< لاویان 1 >

و خداوند موسی را خواند، و او را از خیمه اجتماع خطاب کرده، گفت: ۱ 1
யெகோவா சபைக் கூடாரத்திலிருந்து மோசேயைக் கூப்பிட்டு, அவனுடன் பேசினார்.
«بنی‌اسرائیل را خطاب کرده، به ایشان بگو: هرگاه کسی از شماقربانی نزد خداوند بگذراند، پس قربانی خود را ازبهایم یعنی از گاو یا از گوسفند بگذرانید. ۲ 2
“நீ இஸ்ரயேலருடன் பேசிச் சொல்லவேண்டியதாவது: ‘உங்களில் யாராவது யெகோவாவுக்கு ஒரு காணிக்கையைக் கொண்டுவரும்போது, ஆட்டு மந்தையிலிருந்தோ, மாட்டு மந்தையிலிருந்தோ ஒரு மிருகத்தை உங்கள் காணிக்கையாகக் கொண்டுவாருங்கள்.
اگرقربانی او قربانی سوختنی از گاو باشد، آن را نربی عیب بگذارند، و آن را نزد در خیمه اجتماع بیاورد تا به حضور خداوند مقبول شود. ۳ 3
“‘அக்காணிக்கை மாட்டு மந்தையிலிருந்து கொடுக்கப்படும் தகன காணிக்கையானால், அவன் குறைபாடற்ற ஒரு காளையை காணிக்கையாகக் கொடுக்கவேண்டும். அது யெகோவாவினால் ஏற்றுக்கொள்ளப்படும்படி, அவன் அதைச் சபைக்கூடார வாசலில் கொண்டுவந்து ஒப்படைக்கவேண்டும்.
و دست خود را بر سر قربانی سوختنی بگذارد، و برایش مقبول خواهد شد تا بجهت او کفاره کند. ۴ 4
அவன் அந்த தகன காணிக்கை மிருகத்தின் தலையின்மேல் தன் கையை வைக்கவேண்டும். அது அவனுடைய பாவங்களை நிவிர்த்தி செய்வதற்கு அவன் சார்பில் ஏற்றுக்கொள்ளப்படும்.
پس گاو را به حضور خداوند ذبح نماید، و پسران هارون کهنه خون را نزدیک بیاورند، و خون را براطراف مذبح که نزد در خیمه اجتماع است بپاشند. ۵ 5
யெகோவாவின் முன்னிலையில் அவன் அந்த இளங்காளையை வெட்டிக் கொல்லவேண்டும். ஆரோனின் மகன்களான ஆசாரியர்கள் அந்தக் காளையின் இரத்தத்தைக் கொண்டுவந்து, சபைக்கூடார வாசலில் இருக்கும் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளிக்கவேண்டும்.
و پوست قربانی سوختنی را بکند و آن را قطعه قطعه کند. ۶ 6
பின்பு அந்தக் காணிக்கையைக் கொண்டுவந்தவன், தகன காணிக்கை மிருகத்தைத் தோலுரித்துத் துண்டுகளாக வெட்டவேண்டும்.
و پسران هارون کاهن آتش برمذبح بگذارند، و هیزم بر آتش بچینند. ۷ 7
ஆரோனின் மகன்களான ஆசாரியர்கள், பலிபீடத்தின்மேல் நெருப்பை மூட்டி, அந்த நெருப்பின்மேல் விறகுகளை அடுக்கவேண்டும்.
و پسران هارون کهنه قطعه‌ها و سر و پیه را بر هیزمی که برآتش روی مذبح است بچینند. ۸ 8
அதன்பின் ஆரோனின் மகன்களான ஆசாரியர்கள் அந்தத் துண்டுகளை, தலையும் கொழுப்பும் உட்பட பலிபீடத்தில் எரிகின்ற விறகுகளின்மேல் அடுக்கவேண்டும்.
و احشایش وپاچه هایش را به آب بشویند، و کاهن همه را برمذبح بسوزاند، برای قربانی سوختنی و هدیه آتشین و عطر خوشبو بجهت خداوند. ۹ 9
ஆகிலும், உள்ளுறுப்புகளையும், கால்களையும் காணிக்கையைக் கொண்டுவந்தவன் தண்ணீரால் கழுவவேண்டும். ஆசாரியர், அவையெல்லாவற்றையும் பலிபீடத்தின்மேல் எரித்துவிடவேண்டும். இது ஒரு தகன காணிக்கை. இது யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக, நெருப்பினால் செலுத்தப்படும் ஒரு காணிக்கை.
