< പ്രേരിതാഃ 2 >

1 അപരഞ്ച നിസ്താരോത്സവാത് പരം പഞ്ചാശത്തമേ ദിനേ സമുപസ്ഥിതേ സതി തേ സർവ്വേ ഏകാചിത്തീഭൂയ സ്ഥാന ഏകസ്മിൻ മിലിതാ ആസൻ|
பெந்தெகொஸ்தே நாள் வந்தபோது, அவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள்.
2 ഏതസ്മിന്നേവ സമയേഽകസ്മാദ് ആകാശാത് പ്രചണ്ഡാത്യുഗ്രവായോഃ ശബ്ദവദ് ഏകഃ ശബ്ദ ആഗത്യ യസ്മിൻ ഗൃഹേ ത ഉപാവിശൻ തദ് ഗൃഹം സമസ്തം വ്യാപ്നോത്|
அப்பொழுது திடீரென பலத்த காற்று வீசுவதுபோன்ற ஒரு முழக்கம் பரத்திலிருந்து வந்து, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று.
3 തതഃ പരം വഹ്നിശിഖാസ്വരൂപാ ജിഹ്വാഃ പ്രത്യക്ഷീഭൂയ വിഭക്താഃ സത്യഃ പ്രതിജനോർദ്ധ്വേ സ്ഥഗിതാ അഭൂവൻ|
அவர்கள் நெருப்புப்போன்ற பிரிந்திருக்கும் நாவுகளைக் கண்டார்கள். அவை அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தன.
4 തസ്മാത് സർവ്വേ പവിത്രേണാത്മനാ പരിപൂർണാഃ സന്ത ആത്മാ യഥാ വാചിതവാൻ തദനുസാരേണാന്യദേശീയാനാം ഭാഷാ ഉക്തവന്തഃ|
அவர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டார்கள். ஆவியானவர் கொடுத்த ஆற்றலின்படி, ஒவ்வொருவரும் வெவ்வேறு மொழிகளிலே பேசத் தொடங்கினார்கள்.
5 തസ്മിൻ സമയേ പൃഥിവീസ്ഥസർവ്വദേശേഭ്യോ യിഹൂദീയമതാവലമ്ബിനോ ഭക്തലോകാ യിരൂശാലമി പ്രാവസൻ;
அப்பொழுது இறைவனிடம் பயபக்தியாயிருந்த யூதர்கள் வானத்தின் கீழுள்ள ஒவ்வொரு நாடுகளிலிருந்தும் வந்து எருசலேமில் தங்கியிருந்தார்கள்.
6 തസ്യാഃ കഥായാഃ കിംവദന്ത്യാ ജാതത്വാത് സർവ്വേ ലോകാ മിലിത്വാ നിജനിജഭാഷയാ ശിഷ്യാണാം കഥാകഥനം ശ്രുത്വാ സമുദ്വിഗ്നാ അഭവൻ|
அவர்கள் இந்த சத்தத்தைக் கேட்டபோது, பெருங்கூட்டமாய் அங்கே வந்தார்கள். தங்களுடைய சொந்த மொழிகளில் அவர்கள் ஒவ்வொருவரும் பேசுவதைக் கேட்டு வியப்படைந்தார்கள்.
7 സർവ്വഏവ വിസ്മയാപന്നാ ആശ്ചര്യ്യാന്വിതാശ്ച സന്തഃ പരസ്പരം ഉക്തവന്തഃ പശ്യത യേ കഥാം കഥയന്തി തേ സർവ്വേ ഗാലീലീയലോകാഃ കിം ന ഭവന്തി?
அவர்கள் முற்றுமாய் வியப்படைந்து, “இங்கு பேசிக்கொண்டிருக்கிற இவர்கள் அனைவரும் கலிலேயர் அல்லவா?
8 തർഹി വയം പ്രത്യേകശഃ സ്വസ്വജന്മദേശീയഭാഷാഭിഃ കഥാ ഏതേഷാം ശൃണുമഃ കിമിദം?
