< மாற்கு 2 >

1 சில நாட்களுக்குப்பின், இயேசு மீண்டும் கப்பர்நகூமுக்குச் சென்றபோது, அவர் வீட்டிற்கு வந்திருக்கிறார் என்று மக்கள் கேள்விப்பட்டார்கள்.
ଏଚରଦିନା ଆୟାଲିଏ ଜୀସୁ କପର୍‌ନାହୁମତା ୱେଣ୍ତେ ହାଚେସି, ଇଞ୍ଜାଁ ଏ଼ୱାସି ଇଜ ମାନେସି ଇଞ୍ଜିଁ ସା଼ରିୱାକି ୱେ଼ଙ୍ଗାହାଚେ ।
2 எனவே மக்கள் அங்கு திரளாய் கூடிவந்தார்கள்; இதனால் வீட்டின் வாசலுக்கு வெளியேயும் இடம் இல்லாமல் போயிற்று. இயேசு மக்களுக்கு வார்த்தையைப் போதித்தார்.
ଏମ୍ବାଆଁ ଇଚେକା ଲ଼କୁ ରୁଣ୍ତା ଆ଼ତେରି ଇଞ୍ଜାଁ ଦୁୱେରିତା ଜିକେଏ ଟା଼ୟୁ ହିଲାଆତେ, ଇଞ୍ଜାଁ ଏ଼ୱାସି ଏ଼ୱାରାଇଁ ମାହାପୂରୁ କାତା ୱେ଼କ୍‌ହେସି ।
3 அப்பொழுது சிலர் முடக்குவாதக்காரன் ஒருவனை அவரிடம் கொண்டுவந்தார்கள். அவர்களில் நாலுபேர் அவனைத் தூக்கிக்கொண்டு வந்திருந்தார்கள்.
ଏମ୍ବାଟିଏ ସା଼ରି ଜା଼ଣା ର଼ ଟଟ ୱା଼ୟିତାଣାଇଁ କାଟେଲିତା ଜୀସୁ ତା଼ଣା ଡେ଼କା ତାତେରି ।
4 ஆனால் மக்கள் கூட்டம் அதிகமாய் இருந்தபடியால், அவர்களால் அவனை இயேசுவினிடத்தில் கொண்டு வரமுடியவில்லை; எனவே அவர்கள் இயேசு இருந்த இடத்துக்கு மேலாக உள்ள கூரையைப் பிரித்துத் திறப்பு உண்டாக்கி, முடக்குவாதக்காரனைப் படுத்திருந்த படுக்கையோடு கீழே இறக்கினார்கள்.
ସାମା ହା଼ରେକା ଲ଼କୁ ମାଚାକି ଏ଼ୱାଣି ତା଼ଣା ତାଚାଲି ଆ଼ଡାଆତେରି, ଇଞ୍ଜାଁ ଆମିନି ଟା଼ୟୁତା ଜୀସୁ ମାଚେସି, ଏମ୍ବାଆଁ ଇଲୁତି ତେ଼ପରି ରିକ୍‌ହେରି, ଇଞ୍ଜାଁ ଏ଼ ଟଟ ୱା଼ୟିତାଣାଇଁ କାଟେଲି ୱେଣ୍ତେଏ ଇଲୁ ବିତ୍ରା ରେ଼ପ୍‌ହେରି ।
5 இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டபோது, அந்த முடக்குவாதக்காரனிடம், “மகனே, உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.
