< Luke 8 >

1 Nau hethauwuu waunee haejathāau nanadee hadauchanenee hedan nau hajaseehedan, dauaunauthedade nau daunaunauhauthethāde neethajaude waunauyaunee hasaunee henajanedaunene Hejavaneauthu: nau vadadauchunesenee haenethaunaa,
பின்பு, இயேசு பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் பயணம்செய்து, தேவனுடைய ராஜ்யத்திற்குரிய நற்செய்தியைச் சொல்லி பிரசங்கித்து வந்தார். பன்னிரண்டு சீடர்களும் அவரோடு இருந்தார்கள்.
2 Nau jasaa hesānauau, haeenayauhau dewauchāhenethe haujaunau nau vavavāauhuhauau, Mare haseadagu Magdalene, naunudanavathe nesaudauchu wauchāhenethe haujaunau,
பொல்லாத ஆவிகளிலிருந்தும் வியாதிகளிலிருந்தும் விடுவித்து சுகமாக்கப்பட்ட சில பெண்களும், ஏழு பிசாசுகளின் தொல்லையிலிருந்து விடுதலைபெற்ற மகதலேனாள் என்னப்பட்ட மரியாளும்,
3 Nau Joanna henene Chuza Herod hadāhevāhe, nau Susanna, nau haewauthanauau hauthauauau, hevenādaunau hethāenetheyaunenenau.
ஏரோதின் மேலாளரான கூசாவின் மனைவியாகிய யோவன்னாளும், சூசன்னாளும், தங்களுடைய ஆஸ்திகளால் அவருக்கு ஊழியம் செய்துகொண்டுவந்த பல பெண்கள் அவரோடு இருந்தார்கள்.
4 Nau hāeneenawauthaa henanedanede dauauāchaudenee, nau haeedasaa hehethee nanadee hedane, hanaāeanadede jegausauhānee:
எல்லாப் பட்டணங்களிலுமிருந்து மக்கள்கூட்டம் அவரிடத்தில் வந்தவுடன், அவர் உவமையாகச் சொன்னது:
5 Jenayāhe haewauneneāgude hejenayaunau: hauthauau haejajanesanau vaunaa; nau haeauguhudaunene, nau neahehauau hejavaa haeaudauvanauau.
விதைக்கிறவன் ஒருவன் விதையை விதைக்கப் புறப்பட்டான்; அவன் விதைக்கும்போது சில விதைகள் வழியருகே விழுந்து மிதியுண்டது, ஆகாயத்துப் பறவைகள் வந்து அதைச் சாப்பிட்டுச் சென்றன.
6 Nau hauthauau haedasegaugauusanau hauunagāe; nau chauchaunu hāeveseuu, haenadadanau, hanau daujenajenee.
சில விதைகள் கற்பாறையின்மேல் விழுந்தது; அது முளைத்தபின் அதற்கு ஈரமில்லாததினால் உலர்ந்துபோனது.
7 Nau hauthauau haejajanesanau hegauau dauchuuwusee; nau dauchuuwuse haenauguveseaunau, nau haeajedaunanā.
சில விதைகள் முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் கூடவளர்ந்து, அதை நெருக்கிப்போட்டது.
8 Nau hauthauau haegaugauusanau dasee hadauuthadee vedauauwuu, nau haeveseaunau, nau haeneeaunau vadadausauau jenayaude. Nau hāenehedauau nuu hayauhuhau, haevasenehe, Daun henaudaununede, nanehanedauvade.
சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தது, அது முளைத்து, ஒன்று நூறாகப் பலன் கொடுத்தது என்றார். இவைகளைச் சொல்லி, கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கவேண்டும் என்று சத்தமிட்டுக் கூறினார்.
9 Nau hethauguhādaunau haenaudedaunaa, duthanau nuu jegausudede, hathāhuk?
அப்பொழுது அவருடைய சீடர்கள், இந்த உவமையின் கருத்து என்னவென்று அவரிடத்தில் கேட்டார்கள்.
10 Nau hahagu, Nananena vanenana haudnaenauwuna jaeyaunau henajanede Hejavaneauthau: hau hauthauauau janegausauhuthee; hadnenauhauthāthee havajenauhaudauwu, nedauvahehauau havajaenauwu.
௧0அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது; மற்றவர்களுக்கோ, அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கத்தக்கதாக, அவைகள் உவமைகளாகச் சொல்லப்படுகிறது.