அப்படியிருக்க, இவர்கள் நமது சொந்த மொழிகளில் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் கேட்கிறோமே, அது எப்படி?
9 പാർഥീ-മാദീ-അരാമ്നഹരയിമ്ദേശനിവാസിമനോ യിഹൂദാ-കപ്പദകിയാ-പന്ത-ആശിയാ-
பார்த்தரும், மேதரும், எலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா,
10 ഫ്രുഗിയാ-പമ്ഫുലിയാ-മിസരനിവാസിനഃ കുരീണീനികടവർത്തിലൂബീയപ്രദേശനിവാസിനോ രോമനഗരാദ് ആഗതാ യിഹൂദീയലോകാ യിഹൂദീയമതഗ്രാഹിണഃ ക്രീതീയാ അരാബീയാദയോ ലോകാശ്ച യേ വയമ്
பிரிகியா, பம்பிலியா, எகிப்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும், சிரேனே அருகேயுள்ள லீபியாவின் சில பகுதிகளிலுள்ளவர்களும், ரோமிலிருந்து வந்தவர்களும் இங்கிருக்கிறார்களே.
11 അസ്മാകം നിജനിജഭാഷാഭിരേതേഷാമ് ഈശ്വരീയമഹാകർമ്മവ്യാഖ്യാനം ശൃണുമഃ|
இன்னும் யூதரும், யூத விசுவாசத்திற்கு வந்தவர்களும் இருக்கிறார்களே! அத்துடன் கிரேத்தரும், அரபியரும் ஆகிய நாம் நம் மொழிகளிலே இறைவனின் அதிசயங்களை இவர்கள் அறிவிப்பதைக் கேட்கிறோமே!” என்றார்கள்.
12 ഇത്ഥം തേ സർവ്വഏവ വിസ്മയാപന്നാഃ സന്ദിഗ്ധചിത്താഃ സന്തഃ പരസ്പരമൂചുഃ, അസ്യ കോ ഭാവഃ?
அவர்கள் வியப்பும் குழப்பமும் அடைந்தவர்களாய், ஒருவரையொருவர் பார்த்து, “இதன் அர்த்தம் என்ன?” என்றார்கள்.
13 അപരേ കേചിത് പരിഹസ്യ കഥിതവന്ത ഏതേ നവീനദ്രാക്ഷാരസേന മത്താ അഭവൻ|
ஆனால் சிலர், அவர்களைக்குறித்து கேலிசெய்து, “இவர்கள் மதுபானத்தை நிறைய குடித்திருக்கிறார்கள்” என்றார்கள்.
14 തദാ പിതര ഏകാദശഭി ർജനൈഃ സാകം തിഷ്ഠൻ താല്ലോകാൻ ഉച്ചൈഃകാരമ് അവദത്, ഹേ യിഹൂദീയാ ഹേ യിരൂശാലമ്നിവാസിനഃ സർവ്വേ, അവധാനം കൃത്വാ മദീയവാക്യം ബുധ്യധ്വം|
அப்பொழுது பேதுரு மற்ற பதினொரு பேருடனும் எழுந்து நின்று, உரத்த சத்தமாய் அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசத் தொடங்கினான்: “யூதமக்களே, எருசலேமில் வாழுகிறவர்களே, உங்கள் எல்லோருக்கும் நான் இதை விளக்கிச் சொல்லுகிறேன்; நான் சொல்வதைக் கவனமாய் கேளுங்கள்.
15 ഇദാനീമ് ഏകയാമാദ് അധികാ വേലാ നാസ്തി തസ്മാദ് യൂയം യദ് അനുമാഥ മാനവാ ഇമേ മദ്യപാനേന മത്താസ്തന്ന|
நீங்கள் நினைப்பதுபோல இவர்கள் குடிவெறி கொண்டவர்கள் அல்ல. நேரமோ இன்னும் காலை ஒன்பது மணிதானே!
