< ମାତିଉ 21 >
1 ଜଃଡେବଃଳ୍ ଜିସୁ ଆର୍ ତାର୍ ଚେଲାମଃନ୍ ଜିରୁସାଲମ୍ ଲଃଗାର୍ ଜିତ୍ ଡଙ୍ଗୁର୍ ଉହ୍ରେ ରିଲା ବେତ୍ପାଗି ଗାଉଁଏ ହଚ୍ଲାୟ୍, ସଃଡେବଃଳ୍ ଜିସୁ ଜଳେକ୍ ଚେଲାକେ ଇ କଃତା କୟ୍ ହଃଟାୟ୍ଲା,
௧அவர்கள் எருசலேமுக்கு அருகாமையில் சேர்ந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகேயுக்கு வந்தபோது, இயேசுவானவர் சீடர்களில் இரண்டுபேரைப் பார்த்து:
2 “ତୁମାର୍ ମୁଆଁର୍ ସେ ଗାଉଁଏ ଜାହା, ଆର୍ ସେତି ହଚ୍ଲେକ୍, ସେତି ବାନ୍ଦ୍ଲାର୍ ଗଟେକ୍ ମାୟ୍ ଗଃଦ ଆର୍ ତାର୍ ଗଟେକ୍ ହିଲାଗଃଦକ୍ ଦଃକାସ୍; ସେମଃନ୍କେ ମେଲି ମର୍ ହାକ୍ ଆଣା ।
௨உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்திற்குப் போங்கள்; போனவுடனே, அங்கே ஒரு கழுதையையும் அதனோடு ஒரு குட்டியையும் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அவைகளை அவிழ்த்து என்னிடத்தில் கொண்டுவாருங்கள்.
3 ଆର୍ କେ ତୁମିକେ କାୟ୍ରି କୟ୍ଦ୍, ତଃବେ କଃଉଆ, ‘ଇମଃନାର୍ ତଃୟ୍ ମାପ୍ରୁର୍ ଲଳା ଆଚେ ।’ ସେଦାହ୍ରେ ସେ ସେମଃନ୍କେ ହଃଟାୟ୍ଦ୍ ।”
௩ஒருவன் உங்களுக்கு ஏதாவது சொன்னால்: இவைகள் ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள்; உடனே அவைகளை அனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார்.
4 ବାବ୍ବାଦିର୍ କଃତାମଃନ୍ ହୁରୁଣ୍ ଅଃଉଁକେ ଇରି ଅୟ୍ଲି,
௪இதோ, உன் ராஜா சாந்தகுணமுள்ளவராக, கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிக்கொண்டு, உன்னிடத்தில் வருகிறார் என்று சீயோன் குமாரத்திக்குச் சொல்லுங்கள்” என்று,
5 “ସିଅନାର୍ ଦଃଙ୍ଗ୍ଳିମଃନ୍କେ କଃଉଆ, ‘ଦଃକ୍ ତର୍ ରଃଜା ତର୍ ଚଃମେ ଆସୁଲା! ସେ ବଃଡେ ଦିରାର୍ ଆର୍ ହିଲାଗଃଦ ଉହ୍ରେ ବଃସି ଆଚେ, ଆର୍ ଗଃଦ ହିଲା ଉହ୍ରେ ଚଃଗି ଆସୁଲା ।’”
௫தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.
6 ସେତାକ୍ ଚେଲାମଃନ୍ ଜିସୁର୍ କଃତା ମାନି ସେନ୍ କଃଲାୟ୍ ।
௬சீடர்கள்போய், இயேசு தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்து,
7 ତାର୍ହଃଚେ ମାୟ୍ ଗଃଦ ଆର୍ ହିଲାଗଃଦକ୍ ଜିସୁର୍ ହାକ୍ ଆଣ୍ଲାୟ୍, ଆର୍ ତାର୍ ଉହ୍ରେ ବଃସ୍ତର୍ମଃନ୍ ଅଚାୟ୍ଲାୟ୍, ଆର୍ ଜିସୁ ତାର୍ ଉହ୍ରେ ବଃସ୍ଲା ।
௭கழுதையையும் குட்டியையும் கொண்டுவந்து, அவைகள்மேல் தங்களுடைய ஆடைகளைப் போட்டு, அவரை ஏற்றினார்கள்.