11 Wauhā, heyew hasauau jegausudede: Jenayaunau hedenehede Hejavaneauthau.
௧௧“அந்த உவமையின் கருத்தாவது: விதை தேவனுடைய வசனம்.
12 Henee vaunaa nanathee nenedauvathee; hanaāenauusade haujau, nau nedanauwunāthee hanadede hedahenauau, naseduhuu hethauwuthajauau, nau hadenanedanena.
௧௨வழியருகே விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாக இருக்கிறார்கள்; அவர்கள் விசுவாசித்து இரட்சிக்கப்படாதபடிக்குப் பிசாசானவன் வந்து, அவ்வசனத்தை அவர்கள் இருதயத்திலிருந்து எடுத்துப்போடுகிறான்.
13 Henee hauunaugāe nanathee, nanedauvanauthe nesedanuu hanadedaunau nauguu haunauwuthajaude; nau nuu hehauwuthājenenauau, vanehaa nethauwauduu, nau nauauchaudaunauthe vasehadede naneenaunegauhuthee.
௧௩கற்பாறையின்மேல் விதைக்கப்பட்டவர்கள் கேட்கும்போது, சந்தோஷத்துடனே வசனத்தை ஏற்றுக்கொள்ளுகிறார்கள்; ஆனாலும் தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியினாலே, கொஞ்சக்காலமட்டும் விசுவாசித்து, சோதனைகாலத்தில் பின்வாங்கிப்போகிறார்கள்.
14 Nau henee nejajanesāe thauhauthauchauyauau dauchuuwusee nanathee, hanesenedauvanauthe, naneejathāauthee, nau neenadejethathee heee haunaunethaude nau nethauyādahede nau haunauwudaude, heee nuu henaedede, nau hehauwunauuchaudenauau vevenaudenau hadauuyauthaunee.
௧௪முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாக இருக்கிறார்கள்; கேட்டவுடனே போய், உலகத்திற்குரிய கவலைகளினாலும் செல்வத்தினாலும் சிற்றின்பங்களினாலும் நெருக்கப்பட்டு, பலன்கொடுக்காமல் இருக்கிறார்கள்.
15 Hau henee hadauuthadenee vedauauwuu nanathee, hethauvahethee nau hethadenee hedahenau nenedauwauduu hanadedaunau, naunaunedethee, nau nenauuchaudethee vevenaudenau heee jenauwauaunee.
௧௫நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக்கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன்கொடுக்கிறவர்களாக இருக்கிறார்கள்.
16 Hegau henane, hāesedeauchauuu nauauuthayau, hehauwaugau heee vasenau, nau wauāthe hehauwujenane thānee hauvaa; hau nethānauau nauauuthayau neetheaugunee daun janedāde hadenauhaudauau nauauuthayāgu.
௧௬ஒருவனும் விளக்கைக் கொளுத்தி, அதை ஒரு பாத்திரத்தினாலே மூடிவைக்கமாட்டான், கட்டிலின்கீழே வைக்கவும் மாட்டான்; உள்ளே நுழைகிறவர்கள் அதின் வெளிச்சத்தைக் காணும்படிக்கு அதை விளக்குத்தண்டின்மேல் வைப்பான்.
17 Hayewhu hehauwuyauthesa, haudjauthasenesehee; wauāthe hayewhu hehauwuyau hadjaenaunee nau hadnejaunauau hauthasauau.
௧௭வெளியரங்கமாகாத இரகசியமுமில்லை, அறியப்பட்டு வெளியேவராத மறைபொருளுமில்லை.
18 Haunauyauhaudauwuu hanathadauvanā: daun nanethenaude, nananede haudnevenade; nau daunjanenethenaude, nananede haudnedanauwunade daun henetheyaunau.
௧௮ஆதலால் நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்துக் கவனியுங்கள்; உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவனெவனோ அவன் தனக்குண்டென்று நினைக்கிறதும் அவனிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்படும்” என்றார்.
19 Hanaāedasāde henaune nau henethesaunau, nau haejeneedasaa heee dauneethenadedaunenee.
௧௯அப்பொழுது அவருடைய தாயாரும் சகோதரர்களும் அவரிடத்தில் வந்தார்கள் மக்கள்கூட்டம் அதிகமாக இருந்தது, ஆதலால் அவர் அருகில் செல்லமுடியாமல் இருந்தது.
