< মথিঃ 21 >
1 ১ অনন্তৰং তেষু যিৰূশালম্নগৰস্য সমীপৱেৰ্ত্তিনো জৈতুননামকধৰাধৰস্য সমীপস্থ্তিং বৈৎফগিগ্ৰামম্ আগতেষু, যীশুঃ শিষ্যদ্ৱযং প্ৰেষযন্ জগাদ,
௧அவர்கள் எருசலேமுக்கு அருகாமையில் சேர்ந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகேயுக்கு வந்தபோது, இயேசுவானவர் சீடர்களில் இரண்டுபேரைப் பார்த்து:
2 ২ যুৱাং সম্মুখস্থগ্ৰামং গৎৱা বদ্ধাং যাং সৱৎসাং গৰ্দ্দভীং হঠাৎ প্ৰাপ্স্যথঃ, তাং মোচযিৎৱা মদন্তিকম্ আনযতং|
௨உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்திற்குப் போங்கள்; போனவுடனே, அங்கே ஒரு கழுதையையும் அதனோடு ஒரு குட்டியையும் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அவைகளை அவிழ்த்து என்னிடத்தில் கொண்டுவாருங்கள்.
3 ৩ তত্ৰ যদি কশ্চিৎ কিঞ্চিদ্ ৱক্ষ্যতি, তৰ্হি ৱদিষ্যথঃ, এতস্যাং প্ৰভোঃ প্ৰযোজনমাস্তে, তেন স তৎক্ষণাৎ প্ৰহেষ্যতি|
௩ஒருவன் உங்களுக்கு ஏதாவது சொன்னால்: இவைகள் ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள்; உடனே அவைகளை அனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார்.
4 ৪ সীযোনঃ কন্যকাং যূযং ভাষধ্ৱমিতি ভাৰতীং| পশ্য তে নম্ৰশীলঃ সন্ নৃপ আৰুহ্য গৰ্দভীং| অৰ্থাদাৰুহ্য তদ্ৱৎসমাযাস্যতি ৎৱদন্তিকং|
௪இதோ, உன் ராஜா சாந்தகுணமுள்ளவராக, கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிக்கொண்டு, உன்னிடத்தில் வருகிறார் என்று சீயோன் குமாரத்திக்குச் சொல்லுங்கள்” என்று,
5 ৫ ভৱিষ্যদ্ৱাদিনোক্তং ৱচনমিদং তদা সফলমভূৎ|
௫தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.
6 ৬ অনন্তৰং তৌ শ্ষ্যি যীশো ৰ্যথানিদেশং তং গ্ৰামং গৎৱা
௬சீடர்கள்போய், இயேசு தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்து,
7 ৭ গৰ্দভীং তদ্ৱৎসঞ্চ সমানীতৱন্তৌ, পশ্চাৎ তদুপৰি স্ৱীযৱসনানী পাতযিৎৱা তমাৰোহযামাসতুঃ|
௭கழுதையையும் குட்டியையும் கொண்டுவந்து, அவைகள்மேல் தங்களுடைய ஆடைகளைப் போட்டு, அவரை ஏற்றினார்கள்.
8 ৮ ততো বহৱো লোকা নিজৱসনানি পথি প্ৰসাৰযিতুমাৰেভিৰে, কতিপযা জনাশ্চ পাদপপৰ্ণাদিকং ছিৎৱা পথি ৱিস্তাৰযামাসুঃ|
௮திரளான மக்கள் தங்களுடைய ஆடைகளை வழியிலே விரித்தார்கள்; வேறுசிலர் மரக்கிளைகளை வெட்டி வழியிலே பரப்பினார்கள்.
9 ৯ অগ্ৰগামিনঃ পশ্চাদ্গামিনশ্চ মনুজা উচ্চৈৰ্জয জয দাযূদঃ সন্তানেতি জগদুঃ পৰমেশ্ৱৰস্য নাম্না য আযাতি স ধন্যঃ, সৰ্ৱ্ৱোপৰিস্থস্ৱৰ্গেপি জযতি|
௯முன்னே நடப்பவர்களும் பின்னே நடப்பவர்களுமாகிய திரளான மக்கள்: தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் போற்றப்படத்தக்கவர், உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.