16 കിന്തു യോയേൽഭവിഷ്യദ്വക്ത്രൈതദ്വാക്യമുക്തം യഥാ,
இறைவாக்கினன் யோவேலினால் கூறப்பட்டபடி இது நிறைவேறுகிறது:
17 ഈശ്വരഃ കഥയാമാസ യുഗാന്തസമയേ ത്വഹമ്| വർഷിഷ്യാമി സ്വമാത്മാനം സർവ്വപ്രാണ്യുപരി ധ്രുവമ്| ഭാവിവാക്യം വദിഷ്യന്തി കന്യാഃ പുത്രാശ്ച വസ്തുതഃ| പ്രത്യാദേശഞ്ച പ്രാപ്സ്യന്തി യുഷ്മാകം യുവമാനവാഃ| തഥാ പ്രാചീനലോകാസ്തു സ്വപ്നാൻ ദ്രക്ഷ്യന്തി നിശ്ചിതം|
“‘இறைவன் சொல்லியபடி, கடைசி நாட்களில், நான் எல்லா மக்கள்மேலும் என் ஆவியானவரைப் பொழிவேன். உங்கள் மகன்களும் மகள்களும் இறைவாக்கு உரைப்பார்கள், உங்கள் இளைஞர் தரிசனங்களைக் காண்பார்கள், உங்கள் முதியவர்கள் கனவுகளைக் காண்பார்கள்.
18 വർഷിഷ്യാമി തദാത്മാനം ദാസദാസീജനോപിരി| തേനൈവ ഭാവിവാക്യം തേ വദിഷ്യന്തി ഹി സർവ്വശഃ|
மேலும் அந்நாட்களில் நான், எனது ஊழியக்காரர்கள்மேலும் ஊழியக்காரிகள்மேலும், என் ஆவியைப் பொழிவேன். அப்பொழுது அவர்கள் இறைவாக்கு உரைப்பார்கள்.
19 ഊർദ്ധ്വസ്ഥേ ഗഗണേ ചൈവ നീചസ്ഥേ പൃഥിവീതലേ| ശോണിതാനി ബൃഹദ്ഭാനൂൻ ഘനധൂമാദികാനി ച| ചിഹ്നാനി ദർശയിഷ്യാമി മഹാശ്ചര്യ്യക്രിയാസ്തഥാ|
உயரே வானத்தில் நான் அதிசயங்களைக் காண்பிப்பேன், கீழே பூமியில் அடையாளங்களாக இரத்தத்தையும், நெருப்பையும், புகை மண்டலங்களையும் காண்பிப்பேன்.
20 മഹാഭയാനകസ്യൈവ തദ്ദിനസ്യ പരേശിതുഃ| പുരാഗമാദ് രവിഃ കൃഷ്ണോ രക്തശ്ചന്ദ്രോ ഭവിഷ്യതഃ|
பெரிதும் மகிமையானதுமான கர்த்தரின் நாள் வருமுன்பே, சூரியன் இருண்டுபோகும்; சந்திரன் இரத்தமாக மாறும்.
21 കിന്തു യഃ പരമേശസ്യ നാമ്നി സമ്പ്രാർഥയിഷ്യതേ| സഏവ മനുജോ നൂനം പരിത്രാതോ ഭവിഷ്യതി||
கர்த்தரின் பெயரைச் சொல்லி கூப்பிடுகிற யாவரும் இரட்சிக்கப்படுவார்கள்.’
22 അതോ ഹേ ഇസ്രായേല്വംശീയലോകാഃ സർവ്വേ കഥായാമേതസ്യാമ് മനോ നിധദ്ധ്വം നാസരതീയോ യീശുരീശ്വരസ്യ മനോനീതഃ പുമാൻ ഏതദ് ഈശ്വരസ്തത്കൃതൈരാശ്ചര്യ്യാദ്ഭുതകർമ്മഭി ർലക്ഷണൈശ്ച യുഷ്മാകം സാക്ഷാദേവ പ്രതിപാദിതവാൻ ഇതി യൂയം ജാനീഥ|
“இஸ்ரயேலரே, இதைக் கேளுங்கள்: நீங்கள் அறிந்திருக்கிறபடி, இறைவன் உங்கள் மத்தியில் நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவின் மூலமாக செய்த அற்புதங்கள், அதிசயங்கள், அடையாளங்களினால் அவர் இறைவனால் அங்கீகாரம் பெற்ற மனிதர் என்பதை நிரூபித்தார்.