8 ଆରେକ୍ ଲକ୍ମଃନାର୍ ବିତ୍ରେ ଗାଦେକ୍ ଲକ୍ ଅଃହ୍ଣା ଅଃହ୍ଣାର୍ ବଃସ୍ତର୍ ବାଟେ ଅଚାୟ୍ଲାୟ୍ ଆର୍ କଃତେକ୍ କଃଜୁରି ଗଃଚାର୍ ଡାଳ୍ ମାରି ଆଣି ବାଟେ ଅଚାଉଁକେ ଦଃର୍ଲାୟ୍ ।
௮திரளான மக்கள் தங்களுடைய ஆடைகளை வழியிலே விரித்தார்கள்; வேறுசிலர் மரக்கிளைகளை வெட்டி வழியிலே பரப்பினார்கள்.
9 ଆର୍ ଜିସୁର୍ ଆଗେ ଆର୍ ହଃଚେ ଜାତା ଲକ୍ମଃନ୍ ବଃଡ୍ ଟଣ୍ଡ୍ କଃରି କଃଉଁକେ ଦଃର୍ଲାୟ୍, “ହସାନ୍ନା, ଦାଉଦାର୍ ହୟ୍ସି, ମାପ୍ରୁର୍ ନାଉଁଏ ଜେ ଆସୁଲା, ତାର୍ ଆସିର୍ବାଦ୍ ଅଃଉଅ, ସଃବ୍କେ ଉହ୍ରାର୍ ମାପ୍ରୁର୍ ଜଃଜ୍ମାନ୍ ଅଃଉଅ ।”
௯முன்னே நடப்பவர்களும் பின்னே நடப்பவர்களுமாகிய திரளான மக்கள்: தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் போற்றப்படத்தக்கவர், உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.
10 ଆରେକ୍ ଜିସୁ ଜିରୁସାଲମେ ଗଃଲାକେ ଜିରୁସାଲମ୍ ଗଃଳ୍ଜାକ “ଏ କେ?” ବଃଲି ଉର୍ଜି ଅୟ୍ଲି ।
௧0அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கும்போது, நகரத்தார் அனைவரும் ஆச்சரியப்பட்டு, இவர் யார்? என்று விசாரித்தார்கள்.
11 ସେତାକ୍ ଲକ୍ମଃନ୍ କୟ୍ଲାୟ୍, “ଏ ଗାଲିଲି ରାଇଜାର୍ ନାଜରିତ୍ ଗାଉଁଆର୍ ବାବ୍ବାଦି ଜିସୁ ।”
௧௧அதற்கு மக்கள்: இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள்.
12 ତାର୍ହଃଚେ ଜିସୁ ମନ୍ଦିର୍ ବିତ୍ରେ ଗଃଲା, ଆର୍ ସେତି ବିକାବାଞ୍ଜା କଃର୍ତା ସଃବୁ ଲକ୍ମଃନ୍କେ ବାର୍କଃଲା । ଆର୍ ଡାବୁ ବାଦ୍ଲାଉତା ବେବାରିମଃନାର୍ ଟେବୁଲ୍ ଆର୍ ହାଣ୍ଡ୍କା ବେବାରିମଃନାର୍ ବଃସ୍ତା କୁର୍ଚିମଃନ୍ ଉଲ୍ଟାୟ୍ ହଃକାୟ୍ଲା ।
௧௨இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து, ஆலயத்திலே விற்கிறவர்களும் வாங்குகிறவர்களுமாகிய அனைவரையும் வெளியே துரத்தி, காசுக்காரர்களுடைய பலகைகளையும் புறா விற்கிறவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்து:
13 ଆର୍ ଜିସୁ ସେମଃନ୍କେ କୟ୍ଲା, “ସାସ୍ତରେ ଲେକା ଆଚେ, ‘ଅଃମାର୍ ଗଃର୍ ଇସ୍ୱରାର୍ ପାର୍ତ୍ନାଗଃର୍ ବଃଲି ଡାକେ ହୁଟେଦ୍,’ ମଃତର୍ ତୁମିମଃନ୍ ତାକ୍ କଃଙ୍ଗାର୍ମଃନ୍ ଲୁକ୍ତା ହାର୍ କଃରୁଲାସ୍ ।”
௧௩என்னுடைய வீடு ஜெபவீடு எனப்படும் என்று எழுதியிருக்கிறது; நீங்களோ அதைக் திருடர்களுடைய குகையாக்கினீர்கள் என்றார்.
14 ଆରେକ୍ କାଣା ଆର୍ ମେଟା ଲକ୍ମଃନ୍ ମନ୍ଦିର୍ ବିତ୍ରେ ଜିସୁର୍ ତଃୟ୍ ଆୟ୍ଲାକ୍, ସେ ସେମଃନ୍କେ ଉଜ୍ କଃଲା ।
௧௪அப்பொழுது, குருடர்களும் முடவர்களும் தேவாலயத்திலே அவரிடத்திற்கு வந்தார்கள், அவர்களை குணமாக்கினார்.