10 ১০ ইত্থং তস্মিন্ যিৰূশালমং প্ৰৱিষ্টে কোঽযমিতি কথনাৎ কৃৎস্নং নগৰং চঞ্চলমভৱৎ|
௧0அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கும்போது, நகரத்தார் அனைவரும் ஆச்சரியப்பட்டு, இவர் யார்? என்று விசாரித்தார்கள்.
11 ১১ তত্ৰ লোকোঃ কথযামাসুঃ, এষ গালীল্প্ৰদেশীয-নাসৰতীয-ভৱিষ্যদ্ৱাদী যীশুঃ|
௧௧அதற்கு மக்கள்: இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள்.
12 ১২ অনন্তৰং যীশুৰীশ্ৱৰস্য মন্দিৰং প্ৰৱিশ্য তন্মধ্যাৎ ক্ৰযৱিক্ৰযিণো ৱহিশ্চকাৰ; ৱণিজাং মুদ্ৰাসনানী কপোতৱিক্ৰযিণাঞ্চসনানী চ ন্যুৱ্জযামাস|
௧௨இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து, ஆலயத்திலே விற்கிறவர்களும் வாங்குகிறவர்களுமாகிய அனைவரையும் வெளியே துரத்தி, காசுக்காரர்களுடைய பலகைகளையும் புறா விற்கிறவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்து:
13 ১৩ অপৰং তানুৱাচ, এষা লিপিৰাস্তে, "মম গৃহং প্ৰাৰ্থনাগৃহমিতি ৱিখ্যাস্যতি", কিন্তু যূযং তদ্ দস্যূনাং গহ্ৱৰং কৃতৱন্তঃ|
௧௩என்னுடைய வீடு ஜெபவீடு எனப்படும் என்று எழுதியிருக்கிறது; நீங்களோ அதைக் திருடர்களுடைய குகையாக்கினீர்கள் என்றார்.
14 ১৪ তদনন্তৰম্ অন্ধখঞ্চলোকাস্তস্য সমীপমাগতাঃ, স তান্ নিৰামযান্ কৃতৱান্|
௧௪அப்பொழுது, குருடர்களும் முடவர்களும் தேவாலயத்திலே அவரிடத்திற்கு வந்தார்கள், அவர்களை குணமாக்கினார்.
15 ১৫ যদা প্ৰধানযাজকা অধ্যাপকাশ্চ তেন কৃতান্যেতানি চিত্ৰকৰ্ম্মাণি দদৃশুঃ, জয জয দাযূদঃ সন্তান, মন্দিৰে বালকানাম্ এতাদৃশম্ উচ্চধ্ৱনিং শুশ্ৰুৱুশ্চ, তদা মহাক্ৰুদ্ধা বভূৱঃ,
௧௫அவர் செய்த அதிசயங்களையும், தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! என்று தேவாலயத்திலே ஆர்ப்பரிக்கிற பிள்ளைகளையும், பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் பார்த்து, கோபமடைந்து,
16 ১৬ তং পপ্ৰচ্ছুশ্চ, ইমে যদ্ ৱদন্তি, তৎ কিং ৎৱং শৃণোষি? ততো যীশুস্তান্ অৱোচৎ, সত্যম্; স্তন্যপাযিশিশূনাঞ্চ বালকানাঞ্চ ৱক্ত্ৰতঃ| স্ৱকীযং মহিমানং ৎৱং সংপ্ৰকাশযসি স্ৱযং| এতদ্ৱাক্যং যূযং কিং নাপঠত?
௧௬அவரைப் பார்த்து: இவர்கள் சொல்லுகிறதைக் கேட்கிறீரோ என்றார்கள். அதற்கு இயேசு: ஆம், கேட்கிறேன். குழந்தைகளுடைய வாயினாலும் சிறுவர்களுடைய வாயினாலும் துதி உண்டாகும்படிச் செய்தீர் என்பதை நீங்கள் ஒருபோதும் வாசிக்கவில்லையா என்றார்.
17 ১৭ ততস্তান্ ৱিহায স নগৰাদ্ বৈথনিযাগ্ৰামং গৎৱা তত্ৰ ৰজনীং যাপযামাস|
௧௭அவர்களைவிட்டு நகரத்திலிருந்து புறப்பட்டு, பெத்தானியாவிற்குப்போய், அங்கே இரவில் தங்கினார்.