20 Nau haeāedauwunaa jachau hathāhuk, Hānau nau hāthesaunauau theauguthee jathee, vanadaunauhauvānaune.
௨0அப்பொழுது: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரர்களும் உம்மைப் பார்க்கவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்று அவருக்கு அறிவித்தார்கள்.
21 Nau hanaāauchuhananadede nau hanaāāedauwunaude, Nānau nau nāthesaunauau nuu nanathee nanedauwauduu hedanadedaunene Hejavaneauthu, nau naasedauthee.
௨௧அதற்கு அவர்: தேவனுடைய வசனத்தைக்கேட்டு, அதின்படி செய்கிறவர்களே எனக்குத் தாயும் எனக்குச் சகோதரர்களுமாக இருக்கிறார்கள் என்றார்.
22 Wauhā hethauwuu jasaa hesee, haejedā thewaunaa nauguu hethauguhādaunau: nau hanaāāedauwunaude, hadeyehaunau hauchaunau neajee: nau hanaāejathethuauthee.
௨௨பின்பு ஒருநாள் அவர் தமது சீடர்களோடு படகில் ஏறி: கடலின் அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார்; அப்படியே புறப்பட்டுப்போனார்கள்.
23 Hau hajechuauthee haenaugau: nau hanaāenauasaa neajee haenaudasa; nau haeechauchaunane naje, nau haeanedaudauwugaujauaudahede.
௨௩படகில் பயணம்செய்துகொண்டு இருக்கும்போது இயேசு தூங்கிவிட்டார். அப்பொழுது கடலிலே சுழல் காற்றுண்டானதால், அவர்களுடைய படகு தண்ணீரினால் நிறைந்து ஆபத்து ஏற்பட்டது.
24 Nau hanaāedauchauthee, nau haeauwaudananauau, Hechauhauthethāhe, Hechauhauthethāe, gaujauaudāhenauau, hathauhaugaunee Hanaāethauwauthede, nau hanaāeneudauau hasāse nau dasenaunanaunee naje: nau hanaāedauunauuu, nau hanaāedādauyauau.
௨௪அவர்கள் அவரிடத்தில் வந்து, ஐயரே, ஐயரே, சாகப்போகிறோம் என்று அவரை எழுப்பினார்கள்; அவர் எழுந்து, காற்றையும் தண்ணீரின் கொந்தளிப்பையும் அதட்டினார்; உடனே அவைகள் நின்றுபோய், அமைதலுண்டானது.
25 Nau hanaāenehethaude, daude hadethauwaudadenenau? Nau haenāthajaunauau haejenaunethajaunauau, Dauhuthenane naa, hanathadagaunee; haauchuwudede hasāse nau naje, nau hanaāethauwaudaunāde.
௨௫அவர் அவர்களை நோக்கி: உங்களுடைய விசுவாசம் எங்கே என்றார். அவர்கள் பயந்து ஆச்சரியப்பட்டு: இவர் யாரோ, காற்றுக்கும் கடலுக்கும் கட்டளையிடுகிறார், அவைகளும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
26 Nau hanaāenuusathee vedauauwuu Gadarenes, hauchaunau Gananee.
௨௬பின்பு கலிலேயாவிற்கு எதிரான கதரேனருடைய நாட்டைச் சேர்ந்தார்கள்.
27 Nau hāeyehaude vedauauwuu, hena haenuchaunaa jathee hedan jachau henanene, haenethena haujaun dajechauau, nau haevedauauchauna, haejenaede hauauwuu, hau nedauthānavathe gaujauaudahehehau.
௨௭அவர் கரையிலிறங்கினபோது, நெடுநாளாகப் பிசாசுகள் பிடித்தவனும், ஆடையணியாதவனும், வீட்டில் தங்காமல் கல்லறைகளிலே தங்கினவனுமாக இருந்த அந்தப் பட்டணத்து மனிதன் ஒருவன் அவருக்கு எதிராகவந்தான்.
28 Hāenauhauwaude Hejavaneauthusaun haevasanade, nau haechaagujanaugudauna, nau hanaāevasanadethaude, Hauddusehathe, Hejavaneauthusau, Nananene Heau Hejavaneauthau javaājauuthee? Nenedauwunathane Nananene jevanaunauchauthehe.