ଜୀସୁ ଏ଼ୱାରି ନାମୁ ମେସାନା, ଏ଼ ଟଟ ୱା଼ୟିତାଣାଇଁ ଏଲେଇଚେସି, “ଏ଼ ମୀର୍‌ଏଣା ନୀ ପା଼ପୁ ବାରେ ମେଣ୍‌ଙ୍ଗାହାଚେ ।”
6 அங்கிருந்த சில மோசேயின் சட்ட ஆசிரியர்கள், தங்கள் இருதயங்களில்,
ସାମା ଏମ୍ବାଆଁ ମାଚି ଏଚେକା ମେ଼ରା ଜା଼ପ୍‌ନାରି କୁଗାନା ତାମି ମ଼ନତା ଅଣ୍‌ପିହିଁ କାତାବାର୍ତା ଆ଼ହିମାଚେରି,
7 “இவன் ஏன் இப்படிப் பேசுகிறான்? இவன் இறைவனை நிந்திக்கிறானே! இறைவனால் மாத்திரமேயன்றி, வேறு யாரால் பாவங்களை மன்னிக்க முடியும்?” என்று சிந்தித்துக் கொண்டிருந்தார்கள்.
“ଈୱାସି ଏ଼ନାଆଁତାକି ଏଲେଇଞ୍ଜି ମାନେସି? ଈୱାସି ମାହାପୂରୁଇଁ ନିନ୍ଦା କିହିମାନେସି; ମାହାପୂରୁ ପିସ୍‌ପେ ଆମ୍ବାଆସି ପା଼ପୁ ମ୍ଣେକ୍‌ହାଲି ଆ଼ଡିନେସି?”
8 உடனே இயேசு தமது ஆவியில் அவர்கள் தங்களுடைய இருதயங்களில் இவ்வாறு சிந்திக்கிறார்கள் என அறிந்துகொண்டார். எனவே இயேசு அவர்களிடம், “நீங்கள் ஏன் இவ்விதமாகச் சிந்திக்கிறீர்கள்?
ଏ଼ୱାରି ମ଼ନତା ଇଲେକିଁ ଅଣ୍‌ପିମାନାଣି ଜୀସୁ ଦେବୁଣିଏ ଜୀୱୁତା ପୁଞ୍ଜାନା ଏ଼ୱାରାଇଁ ଏଲେଇଚେସି, “ମୀରୁ ମୀ ମ଼ନ ବିତ୍ରା ଏ଼ନାଆଁତାକି ଇଲେକିଁ ଅଣ୍‌ପିମାଞ୍ଜେରି?
9 நான் இந்த முடக்குவாதக்காரனிடம், ‘உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்று சொல்வதா, அல்லது, ‘நீ எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட’ என்று சொல்வதா, எது எளிது?” என்று கேட்டார்.
ଏ଼ନାଆଁ ଇନାୟି ଊସାସା? ଏ଼ କାଜା ର଼ଗ ଗାଟାଣାଇଁ ‘ନୀ ପା଼ପୁ ମେଣ୍‌ଙ୍ଗିତେ ଇନାୟି କି ନିଙ୍ଗାମୁ ନୀ କାଟେଲି ଡେ଼କାନା ତା଼କାମୁ ଇନାୟି ଊସାସା?’
10 ஆனால், “பூமியிலே பாவங்களை மன்னிப்பதற்கு மானிடமகனாகிய எனக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும்” என்று விரும்புகிறேன்.
୧୦ସାମା ଦାର୍‌ତିତା ପା଼ପୁ ମ୍ଣେକ୍‌ହାଲି ମାଣ୍‌ସି ମୀର୍‌ଏଣା ଅଦିକାରା ମାନେ, ଏ଼ଦାଆଁ ନୀଏଁ ମୀରୁ ପୁଞ୍ଜାଲି ଆ଼ଡିଦେରି ।” ଏ଼ଦାଆଁତାକି ଏ଼ ଟଟ ୱା଼ୟିତାଣାଇଁ ଏଲେଇଚେସି,
11 பின்பு இயேசு அந்த முடக்குவாதக்காரனிடம், “எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு உன் வீட்டுக்குப்போ” என்றார்.
