෂං,
11 அது என்னிடம்: “நீ காண்கிறதை ஒரு புத்தகச்சுருளில் எழுதி: அதை எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா ஆகிய பட்டணங்களிலுள்ள ஏழு திருச்சபைகளுக்கும் அனுப்பு” என்று சொன்னது.
තේනෝක්තම්, අහං කඃ ක්ෂශ්චාර්ථත ආදිරන්තශ්ච| ත්වං යද් ද්රක්ෂ්යසි තද් ග්රන්ථේ ලිඛිත්වාශියාදේශස්ථානාං සප්ත සමිතීනාං සමීපම් ඉඵිෂං ස්මුර්ණාං ථුයාතීරාං සාර්ද්දිං ඵිලාදිල්ඵියාං ලායදීකේයාඤ්ච ප්රේෂය|
12 நான் திரும்பி, என்னோடு பேசிய குரலின் பக்கமாய்ப் பார்த்தேன். நான் திரும்பியபொழுது, ஏழு தங்க குத்துவிளக்குகளைக் கண்டேன்.
තතෝ මයා සම්භාෂමාණස්ය කස්ය රවඃ ශ්රූයතේ තද්දර්ශනාර්ථං මුඛං පරාවර්ත්තිතං තත් පරාවර්ත්ය ස්වර්ණමයාඃ සප්ත දීපවෘක්ෂා දෘෂ්ටාඃ|
13 அந்தக் குத்துவிளக்குகளின் நடுவே, மானிடமகனைப் போன்ற ஒருவர் நின்றார். அவர் அணிந்திருந்த உடை அவருடைய பாதம்வரை நீளமாயிருந்தது. அவர் தம்முடைய மார்பைச் சுற்றி, ஒரு தங்கப்பட்டையைக் கட்டியிருந்தார்.
තේෂාං සප්ත දීපවෘක්ෂාණාං මධ්යේ දීර්ඝපරිච්ඡදපරිහිතඃ සුවර්ණශෘඞ්ඛලේන වේෂ්ටිතවක්ෂශ්ච මනුෂ්යපුත්රාකෘතිරේකෝ ජනස්තිෂ්ඨති,
14 அவருடைய தலையும், தலைமுடியும், வெள்ளைக் கம்பளியைப்போல் இருந்தன. அவை உறைபனியைப்போல் வெண்மையாய் இருந்தன. அவருடைய கண்கள் கொழுந்து விட்டெரியும் நெருப்பைப்போல் இருந்தன.
තස්ය ශිරඃ කේශශ්ච ශ්වේතමේෂලෝමානීව හිමවත් ශ්රේතෞ ලෝචනේ වහ්නිශිඛාසමේ
15 அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் தகதகவென்று ஒளிருகின்ற வெண்கலத்தைப்போல் இருந்தன. அவருடைய குரல் பாய்ந்தோடும் வெள்ளத்தின் இரைச்சலைப்போல் இருந்தது.
චරණෞ වහ්නිකුණ්ඩේතාපිතසුපිත්තලසදෘශෞ රවශ්ච බහුතෝයානාං රවතුල්යඃ|
16 அவருடைய வலது கரத்தில், ஏழு நட்சத்திரங்களைப் பிடித்துக்கொண்டிருந்தார். அவருடைய வாயிலிருந்து இருபக்கமும் கூர்மையான ஒரு வாள் வெளிப்பட்டு வந்தது. அவருடைய முகம் முழுமையாய் பிரகாசிக்கிற சூரியனைப்போல இருந்தது.
තස්ය දක්ෂිණහස්තේ සප්ත තාරා විද්යන්තේ වක්ත්රාච්ච තීක්ෂ්ණෝ ද්විධාරඃ ඛඞ්ගෝ නිර්ගච්ඡති මුඛමණ්ඩලඤ්ච ස්වතේජසා දේදීප්යමානස්ය සූර්ය්යස්ය සදෘශං|
17 நான் அவரைப் பார்த்தபோது, செத்தவனைப்போல், அவருடைய பாதத்தில் வீழ்ந்தேன். அப்பொழுது அவர், தமது வலது கரத்தை என்மேல் வைத்து என்னிடம் சொன்னதாவது: “பயப்படாதே, நானே தொடக்கமும், முடிவுமாயிருக்கிறேன்.
තං දෘෂ්ට්වාහං මෘතකල්පස්තච්චරණේ පතිතස්තතඃ ස්වදක්ෂිණකරං මයි නිධාය තේනෝක්තම් මා භෛෂීඃ; අහම් ආදිරන්තශ්ච|
18 நானே வாழ்கிறவர்; நான் இறந்தேன், ஆனால் இதோ, நான் உயிருடன் என்றென்றும் வாழ்கிறவராய் இருக்கிறேன்! மரணத்திற்கும், பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை நானே வைத்திருக்கிறேன். (aiōn , Hadēs )
අහම් අමරස්තථාපි මෘතවාන් කින්තු පශ්යාහම් අනන්තකාලං යාවත් ජීවාමි| ආමේන්| මෘත්යෝඃ පරලෝකස්ය ච කුඤ්ජිකා මම හස්තගතාඃ| (aiōn , Hadēs )
19 “ஆகவே, நீ கண்டவைகளையும், இப்பொழுது இருப்பவைகளையும், இனிமேல் நிகழப்போவதையும், எழுது.
අතෝ යද් භවති යච්චේතඃ පරං භවිෂ්යති ත්වයා දෘෂ්ටං තත් සර්ව්වං ලිඛ්යතාං|
20 நீ என்னுடைய வலது கரத்தில் கண்ட ஏழு நட்சத்திரங்கள், மற்றும் ஏழு தங்க குத்துவிளக்குகளின், இரகசியம் இதுவே: ஏழு நட்சத்திரங்களும், ஏழு திருச்சபைகளின் தூதர்கள். ஏழு குத்துவிளக்குகளும் ஏழு திருச்சபைகள்.”
මම දක්ෂිණහස්තේ ස්ථිතා යාඃ සප්ත තාරා යේ ච ස්වර්ණමයාඃ සප්ත දීපවෘක්ෂාස්ත්වයා දෘෂ්ටාස්තත්තාත්පර්ය්යමිදං තාඃ සප්ත තාරාඃ සප්ත සමිතීනාං දූතාඃ සුවර්ණමයාඃ සප්ත දීපවෘක්ෂාශ්ච සප්ත සමිතයඃ සන්ති|