15 ମଃତର୍ ବଃଡ୍ ଜାଜକ୍ ଆର୍ ଦଃର୍ମ୍ଗୁରୁ ମଃନ୍ ତାର୍ କାବା ଅଃଉତା କାମ୍ ସଃବୁ ଆର୍ ମନ୍ଦିର୍ ବିତ୍ରେ, “ଦାଉଦାର୍ ହୟ୍ସିର୍ ଜୟ୍ ଅଃଉଅ,” ବଃଲି ଉଲ୍ଗାଟ୍ ଅଃଉତା ହିଲାମଃନ୍କେ ଦଃକି ରିସା ଅୟଃଲାୟ୍ ।
௧௫அவர் செய்த அதிசயங்களையும், தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! என்று தேவாலயத்திலே ஆர்ப்பரிக்கிற பிள்ளைகளையும், பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் பார்த்து, கோபமடைந்து,
16 ସେମଃନ୍ ଜିସୁକେ ହଃଚାର୍ଲାୟ୍, “ଇମଃନ୍ କାୟ୍ ବଃଲି କଃଉଁଲାୟ୍, ସେରି କାୟ୍ ତୁୟ୍ ସୁଣୁଲିସ୍?” ଜିସୁ ସେମଃନ୍କେ କୟ୍ଲା, “ହେଁ ସୁଣୁଲେ । ତୁମିମଃନ୍ କାୟ୍ ଇ କଃତା କଃବେହେଁ ଦଃର୍ମ୍ ସାସ୍ତରେ ହଳି ନଃକେରାସ୍, ‘ତୁମି ସାନ୍ ହିଲା ଆର୍ ଦୁଦ୍ କାତା ହିଲାମଃନ୍କେ ଟିକ୍ ବାବେ ଜଃଜ୍ମାନ୍ କଃରୁକେ ସିକାୟ୍ ଆଚାସ୍?’”
௧௬அவரைப் பார்த்து: இவர்கள் சொல்லுகிறதைக் கேட்கிறீரோ என்றார்கள். அதற்கு இயேசு: ஆம், கேட்கிறேன். குழந்தைகளுடைய வாயினாலும் சிறுவர்களுடைய வாயினாலும் துதி உண்டாகும்படிச் செய்தீர் என்பதை நீங்கள் ஒருபோதும் வாசிக்கவில்லையா என்றார்.
17 ଆରେକ୍ ଜିସୁ ସେମଃନ୍କେ ଚାଡି ଜିରୁସାଲମେ ହୁଣି ବାରାୟ୍ ବେତାନିଆକେ ଗଃଲା ଆର୍ ସେ ରାତି ସେତି ରିଲା ।
௧௭அவர்களைவிட்டு நகரத்திலிருந்து புறப்பட்டு, பெத்தானியாவிற்குப்போய், அங்கே இரவில் தங்கினார்.
18 ଆର୍କ ଦିନ୍ ସଃକାଳ୍ୟା ଜିସୁ ଜିରୁସାଲମ୍ ଗଃଳେ ବାଉଳ୍ତା ବଃଳ୍ ତାକ୍ ବୁକ୍ ଲାଗ୍ଲି ।
௧௮காலையிலே அவர் நகரத்திற்குத் திரும்பிவரும்போது, அவருக்குப் பசியுண்டானது.
19 ଆର୍ ବାଟ୍ ହାଳାୟ୍ ଗଟେକ୍ ଡୁମ୍ବୁର୍ ଗଃଚ୍ ଦଃକି ତାର୍ ଚଃମେ ଗଃଲା, ସେ ଗଃଚେ ହଃତାର୍ ଚାଡି କାୟ୍ରି ହେଁ ନଃହାୟ୍ଲାକେ ସାୟ୍ପ୍ ଦଃୟ୍ ଡୁମ୍ବୁର୍ ଗଃଚ୍କେ କୟ୍ଲା, “ସଃବୁ ଦିନ୍ ହେଁ ତର୍ ତଃୟ୍ ହଃଳ୍ ନଃଦେର ।” ସେତାର୍ଗିନେ ସେଦାହ୍ରେ ସେ ଡୁମ୍ବୁର୍ ଗଃଚ୍ ସୁକ୍ଲି । (aiōn )
௧௯அப்பொழுது வழியருகே ஒரு அத்திமரத்தைப் பார்த்து, அதினிடத்திற்குப்போய், அதிலே இலைகளையன்றி வேறொன்றையும் காணாமல்: இனி ஒருபோதும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்றார்; உடனே அத்திமரம் பட்டுப்போனது. (aiōn )
20 ଚେଲାମଃନ୍ ସେରି ଦଃକି କାବା ଅୟ୍କଃରି କୟ୍ଲାୟ୍, “ଡୁମ୍ବୁର୍ ଗଃଚ୍ କଃନ୍କଃରି ସେଦାହ୍ରେ ସୁକ୍ଲି ।”
௨0சீடர்கள் அதைப் பார்த்து: இந்த அத்திமரம் எத்தனை சீக்கிரமாகப் பட்டுப்போனது! என்று சொல்லி ஆச்சரியப்பட்டார்கள்.