௨௮அவன் இயேசுவைக் கண்டபோது கூக்குரலிட்டு, அவருக்கு முன்பாக விழுந்து: இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாதபடிக்கு உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்று மகா சத்தமாகச் சொன்னான்.
29 (Hanau haenesedauwauna wauchāhenith haujaun hadjenauahenith hehethee henanene. Hanau nauaunee dauhusedanāde: nau naunaunehade neduguhude heee vāejethāduguthaunau nau nesaunajethaunau; nau haegaugauchauagude heeduguhudaunau, nau haejathethasauaunaa haujaun hesee nauaunee.)
௨௯அந்த அசுத்தஆவி அவனைவிட்டுப்போகும்படி இயேசு கட்டளையிட்டபடியினாலே அப்படிச் சொன்னான். அந்த அசுத்தஆவி பலகாலமாக அவனைப் பிடித்திருந்தது; அவன் சங்கிலிகளினாலும் விலங்குகளினாலும் கட்டுண்டு காவல்பண்ணப்பட்டிருந்தும் கட்டுகளை முறித்துப்போட்டுப் பிசாசினால் வனாந்திரங்களுக்குத் துரத்தப்பட்டிருந்தான்.
30 Nau Hejavaneauthusaun haenaudedaunaa, Haudusee? hathāhuk, Nau hanaāāedauwunaude, Waunauthade: hanau dewauthanethe haujaunau hethāchaudaunādaunau.
௩0இயேசு அவனை நோக்கி: உன் பெயர் என்னவென்று கேட்டார்; அதற்கு அவன்: லேகியோன் என்றான்; அநேகம் பிசாசுகள் அவனுக்குள் புகுந்திருந்தபடியால் அந்தப் பெயரைச் சொன்னான்.
31 Nau haenedauwunanauau hadjenesedauwaunathee hadjeyehauthee hethauvaa. (Abyssos g12)
௩௧தங்களைப் பாதாளத்திலே போகக் கட்டளையிடாதபடிக்கு அவைகள் அவரை வேண்டிக்கொண்டன. (Abyssos g12)
32 Nau hena haewauthanauau neauthuwauchu nevethehethee hauanee: nau haenedauwunanauau hadjenanāthee wauhaunee. Nau haejenana.
௩௨அந்த இடத்தில் அநேகம் பன்றிகள் கூட்டமாக மலையிலே மேய்ந்துகொண்டிருந்தது. அந்தப் பன்றிகளுக்குள் போகும்படி தங்களுக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டன; அவைகளுக்கு உத்தரவு கொடுத்தார்.
33 Hanaāenauahethee haujaunauau hehethee henanene, nau haewauhaunesanauau neauthuwauchuu: nau vahee neauthuwauchu haejathegauhunauau neenanee janahuu yesee neajee, nau haevanadeavenauau.
௩௩அப்படியே பிசாசுகள் அந்த மனிதனைவிட்டு நீங்கி பன்றிகளுக்குள் புகுந்தன; அப்பொழுது அந்தப் பன்றிக்கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து, அமிழ்ந்து மரித்தன.
34 Hāene henee nauchauwauthee daunauhauduu hasedaudenenee, haedaugauhunauau, nau haejathāaunauau nau haeaunauthedanauau hedan nau vedauauwuu.
௩௪அவைகளை மேய்த்தவர்கள் சம்பவித்ததைக் கண்டு, ஓடிப்போய், பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள்.
35 Hanaāeyehaudenee hadnauhauwuu daun hasedaudenee; nau haeedauchau Hejavaneauthusau, nau haeveehau henane, heneenenauthāde haujaunau, haetheaugu heauthene Hejavaneauthusaun, haeedāchaunene, nau haechuwuthajaune: nau haenāthajaudene.
௩௫அப்பொழுது சம்பவித்ததைப் பார்க்கும்படி மக்கள் புறப்பட்டு, இயேசுவினிடத்தில் வந்து, பிசாசுகள் விட்டுப்போன மனிதன் ஆடை அணிந்து இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து புத்திதெளிந்திருக்கிறதைக் கண்டு, பயந்தார்கள்.
36 Henee nenauhauwauthee haeauthedanauau neesenayauhade nenethenaude haujaunau.
௩௬பிசாசுகள் பிடித்திருந்தவன் சுகமாக்கப்பட்டதைக் கண்டவர்களும் அதை அவர்களுக்கு அறிவித்தார்கள்.