୧୧“ନା଼ନୁ ନିଙ୍ଗେ ୱେସିମାଞ୍ଜାଇଁ ନିଙ୍ଗାନା ନୀ କାଟେଲି ଡେ଼କାନା ନୀ ଇଜ ହାଲାମୁ ।”
12 உடனே அவன் எழுந்து தன் படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லோருக்கும் முன்பாக நடந்துபோனான். இதனால் எல்லோரும் வியப்படைந்து, “இப்படிப்பட்ட காரியத்தை நாங்கள் ஒருபோதும் கண்டதில்லை” என்று சொல்லி, இறைவனைத் துதித்தார்கள்.
୧୨ଏଚେଟିଏ ଏ଼ୱାସି ଦେବୁଣିଏ ନିଙ୍ଗାନା କାଟେଲି ଡେ଼କାନା ବାରେଜା଼ଣା ନ଼କିଟି ହ଼ଚାହାଚେସି; ଏଚେଟିଏ ବାରେଜା଼ଣା କାବାଆ଼ହାନା ମାହାପୂରୁତି ଜହରା କିହିଁ ଏଲେଇଚେରି, “ମା଼ମ୍ବୁ ଇଲେତି କାବାଆ଼ନି କାମା ଏଚେଲା ଜିକେଏ ମେସାହିଲାଆତମି ।”
13 மீண்டும் இயேசு புறப்பட்டு, கடற்கரை அருகே சென்றார். மக்கள் கூட்டமாகத் திரண்டு அவரிடம் வந்தார்கள்; இயேசு அவர்களுக்குப் போதித்தார்.
୧୩ଜୀସୁ ଅ଼ଡ଼େ ୱେଣ୍ତେ ସାମ୍‌ଦୁରି ଗାଟୁତା ହାଚେସି, ଇଞ୍ଜାଁ ଲ଼କୁ ଏ଼ୱାଣି ତା଼ଣା ୱା଼ହାଲିଏ, ଏ଼ୱାରାଇଁ ଜା଼ପ୍‌ହାଲି ମା଼ଟ୍‌ହେସି ।
14 பின்பு அவர் தொடர்ந்து நடந்துபோகையில் அல்பேயுவின் மகனான லேவி, வரி வசூலிக்கிறவர்களுடைய அலுவலகத்தில் உட்கார்ந்திருப்பதைக் கண்டார். இயேசு அவனிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார். அப்பொழுது லேவி எழுந்து, அவரைப் பின்பற்றிச் சென்றான்.
୧୪ଅ଼ଡ଼େ ଜିରୁଟି ହାଜି ହାଜିହିଁ ଜୀସୁ ଆଲେପି ମୀର୍‌ଏସି ଲେ଼ବିଇଁ ସିସ୍ତୁ ରୀହ୍‌ନି ତା଼ଣା କୁଗାମାନାଣି ମେସ୍ତେସି, ଇଞ୍ଜାଁ ଏ଼ୱାଣାଇଁ ଏଲେଇଚେସି, “ନା଼ ଜେ଼ଚ ୱା଼ମୁ” ଏଚେଟିଏ ଲେ଼ବି ନିଙ୍ଗାନା ଏ଼ୱାଣି ଜେ଼ଚ ହାଚେସି ।
15 இயேசு லேவியின் வீட்டில் விருந்து சாப்பிடுகையில், வரி வசூலிக்கிறவர்களும், பாவிகளும் இயேசுவோடும் அவருடைய சீடரோடும் பந்தியில் இருந்தார்கள்; ஏனெனில் இவர்களில் அநேகர் இயேசுவைப் பின்பற்றினார்கள்.
୧୫ଅ଼ଡ଼େ ଜୀସୁ ଲେ଼ବି ଇଜ ରା଼ନ୍ଦା ତିଞ୍ଜାଲି କୁଗାମାଚାଟି ହା଼ରେକା ସିସ୍ତୁ ରୀହ୍‌ନାରି ଇଞ୍ଜାଁ ପା଼ପୁ ଗାଟାରି ତାମି ସୀସୁୟାଁ ତଲେ କୁଗିତେରି; ଇଚିହିଁ ଏ଼ୱାରି ହା଼ରେକା ମାଚେରି ଇଞ୍ଜାଁ ଏ଼ୱାଣି ଜେ଼ଚ ହାଜିମାଚେରି ।
16 பாவிகளோடும் வரி வசூலிக்கிறவர்களோடும் இயேசு சாப்பிட்டுக் கொண்டிருப்பதை மோசேயின் சட்ட ஆசிரியர்களான பரிசேயர் கண்டபோது, அவர்கள் இயேசுவின் சீடர்களிடம், “அவர் ஏன் வரி வசூலிக்கிறவர்களோடும் பாவிகளோடும் சாப்பிடுகிறார்?” என்று கேட்டார்கள்.