21 ଜିସୁ ସେମଃନ୍କେ କୟ୍ଲା, “ମୁଁୟ୍ ତୁମିକେ ସଃତ୍ କଃଉଁଲେ, ଜଦି ତୁମାର୍ ବିସ୍ୱାସ୍ ଆଚେ, ଆର୍ ତୁମିମଃନ୍ ଅବିସ୍ୱାସ୍ ନଃକେରାସ୍, ତଃବେ ଇ ଡୁମ୍ବୁର୍ ଗଃଚ୍କେ ଜଃନ୍କାର୍ ଅୟ୍ଆଚେ, ଅଃତେକ୍ ହଃକା କଃରାସ୍ ସେରି ନାୟ୍, ମଃତର୍ ଜଦି ଇ ଡଙ୍ଗୁର୍କେ ହେଁ ‘ଉଟ୍କି ଅୟ୍ ସଃମ୍ନ୍ଦେ ଜାୟ୍ ଅଦୁର୍’ ବଃଲି କଃଉଆସ୍, ତଃବେ ସେରଃକମ୍ ଅୟ୍ଦ୍ ।
௨௧இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசமுள்ளவர்களாக இருந்தால், இந்த அத்திமரத்திற்குச் செய்ததை நீங்கள் செய்வதுமல்லாமல், இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து கடலிலே தள்ளுண்டுபோ என்று சொன்னாலும் அப்படியாகும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
22 ଆରେକ୍ ବିସ୍ୱାସ୍ କଃରି ପାର୍ତ୍ନା କଃରାସ୍ ଆର୍ ଜାୟ୍ରି ମାଗାସ୍ ସେରି ସଃବୁ ହାଉଆସ୍ ।”
௨௨மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாக ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார்.
23 ତାର୍ହଃଚେ ଜିସୁ ମନ୍ଦିର୍ ବିତ୍ରେ ହୁରି ସିକ୍ୟା ଦେତାବଃଳ୍ ବଃଡ୍ ଜାଜକ୍ମଃନ୍ ଆର୍ ପାରାଚିନ୍ମଃନ୍ ତାର୍ ଚଃମେ ଆସି ହଃଚାର୍ଲାୟ୍, “ତୁୟ୍ କୁୟ୍ ଅଃଦିକାର୍ ଦଃରି ଇସଃବୁ କଃରୁଲିସ୍, ଆର୍ ତକେ କେ ଇ ଅଃଦିକାର୍ ଦିଲା?”
௨௩அவர் தேவாலயத்தில் வந்து, உபதேசம்பண்ணும்போது, பிரதான ஆசாரியர்களும் மக்களின் மூப்பர்களும் அவரிடத்தில் வந்து: நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? என்று கேட்டார்கள்.
24 ଜିସୁ ସେମଃନ୍କେ କୟ୍ଲା, “ମୁଁୟ୍ ହେଁ ତୁମିମଃନ୍କେ ଗଟେକ୍ କଃତା ହଃଚାରିନ୍ଦ୍, ଜଦି ତୁମିମଃନ୍ ମକେ ସେରି କଃଉଆସ୍, ତଃବେ ମୁଁୟ୍ କୁୟ୍ ଅଃଦିକାରେ ଇ ସଃବୁ କଃରୁଲେ ସେରି କୟ୍ନ୍ଦ୍ ।
௨௪இயேசு மறுமொழியாக: நானும் உங்களிடம் ஒரு காரியத்தைக் கேட்கிறேன், அதை எனக்குச் சொல்லுவீர்களானால், நானும் எந்த அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லுவேன்.