37 Hadauchaa hathāauauvaa Gadarenes gauānee haejathethajenāhenauau; hanau dauusāhede: nau hanaāeyehaude nauauhuu jethee thewaunaa, nau hanaāejaesade.
௩௭அப்பொழுது கதரேனருடைய சுற்றுப்புறத்திலுள்ள மக்கள் எல்லோரும் மிகவும் பயமடைந்தபடியினாலே, தங்களைவிட்டுப்போகும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள். அந்தப்படி அவர் படகில் ஏறி, திரும்பிப்போனார்.
38 Wauhā henane nenauthāde haujaunau haenehethaa hadnenethaunāde: hau Hejavaneauthusau haejathethajenāhe, hathauhuk,
௩௮பிசாசுகள் நீங்கின மனிதன் அவரோடுகூட இருக்கும்படி உத்தரவு கேட்டான்.
39 Jaeyehau haudauauwuu, nau hadnauhauthethā hathāenavasauau hayewhu Hejavaneauthau hasehāne nananene. Nau hanaāejathāaude, nau haeautheda nanadee hathāaunee hedan hathāenavasaunee hayewhu Hejavaneauthusaun hasehāde.
௩௯இயேசு அவனை நோக்கி: நீ உன் வீட்டிற்குத் திரும்பிப்போய், தேவன் உனக்குச் செய்தவைகளையெல்லாம் சொல் என்று சொல்லி, அவனை அனுப்பிவிட்டார். அந்தப்படி அவன்போய், இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் பட்டணத்தில் எங்கும் சொல்லிப் பிரசித்தப்படுத்தினான்.
40 Nau hethauwuu hāejaenauusade Hejavaneauthusau, henanedanede haeneethajaudaunaa: hanau haevadauyauhauwau.
௪0இயேசு திரும்பிவந்தபோது மக்களெல்லோரும் அவருக்காகக் காத்திருந்தபடியால் அவரை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார்கள்.
41 Nau, naune, haejenauusa henane Jairus haseagu, nau hadāhevāhe vevethahenauauwuu: nau haeuāneseve Hejavaneauthusaun heauthene, nau haeadetha hadjewaunejedānith hedauauwuu:
௪௧அப்பொழுது ஜெப ஆலயத்தலைவனாகிய யவீரு என்னும் பெயருள்ள ஒருவன் இயேசுவின் பாதத்தில் விழுந்து, பன்னிரண்டு வயதுள்ள தன்னுடைய ஒரே மகள் மரணவேதனையில் இருந்தபடியால்,
42 Hanau haenesāhene hedaunau wauau hanesenee jajenevāhe, nau haeayānajane. Hau hajesesade henanedanede haevauhaunaa.
௪௨தன் வீட்டிற்கு வரும்படி அவரை வேண்டிக்கொண்டான். அவர் போகும்பொழுது மக்கள்கூட்டம் அவரை நெருக்கினார்கள்.
43 Nau hesā haeevathaude nesenee jajene heee, haevathede haunauude hevāejethāwau heee naudaunehāhehau, hau haejenayauhau,
௪௩அப்பொழுது பன்னிரண்டு வருடமாக இரத்தப்போக்கினால் அவதிப்பட்டு, தன் சொத்துக்களையெல்லாம் வைத்தியர்களுக்குச் செலவழித்தும், ஒருவனாலும் சுகமாக்கப்படாமலிருந்த ஒரு பெண்,
44 Haeedasa hegauwune, nau haevasane naunauchuu heduwune: nau chauchaunu haejenevathaude.
௪௪அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய ஆடையின் ஓரத்தைத் தொட்டாள்; உடனே அவளுடைய இரத்தப்போக்கு நின்றுபோனது.
45 Nau Hejavaneauthusau hanaa navasanāde hahagu? Hāevahethedauwaudenee, Peda, nau hathāenethaunāde, Hechauhauthethāhe, henanedanede vauhaunane nau naneethenane, nau hanaa navasanāde, nesehene? hathauhaugaunee.
௪௫அப்பொழுது இயேசு: என்னைத் தொட்டது யார் என்று கேட்டார். எங்களுக்குத் தெரியாதென்று எல்லோரும் சொன்னபோது, பேதுருவும் அவனுடனேகூட இருந்தவர்களும்: ஐயரே, மக்கள்கூட்டம் உம்மைச் சூழ்ந்து நெருக்கிக்கொண்டிருக்கிறார்களே, என்னைத் தொட்டது யார் என்று எப்படிக் கேட்கிறீர் என்றார்கள்.
