< রোমিণঃ 4 >

1 অস্মাকং পূর্ৱ্ৱপুরুষ ইব্রাহীম্ কাযিকক্রিযযা কিং লব্ধৱান্ এতদধি কিং ৱদিষ্যামঃ?
அப்படியானால், நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் சரீரத்தின்படி என்னத்தைக் கண்டுபிடித்தான் என்று சொல்லுவோம்?
2 স যদি নিজক্রিযাভ্যঃ সপুণ্যো ভৱেৎ তর্হি তস্যাত্মশ্লাঘাং কর্ত্তুং পন্থা ভৱেদিতি সত্যং, কিন্ত্ৱীশ্ৱরস্য সমীপে নহি|
ஆபிரகாம் செயல்களினாலே நீதிமானாக்கப்பட்டான் என்றால் மேன்மைபாராட்ட அவனுக்குக் காரணம் உண்டு; ஆனால் தேவனுக்குமுன்பாக மேன்மைபாராட்டமுடியாது.
3 শাস্ত্রে কিং লিখতি? ইব্রাহীম্ ঈশ্ৱরে ৱিশ্ৱসনাৎ স ৱিশ্ৱাসস্তস্মৈ পুণ্যার্থং গণিতো বভূৱ|
வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது? “ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது” என்று சொல்லுகிறது.
4 কর্ম্মকারিণো যদ্ ৱেতনং তদ্ অনুগ্রহস্য ফলং নহি কিন্তু তেনোপার্জিতং মন্তৱ্যম্|
வேலை செய்கிறவனுக்கு வருகிற கூலி கிருபை என்று எண்ணப்படாமல், கடன் என்று எண்ணப்படும்.
5 কিন্তু যঃ পাপিনং সপুণ্যীকরোতি তস্মিন্ ৱিশ্ৱাসিনঃ কর্ম্মহীনস্য জনস্য যো ৱিশ্ৱাসঃ স পুণ্যার্থং গণ্যো ভৱতি|
ஒருவன் செயல்களைச் செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடம் விசுவாசம் வைக்கிறவனாக இருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்.
6 অপরং যং ক্রিযাহীনম্ ঈশ্ৱরঃ সপুণ্যীকরোতি তস্য ধন্যৱাদং দাযূদ্ ৱর্ণযামাস, যথা,
அந்தப்படி, செயல்கள் இல்லாமல் தேவனாலே நீதிமான் என்று எண்ணப்படுகிற மனிதனுடைய பாக்கியத்தைக் காண்பிப்பதற்காக:
7 স ধন্যোঽঘানি মৃষ্টানি যস্যাগাংস্যাৱৃতানি চ|
எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள்.
8 স চ ধন্যঃ পরেশেন পাপং যস্য ন গণ্যতে|
எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான்” என்று தாவீது சொல்லியிருக்கிறான்.
9 এষ ধন্যৱাদস্ত্ৱক্ছেদিনম্ অৎৱক্ছেদিনং ৱা কং প্রতি ভৱতি? ইব্রাহীমো ৱিশ্ৱাসঃ পুণ্যার্থং গণিত ইতি ৱযং ৱদামঃ|
இந்தப் பாக்கியம் விருத்தசேதனம் உள்ளவனுக்குமட்டும் வருமோ அல்லது விருத்தசேதனம் இல்லாதவனுக்கும் வருமோ? “ஆபிரகாமுக்கு விசுவாசம் நீதியாக எண்ணப்பட்டது” என்று சொல்லுகிறோமே.
10 ১০ স ৱিশ্ৱাসস্তস্য ৎৱক্ছেদিৎৱাৱস্থাযাং কিম্ অৎৱক্ছেদিৎৱাৱস্থাযাং কস্মিন্ সমযে পুণ্যমিৱ গণিতঃ? ৎৱক্ছেদিৎৱাৱস্থাযাং নহি কিন্ত্ৱৎৱক্ছেদিৎৱাৱস্থাযাং|
௧0அது எப்பொழுது அவனுக்கு அப்படி எண்ணப்பட்டது? அவன் விருத்தசேதனம் உள்ளவனாக இருந்தபோதா அல்லது விருத்தசேதனம் இல்லாதவனாக இருந்தபோதா? விருத்தசேதனம் உள்ளவனாக இருந்தபோது இல்லை, விருத்தசேதனம் இல்லாதவனாக இருந்தபோதே.