25 ଜହନ୍ ବାପ୍ତିସମ୍ ଦେତା ଅଃଦିକାର୍ କାର୍ ତଃୟ୍ହୁଣି ହାୟ୍ରିଲା? ସଃର୍ଗେ ହୁଣି କି ମାନାୟ୍ ତଃୟ୍ହୁଣି?” ସେତାକ୍ ସେମଃନ୍ ତାକାର୍ ତାକାର୍ ବିତ୍ରେ କଃଉଆକଇ ଅୟଃଲାୟ୍, ଆର୍ କଃଉଁକେ ଦଃର୍ଲାୟ୍, “ଜଦି ସଃର୍ଗେ ହୁଣି ବଃଲି କଃଉନ୍ଦ୍, ତଃବେ ସେ ଅଃମିକ୍ କୟ୍ଦ୍, ‘ତଃବେ ତୁମିମଃନ୍ କାୟ୍ତାକ୍ ଜହନ୍କେ ବିସ୍ୱାସ୍ ନଃକେଲାସ୍?’
௨௫யோவான் கொடுத்த ஞானஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனிதர்களால் உண்டாயிற்றோ? யாரால் உண்டானது? என்று கேட்டார். அதற்கு அவர்கள்: தேவனால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், பின்னே ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று நம்மைக் கேட்பார்;
26 ଜଦି ମାନାୟ୍ ତଃୟ୍ହୁଣି ବଃଲି କଃଉନ୍ଦ୍, ତଃବେ ଲକ୍ମଃନ୍କେ ଡିର୍, କାୟ୍ତାକ୍ବଃଲେକ୍ ସଃବୁ ଲକ୍ମଃନ୍ ଜହନ୍କେ ବାବ୍ବାଦି ବଃଲି ମାନୁଲାୟ୍ ।”
௨௬மனிதர்களால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், மக்களுக்குப் பயப்படுகிறோம், எல்லோரும் யோவானைத் தீர்க்கதரிசியென்று எண்ணுகிறார்களே என்று, தங்களுக்குள்ளே ஆலோசனைசெய்து,
27 ଇତାର୍ ଗିନେ ସେମଃନ୍ ଜିସୁକେ କୟ୍ଲାୟ୍, “ଅଃମି ନଃଜାଣୁ ।” ଜିସୁ ସେମଃନ୍କେ କୟ୍ଲା, “ତଃବେ ମୁଁୟ୍ କୁୟ୍ ଅଃଦିକାରେ ଇ ସଃବୁ କଃରୁଲେ, ସେରି ମୁଁୟ୍ ହେଁ ତୁମିକେ ନଃକୟ୍ଁ ।”
௨௭இயேசுவிற்கு மறுமொழியாக: எங்களுக்குத் தெரியாது என்றார்கள். அப்பொழுது, அவர்: நானும் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்வதில்லை என்றார்.
28 “ମଃତର୍ ତୁମିମଃନ୍ ଇ କଃତାକ୍ କାୟ୍ରି ବାବୁଲାସ୍? ଗଟେକ୍ ଲକାର୍ ଜଳେକ୍ ହୟ୍ସି ରିଲାୟ୍, ସେ ବଃଡ୍ ହୟ୍ସି ହାକ୍ ଆସି କୟ୍ଲା, ‘ବାୟ୍ ଜାଆ, ଆଜି ଅଙ୍ଗୁର୍ ବାଳେ ହାୟ୍ଟି କଃର୍ ।’
௨௮ஆனாலும், உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒரு மனிதனுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள்; மூத்தவனிடத்தில் அவன் வந்து: மகனே, நீ போய் இன்றைக்கு என் திராட்சைத்தோட்டத்தில் வேலைசெய் என்றான்.
29 ବଃଡ୍ ହୟ୍ସି କୟ୍ଲା, ‘ମର୍ ମଃନ୍ ନାୟ୍,’ ମଃତର୍ ହଃଚେ ମଃନ୍ ବାଦ୍ଲାୟ୍ କଃରି ଗଃଲା ।
௨௯அதற்கு அவன்: மாட்டேன் என்றான்; ஆனாலும், பின்பு அவன் மனஸ்தாபப்பட்டுப்போனான்.
30 ଆର୍ ସାନ୍ ହୟ୍ସିର୍ ହାକ୍ ଆସି କୟ୍ଲା, ‘ବାୟ୍, ଜାଆ ଅଙ୍ଗୁର୍ ବାଳେ ହାୟ୍ଟି କଃର୍,’ ସେ କୟ୍ଲା, ‘ମାପ୍ରୁ ଜଃଉଁଲେ,’ ମଃତର୍ ସେ ନଃଗେଲା ।
௩0இளையவனிடத்திலும் அவன் வந்து, அப்படியே சொன்னான்; அதற்கு அவன்: போகிறேன் ஐயா, என்று சொல்லியும், போகவில்லை.
