< சங்கீதம் 143 >

1 தாவீதின் சங்கீதம். யெகோவாவே, என் மன்றாட்டைக் கேளும், இரக்கத்திற்கான என் கதறுதலுக்குச் செவிகொடும்; உமது உண்மையின்படியும் நீதியின்படியும் எனக்கு பதில் தாரும்.
大衛的詩。 耶和華啊,求你聽我的禱告, 留心聽我的懇求, 憑你的信實和公義應允我。
2 உமது அடியானை நியாயந்தீர்க்காதேயும். வாழ்கின்ற ஒருவருமே உமக்கு முன்பாக நீதிமான்கள் இல்லையே.
求你不要審問僕人; 因為在你面前,凡活着的人沒有一個是義的。
3 பகைவன் என்னைப் பின்தொடர்கிறான், அவன் என்னை தரையில் போட்டு தாக்குகிறான்; வெகுகாலத்திற்கு முன்பு இறந்தவர்களைப்போல், அவன் என்னை இருளில் குடியிருக்கப்பண்ணுகிறான்.
原來仇敵逼迫我, 將我打倒在地, 使我住在幽暗之處, 像死了許久的人一樣。
4 ஆகவே எல்லா நம்பிக்கையையும் இழந்து என் ஆவி எனக்குள் சோர்ந்துபோகிறது; பயத்தால் என் இருதயம் கலங்குகிறது.
所以,我的靈在我裏面發昏; 我的心在我裏面悽慘。
5 நான் முந்தின நாட்களை நினைக்கிறேன்; உமது செயல்களையெல்லாம் தியானிக்கிறேன்; உமது கரத்தின் செயல்களை யோசிக்கிறேன்.
我追想古時之日, 思想你的一切作為, 默念你手的工作。
6 நான் உம்மை நோக்கி என் கைகளை விரிக்கிறேன்; வறண்ட நிலத்தைப்போல் என் ஆத்துமா உம்மேல் தாகம் கொண்டிருக்கிறது.
我向你舉手; 我的心渴想你, 如乾旱之地盼雨一樣。 (細拉)
7 யெகோவாவே, சீக்கிரமாய் எனக்குப் பதில் தாரும்; என் உள்ளம் சோர்ந்துபோகிறது; உமது முகத்தை என்னிடமிருந்து மறையாதேயும்; இல்லாவிட்டால், நான் மரணக் குழியில் இறங்குகிறவர்களைப் போலாகிவிடுவேன்.
耶和華啊,求你速速應允我! 我心神耗盡! 不要向我掩面, 免得我像那些下坑的人一樣。
8 காலை வேளையானது உமது உடன்படிக்கையின் அன்பின் செய்தியைக் கொண்டுவரட்டும், ஏனெனில் நான் என் நம்பிக்கையை உம்மிலேயே வைத்திருக்கிறேன்; நான் போகவேண்டிய வழியை எனக்குக் காண்பியும், ஏனெனில் என் உயிரை உம்மிடத்தில் ஒப்படைக்கிறேன்.
求你使我清晨得聽你慈愛之言, 因我倚靠你; 求你使我知道當行的路, 因我的心仰望你。
9 யெகோவாவே, என் பகைவரிடமிருந்து என்னைத் தப்புவியும்; ஏனெனில் நான் உமக்குள் என்னை மறைத்துக்கொள்கிறேன்.
耶和華啊,求你救我脫離我的仇敵! 我往你那裏藏身。
10 நீரே என் இறைவன்; ஆதலால் உமது சித்தத்தைச் செய்ய எனக்குப் போதியும்; உமது நல்ல ஆவியானவர் என்னை நல்வழியில் நடத்துவாராக.
求你指教我遵行你的旨意, 因你是我的上帝。 你的靈本為善; 求你引我到平坦之地。
11 யெகோவாவே, உமது பெயரின் மகிமைக்காக என் வாழ்வைக் காத்துக்கொள்ளும்; உமது நியாயத்தினிமித்தம் வேதனையிலிருந்து என்னை விடுவியும்.
耶和華啊,求你為你的名將我救活, 憑你的公義,將我從患難中領出來,
12 உமது உடன்படிக்கையின் அன்பினிமித்தம் என் பகைவரை அழித்துவிடும்; என் எதிரிகள் அனைவரையும் ஒழித்துவிடும்; ஏனெனில் நான் உமது அடியவன்.
憑你的慈愛剪除我的仇敵, 滅絕一切苦待我的人, 因我是你的僕人。

< சங்கீதம் 143 >