23 തസ്മിൻ യീശൗ ഈശ്വരസ്യ പൂർവ്വനിശ്ചിതമന്ത്രണാനിരൂപണാനുസാരേണ മൃത്യൗ സമർപിതേ സതി യൂയം തം ധൃത്വാ ദുഷ്ടലോകാനാം ഹസ്തൈഃ ക്രുശേ വിധിത്വാഹത|
இறைவன் தாம் தீர்மானித்திருந்த நோக்கத்தின்படியும், தமது முன்னறிவின்படியும், அவர் அந்த இயேசுவை உங்களிடம் ஒப்படைத்தார். நீங்களோ கொடியவர்களின் உதவியோடு, அவரைச் சிலுவையில் ஆணி அடித்துக் கொலைசெய்தீர்கள்.
24 കിന്ത്വീശ്വരസ്തം നിധനസ്യ ബന്ധനാന്മോചയിത്വാ ഉദസ്ഥാപയത് യതഃ സ മൃത്യുനാ ബദ്ധസ്തിഷ്ഠതീതി ന സമ്ഭവതി|
ஆனால் இறைவனோ, மரணத்தின் வேதனையிலிருந்து இயேசுவை விடுவித்து, அவரை உயிரோடு எழுப்பினார். ஏனெனில், மரணத்தினால் அவரைப் பிடித்து வைத்திருக்க முடியவில்லை.
25 ഏതസ്തിൻ ദായൂദപി കഥിതവാൻ യഥാ, സർവ്വദാ മമ സാക്ഷാത്തം സ്ഥാപയ പരമേശ്വരം| സ്ഥിതേ മദ്ദക്ഷിണേ തസ്മിൻ സ്ഖലിഷ്യാമി ത്വഹം നഹി|
தாவீது கிறிஸ்துவைக்குறித்துச் சொல்லியிருப்பதாவது: “‘நான் கர்த்தரை எப்பொழுதும் என் கண்முன் வைத்துக்கொண்டிருக்கிறேன். அவர் எனது வலதுபக்கத்தில் இருக்கிறபடியால், நான் அசைக்கப்படமாட்டேன்.
26 ആനന്ദിഷ്യതി തദ്ധേതോ ർമാമകീനം മനസ്തു വൈ| ആഹ്ലാദിഷ്യതി ജിഹ്വാപി മദീയാ തു തഥൈവ ച| പ്രത്യാശയാ ശരീരന്തു മദീയം വൈശയിഷ്യതേ|
ஆகையால், என் இருதயம் மகிழ்ந்து என் நாவு களிகூருகிறது; என் உடலும் எதிர்பார்ப்புடன் வாழும்.
27 പരലോകേ യതോ ഹേതോസ്ത്വം മാം നൈവ ഹി ത്യക്ഷ്യസി| സ്വകീയം പുണ്യവന്തം ത്വം ക്ഷയിതും നൈവ ദാസ്യസി| ഏവം ജീവനമാർഗം ത്വം മാമേവ ദർശയിഷ്യസി| (Hadēs g86)
ஏனெனில் நீர் என்னைப் பாதாளத்தில் கைவிடமாட்டீர், உமது பரிசுத்தர் அழிவைக் காணவும் நீர் விடமாட்டீர். (Hadēs g86)
28 സ്വസമ്മുഖേ യ ആനന്ദോ ദക്ഷിണേ സ്വസ്യ യത് സുഖം| അനന്തം തേന മാം പൂർണം കരിഷ്യസി ന സംശയഃ||
நீர் வாழ்வின் பாதைகளை எனக்குத் தெரியப்படுத்தியிருக்கிறீர். உமது சமுகத்தில் உமது மகிழ்ச்சியினால் என்னை நிரப்புவீர்’ என்பதே.