31 ଇ ଦୁୟ୍ଲକାର୍ ବିତ୍ରେ କେ ଉବାସିର୍ କଃତା ମାନ୍ଲା?” ସେମଃନ୍ କୟ୍ଲାୟ୍, “ବଃଡ୍ ହୟ୍ସି ।” ଜିସୁ ସେମଃନ୍କେ କୟ୍ଲା, “ମୁଁୟ୍ ତୁମିକେ ସଃତ୍ କଃଉଁଲେ, ରିବ୍ନି ଆର୍ ବେସୁଆମଃନ୍ ତୁମାର୍ ଆଗ୍ତୁ ଇସ୍ୱରାର୍ ରାଇଜେ ଜାତି ।
௩௧இவ்விருவரில் எவன் தகப்பனுடைய விருப்பத்தின்படி செய்தவன் என்று கேட்டார்; அதற்கு அவர்கள்: மூத்தவன்தான் என்றார்கள். அப்பொழுது, இயேசு அவர்களைப் பார்த்து: வரி வசூலிப்பவர்களும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
32 କାୟ୍ତାକ୍ବଃଲେକ୍ ଜହନ୍ ତୁମାର୍ ହାକ୍ ଦଃର୍ମାର୍ ବାଟ୍ ଅୟ୍ ଆୟ୍ଲା ଆର୍ ତୁମିମଃନ୍ ତାକ୍ ବିସ୍ୱାସ୍ ନଃକେଲାସ୍, ମଃତର୍ ରିବ୍ନି ଆର୍ ବେସୁଆମଃନ୍ ତାକ୍ ବିସ୍ୱାସ୍ କଃଲାୟ୍, ମଃତର୍ ତୁମିମଃନ୍ ଜଃନ୍କଃରି ଇସ୍ୱରାର୍ ଇଚା ବିସ୍ୱାସ୍ କଃରୁ ହାରାସ୍, ଇତାର୍ ଗିନେ ସେରି ଦଃକି ହେଁ ମଃନ୍ ନଃବାଦ୍ଲାୟ୍ଲାସ୍ ।”
௩௨ஏனென்றால், யோவான் நீதிமார்க்கமாக உங்களிடம் வந்திருந்தும், நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை; வரி வசூலிப்பவர்களும் வேசிகளுமோ அவனை விசுவாசித்தார்கள்; அதை நீங்கள் கண்டும், அவனை விசுவாசிக்கும்படியாகப் பின்பாவது மனஸ்தாபப்படவில்லை என்றார்.
33 ଜିସୁ କୟ୍ଲା, “ଆରେକ୍ ଗଟ୍ କଃତା ସୁଣା, ଗଟେକ୍ ସାଉକାର୍ ରିଲା, ସେ ଗଟେକ୍ ଅଙ୍ଗୁର୍ ବାଳ୍ କଃରି ଚାରି ବେଳ୍ତ୍ ବାଳ୍ ବୁଣ୍ଲା ଆର୍ ମଃଜାୟ୍ ଅଙ୍ଗୁର୍ ରଃସ୍ ହିଳ୍ତା ଗଃଣା ବଃସାଇଲା, ଆର୍ ଅଙ୍ଗୁର୍ ବାଳ୍ ଜାଗ୍ତା ମାଚା ବାନ୍ଦ୍ଲା । ଆରେକ୍ ତାସିମଃନ୍କେ ସେ ଅଙ୍ଗୁର୍ ବାଳ୍ ବାଗେ ଦିଲା ଆର୍ ବିଦେସ୍ ବାରାୟ୍ ଗଃଲା ।
௩௩வேறொரு உவமையைக் கேளுங்கள்: வீட்டெஜமானாகிய ஒரு மனிதன் இருந்தான், அவன் ஒரு திராட்சைத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, அதில் ஒரு ஆலையை உருவாக்கி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரர்களுக்கு அதைக் குத்தகைக்கு விட்டு, வெளிதேசத்திற்குச் சென்றிருந்தான்.
34 ତାର୍ହଃଚେ ହଃଳ୍ କଳ୍ତା ବେଳା ଅୟ୍ଲାକ୍, ସେ ତାର୍ ବାଗ୍ ହାଉଁକ୍ ବାଗ୍ ତାସିମଃନାର୍ ହାକ୍ ଅଃହ୍ଣାର୍ ଗତିଦଃଙ୍ଗ୍ଳାମଃନ୍କ୍ ହଃଟାୟ୍ଲା ।
௩௪அறுவடைக்காலம் நெருங்கியபோது, அதின் கனிகளை வாங்கிக்கொண்டுவரும்படி தன் வேலைக்காரர்களைத் தோட்டக்காரர்களிடத்தில் அனுப்பினான்.