18 ১৮ অনন্তৰং প্ৰভাতে সতি যীশুঃ পুনৰপি নগৰমাগচ্ছন্ ক্ষুধাৰ্ত্তো বভূৱ|
௧௮காலையிலே அவர் நகரத்திற்குத் திரும்பிவரும்போது, அவருக்குப் பசியுண்டானது.
19 ১৯ ততো মাৰ্গপাৰ্শ্ৱ উডুম্বৰৱৃক্ষমেকং ৱিলোক্য তৎসমীপং গৎৱা পত্ৰাণি ৱিনা কিমপি ন প্ৰাপ্য তং পাদপং প্ৰোৱাচ, অদ্যাৰভ্য কদাপি ৎৱযি ফলং ন ভৱতু; তেন তৎক্ষণাৎ স উডুম্বৰমাহীৰুহঃ শুষ্কতাং গতঃ| (aiōn )
௧௯அப்பொழுது வழியருகே ஒரு அத்திமரத்தைப் பார்த்து, அதினிடத்திற்குப்போய், அதிலே இலைகளையன்றி வேறொன்றையும் காணாமல்: இனி ஒருபோதும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்றார்; உடனே அத்திமரம் பட்டுப்போனது. (aiōn )
20 ২০ তদ্ দৃষ্ট্ৱা শিষ্যা আশ্চৰ্য্যং ৱিজ্ঞায কথযামাসুঃ, আঃ, উডুম্ৱৰপাদপোঽতিতূৰ্ণং শুষ্কোঽভৱৎ|
௨0சீடர்கள் அதைப் பார்த்து: இந்த அத்திமரம் எத்தனை சீக்கிரமாகப் பட்டுப்போனது! என்று சொல்லி ஆச்சரியப்பட்டார்கள்.
21 ২১ ততো যীশুস্তানুৱাচ, যুষ্মানহং সত্যং ৱদামি, যদি যূযমসন্দিগ্ধাঃ প্ৰতীথ, তৰ্হি যূযমপি কেৱলোডুম্ৱৰপাদপং প্ৰতীত্থং কৰ্ত্তুং শক্ষ্যথ, তন্ন, ৎৱং চলিৎৱা সাগৰে পতেতি ৱাক্যং যুষ্মাভিৰস্মিন শৈলে প্ৰোক্তেপি তদৈৱ তদ্ ঘটিষ্যতে|
௨௧இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசமுள்ளவர்களாக இருந்தால், இந்த அத்திமரத்திற்குச் செய்ததை நீங்கள் செய்வதுமல்லாமல், இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து கடலிலே தள்ளுண்டுபோ என்று சொன்னாலும் அப்படியாகும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
22 ২২ তথা ৱিশ্ৱস্য প্ৰাৰ্থ্য যুষ্মাভি ৰ্যদ্ যাচিষ্যতে, তদেৱ প্ৰাপ্স্যতে|
௨௨மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாக ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார்.
23 ২৩ অনন্তৰং মন্দিৰং প্ৰৱিশ্যোপদেশনসমযে তৎসমীপং প্ৰধানযাজকাঃ প্ৰাচীনলোকাশ্চাগত্য পপ্ৰচ্ছুঃ, ৎৱযা কেন সামৰ্থ্যনৈতানি কৰ্ম্মাণি ক্ৰিযন্তে? কেন ৱা তুভ্যমেতানি সামৰ্থ্যানি দত্তানি?
௨௩அவர் தேவாலயத்தில் வந்து, உபதேசம்பண்ணும்போது, பிரதான ஆசாரியர்களும் மக்களின் மூப்பர்களும் அவரிடத்தில் வந்து: நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? என்று கேட்டார்கள்.
24 ২৪ ততো যীশুঃ প্ৰত্যৱদৎ, অহমপি যুষ্মান্ ৱাচমেকাং পৃচ্ছামি, যদি যূযং তদুত্তৰং দাতুং শক্ষ্যথ, তদা কেন সামৰ্থ্যেন কৰ্ম্মাণ্যেতানি কৰোমি, তদহং যুষ্মান্ ৱক্ষ্যামি|
௨௪இயேசு மறுமொழியாக: நானும் உங்களிடம் ஒரு காரியத்தைக் கேட்கிறேன், அதை எனக்குச் சொல்லுவீர்களானால், நானும் எந்த அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லுவேன்.