و اگرقربانی او از گله باشد خواه از گوسفند خواه از بزبجهت قربانی سوختنی، آن را نر بی‌عیب بگذراند. ۱۰ 10
“‘அந்தக் காணிக்கை செம்மறியாட்டு மந்தையிலிருந்தோ, வெள்ளாட்டு மந்தையிலிருந்தோ எடுக்கப்படும் தகன காணிக்கையாக இருந்தால், அவன் குறைபாடற்ற ஒரு கடாவைச் செலுத்தவேண்டும்.
و آن را به طرف شمالی مذبح به حضور خداوند ذبح نماید، و پسران هارون کهنه خونش را به اطراف مذبح بپاشند. ۱۱ 11
அவன் அதைப் பலிபீடத்தின் வடக்குப் பக்கத்தில் யெகோவாவுக்கு முன்பாக வெட்டிக் கொல்லவேண்டும். அதன் இரத்தத்தை ஆரோனின் மகன்களான ஆசாரியர்கள், பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளிப்பார்கள்.
و آن را باسرش و پیه‌اش قطعه قطعه کند، و کاهن آنها را برهیزمی که بر آتش روی مذبح است بچیند. ۱۲ 12
அவன் அதைத் துண்டுகளாக வெட்டவேண்டும். அந்தத் துண்டங்களை தலையும், கொழுப்பும் உட்பட பலிபீடத்தில் எரிகின்ற விறகுகளின்மேல் ஆசாரியர் அடுக்கவேண்டும்.
واحشایش و پاچه هایش را به آب بشوید، و کاهن همه را نزدیک بیاورد و بر مذبح بسوزاند، که آن قربانی سوختنی و هدیه آتشین و عطر خوشبوبجهت خداوند است. ۱۳ 13
காணிக்கை கொண்டுவந்தவன் அதன் உள்ளுறுப்புகளையும், கால்களையும் தண்ணீரால் கழுவவேண்டும். ஆசாரியர் அவற்றையெல்லாம் கொண்டுவந்து, பலிபீடத்தின்மேல் எரிக்கவேண்டும். இது ஒரு தகன காணிக்கை; இது யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக, நெருப்பினால் செலுத்தப்படும் ஒரு காணிக்கை.
«و اگر قربانی او بجهت خداوند قربانی سوختنی از مرغان باشد، پس قربانی خود را ازفاخته‌ها یا از جوجه های کبوتر بگذراند. ۱۴ 14
“‘யெகோவாவுக்கான தகன காணிக்கை பறவைகளானால், அவன் ஒரு புறாவையோ அல்லது ஒரு மாடப்புறாக் குஞ்சையோ செலுத்தவேண்டும்.
وکاهن آن را نزد مذبح بیاورد و سرش را بپیچد و برمذبح بسوزاند، و خونش را بر پهلوی مذبح افشرده شود. ۱۵ 15
ஆசாரியர் அப்பறவையைப் பலிபீடத்திற்குக் கொண்டுவந்து, அதன் தலையைத் திருகி, அதைப் பலிபீடத்தில் எரிக்கவேண்டும். அதன் இரத்தம் பலிபீடத்தின் ஒரு பக்கத்தில் வடியவிடவேண்டும்.
و چینه دانش را با فضلات آن بیرون کرده، آن را بر جانب شرقی مذبح در جای خاکستر بیندازد. ۱۶ 16
அவன் அதன் இரைப்பையையும் அதற்குள் இருப்பதையும் அகற்றி, பலிபீடத்தின் கிழக்குப் பக்கத்தில் சாம்பல் இருக்கும் இடத்தில் எறியவேண்டும்.
و آن را از میان بالهایش چاک کند و از هم جدا نکند، و کاهن آن را بر مذبح برهیزمی که بر آتش است بسوزاند، که آن قربانی سوختنی و هدیه آتشین و عطر خوشبو بجهت خداوند است. ۱۷ 17
அதன்பின் ஆசாரியர் அதை முற்றிலும் பிளக்காமல், சிறகுகளைப் பிடித்துக் கிழித்து, அதைப் பலிபீடத்தின் நெருப்பின் மேலுள்ள விறகுகளின்மேல் போட்டு எரிக்கவேண்டும். இது ஒரு தகன காணிக்கை, இது யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக, நெருப்பினால் செலுத்தப்படும் ஒரு காணிக்கை.

< لاویان 1 >