46 Nau Hejavaneauthusau, hanaadee vasanānau, hahagu: haenauwau daujasesenauauau vadaude hehethee nananenau, hahagu.
௪௬அதற்கு இயேசு: என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை அறிந்திருக்கிறேன்; ஆதலால் ஒருவர் என்னைத் தொட்டதுண்டு என்றார்.
47 Nau hāenauhaudauau naa hesā daujeyauthesee haejeyehau haeahenauau, nau hanaāechauāgujanaugudaunaude, haeauthedauna hauthasee vahee henanedanede hathavasanaude, nau hasenayauhāde chauchaunu.
௪௭அப்பொழுது அந்த பெண் தான் மறைந்திருக்கவில்லை என்று கண்டு, நடுங்கிவந்து, அவர் முன்பாக விழுந்து, தான் அவரைத் தொட்ட காரணத்தையும் உடனே தான் சுகமானதையும் எல்லா மக்களுக்கும் முன்பாக அவருக்கு அறிவித்தாள்.
48 Nau hanaāāedauwunaude, Nauddau, nanehāauwauthenaedene: nananene hadethauwuthajaude henayauhāne nananene; najesa haunauwuthajau.
௪௮அவர் அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடு போ என்றார்.
49 Hajesanadede, hena haejau hanesāde hehethee hadāhevahew vevethahenauauwuu, haeāedauwuna, Haudauna najaa; jevajenaunevene Hechauhauthethāhe.
௪௯அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது, ஜெப ஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து ஒருவன் வந்து, அவனை நோக்கி: உம்முடைய மகள் மரித்துப்போனாள், போதகரை வருத்தப்படுத்தவேண்டாம் என்றான்.
50 Hau hāenedaunāde Hejavaneauthusaun, haenaāāedauwunāde, jevanāthajau: hethauwuthajau vavade, nau haudnenayauhade, hathāhuk.
௫0இயேசு அதைக்கேட்டு: பயப்படாதே; விசுவாசமுள்ளவனாக இரு, அப்பொழுது அவள் இரட்சிக்கப்படுவாள் என்றார்.
51 Nau hāejedāde hauauwuu, henanedane haejevadaujedāne, vavade Peda, nau James, nau Jaun, nau henesaunaune nau henaune hesāhedāeyaune.
௫௧அவர் வீட்டில் வந்தபோது, பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் பெண்ணின் தகப்பனையும் தாயையும்தவிர வேறொருவரையும் உள்ளே வர அனுமதிக்காமல்,
52 Nau vahee haevewauhudaune, nau haeaudauwuthajauhā: hau hanaāenehede, Jevavewauhuu; hehauwunaja, nauthe naugauhude.
௫௨எல்லோரும் அழுது அவளைக்குறித்துத் துக்கப்படுகிறதைக் கண்டு: அழாதேயுங்கள், அவள் மரித்துப்போகவில்லை, தூங்கிக்கொண்டு இருக்கிறாள் என்றார்.
53 Nau haeauchauthanauau haevachunaunanauau, dauaenaunauthee daunajanethe.
௫௩அவள் மரித்துப்போனாளென்று அவர்களுக்கு தெரிந்ததினால், அவரைப் பார்த்து நகைத்தார்கள்.
54 Nau haevanudana, nau hanaāedanaude hejadenene, nau hanaāanadethaude, Hesāhee, thauwauthe, hathauhuk.
௫௪எல்லோரையும் அவர் வெளியே அனுப்பிவிட்டு, அவளுடைய கையைப் பிடித்து: பிள்ளையே எழுந்திரு என்றார்.
55 Nau hevadathuwu haejaedasaa, nau haethauwauthe chauchaunu nau hanaāenehede hadnauchauvavathe.
௫௫அப்பொழுது அவள் உயிர் திரும்பவந்தது; உடனே அவள் எழுந்திருந்தாள்; அவளுக்கு ஆகாரம் கொடுங்கள் என்றார்.
56 Nau henehā haegaudauwuthajaunenau: hau haeāedauwuna hadjāedauvanethe henanedaa hasedaude.
௫௬அவளுடைய தாயும் தகப்பனும் ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது நடந்ததை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.

< Luke 8 >