< யோபு 18 >

1 அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக சொன்னது:
Отвещав же Валдад Савхейский, рече:
2 “நீ எப்பொழுது இந்தப் பேச்சுக்களை நிறுத்துவாய்? நிதானமாயிரு, அப்பொழுது நாங்கள் பேசுவோம்.
доколе не престанеши? Пожди, да и мы возглаголем.
3 உன் பார்வையில் நாங்கள் மிருகங்களைப்போல கருதப்பட்டு மதியீனர்களாய் எண்ணப்படுவது ஏன்?
И почто аки четвероножная умолчахом пред тобою?
4 உன் கோபத்தில் உன்னையே காயப்படுத்துகிறவனே, உனக்காக பூமி கைவிடப்படுமோ? பாறை தன் இடத்தைவிட்டு நகருமோ?
Пребысть ти гнев. Что бо? Аще ты умреши, не населенна ли будет поднебесная? Или превратятся горы из оснований?
5 “கொடியவனின் விளக்கு அணைக்கப்படுகிறது; அவனுடைய நெருப்புச் சுவாலையும் எரியாமல் போகிறது.
И свет нечестивых угаснет, и не произыдет их пламень:
6 அவனுடைய கூடார வெளிச்சம் இருளாகிறது; அவனுடைய விளக்கும் அணைந்து போகிறது.
свет его тма в жилищи, светилник же в нем угаснет:
7 அவனுடைய நடையின் கம்பீரம் பலவீனமடைகிறது; அவனுடைய சுயதிட்டங்கள் அவனைக் கீழே வீழ்த்துகின்றன.
да уловят меншии имения его, погрешит же его совет:
8 அவன் தன் கால்களினால் வலையில் பிடிபட்டு, அந்த வலையின் சிக்கலிலே நடக்கிறான்.
ввержена же бысть нога его в пругло, мрежею да повиется:
9 பொறி அவன் குதிகாலைப் பிடிக்கிறது; கண்ணி அவனை இறுக்கிப் பிடிக்கிறது.
да приидут же нань пругла, укрепит нань жаждущих:
10 சுருக்கு அவனுக்காகத் தரையிலும், பொறி அவன் பாதையிலும் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது.
скрыся в земли уже его, и ятие его на стези.
11 எப்பக்கத்திலும் பயங்கரங்கள் அவனைத் திடுக்கிடப்பண்ணி, அவன் கால்களை அலையவைக்கும்.
Окрест да погубят его болезни: мнози же окрест ног его обыдут во гладе теснем:
12 பேரழிவு அவனுக்காக காத்திருக்கிறது; பெருங்கேடு அவன் விழும்போது ஆயத்தமாக இருக்கிறது.
падение же ему уготовано велико.
13 வியாதி அவன் தோலைத் தின்கிறது; சாவின் முதற்பேறு அவன் அங்கங்களை விழுங்குகிறது.
Поядены же да будут плесны ног его, красная же его да пояст смерть.
14 அவன் தன் கூடாரத்தின் பாதுகாப்பிலிருந்து பிடுங்கப்பட்டு, பயங்கரங்களின் அரசனிடம் கொண்டுபோகப்படுகிறான்.
Отторжено же буди от жития его изцеление, да имет же его беда виною царскою.
15 அவனுடைய கூடாரத்தில் நெருப்பு குடியிருக்கும்; அவனுடைய உறைவிடங்களில் கந்தகம் வாரி இறைக்கப்படும்.
Да вселится в храмине его в нощи его, посыпана да будут лепотная его жупелом:
16 கீழே அவனுடைய வேர்கள் காய்ந்து போகின்றன; மேலே அவனுடைய கிளைகள் வாடிப்போகின்றன.
под ним корения его да изсохнут, свыше же нападет пожатие его.
17 அவனைப் பற்றிய நினைவு பூமியிலிருந்து அற்றுப்போகிறது; மண்ணில் அவனுக்குப் பெயர் இல்லாதிருக்கிறது.
Память его да погибнет от земли, и (не) будет имя его на лицы внешнем:
18 அவன் வெளிச்சத்திலிருந்து இருளுக்குள் தள்ளப்படுகிறான்; உலகத்திலிருந்தும் துரத்தப்படுகிறான்.
да отринет его от света во тму:
19 அவனுடைய மக்கள் மத்தியில் அவனுக்கு சந்ததிகளே இல்லை, அவன் வாழ்ந்த இடத்தில் மீதியாயிருப்பவன் ஒருவனும் இல்லை.
не будет знаемь в людех его, ниже спасен в поднебесней дом его:
20 அவன் முடிவைக்கண்டு மேற்கிலுள்ளோர் நடுங்கினர்; அவன் காலத்திற்கு பின்பு வாழ்ந்த கிழக்கிலுள்ளோர் திகிலுற்றனர்.
но в своих ему поживут инии, над ним воздохнуша последнии, первых же объя чудо.
21 தீயவனின் குடியிருப்பு இத்தகையதே; இறைவனை அறியாதவனின் இருப்பிடமும் இத்தகையதே.”
Сии суть домове неправедных, сие же место неведущих Бога.

< யோபு 18 >