35 ମଃତର୍ ବାଗ୍ ତାସିମଃନ୍ ତାର୍ ଗତିଦଃଙ୍ଗ୍ଳାମଃନ୍କ୍ ଗଟେକ୍କେ ଦଃରିକଃରି ମାଡ୍ ମାର୍ଲାୟ୍, ଆରେକ୍ ଗଟେକ୍କେ ମଃର୍ନେ ମାର୍ଲାୟ୍, ଆରେକ୍ ଗଟ୍ ଲକ୍କେ ଟେଳା ସୁତି ମାର୍ଲାୟ୍ ।
௩௫தோட்டக்காரர்கள் அந்த வேலைக்காரர்களைப்பிடித்து, ஒருவனை அடித்து, ஒருவனைக் கொலைசெய்து, ஒருவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்.
36 ଆରେକ୍ ସେ ହଃର୍ତୁ ତଃୟ୍ହୁଣି ଅଃଦିକ୍ ଗତିଦଃଙ୍ଗ୍ଳାମଃନ୍କ୍ ହଃଟାୟ୍ଲା, ଆରେକ୍ ବାଗ୍ ତାସିମଃନ୍ ସେମଃନ୍କେ ହେଁ ସେନ୍କାର୍ କଃଲାୟ୍ ।
௩௬பின்னும் அவன் முந்தினவர்களிலும் அதிகமான வேறு வேலைக்காரர்களை அனுப்பினான்; அவர்களையும் அப்படியே செய்தார்கள்.
37 ‘ମଃତର୍ ମର୍ ହଅକେ ସେମଃନ୍ ମାନ୍ତି କଃର୍ତି,’ ଇରି କୟ୍ ହଃଚେ ଅଃହ୍ଣାର୍ ହୟ୍ସିକେ ସେମଃନାର୍ ହାକ୍ ହଃଟାୟ୍ଲା ।
௩௭அவன்: என் குமாரனுக்கு பயப்படுவார்கள் என்று சொல்லி, தன் குமாரனை அவர்களிடத்தில் அனுப்பினான்.
38 ମଃତର୍ ସେ ବାଗ୍ ତାସିମଃନ୍ ହୟ୍ସିକ୍ ଦଃକି ତାକାର୍ ତାକାର୍ ବିତ୍ରେ କଃଉଆକଇ ଅୟଃଲାୟ୍, ‘ଏ ତ ସାଉକାରାର୍ ହୟ୍ସି, ଆସା ଆକ୍ ମଃର୍ନେ ମାରି, ଇତାର୍ ଅଃଦିକାର୍ ଅଃମାର୍ ଆତେ ନେଉଁଆ ।’
௩௮தோட்டக்காரர்கள் குமாரனைக் கண்டபோது: இவனே வாரிசு; இவனைக் கொன்று, இவனுடைய சொத்தை எடுத்துக்கொள்ளுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு;
39 ତାର୍ହଃଚେ ତାକ୍ ଦଃରି ଅଙ୍ଗୁର୍ ବାଳେହୁଣି ହଃଦାୟ୍ ହଃକାୟ୍ ମଃର୍ନେ ମାର୍ଲାୟ୍ ।”
௩௯அவனைப் பிடித்துத் திராட்சைத்தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொலைசெய்தார்கள்.
40 ଜିସୁ ହଃଚାର୍ଲା, “ତଃବେ ଜଃଡେବଃଳ୍ ସେ ଅଙ୍ଗୁର୍ ବାଳାର୍ ସାଉକାର୍ ଆସେଦ୍ ସଃଡେବଃଳ୍ ସେ ବାଗ୍ ତାସିମଃନ୍କେ କାୟ୍ କଃରେଦ୍?”
௪0அப்படியிருக்க, திராட்சைத்தோட்டத்தின் எஜமான் வரும்போது, அந்தத் தோட்டக்காரர்களை என்ன செய்வான் என்று கேட்டார்.