25 ২৫ যোহনো মজ্জনং কস্যাজ্ঞযাভৱৎ? কিমীশ্ৱৰস্য মনুষ্যস্য ৱা? ততস্তে পৰস্পৰং ৱিৱিচ্য কথযামাসুঃ, যদীশ্ৱৰস্যেতি ৱদামস্তৰ্হি যূযং তং কুতো ন প্ৰত্যৈত? ৱাচমেতাং ৱক্ষ্যতি|
௨௫யோவான் கொடுத்த ஞானஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனிதர்களால் உண்டாயிற்றோ? யாரால் உண்டானது? என்று கேட்டார். அதற்கு அவர்கள்: தேவனால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், பின்னே ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று நம்மைக் கேட்பார்;
26 ২৬ মনুষ্যস্যেতি ৱক্তুমপি লোকেভ্যো বিভীমঃ, যতঃ সৰ্ৱ্ৱৈৰপি যোহন্ ভৱিষ্যদ্ৱাদীতি জ্ঞাযতে|
௨௬மனிதர்களால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், மக்களுக்குப் பயப்படுகிறோம், எல்லோரும் யோவானைத் தீர்க்கதரிசியென்று எண்ணுகிறார்களே என்று, தங்களுக்குள்ளே ஆலோசனைசெய்து,
27 ২৭ তস্মাৎ তে যীশুং প্ৰত্যৱদন্, তদ্ ৱযং ন ৱিদ্মঃ| তদা স তানুক্তৱান্, তৰ্হি কেন সামৰথ্যেন কৰ্ম্মাণ্যেতান্যহং কৰোমি, তদপ্যহং যুষ্মান্ ন ৱক্ষ্যামি|
௨௭இயேசுவிற்கு மறுமொழியாக: எங்களுக்குத் தெரியாது என்றார்கள். அப்பொழுது, அவர்: நானும் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்வதில்லை என்றார்.
28 ২৮ কস্যচিজ্জনস্য দ্ৱৌ সুতাৱাস্তাং স একস্য সুতস্য সমীপং গৎৱা জগাদ, হে সুত, ৎৱমদ্য মম দ্ৰাক্ষাক্ষেত্ৰে কৰ্ম্ম কৰ্তুং ৱ্ৰজ|
௨௮ஆனாலும், உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒரு மனிதனுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள்; மூத்தவனிடத்தில் அவன் வந்து: மகனே, நீ போய் இன்றைக்கு என் திராட்சைத்தோட்டத்தில் வேலைசெய் என்றான்.
29 ২৯ ততঃ স উক্তৱান্, ন যাস্যামি, কিন্তু শেষেঽনুতপ্য জগাম|
௨௯அதற்கு அவன்: மாட்டேன் என்றான்; ஆனாலும், பின்பு அவன் மனஸ்தாபப்பட்டுப்போனான்.
30 ৩০ অনন্তৰং সোন্যসুতস্য সমীপং গৎৱা তথৈৱ কথ্তিৱান্; ততঃ স প্ৰত্যুৱাচ, মহেচ্ছ যামি, কিন্তু ন গতঃ|
௩0இளையவனிடத்திலும் அவன் வந்து, அப்படியே சொன்னான்; அதற்கு அவன்: போகிறேன் ஐயா, என்று சொல்லியும், போகவில்லை.