୧୬ଜୀସୁ ପା଼ପୁ ଗାଟାରି ଇଞ୍ଜାଁ ସିସ୍ତୁ ରୀହ୍‌ନାରି ତଲେ ତିଞ୍ଜି ମାନେସି, ଈଦାଆଁ ମେସାନା ପାରୁସି ଗଚିତି ମେ଼ରାପୁନାରି ତାନି ସୀସୁୟାଁଣି ଏଲେଇଚେରି, “ଏ଼ୱାସି ଏ଼ନାଆଁତାକି ପା଼ପୁ ଗାଟାରି ଅ଼ଡ଼େ ସିସ୍ତୁ ରୀହ୍‌ନାରି ତଲେ ରା଼ନ୍ଦା ତିଞ୍ଜି ମାନେସି?”
17 இதைக் கேட்டபோது, இயேசு அவர்களிடம், “சுகமாயிருப்பவர்களுக்கு வைத்தியன் தேவையில்லை, வியாதியாய் இருப்பவர்களுக்கே வைத்தியன் தேவை. நான் நீதிமான்களை அழைப்பதற்காக வரவில்லை, பாவிகளையே அழைக்கவந்தேன்” என்றார்.
୧୭ଜୀସୁ ଈ କାତା ୱେଞ୍ଜାନା ଏ଼ୱାରାଇଁ ଏଲେଇଚେସି, “ନେହିଁ ଲ଼କୁତାକି ଅସଗୂରୁ ଲ଼ଡ଼ା ହିଲେଏ, ସାମା ର଼ଗ ଗାଟାରାକି ଲ଼ଡ଼ାମାନେ; ନା଼ନୁ ଦାର୍ମୁ ଲ଼କୁତାକି ୱା଼ହାହିଲଅଁ ସାମା ପା଼ପୁ ଗାଟାରାକି ୱା଼ହାମାଇଁ ।”
18 அந்நாட்களில் யோவானின் சீடர்களும் பரிசேயரும் உபவாசித்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிலர் இயேசுவினிடத்தில் வந்து, “யோவானின் சீடர்களும், பரிசேயருடைய சீடர்களும் உபவாசிக்கிறார்கள், ஆனால் உம்முடைய சீடர்கள் ஏன், உபவாசிப்பதில்லை?” என்று கேட்டார்கள்.
୧୮ଜହନତି ସୀସୁୟାଁ ଇଞ୍ଜାଁ ପାରୁସିୟାଁ ଉପାସା କିହିମାଚାଟି, ଏଚେକା ଲ଼କୁ ଜୀସୁ ତା଼ଣା ୱା଼ହାନା ଏଲେଇଚେରି, “ଜହନତି ସୀସୁୟାଁ ଇଞ୍ଜାଁ ପାରୁସିୟାଁତି ସୀସୁୟାଁ ଉପାସା କିନେରି, ସାମା ନୀ ସୀସୁୟାଁ ଏ଼ନାଆଁତାକି ଉପାସା କିଅରି?”
19 அதற்கு இயேசு, “மணமகன் தங்களுடன் இருக்கும்போது, மணமகனின் விருந்தினர் எப்படி உபவாசிப்பார்கள்? மணமகன் தங்களோடு இருக்கும்வரைக்கும், அவர்களால் உபவாசிக்கமுடியாது.