11 ১১ অপরঞ্চ স যৎ সর্ৱ্ৱেষাম্ অৎৱক্ছেদিনাং ৱিশ্ৱাসিনাম্ আদিপুরুষো ভৱেৎ, তে চ পুণ্যৱত্ত্ৱেন গণ্যেরন্;
௧௧மேலும், விருத்தசேதனம் இல்லாத காலத்தில் அவன் விசுவாசத்தினாலே அடைந்த நீதிக்கு முத்திரையாக விருத்தசேதனமாகிய அடையாளத்தைப் பெற்றான். விருத்தசேதனம் இல்லாதவர்களாக விசுவாசிக்கிற எல்லோருக்கும் நீதி எண்ணப்படுவதற்காக அவர்களுக்கு அவன் தகப்பனாக இருப்பதற்கும்,
12 ১২ যে চ লোকাঃ কেৱলং ছিন্নৎৱচো ন সন্তো ঽস্মৎপূর্ৱ্ৱপুরুষ ইব্রাহীম্ অছিন্নৎৱক্ সন্ যেন ৱিশ্ৱাসমার্গেণ গতৱান্ তেনৈৱ তস্য পাদচিহ্নেন গচ্ছন্তি তেষাং ৎৱক্ছেদিনামপ্যাদিপুরুষো ভৱেৎ তদর্থম্ অৎৱক্ছেদিনো মানৱস্য ৱিশ্ৱাসাৎ পুণ্যম্ উৎপদ্যত ইতি প্রমাণস্ৱরূপং ৎৱক্ছেদচিহ্নং স প্রাপ্নোৎ|
௧௨விருத்தசேதனத்தைப் பெற்றவர்களாக மட்டுமில்லை, நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் விருத்தசேதனம் இல்லாத காலத்தில் அடைந்த விசுவாசமாகிய அடிச்சுவடுகளில் நடக்கிறவர்களாகவும் இருக்கிறவர்களுக்குத் தகப்பனாக இருப்பதற்கும், அந்த அடையாளத்தைப் பெற்றான்.
13 ১৩ ইব্রাহীম্ জগতোঽধিকারী ভৱিষ্যতি যৈষা প্রতিজ্ঞা তং তস্য ৱংশঞ্চ প্রতি পূর্ৱ্ৱম্ অক্রিযত সা ৱ্যৱস্থামূলিকা নহি কিন্তু ৱিশ্ৱাসজন্যপুণ্যমূলিকা|
௧௩அன்றியும், உலகத்தைச் சுதந்தரிப்பான் என்கிற வாக்குத்தத்தம் ஆபிரகாமுக்கோ அல்லது அவன் வம்சத்திற்கோ நியாயப்பிரமாணத்தினால் கிடைக்காமல் விசுவாசத்தினால் வருகிற நீதியினால் கிடைத்தது.
14 ১৪ যতো ৱ্যৱস্থাৱলম্বিনো যদ্যধিকারিণো ভৱন্তি তর্হি ৱিশ্ৱাসো ৱিফলো জাযতে সা প্রতিজ্ঞাপি লুপ্তৈৱ|
௧௪நியாயப்பிரமாணத்தைச் சேர்ந்தவர்கள் வாரிசுகளானால் விசுவாசம் வீணாகப்போகும், வாக்குத்தத்தமும் இல்லாமல்போகும்.
15 ১৫ অধিকন্তু ৱ্যৱস্থা কোপং জনযতি যতো ঽৱিদ্যমানাযাং ৱ্যৱস্থাযাম্ আজ্ঞালঙ্ঘনং ন সম্ভৱতি|
௧௫மேலும் நியாயப்பிரமாணம் கோபத்தை உண்டாக்குகிறது, நியாயப்பிரமாணம் இல்லை என்றால் கீழ்ப்படியாமையும் இல்லை.
16 ১৬ অতএৱ সা প্রতিজ্ঞা যদ্ অনুগ্রহস্য ফলং ভৱেৎ তদর্থং ৱিশ্ৱাসমূলিকা যতস্তথাৎৱে তদ্ৱংশসমুদাযং প্রতি অর্থতো যে ৱ্যৱস্থযা তদ্ৱংশসম্ভৱাঃ কেৱলং তান্ প্রতি নহি কিন্তু য ইব্রাহীমীযৱিশ্ৱাসেন তৎসম্ভৱাস্তানপি প্রতি সা প্রতিজ্ঞা স্থাস্নুর্ভৱতি|
௧௬எனவே, சுதந்திரமானது கிருபையினால் உண்டாகிறதாக இருப்பதற்காக அது விசுவாசத்தினாலே வருகிறது; நியாயப்பிரமாணத்தைச் சேர்ந்த வம்சத்தினர்களுக்குமட்டும் இல்லை, நம் எல்லோருக்கும் தகப்பனாகிய ஆபிரகாமுடைய விசுவாசத்தைச் சேர்ந்தவர்களான எல்லா வம்சத்தினர்களுக்கும் அந்த வாக்குத்தத்தம் நிச்சயமாக இருப்பதற்காக அப்படி வருகிறது.