29 ഹേ ഭ്രാതരോഽസ്മാകം തസ്യ പൂർവ്വപുരുഷസ്യ ദായൂദഃ കഥാം സ്പഷ്ടം കഥയിതും മാമ് അനുമന്യധ്വം, സ പ്രാണാൻ ത്യക്ത്വാ ശ്മശാനേ സ്ഥാപിതോഭവദ് അദ്യാപി തത് ശ്മശാനമ് അസ്മാകം സന്നിധൗ വിദ്യതേ|
“சகோதரரே, இதை நான் உங்களுக்கு உறுதியாகச் சொல்கிறேன். நமது முற்பிதாவான தாவீது இறந்து அடக்கம்பண்ணப்பட்டானே. அவனது கல்லறை இந்நாள்வரை இங்கே இருக்கிறதே.
30 ഫലതോ ലൗകികഭാവേന ദായൂദോ വംശേ ഖ്രീഷ്ടം ജന്മ ഗ്രാഹയിത്വാ തസ്യൈവ സിംഹാസനേ സമുവേഷ്ടും തമുത്ഥാപയിഷ്യതി പരമേശ്വരഃ ശപഥം കുത്വാ ദായൂദഃ സമീപ ഇമമ് അങ്ഗീകാരം കൃതവാൻ,
ஆனால் தாவீது இறைவாக்கினனாய் இருந்ததால், தனது சந்ததியிலே ஒருவரை தனது அரியணையில் அமர்த்துவார் என்று இறைவன் தனக்கு ஆணையிட்டு வாக்குக் கொடுத்திருந்ததை அவன் அறிந்திருந்தான்.
31 ഇതി ജ്ഞാത്വാ ദായൂദ് ഭവിഷ്യദ്വാദീ സൻ ഭവിഷ്യത്കാലീയജ്ഞാനേന ഖ്രീഷ്ടോത്ഥാനേ കഥാമിമാം കഥയാമാസ യഥാ തസ്യാത്മാ പരലോകേ ന ത്യക്ഷ്യതേ തസ്യ ശരീരഞ്ച ന ക്ഷേഷ്യതി; (Hadēs g86)
நிகழப்போவதை தாவீது முன்னமே கண்டு, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக்குறித்துப் பேசினான். அதனாலேயே அவர் பாதாளத்தில் கைவிடப்படுவதில்லை என்றும், அவரின் உடல் அழிவைக் காண்பதில்லை என்றும் சொன்னான். (Hadēs g86)
32 അതഃ പരമേശ്വര ഏനം യീശും ശ്മശാനാദ് ഉദസ്ഥാപയത് തത്ര വയം സർവ്വേ സാക്ഷിണ ആസ്മഹേ|
இறைவன் இந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தார். அதற்கு நாங்கள் அனைவரும் சாட்சிகளாய் இருக்கிறோம்.
33 സ ഈശ്വരസ്യ ദക്ഷിണകരേണോന്നതിം പ്രാപ്യ പവിത്ര ആത്മിന പിതാ യമങ്ഗീകാരം കൃതവാൻ തസ്യ ഫലം പ്രാപ്യ യത് പശ്യഥ ശൃണുഥ ച തദവർഷത്|
கிறிஸ்து இறைவனுடைய வலதுபக்கத்திற்கு உயர்த்தப்பட்டு, பிதா வாக்குப்பண்ணிய பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டார். நீங்கள் இப்பொழுது காண்கிறபடியும் கேட்கிறபடியும் அவரே அந்த பரிசுத்த ஆவியானவரை ஊற்றியிருக்கிறார்.