୧୯ଜୀସୁ ଏ଼ୱାରାଇଁ ଏଲେଇଚେସି, “ବୀହା ଲ଼କୁତଲେ ବୀହା ହନେଏସି ମାନି ପାତେକା ବୀହା ଲ଼କୁ ହାକିଟି ମାଞ୍ଜାଲି ଆ଼ଡିନେରିକି? ବୀହା ହନେଏସି ଏ଼ୱାରିତଲେ ମାନି ପାତେକା ଏ଼ୱାରି ଉପାସା କିଅରି ।
20 ஆனால், மணமகன் அவர்களைவிட்டு எடுக்கப்படும் காலம் வரும்; அந்த நாளில், அவர்கள் உபவாசிப்பார்கள்.
୨୦ସାମା ଦିନା ୱା଼ନେ ଏଚିବେ଼ଲା ଏ଼ୱାରି ତା଼ଣାଟି ବୀହା ହନେଏଣାଇଁ ହ଼ପ୍‌ହା ଅ଼ତିସାରେ ଏଚିବେ଼ଲା ଏ଼ୱାରି ଉପାସା କିନେରି ।”
21 “யாரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப் போடுவதில்லை. அப்படி ஒட்டுப் போட்டால், அந்தப் புதிய துணி பழையதிலிருந்து கிழியும்; கிழிசலும் இன்னும் அதிகமாகும்.”
୨୧“ଆମ୍ବାଆସି ପ୍ଣାଃଇ ହିମ୍ବରିତା ପୁଃନି ପାସ୍‌କି ତା଼ଚଅସି; ତା଼ଚିସାରେ ପ୍ଣାଃଇ ହିମ୍ବରିତି ପୁଃନି ପାସ୍‌କି ମୁଦା ଆ଼ହାଁ ଗାଡି ଗେଞ୍ଜିକିନେ ।
22 யாரும் புதிய திராட்சை இரசத்தைப் பழைய தோல் பைகளில் ஊற்றி வைப்பதில்லை. இல்லையென்றால், அந்த திராட்சை இரசம் தோல் பைகளை வெடிக்கச்செய்யும்; திராட்சை இரசம், தோல் பை ஆகிய இரண்டுமே பாழாய்ப்போகும். அப்படிச் செய்யாமல், புதிய திராட்சை இரசத்தைப் புதிய தோல் பைகளில் ஊற்றி வைக்கவேண்டும்.
୨୨ଆମ୍ବାଆସି ପୁଃନି ଅଙ୍ଗୁରି ରାସା ପ୍ଣାଃଇ ଡ଼଼କାତା ଇଟଅସି; ଇଟିସାରେ ଡ଼଼କା ଡ଼ାୟାହାନେ, ଇଞ୍ଜାଁ ଅଙ୍ଗୁରି ରାସା ଅ଼ଡ଼େ ଡ଼଼କା ରିଣ୍ତିୱା ନସ୍ତ ଆ଼ନୁ, ଏ଼ଦାଆଁତାକି ପୁଃନି ଅଙ୍ଗୁରି ରାସା ପୁଃନି ଡ଼଼କାତା ଇଟିନାୟି ମାନେ ।”
23 ஒரு ஓய்வுநாளில் இயேசுவும் அவருடைய சீடர்களும் தானியம் விளைந்திருந்த வயல்வழியாகப் போகையில், சீடர்கள் தானியக்கதிர்கள் சிலவற்றைப் பறிக்கத் தொடங்கினார்கள்.
୨୩ର଼ ପା଼ଲି ଜୀସୁ ଜ଼ମିନି ଦିନା ତାନି ସୀସୁୟାଁ ତଲେ ଗ଼ହଁ ଗୁଡିୟାଟି ହାଜିମାଚେସି, ତାମି ସୀସୁୟାଁ ହାଜି ହାଜିହିଁ ଗ଼ହଁୟାଁ ଜେ଼କା ଡାପ୍‌ହାଲି ମା଼ଟ୍‌ହେରି ।
24 பரிசேயர்கள் இயேசுவிடம், “ஓய்வுநாளில் மோசேயின் சட்டத்தினால் தடைசெய்யப்பட்ட காரியத்தை அவர்கள் ஏன் செய்கிறார்கள்?” என்று கேட்டார்கள்.