31 ৩১ এতযোঃ পুত্ৰযো ৰ্মধ্যে পিতুৰভিমতং কেন পালিতং? যুষ্মাভিঃ কিং বুধ্যতে? ততস্তে প্ৰত্যূচুঃ, প্ৰথমেন পুত্ৰেণ| তদানীং যীশুস্তানুৱাচ, অহং যুষ্মান্ তথ্যং ৱদামি, চণ্ডালা গণিকাশ্চ যুষ্মাকমগ্ৰত ঈশ্ৱৰস্য ৰাজ্যং প্ৰৱিশন্তি|
௩௧இவ்விருவரில் எவன் தகப்பனுடைய விருப்பத்தின்படி செய்தவன் என்று கேட்டார்; அதற்கு அவர்கள்: மூத்தவன்தான் என்றார்கள். அப்பொழுது, இயேசு அவர்களைப் பார்த்து: வரி வசூலிப்பவர்களும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
32 ৩২ যতো যুষ্মাকং সমীপং যোহনি ধৰ্ম্মপথেনাগতে যূযং তং ন প্ৰতীথ, কিন্তু চণ্ডালা গণিকাশ্চ তং প্ৰত্যাযন্, তদ্ ৱিলোক্যাপি যূযং প্ৰত্যেতুং নাখিদ্যধ্ৱং|
௩௨ஏனென்றால், யோவான் நீதிமார்க்கமாக உங்களிடம் வந்திருந்தும், நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை; வரி வசூலிப்பவர்களும் வேசிகளுமோ அவனை விசுவாசித்தார்கள்; அதை நீங்கள் கண்டும், அவனை விசுவாசிக்கும்படியாகப் பின்பாவது மனஸ்தாபப்படவில்லை என்றார்.
33 ৩৩ অপৰমেকং দৃষ্টান্তং শৃণুত, কশ্চিদ্ গৃহস্থঃ ক্ষেত্ৰে দ্ৰাক্ষালতা ৰোপযিৎৱা তচ্চতুৰ্দিক্ষু ৱাৰণীং ৱিধায তন্মধ্যে দ্ৰাক্ষাযন্ত্ৰং স্থাপিতৱান্, মাঞ্চঞ্চ নিৰ্ম্মিতৱান্, ততঃ কৃষকেষু তৎ ক্ষেত্ৰং সমৰ্প্য স্ৱযং দূৰদেশং জগাম|
௩௩வேறொரு உவமையைக் கேளுங்கள்: வீட்டெஜமானாகிய ஒரு மனிதன் இருந்தான், அவன் ஒரு திராட்சைத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, அதில் ஒரு ஆலையை உருவாக்கி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரர்களுக்கு அதைக் குத்தகைக்கு விட்டு, வெளிதேசத்திற்குச் சென்றிருந்தான்.
34 ৩৪ তদনন্তৰং ফলসময উপস্থিতে স ফলানি প্ৰাপ্তুং কৃষীৱলানাং সমীপং নিজদাসান্ প্ৰেষযামাস|
௩௪அறுவடைக்காலம் நெருங்கியபோது, அதின் கனிகளை வாங்கிக்கொண்டுவரும்படி தன் வேலைக்காரர்களைத் தோட்டக்காரர்களிடத்தில் அனுப்பினான்.
35 ৩৫ কিন্তু কৃষীৱলাস্তস্য তান্ দাসেযান্ ধৃৎৱা কঞ্চন প্ৰহৃতৱন্তঃ, কঞ্চন পাষাণৈৰাহতৱন্তঃ, কঞ্চন চ হতৱন্তঃ|
௩௫தோட்டக்காரர்கள் அந்த வேலைக்காரர்களைப்பிடித்து, ஒருவனை அடித்து, ஒருவனைக் கொலைசெய்து, ஒருவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்.
36 ৩৬ পুনৰপি স প্ৰভুঃ প্ৰথমতোঽধিকদাসেযান্ প্ৰেষযামাস, কিন্তু তে তান্ প্ৰত্যপি তথৈৱ চক্ৰুঃ|
௩௬பின்னும் அவன் முந்தினவர்களிலும் அதிகமான வேறு வேலைக்காரர்களை அனுப்பினான்; அவர்களையும் அப்படியே செய்தார்கள்.
37 ৩৭ অনন্তৰং মম সুতে গতে তং সমাদৰিষ্যন্তে, ইত্যুক্ত্ৱা শেষে স নিজসুতং তেষাং সন্নিধিং প্ৰেষযামাস|
௩௭அவன்: என் குமாரனுக்கு பயப்படுவார்கள் என்று சொல்லி, தன் குமாரனை அவர்களிடத்தில் அனுப்பினான்.