34 യതോ ദായൂദ് സ്വർഗം നാരുരോഹ കിന്തു സ്വയമ് ഇമാം കഥാമ് അകഥയദ് യഥാ, മമ പ്രഭുമിദം വാക്യമവദത് പരമേശ്വരഃ|
தாவீது பரலோகத்திற்கு எழுந்து போகவில்லையே, ஆனால் அவன், “‘கர்த்தர் என் கர்த்தரிடம், சொன்னதாவது: “நான் உமது பகைவரை
35 തവ ശത്രൂനഹം യാവത് പാദപീഠം കരോമി ന| താവത് കാലം മദീയേ ത്വം ദക്ഷവാർശ്വ ഉപാവിശ|
உமது கால்களுக்குப் பாதபடி ஆக்கும்வரை, நீர் என் வலதுபக்கத்தில் அமர்ந்திரும்.”’ என்று சொன்னான்.
36 അതോ യം യീശും യൂയം ക്രുശേഽഹത പരമേശ്വരസ്തം പ്രഭുത്വാഭിഷിക്തത്വപദേ ന്യയുംക്തേതി ഇസ്രായേലീയാ ലോകാ നിശ്ചിതം ജാനന്തു|
“ஆகவே இஸ்ரயேலராகிய நீங்கள் அனைவரும் நிச்சயமாய் அறிந்துகொள்ள வேண்டியது: நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே இறைவன், கர்த்தரும் கிறிஸ்துவும் ஆக்கியிருக்கிறார்” என்று பேதுரு சொன்னான்.
37 ഏതാദൃശീം കഥാം ശ്രുത്വാ തേഷാം ഹൃദയാനാം വിദീർണത്വാത് തേ പിതരായ തദന്യപ്രേരിതേഭ്യശ്ച കഥിതവന്തഃ, ഹേ ഭ്രാതൃഗണ വയം കിം കരിഷ്യാമഃ?
அந்த மக்கள் இதைக் கேட்டபோது, இருதயத்தில் குத்தப்பட்டவர்களாய், பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து, “சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்றார்கள்.
38 തതഃ പിതരഃ പ്രത്യവദദ് യൂയം സർവ്വേ സ്വം സ്വം മനഃ പരിവർത്തയധ്വം തഥാ പാപമോചനാർഥം യീശുഖ്രീഷ്ടസ്യ നാമ്നാ മജ്ജിതാശ്ച ഭവത, തസ്മാദ് ദാനരൂപം പരിത്രമ് ആത്മാനം ലപ്സ്യഥ|
அதற்குப் பேதுரு, “நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் பாவங்களுக்கு மன்னிப்புப் பெறும்படி மனந்திரும்பி, இயேசுகிறிஸ்துவின் பெயரில் திருமுழுக்கு பெற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் பரிசுத்த ஆவியானவரை நன்கொடையாகப் பெறுவீர்கள்.
39 യതോ യുഷ്മാകം യുഷ്മത്സന്താനാനാഞ്ച ദൂരസ്ഥസർവ്വലോകാനാഞ്ച നിമിത്തമ് അർഥാദ് അസ്മാകം പ്രഭുഃ പരമേശ്വരോ യാവതോ ലാകാൻ ആഹ്വാസ്യതി തേഷാം സർവ്വേഷാം നിമിത്തമ് അയമങ്ഗീകാര ആസ്തേ|
இந்த வாக்குத்தத்தம் உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், தொலைவிலுள்ள அனைவருக்கும் உரியது. நமது இறைவனாகிய கர்த்தர் அழைக்கப்போகிற அனைவருக்கும் இது உரியது” என்றான்.
40 ഏതദന്യാഭി ർബഹുകഥാഭിഃ പ്രമാണം ദത്വാകഥയത് ഏതേഭ്യോ വിപഥഗാമിഭ്യോ വർത്തമാനലോകേഭ്യഃ സ്വാൻ രക്ഷത|
பேதுரு இன்னும் வேறு பல வார்த்தைகள் மூலமாயும் அவர்களை எச்சரித்தான்: “இந்தக் கறைபட்ட தலைமுறையிலிருந்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்” என்றும் அவர்களை எச்சரித்தான்.