41 ସେମଃନ୍ ତାକ୍ କୟ୍ଲାୟ୍, “ସାଉକାର୍ ସେ ଦୁସ୍ଟ୍ମଃନ୍କେ ବଃଡେ ଆର୍ଲାକଃରି ମଃରାୟ୍ଦ୍, ଆର୍ ଜୁୟ୍ ବାଗ୍ ତାସିମଃନ୍ ଟିକ୍ ବେଳାୟ୍ ତାର୍ ବାଗାର୍ ହଃଳ୍ ଦେତି, ସେମଃନ୍କେ ଅଙ୍ଗୁର୍ ବାଳ୍ ବାଗ୍ତାସ୍ କଃରୁକେ ଦଃୟ୍ଦ୍ ।”
௪௧அதற்கு அவர்கள்: அந்தக் கொடியவர்களைக் கொடுமையாக அழித்து, ஏற்றக் காலங்களில் தனக்குக் கனிகளைக் கொடுக்கக்கூடிய வேறு தோட்டக்காரர்களிடத்தில் திராட்சைத்தோட்டத்தைக் குத்தகைக்குக் கொடுப்பான் என்றார்கள்.
42 ଜିସୁ ସେମଃନ୍କେ କୟ୍ଲା, “ତୁମିମଃନ୍ କାୟ୍ କଃବେ ହେଁ ଦଃର୍ମ୍ ସାସ୍ତରେ ଇ କଃତା ନଃହଳାସ୍? ‘ଗଃର୍ ବାନ୍ଦ୍ତା ଲକ୍ମଃନ୍ ଜୁୟ୍ ଟେଳାକେ ଦୁର୍କଃଲାୟ୍, ସେରି କନାର୍ ମୁଳ୍ ଟେଳା ଅୟ୍ଲି । ମାପ୍ରୁର୍ ତଃୟ୍ହୁଣି ଇରି ଅୟ୍ଲି, ଆର୍ ସେରି ଅଃମାର୍ ଗିନେ କାବା ଅଃଉତା କଃତା ।’”
௪௨இயேசு அவர்களைப் பார்த்து: வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லானது, அது கர்த்தராலே ஆனது, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று நீங்கள் வேதத்தில் ஒருபோதும் வாசிக்கவில்லையா?
43 “ଇତାର୍ ଗିନେ ମୁଁୟ୍ ତୁମିମଃନ୍କେ କଃଉଁଲେ, ଇସ୍ୱରାର୍ ରାଇଜ୍ ତୁମାର୍ ତଃୟ୍ହୁଣି କାଡି ନିଆ ଅୟ୍ଦ୍, ଆର୍ ଜୁୟ୍ ଲକ୍ମଃନ୍ ଇସ୍ୱରାର୍ ଇଚା ହୁରୁଣ୍ କଃର୍ତି, ସେମଃନ୍କେ ଦିଆ ଅୟ୍ଦ୍ ।
௪௩ஆகவே, தேவனுடைய ராஜ்யம் உங்களிடமிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகின்ற மக்களுக்குக் கொடுக்கப்படும்.
44 ଆର୍ ଜେ ଇ ଟେଳା ଉହ୍ରେ ଅଦ୍ରେଦ୍ ସେ ହୁଟିକଃରି କଃଣ୍ଡ୍ କଃଣ୍ଡ୍ ଅୟ୍ଦ୍, ଆରେକ୍ ଇ ଟେଳା ଜାର୍ ଉହ୍ରେ ଅଦ୍ରେଦ୍ ତାକ୍ ସେରି ଗୁଣ୍ଡ୍ଗୁଣ୍ଡା କଃରେଦ୍ ।”
௪௪இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
45 ବଃଡ୍ ଜାଜକ୍ ଆର୍ ପାରୁସିମଃନ୍ ତାର୍ ଇ ସଃବୁ କଃତାମଃନ୍ ସୁଣ୍ଲାୟ୍, ଆର୍ ଜିସୁ ଜେ ସେମଃନ୍କେ ଦଃକାୟ୍ କୟ୍ଲା ବଃଲି ବୁଜ୍ଲାୟ୍ ।
௪௫பிரதான ஆசாரியர்களும் பரிசேயர்களும் அவருடைய உவமைகளைக் கேட்டு, தங்களைக்குறித்துச் சொல்லுகிறார் என்று அறிந்து,
46 ଇତାର୍ ଗିନେ ସେମଃନ୍ ତାକ୍ ଦଃରୁକ୍ ଉପାୟ୍ କଃଲାୟ୍, ମଃତର୍ ଲକ୍ମଃନ୍କେ ଡିର୍ଲାୟ୍, ବଃଲେକ୍ ଲକ୍ମଃନ୍ ଜିସୁକେ ବାବ୍ବାଦି ବଃଲି ମାନ୍ତି ରିଲାୟ୍ ।
௪௬அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆனாலும் மக்கள் அவரைத் தீர்க்கதரிசியென்று நினைத்தபடியினால் அவர்களுக்குப் பயந்திருந்தார்கள்.