38 ৩৮ কিন্তু তে কৃষীৱলাঃ সুতং ৱীক্ষ্য পৰস্পৰম্ ইতি মন্ত্ৰযিতুম্ আৰেভিৰে, অযমুত্তৰাধিকাৰী ৱযমেনং নিহত্যাস্যাধিকাৰং স্ৱৱশীকৰিষ্যামঃ|
௩௮தோட்டக்காரர்கள் குமாரனைக் கண்டபோது: இவனே வாரிசு; இவனைக் கொன்று, இவனுடைய சொத்தை எடுத்துக்கொள்ளுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு;
39 ৩৯ পশ্চাৎ তে তং ধৃৎৱা দ্ৰাক্ষাক্ষেত্ৰাদ্ বহিঃ পাতযিৎৱাবধিষুঃ|
௩௯அவனைப் பிடித்துத் திராட்சைத்தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொலைசெய்தார்கள்.
40 ৪০ যদা স দ্ৰাক্ষাক্ষেত্ৰপতিৰাগমিষ্যতি, তদা তান্ কৃষীৱলান্ কিং কৰিষ্যতি?
௪0அப்படியிருக்க, திராட்சைத்தோட்டத்தின் எஜமான் வரும்போது, அந்தத் தோட்டக்காரர்களை என்ன செய்வான் என்று கேட்டார்.
41 ৪১ ততস্তে প্ৰত্যৱদন্, তান্ কলুষিণো দাৰুণযাতনাভিৰাহনিষ্যতি, যে চ সমযানুক্ৰমাৎ ফলানি দাস্যন্তি, তাদৃশেষু কৃষীৱলেষু ক্ষেত্ৰং সমৰ্পযিষ্যতি|
௪௧அதற்கு அவர்கள்: அந்தக் கொடியவர்களைக் கொடுமையாக அழித்து, ஏற்றக் காலங்களில் தனக்குக் கனிகளைக் கொடுக்கக்கூடிய வேறு தோட்டக்காரர்களிடத்தில் திராட்சைத்தோட்டத்தைக் குத்தகைக்குக் கொடுப்பான் என்றார்கள்.
42 ৪২ তদা যীশুনা তে গদিতাঃ, গ্ৰহণং ন কৃতং যস্য পাষাণস্য নিচাযকৈঃ| প্ৰধানপ্ৰস্তৰঃ কোণে সএৱ সংভৱিষ্যতি| এতৎ পৰেশিতুঃ কৰ্ম্মাস্মদৃষ্টাৱদ্ভুতং ভৱেৎ| ধৰ্ম্মগ্ৰন্থে লিখিতমেতদ্ৱচনং যুষ্মাভিঃ কিং নাপাঠি?
௪௨இயேசு அவர்களைப் பார்த்து: வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லானது, அது கர்த்தராலே ஆனது, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று நீங்கள் வேதத்தில் ஒருபோதும் வாசிக்கவில்லையா?
43 ৪৩ তস্মাদহং যুষ্মান্ ৱদামি, যুষ্মত্ত ঈশ্ৱৰীযৰাজ্যমপনীয ফলোৎপাদযিত্ৰন্যজাতযে দাযিষ্যতে|
௪௩ஆகவே, தேவனுடைய ராஜ்யம் உங்களிடமிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகின்ற மக்களுக்குக் கொடுக்கப்படும்.
44 ৪৪ যো জন এতৎপাষাণোপৰি পতিষ্যতি, তং স ভংক্ষ্যতে, কিন্ত্ৱযং পাষাণো যস্যোপৰি পতিষ্যতি, তং স ধূলিৱৎ চূৰ্ণীকৰিষ্যতি|
௪௪இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
45 ৪৫ তদানীং প্ৰাধনযাজকাঃ ফিৰূশিনশ্চ তস্যেমাং দৃষ্টান্তকথাং শ্ৰুৎৱা সোঽস্মানুদ্দিশ্য কথিতৱান্, ইতি ৱিজ্ঞায তং ধৰ্ত্তুং চেষ্টিতৱন্তঃ;
௪௫பிரதான ஆசாரியர்களும் பரிசேயர்களும் அவருடைய உவமைகளைக் கேட்டு, தங்களைக்குறித்துச் சொல்லுகிறார் என்று அறிந்து,
46 ৪৬ কিন্তু লোকেভ্যো বিভ্যুঃ, যতো লোকৈঃ স ভৱিষ্যদ্ৱাদীত্যজ্ঞাযি|
௪௬அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆனாலும் மக்கள் அவரைத் தீர்க்கதரிசியென்று நினைத்தபடியினால் அவர்களுக்குப் பயந்திருந்தார்கள்.