41 തതഃ പരം യേ സാനന്ദാസ്താം കഥാമ് അഗൃഹ്ലൻ തേ മജ്ജിതാ അഭവൻ| തസ്മിൻ ദിവസേ പ്രായേണ ത്രീണി സഹസ്രാണി ലോകാസ്തേഷാം സപക്ഷാഃ സന്തഃ
பேதுருவினுடைய செய்தியை ஏற்றுக்கொண்ட அனைவரும் திருமுழுக்குப் பெற்றார்கள். திருச்சபையில் ஏறக்குறைய மூவாயிரம்பேர் அன்று சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.
42 പ്രേരിതാനാമ് ഉപദേശേ സങ്ഗതൗ പൂപഭഞ്ജനേ പ്രാർഥനാസു ച മനഃസംയോഗം കൃത്വാതിഷ്ഠൻ|
அவர்கள் அப்போஸ்தலருடைய போதித்தலுக்கும், ஐக்கியத்திற்கும், அப்பம் பிட்குதலுக்கும், மன்றாட்டுக்கும் தங்களை அர்ப்பணித்தார்கள்.
43 പ്രേരിതൈ ർനാനാപ്രകാരലക്ഷണേഷു മഹാശ്ചര്യ്യകർമമസു ച ദർശിതേഷു സർവ്വലോകാനാം ഭയമുപസ്ഥിതം|
அனைவரும் பயபக்தியினால் நிறைந்திருந்தார்கள். அப்போஸ்தலர்களால் அநேக அதிசயங்களும் அற்புத அடையாளங்களும் செய்யப்பட்டன.
44 വിശ്വാസകാരിണഃ സർവ്വ ച സഹ തിഷ്ഠനതഃ| സ്വേഷാം സർവ്വാഃ സമ്പത്തീഃ സാധാരണ്യേന സ്ഥാപയിത്വാഭുഞ്ജത|
விசுவாசிகள் அனைவரும் ஒன்றுகூடியிருந்தார்கள். அவர்கள் எல்லாப் பொருட்களையும் பொதுவானதாக வைத்துக்கொண்டார்கள்.
45 ഫലതോ ഗൃഹാണി ദ്രവ്യാണി ച സർവ്വാണി വിക്രീയ സർവ്വേഷാം സ്വസ്വപ്രയോജനാനുസാരേണ വിഭജ്യ സർവ്വേഭ്യോഽദദൻ|
அவர்கள் தங்கள் சொத்துக்களையும், பொருட்களையும் விற்று, தேவையானவர்களுக்கு ஏற்றவிதமாய் பகிர்ந்துகொடுத்தார்கள்.
46 സർവ്വ ഏകചിത്തീഭൂയ ദിനേ ദിനേ മന്ദിരേ സന്തിഷ്ഠമാനാ ഗൃഹേ ഗൃഹേ ച പൂപാനഭഞ്ജന്ത ഈശ്വരസ്യ ധന്യവാദം കുർവ്വന്തോ ലോകൈഃ സമാദൃതാഃ പരമാനന്ദേന സരലാന്തഃകരണേന ഭോജനം പാനഞ്ചകുർവ്വൻ|
ஒவ்வொரு நாளும், அவர்கள் ஆலயத்தின் முற்றத்தில் ஒன்றுகூடி சந்தித்தார்கள். அவர்கள் தங்களுடைய வீடுகள்தோறும் அப்பம் பிட்டார்கள். அவர்கள் எளிய இருதயத்துடனும், சந்தோஷத்துடனும் ஒன்றாய்ச் சாப்பிட்டார்கள்.
47 പരമേശ്വരോ ദിനേ ദിനേ പരിത്രാണഭാജനൈ ർമണ്ഡലീമ് അവർദ്ധയത്|
அவர்கள் இறைவனைத் துதிக்கிறவர்களாயும், எல்லா மக்களுடைய தயவையும் பெற்றவர்களாயும் இருந்தார்கள். ஒவ்வொரு நாளும் இரட்சிக்கப்படுகிறவர்களை கர்த்தர் அவர்களின் எண்ணிக்கையுடனே சேர்த்துக்கொண்டு வந்தார்.

< പ്രേരിതാഃ 2 >