୨୪ଏମ୍ବାଟିଏ ପାରୁସିୟାଁ ଜୀସୁଇଁ ଏଲେଇଚେରି, “ମେହ୍‌ମୁ ଜ଼ମିନି ଦିନାତା ଏ଼ନାଆଁ କିନାୟି ମେ଼ରା ହିଲେଏ, ନୀ ସୀସୁୟାଁ ଏ଼ନାଆଁତାକି କିହିମାନେରି?”
25 இயேசு அதற்குப் பதிலாக அவர்களிடம், “தாவீதும் அவனுடைய கூட்டாளிகளும், பசியாயிருந்தபோது என்ன செய்தார்கள் என்பதைப்பற்றி நீங்கள் ஒருபோதும் வாசிக்கவில்லையா?
୨୫ଜୀସୁ ଏ଼ୱାରାଇଁ ଏଲେଇଚେସି, “ଦାୱୁଦ ଅ଼ଡ଼େ ତାନି ତ଼ଣେସିଙ୍ଗା ହାକି ଆ଼ହାମାଚାଟି ଏ଼ୱାରି ଏ଼ନାଆଁ କିହାମାଚେରି, ଏ଼ଦାଆଁ ମୀରୁ ଏଚେଲା ପ଼ଡ଼ୱି ଆ଼ହାହିଲଅତେରି,
26 அபியத்தார் பிரதான ஆசாரியனாக இருந்த நாட்களில், தாவீது இறைவனுடைய வீட்டிற்குள் போய், மோசேயின் சட்டத்தின்படி ஆசாரியர்கள் மட்டுமே சாப்பிடக்கூடிய தேவசமுகத்து அப்பத்தை அவன் சாப்பிட்டு அதில் சிலவற்றைத் தன்னோடிருந்தவர்களுக்கும் கொடுத்தானே” என்றார்.
୨୬ଅବିୟତର କାଜା ପୂଜେରା ମାଚିବେ଼ଲାତା ଏ଼ୱାସି ଏ଼ନିକିଁ ମାହାପୂରୁ ଇଲୁତା ହ଼ଡାନା ଆମିନି ମାହାପୂରୁକି ହେର୍‌ପିତି ରୂଟି କାଜା ପୂଜେରାଙ୍ଗା ପିସ୍‌ପେ ଆମ୍ବାଆରି ତିନାଆଗାଟି ମେ଼ରା ମାଚେ, ସାମା ଏ଼ଦାଆଁ ଦାୱୁଦ ତିଞ୍ଜା ମାଚେସି ଇଞ୍ଜାଁ ତାନି ଆଟ୍‌ହି ତାରାକି ଜିକେଏ ତିଞ୍ଜାଲି ହୀହାମାଚେସି ।”
27 பின்பு இயேசு அவர்களிடம், “ஓய்வுநாளுக்காக மனிதன் அல்ல; மனிதனுக்காக ஓய்வுநாள் உண்டாக்கப்பட்டது.
୨୭ଡା଼ୟୁ ଜୀସୁ ଏ଼ୱାରାଇଁ ଏଲେଇଚେସି, “ଜ଼ମିନି ଦିନା ମାଣ୍‌ସିତାକି ଆ଼ହାମାନେ; ସାମା ମାଣ୍‌ସି ଜ଼ମିନି ଦିନାତାକି ଆ଼ହାହିଲଅସି ।”
28 அந்தப்படியே மானிடமகனாகிய நான் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறேன்” என்றார்.
୨୮ଏ଼ଦାଆଁତାକି ମାଣ୍‌ସି ମୀର୍‌ଏସି ଜ଼ମିନି ଦିନାତି ପ୍ରବୁ ଆ଼ନେସି ।

< மாற்கு 2 >