17 ১৭ যো নির্জীৱান্ সজীৱান্ অৱিদ্যমানানি ৱস্তূনি চ ৱিদ্যমানানি করোতি ইব্রাহীমো ৱিশ্ৱাসভূমেস্তস্যেশ্ৱরস্য সাক্ষাৎ সোঽস্মাকং সর্ৱ্ৱেষাম্ আদিপুরুষ আস্তে, যথা লিখিতং ৱিদ্যতে, অহং ৎৱাং বহুজাতীনাম্ আদিপুরুষং কৃৎৱা নিযুক্তৱান্|
௧௭“அநேக தேசமக்களுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன்” என்று எழுதியிருக்கிறபடி, அவன், தான் விசுவாசித்தவருமாக, மரித்தோரை உயிரோடு எழுப்பி, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல அழைக்கிறவருமாக இருக்கிற தேவனுக்குமுன்பாக நம்மெல்லோருக்கும் தகப்பன் ஆனான்.
18 ১৮ ৎৱদীযস্তাদৃশো ৱংশো জনিষ্যতে যদিদং ৱাক্যং প্রতিশ্রুতং তদনুসারাদ্ ইব্রাহীম্ বহুদেশীযলোকানাম্ আদিপুরুষো যদ্ ভৱতি তদর্থং সোঽনপেক্ষিতৱ্যমপ্যপেক্ষমাণো ৱিশ্ৱাসং কৃতৱান্|
௧௮“உன் வம்சம் இவ்வளவாக இருக்கும் என்று சொல்லப்பட்டபடியே,” தான் அநேக தேசமக்களுக்கு தகப்பனாவதை நம்புகிறதற்கு வழியில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடு விசுவாசித்தான்.
19 ১৯ অপরঞ্চ ক্ষীণৱিশ্ৱাসো ন ভূৎৱা শতৱৎসরৱযস্কৎৱাৎ স্ৱশরীরস্য জরাং সারানাম্নঃ স্ৱভার্য্যাযা রজোনিৱৃত্তিঞ্চ তৃণায ন মেনে|
௧௯அவன் விசுவாசத்திலே பலவீனமாக இருக்கவில்லை; அவன் ஏறக்குறைய நூறு வயதுள்ளவனாக இருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் நினைக்காமல் இருந்தான்.
20 ২০ অপরম্ অৱিশ্ৱাসাদ্ ঈশ্ৱরস্য প্রতিজ্ঞাৱচনে কমপি সংশযং ন চকার;
௨0தேவனுடைய வாக்குத்தத்தத்தைக்குறித்து அவன் அவிசுவாசமாகச் சந்தேகப்படாமல்,
21 ২১ কিন্ত্ৱীশ্ৱরেণ যৎ প্রতিশ্রুতং তৎ সাধযিতুং শক্যত ইতি নিশ্চিতং ৱিজ্ঞায দৃঢৱিশ্ৱাসঃ সন্ ঈশ্ৱরস্য মহিমানং প্রকাশযাঞ্চকার|
௨௧தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராக இருக்கிறார் என்று முழுநிச்சயமாக நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவன் ஆனான்.
22 ২২ ইতি হেতোস্তস্য স ৱিশ্ৱাসস্তদীযপুণ্যমিৱ গণযাঞ্চক্রে|
௨௨எனவே, அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
23 ২৩ পুণ্যমিৱাগণ্যত তৎ কেৱলস্য তস্য নিমিত্তং লিখিতং নহি, অস্মাকং নিমিত্তমপি,
௨௩“அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது,” என்பது, அவனுக்காகமட்டும் இல்லை, நமக்காகவும் எழுதப்பட்டிருக்கிறது.
24 ২৪ যতোঽস্মাকং পাপনাশার্থং সমর্পিতোঽস্মাকং পুণ্যপ্রাপ্ত্যর্থঞ্চোত্থাপিতোঽভৱৎ যোঽস্মাকং প্রভু র্যীশুস্তস্যোত্থাপযিতরীশ্ৱরে
௨௪நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினவரை விசுவாசிக்கிற நமக்கும் அப்படியே எண்ணப்படும்.
25 ২৫ যদি ৱযং ৱিশ্ৱসামস্তর্হ্যস্মাকমপি সএৱ ৱিশ্ৱাসঃ পুণ্যমিৱ গণযিষ্যতে|
௨௫அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்.

< রোমিণঃ 4 >